திருக்குடும்ப பெருவிழா ஆசி பெற வந்திருக்கும்
அன்பு நெஞ்சங்களே!
தியாகங்கள் ஏற்க சலிக்காத அன்பு, துன்பத்தில்
உடனிருக்கும் பாசம், கடவுளின் பராமரிப்பில் பரம்பரையைத் தத்து
கொடுத்த குடும்பம், இறை நம்பிக்கையில் தன்னை மறந்த குடும்பம்,
அதுதான் திருக்குடும்பம்;, உலகம் போற்றும் உயர் குடும்பம். அந்தக்
குடும்பம் இன்று நம்மைத் திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றது.
நாம் இன்று திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
குடும்பம் என்பது ஒரு கோவில் குடும்பத்தில் பிள்ளைகள்
பெற்றோருக்குத் தெய்வம். பெற்றோர் பிள்ளைகளுக்குத் தெய்வம். அப்படியென்றால்
தெய்வங்கள் வாழும் இடம் கோவில் தானே!
குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும்போது சோர்வுரும் நாம சூசை
தந்தையின் பொறுமை, அன்னை மரியாளின் பணிவு, யேசுவின் கீழ்படிதல்
என இத்தகைய மேலான பண்புகளை அடித்தளமாக்குவோம், அன்பை சுவராக்கி,
மகிழ்ச்சியைக் கூரையாக்கி, குடும்பத்தைக் கட்டி எழுப்பி அந்த
தரையில் அமர்ந்து உரையாடுவோம். அபபோது வருத்தம், பிரச்சனை,
கவனக்குறைவு, விவாகரத்து, நோய், வறுமை, கவலை, தோல்வி, ஏமாற்றம்
வந்து நம் குடும்பத்தை சிதைக்குமா? என்பதைச் சிந்திப்போம்.
எனவே நம் குடும்பத்தைக் கட்டி எழுப்ப பொறுமை, பணிவு, கீழ்படிதல்,
அன்பு, மகிழ்ச்சி என்ற நற்பண்புகளை வரமாக கேட்டு திருக்குடும்பமாய்
பங்கேற்ப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. தியாக மிகு உள்ளத்தை தரும் தேவா!
நீர் அற்புதமாக படைத்து ஆசீர்வாதத்தோடு நடத்தும் திருச்சபையை
உம் திருமுன் நினைவுக்கு கொண்டு வருகிறோம். திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்கள் தியாகமிகு
வாழ்வினால் ஒரே குடும்பத்தினராய் வாழ அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
2. அக்கறையான நெஞ்சங்களை அரவணைக்கும் நேசரே!
நாடுகளின் தலைவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டு வாழ தன்னல
வாழ்வினை தியாகம் செய்து அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. தெய்வீக குடும்பத்தை பராமரித்த தேவனே!
எங்கள் குடும்பங்களை திருகுடும்பமாக மாற்ற எங்களுக்காக பணி
செய்யும் பங்கு தந்தையின் உழைப்பினால் எங்கள் பங்கில் உள்ள
குடும்பங்கள் அனைத்தும் தெய்வீக பராமரிப்பினால் வழி நடத்த
அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. குடும்பம் என்ற குட்டி திருச்சபையை கட்டி எழுப்பிய தேவனே!
எங்கள் குடும்பங்களை கூறு போடும் குழப்பம், சந்தேகம், அவமானம்,
தனிமை, பிரிவு, வறுமை, புலம் பெயர்ந்த நிலைமை என அனைத்து
தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்து குட்டி திருச்சபையாய்
குடும்பங்கள் வாழ உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. உலகம் போற்றும் உன்னத திருகுடும்பமாக்க அருள் தரும்
தேவா!
இங்கே கூடியுள்ள எங்கள் குடும்பங்களை உமது கரத்தில் தருகிறோம்.
எங்கள் குடும்பத்தின் தலைவன் புனித சூசையப்பரின்
பொறுமையையும் குடும்பத்தின் தலைவி அன்னை மரியாளின் பணிவையும்
குழந்தைகள் இயேசுவின் கீழ்படிதலையும் கற்றுக் கொண்டுசமூகம் விரும்பும் குடும்பமாக வளர அருள்
தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டின் இறுதி வாரம் இது. வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்கு வந்துள்ள
உங்கள் யாவரையும் அன்புடனே வரவேற்கின்றேன்.
திருக்குடும்பத் திருவிழாவை கொண்டாட அழைப்பு பெற்று இருக்கின்றோம்.
நம்முடைய குடும்பங்களுக்கு இறைவன் இந்த ஆண்டு முழுவதும் செய்த நல்ல
பல மேலான காரியங்களுக்கு நன்றி கூறுவதோடு, குடும்பத்தை
ஒப்புக்கொடுத்து, அவரது ஆசீரை இறைஞ்சுவோம்.
ஆபிரகாம், ஈசாக், சிமியோன், அன்னா இந்த குடும்ப அன்பர்கள் தங்களது
வாழ்விலே கொண்டிருந்த நம்பிக்கை, அவர்கள் குடும்பத்தில் பெற்ற
நம்பிக்கை தான். வாழ்விலே பெற்ற நம்பிக்கை அவர்களுக்கு நலம்
தந்ததோடு, இறைவனது மேலான ஆசீரையும் பெற்றுத் தந்தது.
இன்று குடும்பங்களில், இத்தகைய நம்பிக்கையே விதைக்கப்பட வேண்டியது
காலத்தின் கட்டாயம். அவநம்பிக்கை மேலோங்குவதாலேயே குடும்பங்கள்
சிதைவது அதிகமாகின்றது.
குடும்பங்களில் நம்பிக்கை விதைக்கப்பட, உறவுகள் உறுதிப்படவும்,
உண்மையான அன்பை பகிரவும், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், குடும்ப
செபங்கள் அரங்கேறவும் வேண்டும். திருக்குடும்ப விழுமியங்கள் நமதாக
வேண்டும் என்ற வேண்டுதலோடு பங்கேற்போம். பயன் பெறுவோம்.
இறைமக்களின்
மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நன்மையின் நாயகனே இறைவா!
திருஅவை குடும்ப உறவோடு தன் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து
அழைத்துச் செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நன்மையின் நாயகனே இறைவா!
நாடு முன்னேற, குடும்பங்கள் ஒன்றிணைந்து செல்வது அவசியமானது
என்பதனை உணர்ந்து பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்
விழா 31 12 2023
குடும்பம் என்பது,
அனைவரையும் இணைக்கும் ஒற்றுமைச் சங்கிலி,
உறவுகளில் வரவைக் கற்றுத்தருவது,
ஞானம் உதயமாகும் போதிமரம்,
உறவுகளின் உயர்ந்த ஆலயம்,
அமைதி நிலவும் ஆனந்த நிலையம்,
உறவுகளால் இணைத்து கட்டப்பட்ட பாசக் கதம்பம் குடும்பம்.
பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க உதவும் தெப்பம்
குடும்பம்தான்.
இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத்தில்
வாழ்ந்த யோசேப்பும், அன்னைமரியாவும், இறைமகன் இயேசுவும்
வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பம். இக்குடும்பமே
கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு முன்மாதிரியாகும். அன்பினால்
கட்டப்பட்ட ஒரு வீட்டைக் குறித்துத்தான் இன்றைய விழாவின்
சிறப்பு.
ஏழ்மையின் உச்சம் திருக்குடும்பம்
தாழ்ச்சியின் ஊற்று திருக்குடும்பம்
கற்பு நெறி தவறாது வாழ்ந்த பெற்றோர் மரியாவும் வளனாரும்.
இந்த குடும்ப உறுப்பினர்களின் கூட்டு முயற்சியினால்
உருவானதுதான் திருக்குடும்பம். அக்குடும்பத்தில்
ஒவ்வொருவரும் அவரவர் நிலை உணர்ந்து மிகுந்த
பொறுப்புணர்வுடன் அவரவர் கடமைகளை மிகச்சிறப்பாக
நிறைவேற்றினர். திருக்குடும்ப உறுப்பினர்களின் இதயத்தில்
இறைநம்பிக்கை, பெருந்தன்மை, அளவற்ற பொறுமை, தன்னலமற்ற
அன்பு, மன்னிக்கும் இதயம், மனமுவந்த தியாகம், சொல்லில்
கனிவு, செயலில் நேர்மை, பணிப்பகிர்வு என அனைத்து
நற்பண்புகளும் எல்லா வேளைகளிலும் பிறரை மையப்படுத்திய
வாழ்வாகவும் இருந்தது.
ஆனால் இன்று குடும்பங்கள், ஒருவரை ஒருவர் புரிதலின்றி
சண்டையிடும் தளங்களாகக் குடும்பங்கள் மாறுகின்றன. பாச
விளக்கை ஊதி அணைத்துவிட்டு, பண்புகளைக் குழிதோண்டிப்
புதைத்துவிட்டு எளியவரை வலியவர் வீழ்த்தும் கொள்கையற்ற
கூடாரமாகக் குடும்பங்கள் மாறி வருகின்ற போக்கு நல்லதல்ல.
இன்று உலகமயம், தாராளமயமாக்கல், அறிவியல் முன்னேற்றம்
இவற்றால் திருமண உறவுகள் வியாபாரமாக்கப்படுகின்றன. அன்பு
உறவுகள் அர்த்தம் இழந்து போகின்றன. முதல்நாள் திருமணம்
மறுநாள் விவாகரத்து என்று ஆலமரம்போல தழைக்க வேண்டிய
குடும்ப உறவுகள் பாழாகிச் சிதைந்து போகின்றது.
உறவுக்கிளைகள் மலிந்து குடும்பம் என்ற நிலைமாறி
கணவன்-மனைவி, பிள்ளைகள் என்ற முக்கோண வாழ்க்கை நடைமுறையாகி
உள்ளது. இதனால் அண்ணன் தம்பிகளைக் காணோம். உறவுக் கிளைகள்
தோன்றாத தனிச் செடியாக உருவாகியுள்ள இன்றைய குடும்பத்தில்
தமிழர்க்கே உரிய ஒப்புரவு, விருந்தோம்பல், மனிதநேயம், மத
நல்லிணக்கம் போன்ற பண்புப்பூக்களைக் காணோம்.
"அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் உறவைப் பெற்றிருப்பது
சிறந்தது. ஆனால் அதிக உயரத்திலிருந்து விழும்போது தாங்கிப்
பிடிக்கும் குடும்ப உறவைப் பெற்றிருப்பது கடவுளின் பரிசு"
நல்ல நூல்கள் எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை.
நல்ல குடும்ப உறவும் அப்படித்தான்.
கோடிகளைக் குவிப்பதும் கோடிநாள் வாழ்வதும் அல்ல வாழ்க்கை.
மாறாக கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத
நல்ல உறவாக வாழ்வதுதான் குடும்ப வாழ்க்கை.
சொத்துச் சேர்ப்பதில் நாட்களை நகர்த்தாமல்;
சொந்தங்களைச் சேர்த்து வாழ்வைக் கொண்டாடுவோம்.
நம்முடைய குடும்பங்கள் திருக்குடும்பங்களாக விளங்க
இயேசு மரி சூசையை நம்முடைய முன்மாதிரியாகக் கொண்டு
வாழ்வோம்.
வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இறைத்திருவுளத்தையும்,
இறை உதவியையும் நாடி செயல்பட்ட திருக்குடும்பத்தைப்
பின்பற்றி
நாமும் நமது குடும்ப உறவுளைப் புதுப்பித்துக் கொள்வோம்.
ஒருவர் மற்றவர்மீது உண்மையான அன்பு காட்டுவோம்.
ஒருவர் மற்றவருக்கு உகந்த மதிப்பளிப்போம்.
அக்குடும்பத்தில் நிலவிய அன்பு, அக்கறை, நம்பிக்கை,
இறைஞானம் இன்றைய குடும்பங்கள் ஒவ்வொருக்கும் அவசியம் தேவை
என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக்
கேட்டருளும்.
1. அன்பின் இறைவா!
திருஅவை என்னும் குடும்பம் ஒற்றுமையோடும் அன்போடும்
ஒருவரையொருவர் ஏற்று இறையாட்சியை இம்மண்ணுலகில் பரப்பிட
அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. சமாதானத்தின் இறைவா!
எம் குடும்பங்களை ஆசிர்வதியும். நாங்கள் அனைவரும்
ஒருவரையொருவர் நேசித்து, மதித்து பிறர் நலனில் அக்கறை
கொண்டு மகிழ்வான குடும்பமாக வாழ்ந்திட அருள்புரிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. மன்னிப்பின் இறைவா!
பிரிந்துபோன குடும்பங்கள் மீண்டும் இணையவும்,
மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையோடு வாழ்ந்து
திருக்குடும்பமாக மாறிடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4. அருளின் ஊற்றே எம் இறைவா!
குடும்பத்தில் உள்ள பிள்ளைகள், பெற்றோருக்குக்
கீழ்ப்படிந்து தெய்வ பயம் மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து
விளங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
I தொடக்க நூல் 15: 1-6; 21: 1-3 II எபிரேயர் 11: 8, 11-12,
17-19 III லூக்கா 2: 22-40
ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட குடும்பம் அசைவுறாது
நமது இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் சிறுவனாக இருந்தபொழுது நடந்த நிகழ்வு
இது. ஒருநாள் மாலைவேளையில், வேலையை முடித்துக்கொண்டு மிகவும் களைப்போடு
வீட்டிற்குத் திரும்பிய கலாமின் தாயார் ஆஷியம்மா, தன்னுடைய கணவர்
ஜெய்னுலாய்தீனும் பிள்ளைகளும் மிகவும் பசியோடு இருப்பதைப்
பார்த்துவிட்டு, அவரச அவரசமாக அவர்களுக்கு ரொட்டி சுட்டித் தந்தார்.
தான் சுட்ட ரொட்டிகளை ஆஷியம்மா முதலில் தன் கணவருக்குத் தான்
வைத்தார்.
அவர் சுட்ட ரொட்டிகள் மிகவும் கருகிப் போயிருந்தன. ஆனாலும் கலாமின்
தந்தை அவற்றைப் பற்றி எதுவும் சொல்லாமல், சுவைத்துச் சாப்பிட்டார்.
கலாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் தான்
சுட்டுத் தந்த ரொட்டிகள் கருகிப் போகியிருப்பதை அறிந்த ஆஷியம்மா தன்னுடைய
கணவரிடத்தில் வந்து, "
தெரியாமல் நடந்துவிட்டது; மன்னித்துக்
கொள்ளுங்கள்"
என்றார். ஜெய்னுலாய்தீன் அதற்கு, "
பரவாயில்லை; எனக்குக்
கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்"
என்றார். அவர் இவ்வாறு
சொன்னதைக் சிறுவன் கலாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் கலாமும் அவருடைய உடன்பிறப்புகளும் தங்களது தாயார் சுட்டுத்
தந்த ரொட்டிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார்கள்.
