• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப் பணி மையம் உங்களை வரவேற்கின்றது

மரியன்னை உங்களை அழைக்கிறாள்......... 
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை.  அவள் மக்களின் அன்னை.  அன்னையிடம் வரம் கேட்க அல்ல,  அன்னையையே வரமாகக் கேட்க,  லூர்து நகர் திருத்தலம் செல்வோம்.  குடும்பமாய்க் கூடி  ஜெபமாலை சொல்வோம்.

தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும் கிடைத்திட திருப்பலியில் விசேடமாக தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை மூலமாக ஜெபிக்கிறோம்.
  தினம் ஒரு நல்வார்த்தை
ங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். லூக்கா 6:36
லூர்து நகரின்
தோற்றம் - MP3


லூர்து நகரின் தோற்றம் எழுத்துருவில்
லூர்து திருத்தல தமிழ் ஆன்மீக மையம் வழங்கும் லூர்து அன்னை
திருக்காட்சிகள
-
Video
   Santuary  Lourdes   
நலம் தரும்
லூர்து மலை நாயகி
..
தூய லூர்தன்னை விழா  பிப்ரவரி 11
லூர்து காட்சிகளிலிருந்து கற்க வேண்டிய 5 பாடங்கள்
Lourdes United 2023 
International mass for Asia and Oceania
 அருள் நிறைமரியே  
எனும்  செபத்தின் விளக்கம்
செபமாலையின்
 மறை உண்மைகள்
 
தினம் ஒரு திருவாக்கு    
அருட்சகோ:அருணா
 தமிழ்நாடு - இந்தியா
   
 புதிய
திருப்பலி புத்தகம்
 
தூய பாத்திமா அன்னை
 
 
வாரம் ஒரு தகவல்
  (விதை)

18 -சமரசம் உலாவும் இடம்
 

   ஒக்டோபர் மாதம்  
  மரியன்னை புகழ்    மாதம்
கிறிஸ்மஸ்
திருப்பலியின் முக்கியத்துவம்.  
   நவெம்பர் மாதம்
 
 
இறை இரக்கப் பெருவிழா
  நமது சிந்தனைக்கு
 
திருவழிபாட்டு
 நாள்காட்டி
 
 
 
அருட்தந்தை லீனஸ் அ.ம.தி அவர்களோடு இணைந்து நாங்களும் செபிப்போம்.
 
 
 
பிரான்ஸ் லூர்துநகர் திருத்தலத்திலிருந்து தமிழ் திருப்பலி நேரலையாக|21.11.2021
 
 
 
 
 
 
 
 
லூர்து அன்னை மன்றாட்டு - mp3
லூர்து திருப்பதியின் வல்லமையுள்ள மன்றாட்டு 
லூர்து கெபி நேரலையில்

மிகவும் இரக்கமுள்ள தாயே Mp4
அன்னையே லூர்தன்னையே பாடல்
புதுமைகள் புரிந்திடும் லூர்து மாதாவே
புனித லூர்து அன்னை திருத்தலம்
2025 ஆம் ஆண்டிற்கான கருத்து
நம்  267ம் புதிய திருத்தந்தை பதிநான்காம் லியோ அவா்களின் இலத்தீன் மொழியின் வாழ்த்துச் செய்தி தமிழில்.

புதிய திருத்தந்தை அவா்களின் பணி சிறக்க
மெழுகுதிரி பவனி  பிரான்ஸ் லூர்துலிருந்து  09-05-2025
தேவ அன்னையின் வணக்க மாதம்

 

போற்றுகிறோம் புகழுகிறோம் அம்மா மாமரியே
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அம்மா ஆதரியே


அருள் நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீ பேறு பெற்றீர்  உம் மகனும் வாழியவே!
அன்னையின் வணக்க மாதம்
1    2    3    4    5    6    7   8   9   10   11   12   13   14   15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31

தேவ தாயின் மாதம் இது அல்லவோ - இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள
பேரை சேர்த்து
கோவிலுக்கு சாயும் வேளை ஆவலுடன்
போவோம் வாரீர்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தாலொரு தப்புமில்லையே
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும்
இந்த மாதம் எல்லாருக்கும் நல்ல
 திர்ஷ்ட முள்ளதாகும்

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே
ஆவலுடன் நாம் எல்லாரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே
 
ஏன் மே மாதம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?

கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தை அன்னை மரியாவுக்கென சிறப்பாக அர்ப்பணித்து, செபமாலை செபித்து, அந்த அன்னையை மகிமைப்படுத்தி வருகிறது.

மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலம் அதாவது மலர்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த வசந்த காலத்தில் மகப்பேறுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் நாம் "அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அதேவேளையில் பெண்களு க்குள் பேறு பெற்றவளும் இறைவனின் தாயுமான அன்னை மரியாளுக்கு இந்த மே மாதத்தை அர்ப்பணித்துச் சிறப்பிக்கவும் கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள்.

திருஅவையின் அனைத்து ஆலயங்களிலும் அன்னை மரியாவுக்கு மே மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்த 1815-ல் திருத்தந்தை 7-வது பத்திநாதர் அனுமதி அளித்தார். அவரைத் தொடர்ந்து, 1945 ஆம் ஆண்டில், திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மே 31-ஆம் தேதி அன்னை மரியாள் என்றும் அரசி என்னும் விழாவை நிறுவி மே மாதத்தை மரியாளின் மாதமாக உறுதிப்படுத்தினார்.

இரண்டாவது வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பிறகு, இந்த விழாவானது ஆகஸ்ட் 22-க்கு மாற்றப்பட்டது, அதே நேரத்தில் மே 31-ஆம் தேதியானது மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும் விழாவாக மாறியது. இத்தகைய மாண்பும் மகத்துவமும் மிக்க மரியாளுக்கான மே மாதக் கொண்டாட்டமானது பாரம்பரியம் நிறைந்த ஒன்றாகும். மற்றும், நமது தாயைக் கௌரவிப்பதற்கான ஆண்டின் அழகான நேரமும் ஆகும்.

மரியாவுக்கான விசுவாசிகளுடைய வணக்கமானது மற்ற புனிதர்களிடம் அவர்கள் கொண்ட பக்தியைவிட உயர்ந்தது என்றாலும், கடவுளுக்கு ஒதுக்கப்பட்ட ஆராதனையைவிட இது தாழ்ந்ததாகும், மரியன்னை வணக்கத்திற்கும் மூவொரு இறைவனுடைய ஆராதனை வழி பாட்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி உள்ளது. அதாவது, புனித கன்னி மரியாளை வணங்கும்பொழுது சில சமயங்களில் கடவுளுடைய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களை நமக்கு நினைவுபடுத்தினாலும், அது முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது. இவ்வாறு மரியாளுக்கான விசுவாசிகளுடைய அன்பானது கடவுளுக்கான அவர்களுடைய அன்பிலிருந்து வேறுபடுகின்றது.

அதேநேரத்தில், மரியாள் பக்திக்கும், கடவுளுக்கு வழங்கப்படும் வழிபாட்டிற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பும் உள்ளது: உண்மையில், மரியன்னை பக்தியானது மூவொரு இறைவனுக்கான ஆராதனைக்கு வழிவகுக்கிறது என்றும், திருத்தந்தை இரண்டாவது யோவான் பவுல் அவர்கள் தனது மரியியல் சிந்தனையில் கூறுகின்றார்.

