மரியாளுக்கு மரியாதையா?
|
மரியன்னை
புகழ் நாமம் பாடுவோம்
அன்னையின்
வணக்க மாதம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21 22
23 24
25
26
27
28 29
30 31
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள் - திங்கள்
- சனி
துயர் நிறை மறையுண்மைகள் - செவ்வாய்
- வெள்ளி
ஒளி நிறை மறையுண்மைகள் - வியாழன்
மகிமை நிறை மறையுண்மைகள் - ஞாயிறு
- புதன் |
|
நற்குணங்களின் உறைவிடமே
உன்னத தேவனுக்கே உயிர்
கொடுத்தவள் நீ
தலைமைப் பொறுப்பை தாழ்மையூடன் ஏற்றவள் நீ
ஆம் என்ற சொல்லில் அடைக்கலமாகி
தியாகம் என்ற சொல்லில் தெய்வத்தின் தாயானாய்
அண்டி வந்தோரெல்லாம் அரவணைத்தவள் நீ
குறைகளையெல்லாம் நிறைவாக்கியவள் நீ
இதோ உன் தாயென்ற இறைமகனின் சொல்லுக்கு
செயல் உருவம் கொடுத்தவள் நீ
அன்றோ கபிரியல்
தூதரின் மங்கள
வார்த்தை.
இன்றோ மனிதர்களின் இதயத்து வேட்கை
உலகமக்களுக்கெல்லாம் உன்னதத் தாயே
எங்கள் விண்ணக மண்ணக இராக்கினியே
அருள் நிறைந்த கன்னியே, வாழ்க! வாழ்க!
அன்னையே நீர் வாழ்க!
அன்னை மரியா
ஆகாயத்தில் ஒளிரும் நிலவு போன்றவள் நீ
அந்த ஒளியில் நடக்க அனுமதிப்பாயா என்னை நீ
ஆலய முற்றத்தில் ஆசீர் அளிப்பவள் நீ
அதைப் பெற்றிட அனுமதிப்பாயா என்னை நீ
ஆகாயத்தை ஆட்கொள்ளபவள் நீ
அதில் அடைக்கலம் கண்டிட ஏற்பாயா என்னை நீ
அன்பிலே திளைக்கச் செய்பவள் நீ
அதை அண்டி அனுமதிப்பாயா என்னை நீ
வசந்தகால மலர் போன்றவள் நீ
வாடாமல் பார்க்க ஏற்பாயா என்னை நீ
வானமே உடலாகக் கொண்ட நீ
உன்னை பூஜிக்க அனுமதிப்பாயா என்னை நீ
அருள் தரும் திருப்பலி நம்மை அழைக்கின்றது.
அன்னை மரியாவாக நாம் அவதாரம் எடுக்க நம் அயலாருக்கு
நாம் எப்போதுமே துணை புரிய அருள் தரும் திருப்பலி நம்மை அழைக்கின்றது.
அன்னையின்
உதவும் உணர்வும் நம்மையே ஆட்கொள்ள அவர் மகன் யேசுவின் கல்வாரிப் பலி நமக்கு 1000 மடங்கு பலன் தர நம்மை அன்போடு அழைக்கின்றது.
அன்போடு
ஜெபிப்போம். ஆற்றலைப் பெற்று அன்னையைப் போலவே நடப்போம். |
டிசெம்பர் மாதத்தில் அன்னையோடு அனுதினமும்... |
நவெம்பர் மாதத்தில் அன்னையோடு அனுதினமும்... |
ஒக்டோபர் மாதத்தில் அன்னையோடுஅனுதினமும்...
|
செப்ரெம்பர் மாதத்தில்
அன்னையோடு அனுதினமும்... |
ஆகஸ்ட் மாதத்தில் அன்னையோடுஅனுதினமும்......... |
யூலை மாதத்தில் அன்னையோடுஅனுதினமும்............ |
யூன் மாதத்தில் அன்னையோடு அனுதினமும்............ |
மே மாதத்தில் அன்னையோடு அனுதினமும்............ |
ஏப்ரல் மாதத்தில் அன்னையோடு அனுதினமும்........... |
திருச்
செபமாலை
ஆடு மேய்ப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட செபமாலை,
பின்னர் மேய்ப்பவரின் ஆடுகளுக்கெல்லாம் மாலையாயிற்று.
இந்த மணிமாலை கழுத்துக்கள் அணிய கண்டுபிடிக்கப்படவில்லை. மனங்கள்
அணிந்து
கொள்ளவே மரியாவினால் அருளப்பட்டது.
அருள் நிறைந்த ஐம்பத்து மூன்று மணிகளிலும் மங்கள வார்த்தைகளே மாறாத
கல்வெட்டுக் களாகின.
கடவுள் பாதி, மனிதர் பாதி கலந்து சேதி இச் செபத்தின் நியதி.
தூதுவரின் சான்றிதலும், மானிடரின் வேண்டுதலும்,
மருவி வழங்கப்பட்ட மந்திரம்.
பத்து மணிகளிடையே பத்திரமாக மறைந்திருக்கும்
இருபது அவை தேவ
இரகசியங்கள் மனித சில அதிசயங்கள்.
எப்படி செபிப்பதென்று இயேசு கற்பித்து பத்து
மணிக்கொரு தடவை
பதிலளிக்கிறது.
இம்மாலைக்கு செலவினங்கள் இல்லை, மணித்
துளிகளைத் தவிர
காசு கொடுக்காமல் நிம்மதி வாங்க கன்னிமரி அருளிய சாதனம்.
மகிழ்ச்சியும் - ஒளியும், துக்கமும் - மகிமையும் மனித வாழ்க்கை
நிலைகளின் வெளிப்பாடுகள் இந்த
மணிமாலைக்கு உண்டு அந்த கோட்பாடு.
இலத்தீன் மொழிகளில் இது ரோஜாக்களின் மகுடம்,
உலகில் எல்லா மொழிகளிலும்
செபமாலையே சிகரம்.
|
|
தொழிலாளரான புனித யோசேப்பே எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்!
தொழிலாளரான புனித
யோசேப்பு நினைவு நாள்
புனித வளனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். சூசையப்பரைக் குறித்து சுகிர்த மன்றாட்டு!
கிருபை, தயாளம் நிறைந்தவருமாய், எங்கள் நேச வணக்கத்துக்கு
உரியவருமாயிருக்கிற பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பரே!
தேவரீரை மன்றாடி, தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி,
உம்மிடத்தில்
தாம் இரந்து கேட்டதை அடையாமல் போனதில்லை
என்று அர்ச்.
தெரசம்மாள் நிச்சயித்ததை நினைத்தருளும்.
என் அன்புள்ள தகப்பனாரே! இப்படிப்பட்ட நம்பிக்கையால்
ஏவப்பட்டு, நான் உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன்.
பெருமூச்செறிந்து பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக்
காத்துக்கொண்டு உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாய்
விழுகிறேன்.
மிகவும் இரக்கமுள்ள பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே!
சொற்பமும் அயோக்கியமுமாயிருக்கிற என் மன்றாட்டைப் புறக்கணியாமல்,
தயாபரராய்க் கேட்டுக் கிருபை புரிந்தருளும்.
- ஆமென். |
புனித சூசையப்பரின் நவநாள்
புனித சூசையப்பர் யூபிலி ஆண்டு
St. Joseph Reflections
புனித சூசையப்பரின் 7 வியாகுலம்
மகிழ்ச்சி ஜெபமாலை
Feast of Joseph |