தூங்கும்பொழுது எப்பொழுதும் தன் தந்தையருகே தூங்கும் கலாம் அவரிடம்,
"
அப்பா! உங்களுக்குக் கருகிய ரொட்டி பிடிக்காது என்று எனக்கு நன்றாகத்
தெரியும். பிறகு எதற்கு அம்மா கருகிய ரொட்டிகளைச் சுட்டித் தந்தபொழுது,
"
எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்"
என்று
சொன்னீர்கள்"
என்றார். "
மகனே கலாம்! உன் அம்மா பகல் முழுவதும் வேலை
பார்த்துவிட்டு மிகவும் களைப்போடு வந்து உணவு தயாரிக்கின்றார். அப்படியிருக்கும்பொழுது,
அவர் தயாரித்துத் தரும் உணவில், எப்போதாவது கருகிப்போய் வரும்
ரொட்டியைப் பெரிதுபடுத்துவதா..? மேலும் கருகிப்போய் வரும் ரொட்டி
என்னைக் காயப்படுத்தாது; ஆனால் நான் பயன்படுத்தும் கடினமான
வார்த்தைகள் உன் அம்மாவைக் காயப்படுத்தும் அல்லவா! அதனால்தான் நான்
உன் அம்மாவிடம் அவ்வாறு சொன்னேன்"
என்றார் கலாமின் தந்தை.
ஆம், குடும்பமாக வாழும் நாம், குடும்பத்தில் இருக்கின்ற ஒருவர்
செய்யும் தவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவரைப் பொறுத்துக்கொண்டு, மன்னித்து
(கொலோ 3: 13) ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது, அதைவிட மகிழ்ச்சியான செயல்
வேறெதுவும் இல்லை. இன்று நாம் திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடி
மகிழ்கின்றோம். ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று நாம் கொண்டுகின்ற இத்திருவிழா
நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
வீட்டுக்கு வீடு வாசற்படி!
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சனை உண்டு என்பதை உணர்த்துவதற்காக,
"
வீட்டுக்கு வீடு வாசற்படி"
என்ற சொல்வழக்கைப் பயன்படுத்துவது உண்டு.
ஆம், நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், இந்த உலகத்தில் பிரச்சனை
இல்லாத குடும்பமே கிடையாது என்று சொல்லிவிடலாம். இதற்கு நம்பிக்கைக்கு
மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்கிய ஆபிரகாமின் குடும்பமும்
திருக்குடும்பமும் கூட விதிவிலக்கில்லை.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தின் முதல் பகுதியில்
(தொநூ 15: 1-6), ஆண்டவர் சொல் கேட்டு, தன்னுடைய சொந்த ஊரையும் உறவுகளையும்
விட்டுவிட்டு ஆண்டவர் காட்டிய இடத்திற்குப் போன ஆபிரகாம்,
"
எனக்குக் குழந்தை இல்லையே!"
என்று சொல்வதை நாம் வாசிக்கின்றோம்.
குழந்தைப் பேறு என்பது ஆண்டவர் ஒருவருக்கு அளிக்கின்ற மிகப்பெரிய
பேறு. அது ஆபிரகாமிற்கு அவருடைய தொண்ணூற்று ஒன்பதாவது வயதுவரை இல்லாமல்
இருந்ததால், அது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கும்.
நற்செய்தியில், குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவும், அவருடைய
கணவர் யோசேப்பும் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க எடுத்துச்
சொல்லும்பொழுது, அதைத் தன் கையில் ஏந்தும் சிமியோன், "
இக்குழந்தை
...எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும்"
என்று சொல்லிவிட்டு, அவர்
மரியாவை நோக்கி, "
உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்"
என்பார். இது இயேசு, மரியா, அவர்களோடு சேர்ந்து யோசேப்பும்
கடவுளின் மீட்புத் திட்டத்தின் பொருட்டு அடைய இருந்த துன்பங்களை
முன்னறிவிப்பதாக இருக்கின்றது. இதை வைத்துப் பார்க்கின்றபொழுது
திருக்குடும்பத்திலும்கூட பிரச்சனைகளும் துன்பங்களும் இல்லாமல்
இல்லை என்று சொல்லலாம்.
ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்தல்
நம்பிக்கைக்குக் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆபிரகாமின்
குடும்பத்திலும், இயேசு, மரியா, யோசேப்பு இருந்த
திருக்குடும்பத்திலும் கூட பிரச்சனைகளும் துன்பங்களும் இருந்தன
என்று பார்த்தோம். இவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும்,
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள். ஆபிரகாம் தனக்குக்
குழந்தை இல்லையே என்று வருந்தாமல், "
உன்னை நான் பெரிய
இனமாக்குவேன்..."
(தொநூ 12: 2) என்று ஆண்டவர் சொன்ன வார்த்தைகளில்
நம்பிக்கைகொண்டு வாழ்ந்தார். இதனால் அவர் நம்பியது போன்றே, அவர்
வழியாகப் பெரிய இனம் தோன்றியது. இதைத்தான் இன்றைய இரண்டாம்
வாசகத்தில் எபிரேயர்த் திருமுகத்தின் ஆசிரியர்,
"
நம்பிக்கையால்தான்"
என்று கூறுகின்றார்.
திருக்குடும்பத்திலிருந்த இயேசு, மரியா, யோசேப்பும்கூட தங்களுடைய
வாழ்வில் பல்வேறு துன்பங்கள், பிரச்சனைகள் வந்தபொழுதும்
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தின்படி நடந்து
அசைவுராமல், பதற்றமடையாமல் (எசா 28: 16) இருந்தார்கள்.
தன்மீது கொண்டோரின் குடும்பங்களை ஆசிகளால் நிரப்பும் ஆண்டவர்
ஆபிரகாமின் குடும்பத்திலும், திருக்குடும்பத்திலும் பிரச்சனைகளும்
துன்பங்களும் இருந்தாலும், அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து
வாழ்ந்தால்தான் அசைவுராமல் இருந்தார்கள் எனில், குடும்பமாக
வாழக்கூடிய நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கையும், ஒருவர் மற்றவரிடம்
அன்பும் கொண்டு வாழ்ந்தோமெனில், நம்முடைய குடும்பமும்
திருக்குடும்பமாக மாறும் என்பது உறுதி.
இன்றைக்கு உள்ள குடும்பங்களில் கணவன் மனைவியிடம், பெற்றோர்
பிள்ளைககளிடம் நல்லுறவு இல்லை. குடும்பத்தில் நல்லுறவு ஏற்பட
வேண்டுமெனில், அக்குடும்பம் அன்பில் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
அதற்காகத்தான் புனித பவுல், "
இவையனைத்திற்கும் மேலாக அன்பையே
கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச்
செய்யும்"
(கொலோ 3: 14) என்பார். ஆகையால், நாம் அனைத்திற்கும்
மேலாக அன்பையும், ஆண்டவரின் நம்பிக்கையும் கொண்டு வாழ்வோம்.
அதன்வழியாக நம்முடைய குடும்பத்தைத் திருக்குடும்பம் ஆக்குவோம்.
சிந்தனை
"
குடும்பங்கள் எப்படியோ அப்படியே சமூகம்"
என்பார் தேயர் என்ற
அறிஞர். ஆகையால், நாம் நம்முடைய குடும்பங்களைத்
திருக்குடும்பங்களாக, நல்ல குடும்பங்களாகக் கட்டியெழுப்பி,
சமூகத்தை இறைச் சமூகமாக உருவாக்குவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
திருக்குடும்பப் பெருவிழா
அந்த கணவன் மனைவி இருவரும் வயதானவர்கள். நாற்பது
வருடத்திற்கும் மேல் தாம்பத்யம் நடத்தியவர்கள். மிகப்பெரிய
செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அந்தக் கணவர்.
ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில்
விழுந்தார். அந்தக் கடைசிக் காலத்திலாவது மனைவியின் அன்பை
அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், உறவினர்
ஒருவர் சொன்னார் "உன் மனைவி எத்தனை அன்பானவள் தெரியுமா?,
கல்யாணம் ஆன புதிதில், நீ உன் அலுவலகத்தில் பணத்தை கையாடல்
செய்து வேலையை இழந்தாய். அப்போது உன் அப்பாவும் அம்மாவும்
கூட 'நீ எனக்குப் பிள்ளையே கிடையாது' என்று சொல்லி,
உன்னைப் பிரிந்து போனார்கள். ஆனால், உன் மனைவி மட்டும்
உன்னோடுதான் இருந்தாள்.
பிறகு தொழில் தொடங்கப்போகிறேன் என்று பல லட்ச ரூபாயை
வங்கிக் கடனாக வங்கி ஒரு ஷோரூம் ஒன்றை ஆரம்பித்தாய். அதில்
பெரிய நஷ்டம் வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த தொழிலும்
கைவிட்டுப்போனது. உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள் கூட
அந்த நேரத்தில் விலகிப் போனார்கள். அப்போதும் உன் மனைவி
உன்னோடு இருந்தாள். பிறகு கெட்ட சகவாசங்கள், தீய
பழக்கங்கள் வந்து சேர, ஒழுக்கம் கெட்டவாழ்க்கை வாழ்ந்து
வியாதியஸ்தனானாய். அப்போது நீ பெற்ற பிள்ளைகளே, உன்னை
உதறிவிட்டுப் போனார்கள். ஆனால், அப்போதும் உன்னோடு
இருந்தது உன் மனைவி மட்டும்தான். இதிலிருந்து உனக்கு என்ன
புரிகிறது?" என்று அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார்
உறவினர். அதற்குக் கணவர் சொன்னார்: "எனக்குக் கெட்டது
நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள் என் பக்கத்தில்
இருந்திருக்கிறாள். இவள் துரதிர்ஷ்டத்தால்தான் நான்
இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறேன்".
இதைக் கேட்ட உறவுக்காரர் எதுவும் பேசாது அமைதியானார்.
குடும்பத்தில் கணவன் மனைவியிடம் உண்மையான அன்பும்,
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிந்துகொள்ளுதலும்,
சகிப்புத்தன்மையும் இல்லையென்றால் பிரச்னைகளுக்கு மேல்
பிரச்னைகளும் சண்டைகளும்தான் வரும் என்பதை இந்த நிகழ்வு
அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்று நாம்
திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுவதன் நோக்கமே நமது
குடும்பங்களை திருக்குடும்பமாகக் கட்டி எழுப்புவதற்குத்
தான். எனவே, நாம் எப்படி நமது குடும்பங்களை
திருக்குடும்பமாகக் கட்டியெழுப்பப் போகிறோம் என
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
"மனிதர்கள் சிறந்து விளங்கும் சமூகத்தைப் பெறவேண்டும்
என்றால் குடும்பத்தைத் தவிர வேறு வழியில்லை என்று
சரித்திரம் நமக்கு போதிக்கிறது" என்பார் ரே லைமன் வில்பர்
என்ற அறிஞர். ஆம், இது உண்மை. ஒரு சமுதாயம் செழித்தோங்கி
வளரவேண்டும் என்றால், அதற்கான அடித்தளம் குடும்பத்தில்
இடப்படவேண்டும். குடும்பங்கள் நன்றாக இல்லாத பட்சத்தில்,
சமூகமும் நன்றாக இருப்பதற்கு வழியில்லை என்பதுதான் நாம்
புரிந்துகொள்ளவேண்டிய உண்மை.
நம்முடைய குடும்பங்களை நல்ல குடும்பங்களாக,
திருக்குடும்பமாக கட்டிஎழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் என
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். அதற்கு முதலாவது
நம்மிடத்தில் இருக்கவேண்டியது குறைகளை அல்ல, நிறைகளைப்
பார்க்கவேண்டிய மனநிலை. இன்று குடும்பங்கள் சிதைத்து,
சின்னாபின்னமாகிப் போவதற்கு அடிப்படைக் காரணம் குறைகளைக்
கண்டுபிடிக்கும் மனபான்மையினால்தான். கணவன் எதைச் செய்யும்
குறைகண்டுபிடிக்கும் மனைவியர் நிறைப்பேர் இருகிறார்கள்.
அதேநேரத்தில் மனைவி எதைச் செய்தாலும் குறைகண்டுபிடிக்கும்
கணவன்மார்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களால் ஒரு நல்ல குடும்பத்தைக் கட்டியெழுப்ப
முடியாது என்பதே உண்மை. இன்றைக்கும்
குறட்டைவிட்டதற்கெல்லாம் கோர்ட் வாசல் ஏறும் கணவன்
மனைவிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையான காரியம்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, குறைகளை அல்ல, நிறைகளை
மட்டுமே பார்த்துப் பழகிய ஒரு தம்பதியினரைக் குறித்து
இன்றைய முதல்வாசகத்தில் படிக்கின்றோம். அவர்கள்தான்
ஆபிராகம் சாராள் தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் நீண்ட
நாட்களாக குழந்தை பாக்கியமே இல்லை. ஆனாலும்கூட அவர்கள்
ஒருவர் மற்றவரைக் குறைகூறிகொண்டிருக்கவில்லை. சாராள்
கருவுற இயலாதவர் என்று ஆபிரகாம்
குறைகூறிக்கொண்டிருக்கவில்லை, அதேநேரத்தில் சாராள்
தன்னுடைய கணவர் ஆபிரகாம் வயது முதிர்ந்தவராக இருக்கிறார்
என்று குறைகூறிக்கொண்டிருக்கவில்லை. மாறாக ஒருவர் மற்றவரை
குறைநிறைகளோடு ஏற்றுக்கொண்டனர். சிறந்த தம்பதியினராக
விளங்கினார்கள். ஆகையால் ஒரு குடும்பம் சிறந்த குடும்பமாக
இருப்பதற்கு முதன்மையாக கணவன் மனைவி இடத்தில் நிறைகளை
மட்டுமே பார்க்கும் மனநிலை பெருகவேண்டும்.
ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக/ திருக்குடும்பமாக
இருப்பதற்கான இரண்டாவது தகுதி அந்த குடும்பம்
இறைநம்பிக்கையில் வாழவேண்டும் என்பதாகும். இன்றைக்கு
நம்முடைய (கிறிஸ்தவக்) குடும்பங்களில் இறைநம்பிக்கை இல்லை,
ஆழமான விசுவாசம் இல்லை, ஏன், குடும்ப ஜெபம்கூட இல்லை.
அதனால்தான் அடித்தளம் இல்லாத கட்டடங்கள் போன்று
குடும்பங்கள் சிதைவுற்றுக்கிடக்கின்றன;
ஆனால் இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்களில் இடம்பெறும்
ஆபிரகாம் குடும்பமாக இருக்கட்டும் அல்லது யோசேப்பு மரியாள்
குடும்பமாக இருக்கட்டும், இரண்டு குடும்பங்களுமே
இறைநம்பிக்கையில் நிலைத்திருந்தன என்று சொன்னால் அது
மிகையாகாது. ஆபிரகாம் தன்னுடைய வாழ்வின் எல்லாச்
சூழ்நிலைகளிலும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டிருந்தார். அதை
ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். அதனால்தான் ஆண்டவர்
ஆபிரகாமைப் பார்த்து, "வானத்தை நிமிர்ந்து பார்.
முடியுமானால், விண் மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே
உன் வழிமரபினரும் இருப்பர்" என்கிறார். யோசேப்பும்
மரியாளும் இறைவன்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து
வாழ்ந்தார்கள் என்றால் அது மிகையில்லை. ஏரோது மன்னன்
குழந்தை இயேசுவைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தபோதும்,
இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த சிமியோனின்
இறைவாக்கைக் கேட்டபோதும், பனிரெண்டு வயதில் இயேசு கோவிலில்
காணாமல்போனபோதும் அவர்கள் இறைவன்மீது நம்பிக்கையோடு
இருந்தார்கள் என்பதை உறுதிபடச் சொல்லலாம்.
