ர்orizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருவருட் சாதனங்கள்

 
ஒப்புரவு அருட்சாதனம்
ஒப்புரவு அருட்சாதனம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருச்சபையின் திருவருள் அடையாளங்கள் என்றால் என்ன?
ஆன்மாவிற்கு அருள் கிடைக்க கிறீஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட உள்ளாந்த மனிதருள் வெளி அடையாளங்களே திருவருள் அடையாளங்கள் ஆகும்.
திருவருள் அடையாளங்கள் எப்பொழுதும் அருளை வழங்குமா?
திருவருள் அடையாளங்களை தகுந்த முறையில் பெறும் ஒவ்வொருவருக்கும் அருள் நிச்சயம் கிடைக்கும்.
திருவருள் அடையாளங்கள் எப்பொழுது அருள் வழங்கும் சக்தியுடையனவா கின்றன?
கிறீஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தத்தின் சிறப்புகள் நம் ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவும்போது இச்சாதனங்கள் அருள் வழங்கும் சக்தியுடையனவாகின்றன.
திருவருள் அடையாளங்கள் பெற நாம் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டுமா?
ஆம் ஏனெனில் அவைகள் நம் ஆன்மா மீட்பு அடைவதற்கு முக்கியமான சாதனங்களாகவும், வழிகளாகவும் உள்ளதால்.
திருவருள் அடையாளங்கள் யாவை?
1) திருமுழுக்கு (ஞர்னஸ்நானம்)
2) உறுதிப்பூசுதல்
3) நற்கருணை
4) ஒப்புரவு
5) நோயில்பூசுதல்
6) குருத்துவம்
7) திருமணம்
திருமுழுக்கு என்றால் என்ன?
ஜென்ம பாவத்தையும் கர்மபாவத்தையும் போக்கி, நம்மைக் கடவுளுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகின்ற அருள் அடையாளம். (1கொரி:6:11)
உறுதிப்பூசுதல் என்றால் என்ன?
நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக, தூய ஆவியையும், அவருடைய அருட்கொடைகளையும் நமக்குக் கொடுக்கின்ற அருள் அடையாளம் (யோவா:15;26)
நற்கருணை என்றால் என்ன?
அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும், திராட்சை இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருஉடலும், திருஇரத்தமும், திருஆன்மாவும் தெய்வத்தன்மையும் அடங்கியிருக்கின்ற அருள் அடையாளம் (1கொரி:11:23-25)
ஒப்புரவு என்றால் என்ன?
திருமுழுக்கிற்குப்பின் நாம செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும், இனி பாவம் செய்யாமல் இருக்க அருளையும் அளிக்கின்ற அருள் அடையாளம் (2கொரி:5:18-21)
நோயில்பூசுதல் என்றால் என்ன?
நோயாளிகளிடம் உள்ள பாவங்களுக்கு பரிகாரமாகவும், அவர்களுடைய ஆன்மாவிற்கும் உடலுக்கும் ஆறுதலாகவும் உண்டாக்கப்பட்ட அருள் அடையாளம் (யாக்:5:14)
குருத்துவம் என்றால் என்ன?
திருப்பலி நிறைவேற்றவும், அருள் அடையாளங்களை அளிக்கவும் வழி செய்கின்ற அருள் அடையாளம் (எபி:9:11-14)
திருமணம் என்றால் என்ன?
ஒரு ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் தம்மைக் கையளிக்கவும், பிரமாணிக்கமாக வாழவும், தங்கள் பிள்ளைகளை இறைவழியில் வளர்க்கவும், வேண்டிய அருளைத் தருகின்ற அருள் அடையாளம் (எபே:5:;21-33)

அன்னை மாமரியே! அழகிய ஓவியமே!
வழித்துணை நாடி உம் அடைக்கலம் தேடி
உன் பதம் ஓடி வந்தோம்!