நாம் அனைவரும், மரியா, நமது நம்பிக்கையாகத் திகழ்கிறார். தீய சக்திகளுக்கு எதிரான போரில் கிறிஸ்தவர்களுக்கு அவர் உதவி செய்கிறார். எனவே செபமாலை வழியாக நாம் அவரது உதவியை நாடுவோம் என்று அறிவுறுத்தும், அமரத்துவம் பெற்ற நமது திருத்தந்தை பிரான்சிஸ், அவர்களின் அழைப்பை ஏற்று தனித்தனியாகவோ, குடும்பமாக இணைந்தோ, ஒவ்வொரு நாளும் இந்த செபமாலையைச் சொல்லுவோம். மனித வரலாற்றில் பல இக்கட்டான நேரங்களில் நமக்குத் துணையாக இருந்து தனது மகனிடம் நமக்காகப் பரிந்து பேசி நம்மைப் பாதுகாத்த அந்த அன்னை உலகில் உள்ள தீய சக்திகளிடமிருந்து நம்மை நிச்சயம் பாதுகாப்பார் என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு அன்னை மரியாளிடம் செபிப்போம்.  மரியே வாழ்க!
இயேசுவின் முதல் அற்புதம்
அக்டோபர் 1 செபமாலை தியானம்
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல் போனதுதான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள், அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான். கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும் மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை நின்றதுதான்.

முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில் நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே காப்பாற்றிக் கொண்டிருந்தது.

ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை. "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே  "பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக  "எங்களை சோதனையில் விழவிடாதேயும்" என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும் ஜெபிக்கிறோம். "

ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள் நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள் வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.
 

கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 01
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 02
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 03
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 04
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 05

கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 06

கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 07
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 08
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 09
கத்தோலிக்க திருச்சபையில் சிலை வழிபாடா? - பாகம் 10
அருட்கலாநிதி லெரின் டிரோஸ் அவர்கள் கொடுக்கும் கத்தோலிக்க திருச்சபையின் குழந்தைகள் திருமுழுக்கு பற்றிய விளக்கம்.
 
மறையுரைகள் Fr. Albert| Kc Trichy
திருவிவிலியம் ஓர் அறிமுகம்
Day (1)
Day (2)
Day (3)
Day (4)
Day (5)
Day (6)
Day (7)
Day (8)
Day (9)
Day (10)
Day (11)
Day (12)
Day (13)
Day (14)
Day (15)
Day (16)
Day (17)
Day (18)
Day (19)
Day (20)
ஜெபமாலை குறித்த கத்தோலிக்க பிரிவினை சபை சகோதரரின் கேள்விக்கு வாழும் ஜெபமாலை இயக்க சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸின் பதில்..
பிரிவினை சபைகளும்......கத்தோலிக்க திருச்சபையும்....
அன்னை மரியாளைப் பற்றிய செய்தி விவிலிய ஆய்விலிருந்து.
 திருக்குடும்பத்தை நோக்கிச் செபம்
 இதுவரை 7000 -க்கும் மேற்பட்ட புதுமைகள்...............
பிரான்சின் லூர்து மாதா காட்சி கொடுத்த கெபியிலிருந்து அருட்த்தந்தை லீனஸ் சொய்சா அ.ம.தி. அடிகளார் நடாத்தும் சிறப்பு வழிபாடு
பிரான்சின் லூர்துமாதா காட்சி கொடுத்த கெபியிலிருந்து அருட்தந்தை லீனஸ் சொய்சா அ.ம.தி. அடிகளார் நடாத்திய இன்றைய வழிபாடு காணொளி - 13/05/2020
  
அன்னை தெரேசாவைப் பற்றி அறிய இங்கே கிளிக் பண்ணவும்
பைபிளில் இயேசு சொல்கிறார் "அந்தக் கைவிடப்பட்டவரில் இருப்பதெல்லாம் நானே, அவர்களுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்கின்றீர்கள்", நல்ல ஊழியர்கள் அதனைத்தான் செய்தார்கள், அவரில் ஒருவர்தான் நாம் கண்ணால் கண்ட மானிட தெய்வம்: 
அன்னை தெரசா......
 
Ladépeche என்னும் செய்தித்தாளில் 11/08/2016 வெளிவந்த தந்தை லீனஸ் அவர்களின்: லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கி, பெருந்திரளாய் நம்பிக்கையோடு வருகின்ற தமிழ்த்  திருப்பயணிகளைப் பற்றிய பேட்டி.

"எல்லாத் தலை முறைகளும்  என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே"

url and counting visits Nombre de visits