ஆகவே, நம்முடைய குடும்பங்கள் இறைநம்பிக்கையில் வளரும்போது
அவை திருக்குடும்பங்களாக மாறும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
நிறைவாக நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறுவதற்கு
நாம் செய்யவேண்டியது குடும்பங்களை அன்பில் கட்டியெழுப்ப
வேண்டும் என்பதாகும். 'நீரின்றி அமையாது உலகு என்பதுபோல,
அன்பின்றியும் உலகம் அமையாது. குடும்பத்தில் நல்லன்பும்,
பரிவும் இருக்கின்றபோது அத்தகைய அன்பு சமூதாயத்திற்கும்
பரவும், அது உலகையே அன்புமயமானதாக மாற்றிவிடும். தூய பவுல்
கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "நீங்கள்
கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய
இறைமக்கள்... ஆகையால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்
ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால்
மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும்
மன்னிக்கவேண்டும். இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே
கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச்
செய்யும்". (கொலோ 3:12-14).
திருக்குடும்பத்திலும் ஆபிரகாம் குடும்பத்திலும் ஆழமான,
உண்மையான அன்பு நிலவியிருக்கும். அதனால்தான் அவர்கள்
சிறந்த குடும்பங்களைக் கட்டியெழுப்ப முடிந்தது. நம்முடைய
குடும்பங்களிலும் உண்மையான அன்பு நிலவுகிறபோது,
குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
இப்படி கணவன் மனைவியரிடத்தில் நிறைகளைப் பார்க்கும்
மனபான்மையும் இறைநம்பிக்கையும் உண்மையான அன்பும்
இருக்கவேண்டும் என்று சிந்தித்த நாம், அந்த கணவன்
மனைவியினது அன்பின் வெளிப்பாடாக வரும் குழந்தைச்
செல்வங்களை எப்படி வளர்ப்பது என சிந்தித்துப்
பார்க்கவேண்டும். ஏனென்றால், இக்காலக் குழந்தைகளே
எதிர்காலத்தில் தலைவன் தலைவியாக மாறுகிறார்கள். எனவே
அவர்கள் நன்முறையில் வளர்க்கப்படும் பட்சத்தில்
சமுதாயத்தில் நல்லமனிதர்கள் பெருகுவார்கள் என்பதில்
எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.
'எந்த குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை
வளர்ப்பதிலே' என்பான் கவிஞன் ஒருவன். ஒரு குழந்தையின்
வளர்ச்சியில் தாய் மட்டுமல்ல, தந்தையும் சிறப்பான
பங்களிப்பைச் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் வழியாக
பிறந்திருக்கும் குழந்தைக்கு முன்மாதிரியான வாழ்க்கையை
வாழ்ந்துகாட்டுகிறபோது அவர்கள் நல்ல மனிதர்கள் மாறுவார்கள்
என்பது உறுதி. ஆனால் பெற்றோர்களின் தாறுமாறு வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு, குழந்தைகள் சீரழிந்து போகின்ற
நிலையைத்தான் இன்றைக்குப் பார்க்கின்றோம்.
வகுப்பறையில் ஆசிரியர் ஒரு மாணவர்களைப்
பார்த்துக்கேட்டார்: "வேகமாகச் செல்லக்கூடியது அம்பா?
துப்பாக்கிக்குண்டா?" என்று. அதற்கு அந்த மாணவன்,
"இரண்டும் இல்லை. என்னுடைய அப்பாதான் வேகமாகச் செல்வார்?"
என்றான். ஒருநிமிடம் திகைத்துப் போன ஆசிரியர் அவனிடம்,
"அது எப்படி?" என்று கேட்டார். அதற்கு அவன், "என்னுடைய
தந்தை வேலை பார்க்கும் அரசு அலுவலகத்தில் ஐந்து
மணிக்குத்தான் வெளியே விடுவார்கள். ஆனால் என்னுடைய தந்தை
நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். இப்போது
சொல்லுங்கள். யார் வேகமாகச் செல்கிறார் என்று?". இதைக்
கேட்ட அந்த ஆசிரியர் எதுவும் பேசாது அமைதியானார்.
இப்படிப்பட்ட ஒரு பொறுப்பற்ற, கடமை உணர்வு இல்லாத ஒரு
தந்தையைப் பார்த்து வாழும் மகன் எப்படி வளர்வான் என்பதே
நாமே சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். ஆகையால்
ஒவ்வொரு தாய் தந்தையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு
தாங்கள்தான் முதல் கதாநாயகர்கள்/ கதாநாயகிகள் என்ற
ரீதியில் முன்மாதிரியான வாழ்ந்துகாட்டவேண்டும்.
அதேநேரத்தில் பிள்ளைகளும் தங்களுடைய பெற்றோருக்குக்
கீழ்படிந்து வாழவேண்டும். எப்படி இயேசு கடவுளுக்கும்
பெற்றோருக்கும் உகந்தவராய் வாழ்ந்தாரோ அதைப் போன்று.
ஆகவே, திருக்குடும்பப் பெருவிழாக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் கணவன் மனைவியர் நிறைகளைப் பார்க்கும் மனநிலையோடும்,
இறை நம்பிக்கையோடும் அன்பும் வாழவேண்டும். அதே நேரத்த்தில்
பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கும் முன்மாதிரியான
வாழ்க்கை வாழ்ந்துகாட்டவேண்டும். அப்படி நடக்கும்போது நமது
குடும்பங்கள் திருக் குடும்பங்களாக மாறும் என்பதில்
எந்தவித சந்தேகமுமில்லை.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
I சீராக்கின் ஞான நூல் 3: 2-7, 12-14
II கொலோசையர் 3: 12-21
III மத்தேயு 2: 13-15, 19-23
அனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள்:
கடைத்தெருவிலிருந்து கையில் பொட்டலத்தோடு நடந்து வந்துகொண்டிருந்த
முகிலனைப் பார்த்து, அவனுடைய நண்பன் அகிலன், "கையில் என்ன
பொட்டலம்...?" என்றான். "அதுவா... மனைவிக்காக
வாங்கியிருக்கும் மல்லிகைப் பூ பொட்டலம்" என்றான் முகிலன்.
உடனே அகிலன் சிரித்துக்கொண்டே, "மனைவியின்மீது அவ்வளவு
பிரியமா...? மல்லிகைப் பூவெல்லாம் வாங்கிக்கொண்டு
போகிறாய்...?" என்றான். "என் மனைவி என்னுடைய வெற்றிக்குக்
காரணமாக இருந்திருக்கின்றாள். அப்படிப்பட்டவள்மீது பிரியமில்லாமலா
இருக்கும்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் அகிலன். இதைக்
கேட்டுக்கொண்டிருந்த அகிலன், "உன்னுடைய வெற்றிக்கு மட்டுமல்ல...
பலருடைய வெற்றிக்கும் அவர்களுடைய மனைவியே காரணமாக இருந்திருக்கின்றார்கள்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன்ட்ரு ஜான்சனுக்கு திருமணத்திற்கு
முன்பாக எழுதப் படிக்கத் தெரியாது. அவருடைய மனைவிதான் அவருக்கு
எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்து, அவருக்கு அமெரிக்க அதிபராகும்
தகுதியை உருவாக்கித் தந்தார்... மோட்டார் மன்னர் ஹென்றி
போர்ட் தெரியுமல்லவா... அவர் தன்னுடைய தொழிலில் தொடர்
தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுவந்தார். இப்படிப்பட்ட சமயத்தில்
அவரோடு இருந்த எல்லாரும் அவரை விட்டுப் போய்விட்டார்கள்;
அவருடைய மனைவிதான் அவரோடு இருந்து, அவருக்குப் புதுத்
தெம்பூட்டி, உற்சாகப்படுத்தி அவரைத் தொழிலில் வெற்றிபெறச்
செய்தார். இப்படிப் பலருடைய வெற்றிக்கும் அவர்களுடைய மனைவிதான்
உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள்" என்றான். இப்படிச்
சொல்லிவிட்டு அகிலன் முகிலனிடம், "அது சரி நண்பா! உன்னுடைய
வெற்றிக்கு உன்னுடைய மனைவி எந்த விதத்தில் காரணமாக இருந்தாள்"
என்றான். "ஓர் அருமையான நாவலை எழுதுவதற்குக் காரணமாக இருந்தாள்"
என்றான் முகிலன். "அது எப்படி?" என்று மீண்டுமாக அகிலன்
கேள்வி கேட்டபோது, "ம்ம்ம் நாவலை எழுதி முடிக்கும் வரைக்கும்
என் மனைவி அவளுடைய அம்மா வீட்டில் இருந்தாள்" என்றான் முகிலன்.
இதைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான்
அகிலன்.
குடும்பங்களில் ஒருசிலர் அருகில் இருந்தால் மகிழ்ச்சியாக
இருக்கும்; ஒருசிலர் அருகில் இல்லாமல் இருந்ததால்தான் மகிழ்ச்சியாக
இருக்கும் என்ற உண்மையை வேடிக்கையாக பதிவுசெய்யும் இந்த நிகழ்வு
நமது சிந்தைக்குரியது. இன்று நாம் திருக்குடும்பப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்சிகின்றோம். இந்த மகிழ்வான தருணத்தில்,
நம்முடைய குடும்பத்தை, திருக்குடும்பமாகக் கட்டியெழுப்ப இன்றைய
இறைவார்த்தை என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பெற்றோரின் கடமை
ஒரு குடும்பத்தின் இருபெரும் தூண்கள், அக்குடும்பத்தில் இருக்கும்
தாயும் தந்தையும்தான். அவர்கள் இருவரும் கடவுளுக்கு ஏற்ற
வழியில் நடந்து, கடவுள் தங்களுக்குக் கொடுக்கும் குழந்தையையும்
கடவுளுக்கு ஏற்ற வழியில் நடத்தினால் அந்தக் குடும்பத்தை
விட மகிழ்ச்சியான குடும்பம் இந்த உலகத்தில் இருக்க
முடியாது. திருக்குடும்பத்தில் உள்ள யோசேப்பும் மரியாவும்
கடவுளுக்கு அஞ்சி, அவருடைய திருவுளத்தின்படி வாழ்ந்துவந்தார்கள்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டால், யோசேப்பு தன்னுடைய
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளத்தின்படியே
நடந்தது, குழந்தை இயேசுவுக்கும் மரியாவிற்கும் பாதுகாப்பளித்து,
அரணாக இருந்தார். இன்றைய நற்செய்தியில் ஏரோது மன்னன் குழந்தை
இயேசுவைக் கொல்ல நினைத்தபோது, அவர் குழந்தையையும் அதன்
தாய் மரியாவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகின்றார்.
இவ்வாறு யோசேப்பு இறைத்திருவுளத்தின்படி நடந்து, ஓர் எடுத்துக்காட்டான
தந்தையாய் மிளிர்ந்தார். மரியாவும் அப்படியே இறைத்திருவுளத்தின்படி
நடந்து ஓர் எடுத்துக்காட்டன தாயாய் மிளிர்ந்தார். இதனாலேயே
இயேசுவும் இறைத்திருவுளத்தின் நடப்பவராக விளங்கினார். அப்படியானால்,
ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக
விளங்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்து வளர்கின்ற
அவர்களுடைய பிள்ளைகளும் எடுத்துக்காட்டான வாழ்க்கை
வாழ்வார்கள்.
நிறையக் குடும்பங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குமுன்
எடுத்துக்காட்டன வாழ்க்கை வாழாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில்
நாம் வாசிப்பது போல, தங்களுடைய நடத்தையாலும் சொல்லாலும் எரிச்சல்
மூட்டக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதனாலேயே பிள்ளைகளும்
தவறான வழியில் செல்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு
பெற்றோரும் யோசேப்பு, மரியாவைப் போன்று தங்களுடைய பிள்ளைகளுக்குமுன்
எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வது இன்றியமையாதது.
கணவன் மனைவின் கடமை
ஒரு குடும்பத்தின் இருபெரும் தூண்களாக இருக்கும் தாயும் தந்தையும்
எப்படி எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவேண்டும் என்பது பற்றிச்
சிந்தித்த நாம், அந்த தாயும் தந்தையும் அல்லது கணவனும் மனைவியும்
ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இன்றைய
இரண்டாம் வாசகத்தின் வழியாக அறிந்துகொள்வோம். இரண்டாம் வாசகத்தில்
புனித பவுல், மனைவி தன்னுடைய கணவருக்குப் பணிந்திருக்கவேண்டும்
என்றும் கணவர் தன்னுடைய மனைவியை அன்பு செய்யவேண்டும் என்றும்
கூறுகின்றார். இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, மனைவிதான்
கணவருக்குப் பணியவேண்டும், கணவர்தான் மனைவியை அன்பு செய்யவேண்டும்
என்று இல்லை. கணவன் தன்னுடைய மனைவிக்குப் பணிந்திருக்கவேண்டும்;
அதேபோல் மனைவி தன்னுடைய தன்னுடைய கணவரை அன்பு செய்யவேண்டும்.
இப்படி ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடந்து, ஒருவர் மற்றவரை
அன்பு செய்து வாழ்ந்தால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்
என்பதில் ஐயமில்லை. ஆனால், நிறையக் குடும்பங்களில் இத்தகைய
பணிவும் அன்பும் இல்லை. அதனால்தான் பல குடும்பங்கள்
சிதைந்து கிடக்கின்றன. ஒரு குடும்பத்தில் மனைவி தன் கணவரோடு
கோபித்துக்கொண்டு பெட்டி படுக்கையைத் தூக்கி, அவளுடைய அம்மா
வீட்டுக்குக் கிளம்பினாள். அதைப் பார்த்து அவளுடைய கணவனும்
பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்கொண்டு அவனுடைய
வீட்டுக்குக் கிளம்பினான். தன் கணவன் இப்படி நடந்துகொள்வான்
என்று சிறிதும் எதிர்பார்த்திராத மனைவி அவனிடம், "இப்படி
இருவரும் நம்முடைய அம்மா வீட்டிற்குக் கிளம்பிப்
போய்விட்டால், பிள்ளைகள் எங்கே போவார்கள்...?" என்றாள்.
அதற்கு அவளுடைய கணவன், "வேறு எங்கு போவார்கள்...? நடுத்தெருவிற்குத்தான்
போவார்கள்" என்றான். உடனே அவள் தன்னுடைய எண்ணத்தை
மாற்றிக்கொண்டு வீட்டிலேயே இருக்கத் தொடங்கினாள். இப்படித்தான்
நிறையக் குடும்பங்கள் அன்பில்லாமலும் பணிவில்லாமலும்
சிதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பம்
திருக்குடும்பமாக மாற, ஒருவர் மற்றவர்மீது அன்பு காட்டி,
ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடப்பது நல்லது.
