![]() |
துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் மன்றாட்டு மாலை ஆண்டவரே இரக்கமாயிரும்- 2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2 ஆண்டவரே இரக்கமாயிரும்-2 உலகத்தை படைத்த தந்தையே இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட மகனே இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை நல்வழிபடுத்தும் தூய ஆவியே இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் என்றும் ஒன்றித்து வாழும் மூவொரு இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பெண்களுள் பேறுபெற்ற எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் கடவுளின் தாயே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் விண்ணக அரசியே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் அழகோவியமே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்ற எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்ற எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தூய்மையும் கனிவும் கொண்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் சிரித்த முகத்தோடு பொலிவோடு இருக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் நிலவின் மேல் வீற்றிருக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் அலகையென்னும் பாம்பினை நசுக்கிய எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தீமையை வென்ற புதிய ஏவாளே எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் வானதூதர்கள் புடை சூழ வீற்றிருக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் எலிசபெத்துக்கு உதவிய எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் காணவூரின் திருமண வீட்டாரின் துயர் துடைத்த எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் அவர் சொல்வதெல்லாம்செய்யுங்கள் என்ற எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் திருக்குடும்பத்தின் முகவொளியே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் இயேசுவின் முதல் சீடரான எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் திருச்சபையின் துணை இரட்சகியான எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் திருச்சபையின் தாயே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் விடுதலை கீதம் பாடிய எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் ஆகட்டும் என்று சொன்ன எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தாழ்ந்தோரை உயர்த்த சொன்ன எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பசித்தோரை நலன்களால் நிரப்பச்சொன்ன எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் இறைவனிடம் இடைவிடாமல் பரிந்து பேசும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் திருமண வரம் தரும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் குழந்தை பாக்கியம் தரும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தாம்பத்திய வாழ்வின் குறை நீக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் திருமண விவாகரத்தை முறியடிக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் குடும்ப உறவை நிறைவாக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் வியாபாரம்,தொழிலில்வரும் தடைகளைத் தகர்க்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் கண்ணீரோடு வருவோரின் துயர் துடைக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் மனபாரத்தோடு வருவோர்க்கு மகிழ்வினை தரும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் உடல் நோய்களைத் தீர்க்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பில்லி சூனியம், மந்திர கட்டுகளை உடைக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் உல்வ்காங் சோஃபி தம்பதியரை இணைத்த எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் தந்தை எரனிமாஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் யோகன் ஸ்மித்னார் என்பவாரால் தீட்டப்பட்ட ஒவியமே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பவேரியப் புனித பேதுரு ஆலயத்தில் வீற்றிருக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் போர்களினாலும், விபத்தினாலும் அழியாத ஒவியமான எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பல்வேறு சமயத்தவர்க்கும் அடைக்கலமான எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் அலகு அன்பு தாயே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் மன்றாடுவோரைப் புறக்கணியாத எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் எமக்கு அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் கருணைப் பார்வையை எம்மீது திருப்பும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்ட எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் பலவீனத்தில் வலிமையான எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் துன்ப முடிச்சுகள் அனைத்தும் அறிந்த எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் இந்திய மண்ணில் முதன் முதலாய் தாழம்பூரில் ஆலயம் கொண்ட எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் எந்நேரமும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் எங்களுக்காக எப்போதும் காத்திருக்கும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் எம்மோடு வாழ்ந்து வரும் எம் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும் உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே (3 முறை) 1. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் 2. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 3. எங்கள் மேல் இரக்கமாயிரும். முதல்: இயேசுக்கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படி. துணை: இறைவனின் தூய அன்னையே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். செபிப்போமாக! பரிசுத்த கன்னிமரித்தாயே! நீர் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து திறந்த மனதுடன் அதை ஏற்றுக் கொண்டீர். உமது வாழ்க்கைப் பாதை கஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள் நிறைந்ததாய் இருந்தாலும், இறைவனில் நம்பிக்கை வைத்து புத்துணர்வுடன் இருந்தீர். ஆகவே துன்பமுடிச்சுக்களை அவிழ்க்கும் தாயே! எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக பொறுமையுடனும், மகிழ்வுடனும் தங்களைத் தயார்படுத்தவும், பிள்ளைகளினதும் இளைஞர்களினதும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் அமையவும், எங்கள் குடும்பங்களின் சகல தேவைகளும் நிறைவேறவும் வேண்டும் என்று தாயே உம்மை மன்றாடுகிறோம். எங்கள் சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம். அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென். எங்கள் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க- 3 துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையிடம் செபம் கன்னிமரியே/ அழகு அன்புத்தாயே/ மன்றாடும் குழந்தையை/ ஒருபோதும் புறக்கணியாத அன்னையே/ உமது திருஇதயத்திலிருந்து/ பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்/ முடிவில்லாத இரக்கத்தினாலும்/ குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும்/ திருக்கரங்கள் கொண்ட திருவே/ உமது கருணைப் பார்வையை எம்மீது திருப்பி/ எனது வாழ்வைத் திணறவைக்கும் முடிச்சுக்களைக் கண்ணோக்கியருளும/ எனது துன்பம்/ வலி/ செயலிழக்கச் செய்யும் துன்பமுடிச்சுக்கள்/ அனைத்தையும் நீர் அறிவீர்/ எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுக்களை அவிழ்க்க/ கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்றதாயே/ உமது திருக்கரங்களில் எனது வாழ்வை ஒப்படைக்கிறேன்/ உமது இரக்கப்பெருக்கை/ ஒருபோதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும்/ உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு/ உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன்/ வல்லமையின் தாயே/ ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால்/ என்னை வாட்டி வதைக்கும் இச்சிக்கலான துன்பமுடிச்சுகளை/ (அமைதியாக ஒரு நிமிடம் துன்ப முடிச்சுக்களை மனக்கண்முன் கொண்டுவரவும்) உமது தூய திருக்கரங்களில் பெற்றுக்கொள்ளும்/ தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி/ எனது துன்பமுடிச்சுக்களை/ இப்பொழுதும்/ என்றென்றைக்கும் அவிழ்த்துப்போடும்/ எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர்/ எனது பலவீனத்தில் என் வலிமை நீர்/ உம் திருமகன் இயேசுவிடமிருந்து/ என்னைப் பிரிக்கும் சக்திகளை அழிப்பவரும் நீரே அம்மா எனக்குப் பதில் தாரும்/ பாதுகாத்தருளும்/ வழிநடத்தும் காப்பாற்றும் ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம் உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன். - ஆமென். எங்கள் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். |