லூர்துநகர் திருத்தலத்தில்
வீற்றிருந்து
புதுமையான விதத்தில்
நலம் தரும் லூர்து அன்னையே!
உம்மை நாடி வருவோருக்கு
அற்புதமாக சுகம் தரும் தாயே!!
துன்பப்படுவோரின் துயர் துடைக்கும்
தயை மிகுந்தவரே!!!
அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன்
உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம்.
உமது வல்லமையுள்ள மன்றாட்டினால்/
எங்களை கரம்பிடித்து வழி நடத்தும்
தாயே!
எல்லாவற்றிற்கும் மேலாக
இறை இயேசுவையே
அன்பு செய்யவும்
அவருக்காகவே வாழவும்/ எங்களுக்கு
துணை செய்வீராக!
ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும்
அன்புடன் அரவணைக்கும் அன்னையே!
எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவோடு
ஒன்றித்திருக்கின்ற நீர்
சக்தி மிக்கவளாய் இருக்கின்றீர் அம்மா!
நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற அன்புத் தாயே!
துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும்
தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும்
வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும்
அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும்.
வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி
காட்டும்.
புகலிடம் தேடி அலைவோருக்கு புகலிடம் தாரும்
எங்கள் குடும்பங்களையும்,
தொழிலையும்
ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே.
ஆமென்.
இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்