பிள்ளையின் கடமை
பெற்றோர், கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும், அவர்களுடைய
கடமை என்ன என்பன பற்றி சிந்தித்த நாம், பிள்ளைகளின் கடமை
என்ன என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். சீராக்கின் ஞான
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பிள்ளைகள்
தங்களுடைய தாய், தந்தையை மதித்து வாழவேண்டும் என்றும் அவர்களை
மேன்மைப்படுத்தவேண்டும் என்றும் அப்படிச் செய்தால், அவர்களுடைய
மன்றாட்டு கேட்கப்படும்; மகிழ்ச்சி கிட்டும்; இன்னபிற ஆசியும்
கிடைக்கும் என்று எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் பல பிள்ளைகள் தங்களை ஏற்றிய ஏணிகளாகிய
பெற்றோர்களை மதிக்காமலும் அவர்களை மேன்மைப்படுத்தாலும் புறக்கணிப்பதுதான்
மிகவும் வேதனையாக இருக்கின்றது. ஆண்டவர் இயேசு, தான் இறந்தபிறகு
தன் தாய் மரியா தனித்துவிடப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக
அவரை யோவானிடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் தன்
தாய்மீது அக்கறையாய் இருந்தார். அவரைப் போன்று ஒவ்வொரு மகனும்
மகளும் தன்னுடைய பெற்றோருக்கு மதிப்பளித்து, அவர்களுடைய கடைசிக்
காலத்தில் கைநெகிழ்ந்து விடாமல், கண்ணும் கருத்துமாய்க்
காத்திடல் வேண்டும். அப்படிக் செய்தால், அவர்கள் கடவுளின்
ஆசியைப் பெறுவது உறுதி.
ஆகையால், இந்தத் திருக்குடும்பப் பெருவிழாவில் ஒவ்வொருவரும்
- அது தாயாக, தந்தையாக, பிள்ளையாக யாராக இருந்தாலும் ஒருவர்மீது
அன்பு செலுத்தி, ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடந்து, நல்லதொரு
குடும்பத்தைக் கட்டியெழுப்பி, இந்த மண்ணில் விண்ணகத்தைக்
காண்போம்.
சிந்தனை
'குடும்பம் என்பது கடவுள் நமக்காகப் பூமியில் ஏற்பாடு
செய்திருக்கும் விண்ணகம் (சொர்க்கம்). அதை விண்ணகமாக்குவதும்
பாதாளமாக்குவதும் (நரகம்) நம் கையில்தான் உள்ளது' என்பர்
சான்றோர் பெருமக்கள். ஆகையால் நாம், அன்பை அடித்தளமாகக்
கொண்டு, குடும்பங்களைக் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
இன்று, நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்தை நினைவு
கூறுகிறோம். தேவ ஆவியால் நிரப்பப் பெற்று கருவுற்று
ஆண்டவர் இயேசுவை, குழந்தையாகப் பெற்ற மரியாவும்,
வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித சூசையப்பரும்
குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி கையில் எடுத்து ஏந்தி,
ஏரோதிடம் தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின் திரும்ப
எருசலேம் வந்து, இறுதியாக நாசரேத்தில் அன்பால், பாசத்தால்
இயேசுவை உடல் வளர்ச்சியில் மட்டுமல்ல ஞானத்திலும்,
அறிவிலும் வளர்த்து, 12 வயதில் எருசலேமில் தவறவிட்ட போதும்
ஏக்கத்தோடு இருவரும் தேடிக் கண்டடைந்த பின், 30 வயது வரை
வளர்த்து உருவாக்கி, மனித குலத்திற்காக மகனையே பலியாக
அர்ப்பணித்த குடும்பம் தான் இந்த திருக்குடும்பம்
(லூக்.2:40-52).
இத்திருக்குடும்பத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப்
புரிந்து செயல்பட்டார்கள். நீ பெரியவனா, அல்லது நான்
பெரியவனா என்ற பட்டிமண்டபத்திற்கே இடம் தரவில்லை. இந்தக்
குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளமே கூட்டு முயற்சியும்,
விட்டுக் கொடுக்கும் மனநிலையும் ஆகும். இறைவார்த்தையை
ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் கொண்டவர்கள் (லூக்.2:19).
இறைமகன் பிரசன்னம் இருக்க, இவர்களில் நிறை அன்பும், நிறை
மகிழ்ச்சியும் உன்னதமான அர்ப்பணமும் வெளிப்பட்டது.
தாய் தந்தையைப் போற்றி மதித்து வாழ்பவன் எல்லா ஆசீரையும்
பெற்றவன். தாய் தந்தையை மதித்து நடப்பது பாவ
மன்னிப்புக்குச் சமம். அவர்கள் எல்லா செல்வங்களையும
நிறைவாகப் பெற்று, நீடூழி வாழ்வர் எனக் கூறுகிறது
(சீரா:3:3-6) முதல் வாசகம். மனத்தாழ்ச்சி, கனிவு, பொறுமை
குடும்பத்தில் மேலோங்கி நிற்க வேண்டியவை. இவை
அனைத்திற்கும் மேலாக நிறை அன்பு தேவை என்பதை (கொலோ
3:12-14) இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. கணவன் மனைவியை
அன்பு செய்தல், மனைவி கணவனுக்குப் பணிந்து நடத்தல்,
பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிதல் குடும்பத்தை நிறைவு
செய்யும் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் (கொலோ
3:18-21).
குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம், பின் ஆழமான
உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கூட்டமைப்பின் அடிப்படையான
ஓர் அங்கம். குடும்பம் ஒரு கோயில். அங்கே இறைவன்
பிரசன்னமாகிறார். பாலோடு கலந்த நீர் பாலாகுவது போல, ஆணும்,
பெண்ணும் திருமணத்தால் ஓருடலாகிறார்கள். இது இறைவனால்
அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு. ஒரு மனிதன் கடைக்குச்
சென்று தலைக் கவசம் (Helmet) ஒன்று வாங்கி வந்தான்.
"ஏனப்பா இந்தக் கவசம்? மோட்டார் சைக்கிள் வாங்கி
விட்டாயா?" என்று கேட்டார் வழியில் சந்தித்த நண்பர்.
"இல்லையடா! நேற்று என் மனைவி பூரிக்கட்டை வாங்கி வந்து
விட்டாள். அதனால் தான் இந்த ஹெல்மட் வாங்கினேன்" என்றான்
இந்த மனிதன். இப்படி வாழ்வது அல்ல குடும்ப வாழ்வு! ஒரு
மாணவன் ஆசிரியரிடம் சொன்னான், "சார் எங்க அப்பா ஆபிசிலே
ரொம்ப பெரியவர். ஏனெனில் 5000 பேருக்கு போலீஸ் அதிகாரி
அவர். ஆனால் எங்க வீட்டிலே எங்க அம்மாதான் பெரியவுங்க.
ஏன்னா, எங்க அப்பாவையே எங்க அம்மா அடக்கிவிடுவாங்க!"
இதுவும் சரியல்ல!
ஒரு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம், "தம்பி! பரிணாம்
வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறு" என்றார். "சார்!
நான் சிறுவனாக இருந்த போது என் அப்பா என்னைப் பார்த்து
வாடா கன்னுக்குட்டி! என்று செல்லமாகக் கூப்பிடுவார். ஆனால்
இப்போ போடா எருமைமாடு என்று திட்டுகிறார். இதுதான் பரிணாம
வளர்ச்சியென்றான்" மாணவன். இதுவும் சரியல்ல!
மாறாக குடும்பம் மனித மாண்பை வளர்க்க வேண்டும் அன்பும்,
அரவணைப்பும், நிலையான பண்புகள் என்பதை குடும்பம்
எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறது. அதற்கு திருக்குடும்பம்
நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு!
வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்த திருச்சபைத் தாய் ஒரு
குடும்பத்திற்கு மட்டுமே திருக்குடும்பம் என்ற பெயரைச்
சூட்டினாள். அந்தக் குடும்பம்தான் இயேசுவும், மரியாவும்,
யோசேப்பும் வாழ்ந்த குடும்பம். இயேசு, மரியா, யோசேப்பு
இவர்கள் வாழ்ந்த குடும்பம் மட்டும் குன்றின்மீது
ஏற்றப்பட்ட விளக்காகத் திகழக் காரணமாக அமைந்தது அந்த
மூவரிடமும் நின்று நிலவிய மூன்று முத்தான குணங்கள்.
திருக்குடும்பம் என்னும் பேரொளி ஒளிர்வதற்குக் காரணமாக
இருந்தவை திரி என்னும் இயேசுவின் பணிவு, எண்ணெய் என்னும்
மரியாவின் அன்பு, விளக்கு என்னும் யோசேப்பின் அமைதி.
பணிவோடு துவங்கிய இயேசுவின் வாழ்க்கை கீழ்ப்படிதலோடு
முடிந்தது. பின்பு அவர் (சிறுவன் இயேசு) அவர்களுடன்
(பெற்றோர்) சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப்
பணிந்து நடந்தார் (லூக் 2:51அ) என்று நற்செய்தியில்
படிக்கின்றோம். இயேசுவின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்.
அங்கே நாம் காண்பதென்ன? கெத்சமனி தோட்டத்தில் துயரமும்
மனக்கலக்கமும் (மத் 26:37). ஆழ்துயரமும் (மத் 26:38)
இயேசுவை ஆட்கொண்டிருந்தன. அவர் வானகத் தந்தையைப் பார்த்து,
என் தந்தையே. நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல
முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் (மத் 26:42)
என்றார்.
புனித பவுலடிகளார் கிறிஸ்து இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு.
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து
தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8) என்று
கூறுகின்றார். இயேசு அவருடைய பெற்றோரின், விண்ணகத்
தந்தையின் திருவுளத்தோடு தன் ஆசைகளைச் சங்கமமாக்கிக்
கொண்டார். இயேசுவின் கீழ்ப்படிதலுக்கு அடுத்தபடியாக
திருக்குடும்பத்தை அலங்கரித்த பண்பு அன்னை மரியாவின்
அன்பு.
மரியா மங்கள வார்த்தைத் திருநாளன்று (லூக் 1:26-38) தம்
சம்மதத்தை கடவுளுக்குக் கொடுத்து உலக மக்களை அன்பு
செய்தார். எலிசபெத்தைச் சந்தித்து, அவரை வாழ்த்தி, அவரது
அன்பைப் பெற்றார் (லூக் 1:39-45).
எகிப்திற்குப் புறப்பட்டபோது பேசாமடந்தையாக யோசேப்பின் வழி
நடந்து (மத் 2:14). யோசேப்பை அன்பு செய்தார். சிறுவன்
இயேசுவைத் தேடியபோது (லூக் 2:41-50) இயேசுவை அன்பு
செய்தார்.
கானாவிலே திருமண வீட்டாரை அன்பு செய்தார் (யோவா 2:1-11).
கல்வாரியிலே சிலுவையிலே துடித்த இயேசுவின் அருகிலிருந்து
(யோவா 19:25) கண்ணீர் சிந்திய கர்த்தருக்கு (எபி 5:7)
ஆறுதல் என்னும் அருமருந்தைத் தந்து, அவரை அன்பு செய்தார்.
இறுதியாக, தம் மகனைக் கொன்றவர்களுக்குத் தாயாகி பாவிகளை
அன்பு செய்தார் (யோவா 19:26-27).
சுயநலம் என்ற சொல்லுக்கே அன்னை மரியாவின் வாழ்க்கையில்
இடமில்லை. அன்பே கடவுள் என அன்னை மரியா வாழ்ந்தார். அன்னை
மரியாவின் அன்பிற்கு அடுத்த படியாக திருக்குடும்பத்தை
அழுகுபடுத்தியது யோசேப்பின் அமைதி. அன்று வானதூதர்
மரியாவிற்கு நற்செய்தி கொண்டு வந்தார் கன்னி அன்னையானார் -
புனித யோசேப்பு பேசவில்லை! இயேசு பிறக்க இடமில்லை
என்றார்கள். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை.
குழந்தை இயேசுவை விண்ணகத்தூதரும். இடையர்களும், ஞானிகளும்
வாழ்த்தினார்கள். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!
இயேசு கோயிலிலே அர்ப்பணிக்கப்பட்டார். அப்போதும் புனித
யோசேப்பு பேசவில்லை!
எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும் என்று தூதர் சொன்னார்.
அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!
இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு தூதர்
சொன்னபோதும் புனித யோசேப்பு எதுவும் பேசவில்லை! யூதேயாவில்
அர்க்கலா. எரோதின் மகன்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
ஆகவே அங்கே போக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டபோதும்
புனித யோசேப்பு ஒன்றும் பேசவில்லை! சிறுவன் இயேசு காணாமல்
போனபோதும் புனித யோசேப்பு ஒன்றும் பேசவில்லை!
நாம் அமைதியில்தான் நமது தாயின் கருவில் வளர்ந்தோம். இறந்த
பின் அமைதியில்தான் இறைவனைச் சந்திக்கப் போகின்றோம்.
இப்படியிருக்க, பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே ஏன்
சத்தம்? எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார். மரம் வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான் எனச் சொல்லாமல் சொல்லி புனித யோசேப்பு
எங்கும், எதிலும், எப்பொழுதும் அமைதி காத்தார்.
மன்றாடுவோமா?
வானகத் தந்தையே, இயேசுவும் மரியாவும் யோசேப்பும் வாழ்ந்த
திருக்குடும்பம் போலவே எங்கள் குடும்பமும் திகழவேண்டும்.
இந்த நல்ல நேரத்தில் எங்களது கீழ்ப்படியாமையையும்,
பகையையும், அளவுக்கு மீறிய பேச்சையும் பாராமல், நாங்கள்
வாழ விரும்புகின்ற பணிவு வாழ்வையும், அன்பு வாழ்வையும்,
அமைதி வாழ்வையும் மட்டும் கண்ணோக்கி எங்கள் குடும்பங்களை
இயேசுவின் பணிவினாலும், மரியாவின் அன்பினாலும், யோசேப்பின்
அமைதியினாலும் அருள்பொழிவு செய்து எங்களை வளமுடன்
வாழவைத்தருளும். ஆமென். மேலும் அறிவோம்:
பொருள் :
ஒருவர் குடும்ப வாழ்வு அன்பின் இயல்பையும் அறச் செயலையும்
கொண்டிருக்குமானால் அவை முறையே பண்பாகவும் பயனாகவும்
திகழும். கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து வாழ்ந்தால்
அன்பே பண்பாகவும் அறமே பயனாகவும் விளங்கும்.
திருமணத்திற்கு ஏன் ஆடுமாடுகளை
அழைப்பதில்லை? ஏனெனில் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்.
ஆடுமாடுகளை அழைத்தால் அவை ஆயிரங்காலத்துப் பயிரை மேய்ந்து
விடுமாம்! ஆனால், இன்று பல்வேறு தீயசக்திகள் திருமணத்தை
மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஆயிரங்காலத்துப் பயிர்
குறுவைப் பயிராக மாறிவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தின்
தாக்கத்தால் மணமுறிவு அதிகரித்துவிட்டது. மேற்கத்திய
நாடுகளில் நடப்பது என்ன? திங்கள்கிழமை காதல்;
செவ்வாய்கிழமை நிச்சயதார்த்தம், புதன் கிழமை திருமணம்;
வியாழக்கிழமை தேனிலவு: வெள்ளிக்கிழமை விவாகரத்து;
சனிக்கிழமை Rest'(ஓய்வு); ஞாயிறு Next' (மறுமணம்).
இப்பின்னணியில் இன்று நாம் திருக்குடும்பத் திருவிழாவைக்
கொண்டாடுகிறோம்;
ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கையை வாழ்வது எப்படி
என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்
அருமையாகக் கூறுகிறார். அதன்படி நடந்தால், ஒவ்வொரு
குடும்பமும் திருக்குடும்பமாகத் திகழும். இல்லையெனில்
தெருக்குடும்பமாகத் திண்டாடும். குடும்பத்தில் கோலோச்ச
வேண்டிய நற்பண்புகள்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்
தாழ்மை, கனிவு, பொறுமை. அனைத்திற்கும் மேலாக
இந்நற்பண்புகளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்யும் அன்பு
(கொலோ 3:12-14).
கிறிஸ்துவுக்குள் குடும்ப வாழ்வு நடத்தும் கணவர் தம்
மனைவியை அன்பு செய்ய வேண்டும்; மனைவி தன் கணவருக்குப்
பணிந்து நடக்க வேண்டும். பிள்ளைகள் அனைத்திலும்
பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (கொலோ 3:18-21).
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் "தான்"
(ego) என்ற ஆணவம். அங்கேபார்! இங்கேபார்! மேலேபார்! கீழே
பார்! கலக்கப்போவது யார்? நீயா? நானா? என்ற நிலைப்பாடு
கணவனா? மனைவியா? காமமா? காதலா? மாமியாரா? மருமகளா? என்ற
பட்டி மன்றம் குடும்ப வாழ்வைச் சீரழித்துக்
கொண்டிருக்கிறது.
"குடும்பத்தில் யார் கை ஓங்குகிறது? அப்பா கையா? அம்மா
கையா? " என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்:
அப்பா கை ஓங்குகிறது; அம்மா கை வீங்குகிறது. குடும்ப
வாழ்வைப் பாதுகாக்க வேண்டுமென்றால், "நீயா? நாளா?" என்ற
பிரிவினைப் போக்கினைக் கைவிட்டு விட்டு, 'நீயும் நானும்'
என்ற சமரசப் போக்கிளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆணில்லாமல்
பெண்ணும். பெண்ணில்லாமல் ஆணும் வாழ முடியாது. எனவே ஆணும்
பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்
கொடுத்து இனியதோர். இல்லறம் நடத்த வேண்டும்.
இல்வாழ்வில் சுணக்கைவிட (maths). வேதியல் (Chemistry)
முக்கியமானது. மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காமல்,
இதயத்துக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டும். மூளை அறிவின்
ஊற்று; காரணம் - காரியம் அடிப்படையில் வேலை செய்து வீண்
விவாதத்தை உருவாக்கும், இதயம் அன்பின் ஊற்று: பாசத்தின்
அடிப்படையில் வேலை செய்யும். மற்றவரிடம் குறைகளைப்
பார்க்காமல் நிறைகளைப் பார்க்கும். அன்புக்கு மசியாதது
ஏதுமில்லை. அன்புக்கு அடிபணித்தால் ஆனந்தமான இவ்வாழ்வு வாழ
முடியும். அன்பு ஒருபோதும் அழியாது.
திருக்குடும்பத்தில் சமத்துவ அன்பும், மதிப்பும்,
மரியாதையும் நிலவியது. யோசேப்பு, மரியா, இயேசு ஆகிய
மூவரும் ஒருவர் மற்றவரைச் சொல்லாலோ செயலாலோ
புண்படுத்தவில்லை. அவர்களிடம் 'cgo' பிரச்சினை இல்லை (cgo
என்றால் ecking God out என்று விரிவாக்கம்
செய்யப்படுகிறது. அதாவது, கடவுளை வெளியேற்றுதல்) கடவுள்
வாழ்ந்த அக்குடும்பத்தில் அறிவுக்கு எட்டாத அமைதி
நிலவியது.
திருமண அன்பின் கனி குழந்தை, இன்றைய பதிலுரைப் பாடல் (திபா
128) கூறுவதுபோல, கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற மனிதனுக்குக்
கிடைக்கும் பேறுகள் இரண்டு. நல்ல மனைவி, நல்ல குழந்தைகள்.
ஒரு குடும்பத்தின் விளக்கு மனைவி, அக்குடும்பத்தில்
அணிகலன்கள் குழந்தைகள் என்கிறார் வள்ளுவர்.
மங்களம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள் 60)
திருக்குடும்பத்தைப் பின்பற்றிப் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டவேண்டும், குழந்தை
இயேசுவைக் கொடுங்கோல் மன்னன் ஏரோது கொல்லத் தேடுகிறான்.
என்று வானதூதர் யோசேப்புக்குக் கனவில் எச்சரித்தபோது,
யோசேப்பு தம் மனைவி மரியாவுடன் குழந்தையை யூதேயாவிலிருந்து
கலிலேயாவுக்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார் என்று
இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது (மத் 2:3-15). சிறுவன்
இயேசு பன்னிரண்டு வயதில் காணாமற்போனபோது, யோசேப்பும்
மரியாவும் அவரை மிகுந்த கவலையோடு தேடிச் சென்றனர் (லூக்
2:41-48).
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள்,
என்ன செய்கிறார்கள் என்று கவலைப்படுகின்றனரா? சில
பெற்றோர்கள். வந்த மாட்டைக் கட்டுவதில்லை. போன மாட்டைத்
தேடுவதில்லை" என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர். ஒரு
பெரியவர் ஓர் அப்பாவிடம்"உங்கள் முதல் பையன என்ன
செய்கிறான்?" என்று கேட்டதற்கு, "அந்தக் குரங்கு எந்த
மாத்தில் இருக்கிறதோ?" என்றார். இரண்டாவது பையனைப் பற்றிக்
கேட்டதற்கு, "அந்த எருமைமாடு எங்கே சுத்துதோ?" என்றார்.
மூன்றாவது பையனைப் பற்றிக் கேட்டதற்கு, அந்தப் பன்றி எங்கே
புரளுதோ?" என்றார். அதிர்ச்சியடைந்த பெரியவர் அப்பாவிடம்,
உங்கள் வீட்டில் பிள்ளைகள் இல்லையா? மிருகக் காட்சிதான்
இருக்கிறதா?" என்று கேட்டார். பெற்றோர்கள் பிள்ளைகளை
எவ்வாறு நடத்த வேண்டும் என்று புனித பவுல் பவுல் கூறுவது:
"பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல்
மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனம்தளர்ந்து
போவார்கள்" (கொலோ 3:21),
பிள்ளைகள் தங்களது வயதான பெற்றோர்களை எவ்வாறு நடத்த
வேண்டுமென்று இன்றைய முதல் வாசகம் நடைமுறை விதிகளைக்
கொடுக்கிறது. ஆண்டவருக்கு அஞ்சும் மனிதா தம் தாய் தந்தையை
மதிப்பர்; அவர்கள் நிலவுலகில் நீண்டகாலம் வாழ்வர். அன்னை
இல்லம் என்று வீட்டுக்குப் பெயரிட்டு, அன்னையை முதியோர்
இல்லத்தில் சேர்ப்பவர்களுக்குக் கடவுளின் ஆசீரும்
கிடைக்காது. அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து அன்பும்
ஆதரவும் கிடைக்காது என்பது உறுதி.
ஒரு தாத்தா தன் பேரனிடம், "என் நாக்குச் செத்துப்
போயிட்டது" என்று கூற, போள் அவரிடம், "செத்த நாக்கை
எரிக்கலாமா? அல்லது புதைக்கலாமா?" என்று கேட்டாள்! வயது ஆக
ஆக நாக்கு மட்டுமல்ல, எல்லா உறுப்புக்களுமே செயல் திறனை
இழந்து விடுகின்றன; அறிவாற்றல் குறைந்து போகிறது. இதைப்
பிள்ளைகள் புரிந்து கொண்டு வயதான பெற்றோர்களை மனங்கோணாமல்
நடத்த முயவ வேண்டும். திருமணம் புனிதத்துக்கு வாய்க்கால்:
திருமணமென்னும் திருவருட் சாதனத்தால் தம்பதியர்
திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இம்மையில் முறையான திருமண
வாழ்வு வாழ்கின்றவர்கள், தெய்வீக வாழ்வு வாழ்கின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். (குறள் 50)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
திருமணத்திற்கு என் ஆடுமாடுகளை அழைப்பதில்லை? ஏனெனில்
திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர், ஆடுமாடுகளை அழைத்தால் அவை
ஆயிரங்காலத்துப் பயிரை மேய்ந்து விடுமாம். ஆனால், இன்று
பல்வேறு தீயசக்திகள் திருமணத்தை மேய்த்து
கொண்டிருக்கின்றன. ஆயிரங்காலத்துப் பயிர் குறுவைப் பயிராக
மாறிவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால்
மணமுறிவு அதிகரித்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் நடப்பது
என்ன? திங்கள்கிழமை காதல், செவ்வாய்கிழமை நிச்சயதார்த்தம்.
புதன் கிழமை திருமணம்; வியாழக்கிழமை தேனிலவு:
வெள்ளிக்கிழமை விவாகரத்து; சனிக்கிழமை Resi' (ஓய்வு):
ஞாயிறு 'Next' (மறுமணம்). இப்பின்னணியில் இன்று நாம்
திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கையை வாழ்வது எப்படி
என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்
அருமையாகக் கூறுகிறார். அதன்படி நடந்தால், ஒவ்வொரு
குடும்பமும் திருக்குடும்பமாகத் திகழும். இல்லையெனில்
தெருக்குடும்பமாகத் திண்டாடும், குடும்பத்தில் கோலோச்ச
வேண்டிய நற்பண்புகள்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்
தாழ்மை, கனிவு, பொறுமை, அனைத்திற்கும் மேலாக
இந்நற்பண்புகளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்யும் அன்பு
(கொலோ 3:12-14),
கிறிஸ்துவுக்குள் குடும்ப வாழ்வு நடத்தும் கணவர் தம்
மனைவியை அன்பு செய்ய வேண்டும்; மனைவி தன் கணவருக்குப்
பணிந்து நடக்க வேண்டும். பிள்ளைகள் அனைத்திலும்
பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (கொலோ 3:18-21).
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் "தான்"
(ego) என்ற ஆணவம். அங்கேபார். இங்கேபார். மேலேபார். கீழே
பார்! கலக்கப்போவது யார்? நீயா? நானா? என்ற நிலைப்பாடு
கணவனா? மனைவியா? காமமா? காதலா? மாமியாரா? மருமகளா? என்ற
பட்டி மன்றம் குடும்ப வாழ்வைச் சீரழித்துக்
கொண்டிருக்கிறது.
குடும்பத்தில் யார் கை ஒங்குகிறது? அப்பா கையா? அம்மா
கையா? - என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்:
அப்பா கை ஓங்குகிறது. அம்மா கை வீங்குகிறது. குடும்ப
வாழ்வைப் பாதுகாக்க வேண்டுமென்றால், - நீயா? நானா?" என்ற
பிரிவினைப் போக்கினைக் கைவிட்டு விட்டு, 'நீயும் நானும்'
என்ற சமரசப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆணில்லாமல்
பெண்ணும், பெண்ணில்லாமல் ஆனும் வாழ முடியாது. எனவே ஆணும்
பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்
கொடுத்து இனியதோர். இல்லறம் நடத்த வேண்டும்.
இல்வாழ்வில் கணக்கைவிட (maths), வேதியல் (Chemistry)
முக்கியமானது. மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காமல்,
இதயத்துக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டும். மூளை அறிவின்
ஊற்று; காரணம் - காரியம் அடிப்படையில் வேலை செய்து வீண்
விவாதத்தை உருவாக்கும். இதயம் அன்பின் ஊற்று; பாசத்தின்
அடிப்படையில் வேலை செய்யும். மற்றவரிடம் குறைகளைப்
பார்க்காமல் நிறைகளைப் பார்க்கும். அன்புக்கு மசியாதது
எதுமில்லை. அன்புக்கு அடிபணிந்தால் ஆனந்தமான இல்வாழ்வு வாழ
முடியும். அன்பு ஒருபோதும் அழியாது.
திருக்குடும்பத்தில் சமத்துவ அன்பும், மதிப்பும்,
மரியாதையும் நிலவியது. யோசேப்பு, மரியா, இயேசு ஆகிய
மூவரும் ஒருவர் மற்றவரைச் சொல்லாலோ செயலாலோ
புண்படுத்தவில்லை. அவர்களிடம் 'cgo' பிரச்சினை இல்லை (cgo
என்றால் ecking God out என்று விரிவாக்கம்
செய்யப்படுகிறது. அதாவது, கடவுளை வெளியேற்றுதல்) கடவுள்
வாழ்த்த அக்குடும்பத்தில் அறிவுக்கு எட்டாத அமைதி
நிலவியது.
திருமண அன்பின் கனி குழந்தை, இன்றைய பதிலுரைப் பாடல் (திபா
128) கூறுவதுபோல, கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற மனிதனுக்குக்
கிடைக்கும் பேறுகள் இரண்டு நல்ல மனைவி, நல்ல குழந்தைகள்.
ஒரு குடும்பத்தின் விளக்கு மனைவி, அக்குடும்பத்தில்
அணிகலன்கள் குழந்தைகள் என்கிறார் வள்ளுவர்.
திருக்குடும்பத்தைப் பின்பற்றிப் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டவேண்டும். குழந்தை
இயேசுவைக் கொடுங்கோல் மன்னன் ஏரோது கொல்லத் தேடுகிறான்
என்று வானதூதர் யோசேப்புக்குக் கனவில் எச்சரித்தபோது,
யோசேப்பு தம் மனைவி மரியாவுடன் குழந்தையை யூதேயாவிலிருந்து
கலிலேயாவுக்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார் என்று
இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது (மத் 2:3-15). சிறுவன்
இயேசு பன்னிரண்டு வயதில் காணாமற்போனபோது, யோசேப்பும்
மரியாவும் அவரை மிகுந்த கவலையோடு தேடிச் சென்றனர் (லூக்
2:41-48),
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள்,
என்ன செய்கிறார்கள் என்று கவலைப்படுகின்றனரா? சில
பெற்றோர்கள், "வந்த மாட்டைக் கட்டுவதில்லை, போன மாட்டைத்
தேடுவதில்லை" என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர். ஒரு
பெரியவர் ஓர் அப்பாவிடம் "உங்கள் முதல் பையன் என்ன
செய்கிறான்?" என்று கேட்டதற்கு, 'அந்தக் குரங்கு எந்த
மரத்தில் இருக்கிறதோ?" என்றார். இரண்டாவது பையனைப் பற்றிக்
கேட்டதற்கு, "அந்த எருமைமாடு எங்கே கத்துதோ?" என்றார்.
மூன்றாவது பையனைப் பற்றிக் கேட்டதற்கு, 'அந்தப் பன்றி
எங்கே புரளுதோ?" என்றார். அதிர்ச்சியடைந்த பெரியவர்
அப்பாவிடம், 'உங்கள் வீட்டில் பிள்ளைகள் இல்லையா? மிருகக்
காட்சிதான் இருக்கிறதா? என்று கேட்டார். பெற்றோர்கள்
பிள்ளைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று புனித பவுல்
கூறுவது: "பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல்
மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனம் தளர்ந்து
போவார்கள்" (கொலோ 3:21),
பிள்ளைகள் தங்களது வயதான பெற்றோர்களை எவ்வாறு தடத்த
வேண்டுமென்று இன்றைய முதல் வாசகம் நடைமுறை விதிகளைக்
கொடுக்கிறது. ஆண்டவருக்கு அஞ்சும் மனிதர் தம் தாய் தந்தையை
மதிப்பர்; அவர்கள் நிலவுலகில் நீண்ட காலம் வாழ்வர். அன்னை
இல்லம் என்று வீட்டுக்குப் பெயரிட்டு, அன்னையை முதியோர்
இல்லத்தில் சேர்ப்பவர்களுக்குக் கடவுளின் ஆசீரும்
கிடைக்காது. அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து அன்பும்
ஆதரவும் கிடைக்காது என்பது உறுதி.
ஒரு தாத்தா தன் பேரனிடம், "என் நாக்குச் செத்துப்
போயிட்டது" என்று கூற, போன் அவரிடம், "செத்த நாக்கை
எரிக்கலாமா? அல்லது புதைக்கலாமா?" என்று கேட்டான் வயது ஆக
ஆக நாக்கு மட்டுமல்ல, எல்லா உறுப்புகளுமே செயல் திறனை
இழந்து விடுகின்றன; அறிவாற்றல் குறைந்து போகிறது. இதைப்
பிள்ளைகள் புரிந்து கொண்டு வயதான பெற்றோர்களை மனங்கோணாமல்
நடத்த முயல வேண்டும். திருமணம் புனிதத்துக்கு வாய்க்கால்;
திருமணமென்னும் திருவருட் சாதனத்தால் தம்பதியர்
திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இம்மையில் முறையான திருமண
வாழ்வு வாழ்கின்றவர்கள், தெய்வீக வாழ்வு வாழ்கின்றனர்,
அருள்பணி Y. இருதயராஜ்
அவன் ஒரு கலைஞன். உலகிலேயே மிகவும் அழகானதை ஓவியமாக்கத்
துடித்தான். அப்படி உலகிலேயே மிக அழகானது எது?
வழியில் குரு ஒருவரைச் சந்தித்தான். அவர் சொன்னார்:
"உலகிலேயே மிக அழகானது நம்பிக்கைதான். அதனை ஒவ்வொரு
ஆலயத்திலும் உணரலாம்". சிறிது தூரம் சென்றான். புதிதாக.
மணமுடித்த இளமங்கை எதிரே வந்தாள். "அன்புதான் அழகானது.
அன்பு இருந்தால் வறுமை கூட வளமைதான். கண்ணீர் கூடக்
களிப்புத்தான் என்றாள். அடுத்து ஒரு போர்வீரன் :
'சமாதானம்' அதுபோல அழகானது வேறு எது? போர், யுத்தம்,
சண்டை, சச்சரவு எல்லாமே அசிங்கமானது".
நம்பிக்கை... அன்பு... சமாதானம்... இவற்றையெல்லாம் எப்படி
ஓர் ஓவியத்துக்குள் கொண்டு வருவது? சிந்தித்துக் கொண்டே
தன் வீட்டிற்குள் நுழைகிறான். 'அப்பா' என்று ஆர்வம் பொங்க
ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்ட குழந்தைகளின்
கண்களில் நம்பிக்கை மின்னியது. 'என்னங்க' என்ற தன்
மனைவியின் கனிவான குரலில் அன்பு பொங்கியது. அந்த
நம்பிக்கையும் அன்பும் கட்டி எழுப்பிய ஓர் அமைதி, சமாதானம்
அவன் வீடு முழுவதும் ஒளிர்ந்தது.
ஆம், இப்போது அவன் கண்டு கொண்டான் உலகிலேயே மிக அழகானது
எதுவென்று. அதை ஓவியமாக்கினான். அதன் கீழே எழுதி வைத்தான்
"இல்லம் என்று.
அன்பு, நம்பிக்கை, சமாதானம் பூத்துக் குலுங்கும் அந்த
நாசரேத்து இல்லத்திற்குள் நுழைகிறோம். குடும்பத்தின்
புனிதத் தன்மையைப் போற்றிப் பேணும் மூன்று உள்ளங்களையும்
வாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே வருகிறோம். புதிய
உணர்வுகளோடு, நமது இல்லமும் இத்தகையதொன்றாகாதா என்ற புனித
ஏக்கத்தோடு.
ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் ஒரு திருக்குடும்பமாக -
ஏன் அந்த நாசரேத்து குடும்பத்தை விடச் சிறந்த ஒன்றாகத்
திகழ வேண்டும். யோசேப்புக்கும் மரியாவுக்கும் கிட்டாத
பேறும் தெய்வ அருளும் கிறிஸ்தவ மணமக்களுக்குக்
கிடைக்கின்றன. யோசேப்பும் மரியாவும் இணைந்தது, இல்லறத்தில்
புகுந்தது இயற்கை ஏற்பாடான திருமணத்தால்! திருமணத்
திருவருள் சாதனத்தால் அன்று! மீட்பின் அருளும் ஆசிரும்
பொங்கி ஊற்றெடுக்கும் ஏழு கனைகளில் ஒன்று அல்லவா இயேசு
நிறுவிய திருமணத் திருவருள் சாதனம்!
நாசரேத்துக் குடும்பத்தை ஏன் திருக்குடும்பம் என்கிறோம்?
அது ஓர் இலட்சியக் கணவன், ஓர் இலட்சிய மனைவி, ஓர்
இலட்சியத் தந்தை, ஓர் இலட்சியத் தாய், ஓர் இலட்சியக்
குழந்தை இவர்களின் கூட்டாகத் திகழ்கிறது என்பதாலா? அந்த
நிலை ஓர் இலட்சியக் குடும்பமாக மாற்றுமே தவிர ஒரு
திருக்குடும்பமாக்காது. அந்த இலட்சியக் குடும்பம் எப்படி
ஒரு திருக்குடும்பமானது?
அங்கே இருப்பது வெறும் குழந்தையா? அன்று, கடவுள்! ஆக
உங்கள் குடும்பம் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்
கோவிலாகட்டும். கணவன் - மனைவி - கடவுள்... அப்படிக்கூட
அன்று, கடவுள் - கணவன் - மனைவி (கடவுளுக்கு முதல் இடம்)..
இதுதான் திருக்குடும்பம்!
சோதனைக்கும் வேதனைக்கும் இடையே திருக்குடும்பம்
மகிழ்ச்சியோடும் மனஉறுதியோடும் இருந்ததற்குக் காரணம் இயேசு
அங்கே இருந்தது. இயேசுவோடு அவர்கள் இணைந்ததே! அகந்தை கலந்த
தன்முனைப்பு - EGO அதாவது Edging God Out - கடவுளை
ஒரங்கட்டுவது குடும்பச் சிக்கலில், சீரழிவில் கொண்டு போய்
நிறுத்தும். குடும்பச் செபம் நல்ல குடும்பத்தைக் கட்டி
எழுப்பும். (தி.பா.127:1)
கிறிஸ்துவும் திருச்சபையும் போலக் கணவனும் மனைவியும்
வாழட்டும் (எபே.5:25) திருச்சபை மீது கிறிஸ்து பொழிந்த
அன்பும் திருச்சபைக்காக உயிர்நீத்த அவரது தியாகப் பண்புமே
இல்லறத்தை இன்பம் கமழச் செய்யும்.
இன்பத்தைப் பகிர்வது அன்பின் முதற்படி. துன்பத்தைப்
பகிர்வது அன்பின் அடுத்தப்படி. குற்றத்தைப் பகிர்வது
அன்பின் நிறைவுப் படி. இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது
இன்பம் இரட்டிப்பாகிறது? துன்பத்தைப் பகிர்ந்து
கொள்ளும்போது துன்பம் பாதியாகிறது. குற்றத்தைப் பகிர்ந்து
கொள்ளும்போது குற்றமே இல்லாமல் போகிறது.
எதையோ எழுதிக் கொண்டிருக்கும் தந்தைக்கு முன்னே காப்பியை
வைத்து விட்டுப் போகிறார் குடும்பத் தலைவி. அங்கே வந்த
மகன் தெரியாமல் காப்பிக் குவளையைத் தட்டி விடுகிறான். அந்த
நிலையில் அந்தச் சிறுவன் "அப்பா மன்னித்து விடுங்கள்.
தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான். அப்பாவோ "உன் தவறு
இல்லை மகனே, என் தவறு தான். அம்மா கொண்டு வந்ததும்
எடுத்துப் பருகியிருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா?"
என்கிறார். அதைக் கேட்ட அம்மா "அது உங்கள் இருவருடைய
தவறுமல்ல. எனக்கென்ன அப்படித் தலைபோகிற அவசரம்? அப்பா
அதைப் பருகிற வரை அங்கு நான் இருந்திருந்தால்..."
என்கிறாள். இப்போது யாருடைய தவறு? மூன்று பேருமே மற்ற
இருவர் மீதும் பழிபோடாமல் தானே தவறுக்குப் பொறுப்பேற்கிற
விந்தையைப் பார்க்கிறோம். யாருடைய தவறு என்று முடிவு கட்ட
முடியாமல் முடியைப் பிய்த்துக் கொள்கிறோம்.
நமது பாவத்தைத் தன்மேல் ஏற்றுக் கொண்ட (எசா.53:6,
மத்.8:17) இயேசுவின் அந்தத் தெய்வீக அன்புக்குச் சான்று
பகரும் வாய்ப்பும் பொறுப்பும் இல்லறத்தினருக்கு உரியது.
கிறிஸ்துவும் திருச்சபையும் போல மட்டுமல்ல, கிறிஸ்துவோடும்
திருச்சபையோடும் கணவனும் மனைவியும் வாழட்டும். அந்த
நிலையில் பெத்லகேமின் ஏழ்மையா, நாசரேத்தின் தனிமையா,
கல்வாரியின் துயரமா, எதையும் சந்திக்கும், தாங்கிக்
கொள்ளும் அருளும் ஆற்றலும் பெறுவார்கள். கானாவூரில்
தண்ணீரை இரசமாக மாற்றிய இயேசு நம் கண்ணீரை மகிழ்ச்சியாக
மாற்றுவார்.
அன்புத்தாயின் மகவே அருள்!
கிறிஸ்துவும் திருச்சபையும் போல வாழும் போது தெய்வ அன்பைச்
சுவைக்கிறோம். கிறிஸ்துவோடும், திருச்சபையோடும் வாழும்
போது தெய்வ அருளில் திளைக்கிறோம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
குழந்தைகளில் நேர்மறை எண்ணங்கள்
இன்னும் சில மணி நேரங்களில், 2023ம் ஆண்டு விடைபெற்றுச்
செல்லும்; புதிய ஆண்டு, சனவரி மாதத்துடன் துவங்கும். ஆண்டின்
முதல் மாதம், "
ஜானுஸ்"
(Janus) என்ற உரோமையத் தெய்வத்தின்
பெயரால், ஜ(ச)னவரி என்றழைக்கப்படுகிறது. "
ஜானுஸ்"
தெய்வத்திற்கு
இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும்,
மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும்.
முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும்
புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் "
ஜானுஸ்"
தெய்வம்
நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின்
பெயரைத் தாங்கியுள்ளது. பின்னோக்கியும், முன்னோக்கியும்
பார்ப்பதற்கு, ஊனக்கண்கள் மட்டும் போதாது, நம்பிக்கையுடன்
கூடிய ஆன்மக்கண்களும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள, இந்த
ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், முடிவுறும் ஆண்டை,
பின்னோக்கிப் பார்ப்பதில், ஊடகங்கள் ஈடுபடுகின்றன. ஊடகங்களின்
பின்னோக்கியப் பார்வை, இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும்,
சலிப்பையும் உருவாக்குகின்றது. 'சே, என்ன உலகம் இது' என்று,
நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை
வேர்களை அறுத்துவிடுகிறது.
நம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக,
இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன.
பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், "வானத்தை நிமிர்ந்து
பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே
உன் வழிமரபினரும் இருப்பர்" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர்
வாக்களிக்கிறார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்.
அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொ.நூ. 15:6)
என்று முதல் வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது.
வயது முதிர்ந்த காரணத்தால், உடலளவிலும், பிள்ளைப்பேறு இல்லையே
என்ற ஏக்கத்தால், மனதளவிலும், தளர்ந்திருந்த ஆபிரகாமைக்
குறித்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறும் சொற்களும்
நம்பிக்கையைப் பற்றி வலியுறுத்துகின்றன:
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும்,
அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான்.
ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார்.
இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள
திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த
மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். (எபிரேயர் 11:
11-12)
"
இயலாது, முடியாது, நிகழாது, 'சான்ஸே"
இல்லை"
, என்று, பலவாறாக,
நம் உள்ளங்களை நிரப்பும் நம்பிக்கையற்ற எண்ணங்கள், ஆபிரகாமின்
உள்ளத்திலும் எழுந்திருக்கும். இருப்பினும் அவர், தனது ஆற்றலின்
மேல் நம்பிக்கையை வைப்பதற்குப் பதில், 'வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர்
என கருதினார்' (எபி. 11:11) என்பதை, இரண்டாம் வாசகம்
தெளிவாக்குகிறது. நம்பிக்கையின் அடித்தளம், நம்மையோ, நமக்கு
அளிக்கப்பட்ட வாக்கையோ சார்ந்தது அல்ல, அது, வாக்களித்த ஆண்டவரைச்
சார்ந்தது என்பதை, நாம் கற்றுக்கொள்ள, இன்றைய வாசகங்கள் அழைப்பு
விடுக்கின்றன.
நம் நம்பிக்கைக்குத் தேவையான மற்றோர் அடித்தளம், பரந்து,
விரிந்த கண்ணோட்டம் என்பதையும், இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன.
தனக்கு வாரிசு இல்லை என்பதால மனமுடைந்து, நம்பிக்கையிழந்து
தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை
நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (காண்க. தொ.நூ. 15:5)
என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. அத்தகையதோர் அழைப்பு,
நமக்கும் வழங்கப்படுகிறது, குறிப்பாக, ஆண்டின் இறுதி நாளன்று.
கடந்துசெல்லும் ஆண்டைக்குறித்து நம் நம்பிக்கையை வேரறுக்கும்வண்ணம்,
ஊடகங்கள் சொல்லும் எண்ணங்களால் உள்ளத்தை நிறைப்பதற்குப் பதில்,
இறைவன் நம்மை வெளியே வரச் சொல்கிறார்; வானத்தை நிமிர்ந்து
பார்க்கும்படி கூறுகிறார்.
ஆண்டின் இறுதி நாளில் இருக்கும் நாம், பரந்து விரிந்த வானத்தின்
மீதும், பரந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள் மீதும், நம்
பார்வையைப் பதிக்க, இறைவன் நமக்கு சிறப்பான வரமருள
செபிப்போம். பரந்து விரிந்த பார்வையையும், அதைப்
பேணிக்காக்கும் நம்பிக்கையையும் நம் அடுத்த தலைமுறையினருக்கு,
குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்கும் வரத்திற்காகவும் நாம்
இன்று செபிப்போம். நல்லவற்றை உள்ளத்தில் பதிக்கும் ஒரு முயற்சியாகத்தான்,
ஆண்டின் இறுதி நாளன்று, 'இறைவா, உம்மைப் போற்றுகிறோம்' என்ற
பொருள்படும், 'தே தேயும்' (Te Deum) என்ற நன்றிப் பாடலைப்
பாடும்படி, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடரும் ஞாயிறன்று,
திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுகிறோம். டிசம்பர் 31,
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்பத்
திருவிழாவில், நமது நம்பிக்கை உணர்வுகளின் நாற்றங்காலாய்
விளங்கும் குடும்பத்தை எண்ணிப்பார்க்க திருஅவை நமக்கொரு
வாய்ப்பை வழங்கியுள்ளது.
கிறிஸ்மஸ் காலம் முழுவதுமே, மகிழ்வையும், நம்பிக்கையையும்
பகிர்வது ஒரு முக்கிய குறிக்கோள். இருப்பினும், முதல்
கிறிஸ்மஸ் காலத்தில், திருக்குடும்பத்தைச் சேர்ந்த மரியா,
யோசேப்பு, குழந்தை இயேசு மகிழ்விலும், நம்பிக்கையிலும் வாழ
வாய்ப்பின்றி தவித்தனர். பச்சிளம் குழந்தைகளின் படுகொலை,
எகிப்து நாட்டிற்கு இரவோடிரவாக ஓட வேண்டியச் சூழல் என்று,
அக்குடும்பத்தை வேதனைகள் தொடர்ந்தன. அன்பையும், மகிழ்வையும்
கொணரவேண்டிய கிறிஸ்மஸ் காலத்தில் ஏன் இந்தக் கொடுமைகள்? என்ற
கேள்வி அவர்களை அலைக்கழித்தது.
இன்று, உக்ரைன் மற்றும் புனித பூமியின் காசாப்பகுதியில்
இரஷ்ய மற்றும் இஸ்ரேலிய இராணுவங்களால் ஆயிரக்கணக்கான
குடும்பங்கள் அழிக்கப்படுவதைப் பார்க்கும்போது, இதே கேள்வி
நம் மனதை நிரப்புகின்றது. விளாடிமிர் புடின் மற்றும் பெஞ்சமின்
நெதன்யாகு ஆகிய இரு மதியற்ற தலைவர்களைத் தடுத்து
நிறுத்தும் சக்தியின்றி உலகத் தலைவர்கள் கைகட்டி நிற்பதைக்
காண்கிறோம். இயேசு பிறந்தபோது, மதியற்ற மன்னன் ஏரோது மாசற்ற
குழந்தைகளை கொன்ற வெறி, இன்று, இவ்விரு தலைவர்கள் வழியே தொடர்கிறது.
இவ்விரு தலைவர்களும் கொண்டிருக்கும் அதிகார வெறியால், எத்தனை
ஆயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன? தலைவர்கள் ஒரு சிலரின்
அதிகார வெறி, முதல் உலகப் போரைத் துவக்கியது என்பதை அறிவோம்.
அந்தப் போர், திருக்குடும்பத் திருநாள் உருவாக ஒரு காரணமாக
அமைந்தது.
பல நூற்றாண்டுகளாக, தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவற
சபைகளால் வளர்க்கப்பட்டு வந்த திருக்குடும்பத் திருநாளை,
1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருஅவையின்
திருநாளாக அறிமுகப்படுத்தினார். ஒரு சில ஆண்டுகளில்,
திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்ட இத்திருநாள், 1921ம் ஆண்டு,
திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், மீண்டும்,
திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு
முக்கிய காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர்.
1918ல் நடந்து முடிந்த உலகப்போரில், ஆயிரமாயிரம் குடும்பங்கள்
சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ, போரில் பலிகொடுத்த
பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில்
மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும்
தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை, மீண்டும் அறிமுகப்படுத்தி,
குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மீண்டும்
திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை
புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின்
நிலை. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, கட்டடங்கள் சிதைந்தது
உண்மைதான். ஆனால், அவற்றைவிட, குடும்பங்கள் அதிகமாகச்
சிதைந்திருந்தன... தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள்
என்று, பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது.
ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலைகுலைந்தது.
"
ஹிப்பி"
கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு
என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே, நிம்மதியைத் தேடி அலைந்தனர்.
அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது,
திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ்
பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத்
திருநாளாக, திருஅவை அறிவித்தது.
உலகப் போர்களாலும், உலகப் போக்குகளாலும் அழிவைத் தேடி,
இவ்வுலகம் சென்ற வேளையில், இந்த அழிவுகளை, கைகட்டி நின்று
வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று,
மனம் தளர்ந்து போவதற்குப் பதிலாக, மனித சமுதாயத்தை
மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது,
கத்தோலிக்கத் திருஅவை. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான்,
நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள்.
இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி
இப்போது பெருமையாக, புனிதமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
ஆனால், அவர்கள் வாழ்ந்த நேரத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி
நிகழ்ந்தது எதுவும், புனிதமாக, பெருமை தருவதாக இல்லையே!
பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள்
வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது.
நாட்டிற்குள்ளும், அடுத்த நாடுகளுக்கும், இரவோடிரவாக ஓடும்
அகதிகளின் நிலை, இன்றும் தொடரும் துயரம்தானே
பச்சிளம் குழந்தை இயேசுவோடு, மரியாவும், யோசேப்பும்
எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை
அழித்துவிடும் வெறியில், ஏரோதின் அடியாட்கள் பல நூறு
குழந்தைகளைக் கொன்றனர். ஏரோதின் வாரிசுகளாக வரலாற்றில்
தோன்றியுள்ள விளாடிமிர் புடின் மற்றும் பெஞ்சமின்
நெதன்யாகு போன்ற தலைவர்களின் சுயநல வெறிக்கு, குழந்தைகள்
பலியாவது இன்றும் தொடரும் அவலம்தானே!
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்புப்
பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய
மேல்மாடத்திலிருந்து வழங்கிய 'Urbi et Orbi' எனப்படும்,
'ஊருக்கும் உலகுக்கும்' சிறப்புச் செய்தியில், இன்றைய
பெத்லகேமைச் சுற்றி நடைபெற்றுவரும் போரைக் குறித்து தன்
எண்ணங்களை அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தினார்.
"
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் கண்களும் இதயங்களும்,
வேதனையிலும், மௌனத்திலும் மூழ்கியுள்ள பெத்லகேமை நோக்கித்
திரும்பியுள்ளன. "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்
உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா
2:11) என்று, பல்லாயிரம் ஆண்டுகள் மனிதகுலம் காத்திருந்த
நம்பிக்கைச் செய்தி அங்குதான் முதன்முதலில்
அறிவிக்கப்பட்டது: பெத்லகேமின் வான்வெளியில் வானதூதர்
சொன்ன அந்த வார்த்தைகள், இன்று நமக்குச்
சொல்லப்படுகின்றன."
இவ்வாறு தன் செய்தியைத் துவக்கியத்
திருத்தந்தை, தொடர்ந்து, இன்றைய உலகில் அதிக அளவில்
பாதிக்கப்படும் குழந்தைகளைப்பற்றி பேசினார். இதைத்
தொடர்ந்து, போருக்கு எதிராகவும், மரணக் கருவிகளின்
பெருமளவிலான உற்பத்திக்கு எதிராகவும் வெளிப்படையாகவும்
வலுவாகவும் பேசினார்.
தன் கிறிஸ்மஸ் செய்தியின் இறுதியில், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். நம்மில்
பலர் மௌனம் காப்பதால், ஆயுத உற்பத்தியும், ஆயுத
வியாபாரமும் செழித்து வளர்கின்றன என்று கூறிய திருத்தந்தை,
பசி மற்றும் வறுமையை ஒழிக்க பயன்படுத்தப்படவேண்டிய
மக்களின் வரிப்பணம், போர் ஆயுதங்களை வாங்குவதற்குச்
செலவிடப்படுகிறது என்ற உண்மையை நாம் உலகறியப் பேசவேண்டும்
என்ற தன் வேண்டுகோளை விடுத்தார். திருத்தந்தை வழங்கிய
செய்தியை முழுமையாக வாசிக்க விரும்பவோர், கீழ்கண்ட
வலைத்தளத்தில் அதைக் காணலாம்:
https://www.vatican.va/content/francesco/en/messages/urbi/documents/20231225-urbi-et-orbi-natale.html
இறுதியாக, பாலஸ்தீனாவைச் சேர்ந்த Ramallah Friends School,
என்ற பள்ளியில் பயிலும் குழந்தைகள் வழங்கியுள்ள
சக்திவாய்ந்த செய்தியுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்த பள்ளியின் குழந்தைகள்
"
RFS Song to the World"
என்ற தலைப்பில் ஒரு வீடியோவை
YouTubeல் வெளியிட்டுள்ளனர்.
"
Little Drummer Boy"
என்ற புகழ்பெற்ற கிறிஸ்மஸ் பாடலின்
மெட்டைப் பயன்படுத்தி, இப்பள்ளியின் குழந்தைகள் தங்கள்
கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அரபு மொழியில்
அக்குழந்தைகள் பாடும்போது, அதன் பொருள் ஆங்கிலத்தில்
திரையில் தோன்றியது. அப்பாடலில் கூறப்பட்டுள்ள
கருத்துக்கள் இதோ:
காஸாவின் குழந்தைகள் அழுவதைப் பாருங்கள்
காஸாவின் குழந்தைகள் போரில் இறக்கின்றனர்
உலகமே இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
அதனால் பார்க்க முடிகிறது, ஆனால் கேட்க விரும்பவில்லை
அது கேட்கிறது, ஆனால் பேச மறுக்கிறது
இந்த உலகில் நீதி இதயமற்று போனது
அது பேச மறுக்கிறது
இந்த வரிகளை அக்குழந்தைகள் பாடியபின், ஒரு குழந்தை
பின்வரும் வார்த்தைகளைப் பேசுகிறது: பயம் இல்லாத ஓர்
உலகத்தை நான் எப்போது கனவு காணமுடியும்? துப்பாக்கிச்
சத்தம் கேட்காமல், குண்டு வீசப்படுவதைப் பற்றி
கவலைப்படாமல் இருக்கும் உலகத்தை நான் எப்போது காண்பது?
நான் ஒரு குழந்தை, நான் வாழ்வதற்குப் பிறந்தேன், சாவதற்கு
அல்ல...
அந்த இறுதிச் சொற்களை அக்குழந்தை மெதுவாக,
அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறது: நான் வாழ்வதற்குப்
பிறந்தேன், சாவதற்கு அல்ல.
இதைத் தொடர்ந்து, "
Little Drummer Boy"
பாடலின் இரண்டாவது
சரணத்திற்கு குழந்தைகள் பாடிய வார்த்தைகள் என்னை ஆழமாகத்
தொட்டன. அந்த வார்த்தைகளை எழுதி, அவற்றைக் குழந்தைகள்
வழியே பாடவைத்தவருக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
முதல் சரணம், காஸாவில் தற்போது நிலவும் நம்பிக்கையற்ற
சூழலைப்பற்றி பேசுகையில், இரண்டாவது சரணமோ, காஸாவின்
சமூகத்தை கட்டியெழுப்ப குழந்தைகள் கொண்டிருக்கும்
உறுதியைப் பற்றி பேசுகிறது. இரண்டாவது சரணத்தின்
மொழிபெயர்ப்பு இதோ:
காசா அழைக்கிறது, என் குழந்தைகளே
எங்களுக்கு அன்பு, வாழ்க்கை மற்றும் நீதி வேண்டும்
என்ன நடந்தாலும் இவற்றை நாங்கள் எங்கள் கைகளால்
உருவாக்குவோம்
அழிவுக்குப் பின் எங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவோம்
ஒவ்வொரு வீடாக கட்டியெழுப்பும் உறுதியுடன் இருக்கிறோம்
எது நடந்தாலும் காசா வலிமையுள்ளது
நாங்களும் தீர்மானத்துடன் இருக்கிறோம்
(இந்த காணொளியை YouTube ல் காணவிழைவோர், கீழ்கண்ட வலைத்தள
முகவரியைப் பயன்படுத்தவும்:
https://www.youtube.com/watch?v=ZsEbIVJy0Gg&list=RDZsEbIVJy0Gg&start_radio=1)
2023 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இத்தருணத்தில், பாலஸ்தீன
குழந்தைகளின் நேர்மறை எண்ணங்களையும், கனவுகளையும் நாம்
பகிர்ந்து கொள்வோம்:
"
அழிவுக்குப் பின் எங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவோம்
ஒவ்வொரு வீடாக கட்டியெழுப்பும் உறுதியுடன் இருக்கிறோம்
எது நடந்தாலும் காசா வலிமையுள்ளது
நாங்களும் தீர்மானத்துடன் இருக்கிறோம்"
பாலஸ்தீனக் குழந்தைகளின் நேர்மறை உணர்வுகளை நம் இளைய
தலைமுறைக்கு, குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்க நாம்
முயல்வோம். மலை போல துயர் வந்தாலும், மனித குலத்தில்
இன்னும் நம்பிக்கை வேரூன்ற, நம் குழந்தைகள் உள்ளனர் என்ற
நம்பிக்கையினால்தான், உலகத்தில் திருவிழாக்கள்
கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா,
மாசற்றக் குழந்தைகள் திருவிழா, திருக்குடும்பத் திருவிழா,
ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும்
தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம்
மத்தியில் வலம் வருகின்றன. எது நடந்தாலும், குழந்தைகள்
இவ்வுலகை கட்டியெழுப்புவர் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி,
ஆண்டின் இறுதிநாளான இன்று நாம் "
Te Deum"
நன்றிப்பாடலை
நம்பிக்கையுடன் பாடுவோம்!
வரம்பு மீறும் வளர் இளம் பருவம்
கிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய
காலம். கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும்
ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திருஅவை
நம்மை அழைக்கின்றது. திருக்குடும்பத் திருவிழா உருவான
வரலாற்றை நான் பின்னோக்கிப் பார்த்தபோது, என் மனதில்
எழுந்த எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இரண்டாவதாக, திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய
நற்செய்தியில் நாம் வாசிக்கும் பிரச்சனையைப் பற்றி
சிந்திப்போம். மூன்றாவதாக, இந்த நற்செய்தி நிகழ்ச்சி
நமக்கு நினைவுறுத்தும் இன்றைய பிரச்சனைகளையும் நாம்
சிந்திப்போம்.
பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட
ஒரு பக்தி முயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு
வந்தது. 1893ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால்
திருஅவையின் திருவிழாவாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு
சில ஆண்டுகளில் இத்திருவிழா திருவழிபாட்டிலிருந்து
நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ்
அவர்களால் இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர்
அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று
உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல்
உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில் ஆயிரமாயிரம்
குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ
போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில்,
அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு
ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத்
திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக்
கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.
. 1962ம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான்
பொதுசங்கத்தின்போது மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய
எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம்
அன்றைய உலகின் நிலை. முதலாம், இரண்டாம் உலகப் போர்களால்
சிதைந்து போன கட்டிடங்களைவிட, குடும்பங்கள் அதிகமாகச்
சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில் குடும்பங்கள்
தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான
உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம்
முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம்
என்ற அடித்தளம் நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப்
பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு
வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை
வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை.
குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு
அடுத்த ஞாயிறை திருக்குடும்பத் திருவிழாவாக அறிவித்தது
திருஅவை.
திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அந்தக்
குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும்
தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்க
முடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாட முடியும்.
ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்...
நடக்கக்கூடிய காரியமா? இது பொதுவாக நமக்குள் எழும் ஒரு
தயக்கம். இயேசு, மரியா, யோசேப்பு என்ற அக்குடும்பம்
எந்நேரமும் அமைதியாக, மகிழ்வாக எவ்விதப் பிரச்சனையும்
இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள்
மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப்
பிரச்சனைகளைச் சந்தித்த விதம், அவற்றிற்குத் தீர்வு
கண்டவிதம் இவை நமக்குப் பாடங்களாக அமையவேண்டும்.
திருக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்னையை இன்றைய நற்செய்தி
நமக்கு எடுத்துரைக்கிறது. பெற்றோருடன் எருசலேம்
கோவிலுக்குச் செல்லும் சிறுவன் இயேசு, அவர்களுக்குத்
தெரியாமல் அங்கேயேத் தங்கிவிடும் நிகழ்வு இன்றைய
நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.
லூக்கா நற்செய்தி 2: 41-52
ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர்,
முக்கியமாக தாய், தனது தினசரி வாழ்க்கையை அந்தக்
குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்ள
வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உடல்
ரீதியாக எழும் சவால்கள். இதே குழந்தை, வளர் இளம்
பருவத்தில் (Teenage) அடியெடுத்து வைக்கும்போது, பெற்றோர்
மீண்டும் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த
மாற்றங்கள் பெரும்பாலும் மனதளவில், வளரும் பிள்ளையைப்
புரிந்து கொள்வதில் எழும் சவால்களாக இருக்கும்.
நமது குடும்பங்களில் ஒரு மகளோ, மகனோ தோளுக்கு மேல்
வளர்ந்ததும், தாங்கள் தனித்து வாழமுடியும் என்பதை எப்படி
உணர்த்துவர்?... தங்களுக்குரிய மரியாதையை மற்றவர்கள்
கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். 12 வயதைத் தாண்டி, டீன்
ஏஜ் வயதில் காலடி எடுத்து வைத்துவிட்டதால், தன்னை
மற்றவர்கள் இனிமேல் கேள்விகள் கேட்டு தொல்லைப் படுத்துவதை
விரும்பமாட்டார்கள். "'நான் எங்கிருந்து வந்தேன்?' என்ற
'அப்பாவித்தன'மானக் கேள்வியை எழுப்பிவரும் வரை நம் மகனோ,
மகளோ தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்பதை நாம்
உணரலாம். 'நீ எங்கே போயிருந்தாய்?' என்ற கேள்வியை எப்போது
அவர்கள் விரும்பவில்லையோ, அப்போது அவர்கள் தங்கள்
குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டார்கள் என்பதை நாம்
புரிந்துகொள்ள வேண்டும்" என்று அருள்தந்தை Ernest Munachi
கூறியுள்ளார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு
லேட்டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தங்களிடம்
கேட்கக்கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், தங்கள்
நடத்தையினால் டீன் ஏஜ் இளையோர் உணர்த்துவர்.
இதுவரைத் தங்களைச் சுற்றி நாடும், வீடும் கட்டியிருந்த
வேலிகளைத் தாண்டுவதில், அல்லது அந்த வேலிகளை உடைத்து
வெளியேறுவதில் டீன் ஏஜ் இளையோர் குறியாய் இருப்பார்கள்.
அந்த நேரத்தில் குடும்பங்கள் அவர்களைச் சரியாகப்
புரிந்துகொள்ள முடியாமல், அவர்கள் வாழ்வையே
கேள்விக்குறியாக மாற்றும்போது, அவர்களது தோழர்கள் தோழிகள்
சொல்வது குடும்பத்தினர் சொல்வதைவிட முக்கியமாகிப் போகும்.
இந்த மாற்றங்கள் பல நேரங்களில் பெற்றோருக்குப்
பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும்.
அன்று எருசலேமில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் நாம்
வாசிப்பதும் வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த ஓர்
இளையவரைப் பற்றியதே. 12 வயதை நிறைவு செய்த ஆண்மகனை,
கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக்
கூட்டிச்செல்லும் வழக்கம் யூதர்கள் மத்தியில் இருந்தது. 12
வயதுக்கு மேல் ஒவ்வோர் ஆண்மகனும் ஆண்டுக்கு
ஒருமுறையாகிலும், சிறப்பாக எருசலேம் திருவிழாவின்போது,
கோவிலுக்குக் கட்டாயம் செல்லவேண்டும். இதுவரை குழந்தையாக
இருந்த அச்சிறுவன், இனி தனித்து முடிவுகள் எடுக்கும்
தகுதிபெற்ற ஓர் ஆண்மகன் என்பதை உறுதி செய்யும் வகையில்
இப்பழக்கம் அமைந்தது. வளர் இளம் பருவத்தில்
அடியெடுத்துவைத்த இயேசு தன் சுதந்திரத்தை நிலைநாட்ட
செய்யும் முதல் செயல் என்ன? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல்,
கோவிலில் நடந்த மறைநூல் விவாதம் ஒன்றில் அவர்
கலந்துகொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு
பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? என்று நாம் கேள்வியை
எழுப்பலாம்.
கழுவித் துடைத்த ஒரு திருப்பொருளாக திருக்குடும்பத்தை நாம்
பார்த்து பழகிவிட்டதால், இப்படிப்பட்டக் கேள்வியை
எழுப்புகிறோம். ஆனால், பிள்ளையைத் தொலைத்துவிட்ட
பெற்றோரின் நிலையில் இருந்து இதைப் பார்த்தால், அது
எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை நாம் உணரலாம். மகனைக்
காணாமல் பதைபதைத்துத் தேடிவரும் மரியாவும் யோசேப்பும்
மூன்றாம் நாள் இயேசுவைக் கோவிலில் சந்திக்கின்றனர்.
அச்சந்திப்பில் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள
முடியும்.
தங்கள் மகன் மறைநூல் அறிஞர்கள் மத்தியில் அமர்ந்து,
அவர்களுக்கு இணையாக, சிலவேளைகளில் அவர்களுக்கு மேலாக,
விவாதங்கள் செய்ததைக் கண்டு, அவரது பெற்றோர் வியந்தனர்,
மகிழ்ந்தனர்... அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய
அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளால்
பெற்றோருக்குப் பெருமையும் உண்டு... சவால்களும் உண்டு.
மரியா தன் மகனைப் பார்த்து, தன் ஆதங்கத்தை எடுத்துக்
கூறுகிறார். இயேசுவோ அவர் அம்மா சொல்வதைப்
பெரிதுபடுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும்
நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
இயேசு மரியாவுக்குச் சொன்ன பதில் அந்த அன்னையின் மனதைப்
புண்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் மற்றவருக்கு
முன்னால் அப்படிப் பேசியதால் அந்த அன்னையின் மனது இன்னும்
அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் என்னதான் நியாயம்
இருந்தாலும், வலி வலிதானே! அந்த வேதனையில் அவர் கோபப்பட்டு
மேலும் எதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகி
இருக்கும்.
குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள
பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது அன்னை
மரியாவிடம் நாம் கற்றுக்கொள்ளலாமே. மரியா இயேசுவின்
வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை, இருந்தாலும் அவைகளைத்
தன் மனதில் ஒரு கருவூலமாகப் பூட்டி வைத்துக்கொண்டு
கிளம்பினார். இயேசுவும் அவர்களோடு சென்றார். தான் தனித்து
முடிவெடுக்க முடியும் என்பதை, பெற்றோருக்கு உணர்த்திய
இயேசு, அடுத்த 18 ஆண்டுகள் செய்தது என்ன? "பின்பு அவர்
அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப்
பணிந்து நடந்தார் இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும்
மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து
வந்தார்" (லூக்கா 2: 51-52) என்று இன்றைய நற்செய்தி
நிறைவடைகிறது.
இறுதியாக, ஒரு சில எண்ணங்கள்... திருவிழாவுக்குச்
சென்றவேளையில், இயேசு காணாமல் போய்விடும் சம்பவம், இன்றைய
நிகழ்வுகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. திருவிழாக்
கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, தவிக்கும்
பெற்றோரை... பெற்றோரை இழந்து, தனித்து விடப்படும்
குழந்தைகளை... நினைத்துப் பார்ப்போம். இவர்களை மீண்டும்
இறைவன் ஒன்றிணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இவ்விதம்
காணாமல்போகும் குழந்தைகளைக் கடத்திச்சென்று, பிச்சை
எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளுக்கும் இவர்களைப்
பயன்படுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்துப்
பார்ப்போம். இவர்களுக்காகவும் நாம் செபிக்கக்
கடமைப்பட்டிருக்கிறோம்.
நாசரேத்து என்ற சிற்றூரில், கிராமத்தில் வளர்ந்து வந்த
இயேசு, எருசலேம் நகரத்திற்குச் சென்று காணாமல் போகிறார்
என்பதும் ஒரு சில சிந்தனைகளை, செபங்களைத் தூண்டுகிறது.
கிராமங்களில், சிறு ஊர்களில் பள்ளிப்படிப்பை
முடித்துவிட்டு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு
மேற்படிப்பிற்கெனச் சென்று, பல வழிகளில் காணாமல்
போய்விடும் இளையோரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
நகரத்திற்குத் தங்கள் மகனையோ, மகளையோ அனுப்பிவிட்டு,
பின்னர் அவர்களை நகரம் என்ற காட்டில் தொலைத்துவிட்டுத்
தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பல வழிகளில் தங்களையேத் தொலைத்துவிட்டு தவிக்கும்
இளையோரும் பெற்றோரும் தங்கள் குடும்ப உறவுகளில் மீண்டும்
தங்களையேக் கண்டுகொள்ள வேண்டும் என திருக்குடும்பத்தின்
இயேசு, மரியா, யோசேப்பு வழியாக இறைவனை இறைஞ்சுவோம்.
அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ்.
எனது குடும்பம்: தேன்கூடா? செங்கல் வீடா? காக்கை
குடும்பமா?
அப்பா : மகனே.. பத்து நிமிசமாச்சு உன் அம்மா சத்ததத்தை
காணோம்... பக்கத்து வீட்டுக்கு போயிருக்காளா..?
மகன் : அது வந்து... அம்மா என்னை நல்லா வெளுத்து
வாங்கிட்டு இருக்காங்கப்பா..!
அப்பா : ஐய்யய்யோ.. எதுக்குடா அடிச்சா உன்னை.. நீ
ஏடாகூடமாக எதாவது செய்தியா..?
மகன் : இல்லப்பா அம்மா லிப்ஸ்டிக் எடுத்து தர கேட்டாங்க.
நான் தெரியாம பெவிஸ்டிக் எடுத்து கொடுத்துட்டேன்.!
அப்பா : நீ என் மகனில்லடா.. என் குலசாமிடா..!
இறை இயேசுவில் பிரியமான சகோதர சதோதரிகளே! அனைவரும் நலமாக
இருக்கின்றீர்களா? இன்றைய நாளில் முக்கிய காரணங்களுக்காக
நாம் இங்கு கூடியிருக்கின்றோம். முதலாவதாக நமது தாயாம்
திருச்சபையானது திருக்குடும்ப விழாவைச் சிறப்பிக்கின்றது,
இரண்டாவதாக நாம் அனைவருமே பங்கு என்ற பெரிய குடும்பத்தின்
உறுப்பினர்கள் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக கடவுளுக்கு
நமக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி சொல்லும்
விதமாக ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தோடு இன்று
பங்கெடுக்கின்றோம்.
பிரியமானவர்களே! அன்று ஒழுங்கான முறையில் தாஜ்மகால்
கட்டப்பட்டதால்த் தான் இன்றும், அதேபோல் பார்ப்பதற்கு
அழகாகவும், நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது
என்றால், அதற்கு காரணம் அன்று போடப்பட்ட பலமான அஸ்திவாரமே
காரணம் ஆகும். அது போல, டெல்லியில் குதுப்மினார், பல
இரும்பு தூண்களால் கட்டப்பட்டதாகும். எத்தனையோ
நூற்றாண்டுகள் கடந்து வந்திருந்தாலும், இன்றளவும் துரு
பிடிக்காமல், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொண்டு
வருகிறது என்றால், அதற்கும் காரணம், அதன் அஸ்திவாரம்
உறுதியாக இருப்பதே.
ஆம் அன்புக்குரியவர்களே எது ஒன்று நன்றாக நீடித்து, பலமாக
இருக்க வேண்டும் என்றாலும், அதற்கு முக்கிய காரணம், அதன்
உறுதியான அஸ்திவாரமே. அதைப்போலத்தான் சமூதாயம் என்ற
கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமானால் அதற்கு குடும்பம்
என்ற அஸ்திவாரம் மிக மிக முக்கியம். இந்த குடும்பத்தின்
ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் இருப்பது கணவனும்,
மனைவியும் தான். இந்த அஸ்திவாரம் அருட்சாதனம்
என்ற
முதல் கல்லால் ஆரம்பிக்கப்படுகிறது. பின், அதன் மீது
ஒவ்வொரு கற்களாக வைத்து கட்டி முடிக்கப்பட்டு, ஒர் அழகான
வீடாக ஜொலிக்கிறது. இப்படியாக உறுதியான அஸ்திவாரத்தால்
கட்டப்பட்டது தான் அன்னை மரியாவும், சூசையப்பரும்,
இயேசுவும் வாழ்ந்த குடும்பம். அதனால்த்தான் அக்குடும்பத்தை
திருக்குடும்பம் என்கிறோம். அந்த திருக்குடும்பத்தின்
பண்புகளை நாமும் பெற்று நம்முடைய குடும்பங்களையும்
திருக்குடும்பமாக மாற்ற இறைவன் நமக்கு அழைப்பு
விடுக்கின்றார்.
ஒருமுறை திருமண திருப்பலியின் போது பங்குத்தந்தை கணவன்,
மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
எந்தவொரு செயலை செய்யும் போதும் நீ பாதி, நான் பாதி என்று
சேர்ந்து ஒற்றுமையாக செய்தீர்கள் என்றால் உங்கள்
குடும்பத்தில் சண்டைகளுக்கு இடம் கிடையாது என போதித்தார்.
அருட்சாதனம்
முடிந்த மறுநாள் சந்தோசமாக மனைவியின் முதல்
சாப்பாட்டை சாப்பிவதற்கு கணவன் மிகவும் சந்தோசமாக வந்தான்.
மனைவி டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பிடுவதற்கு
என்னா இருக்கின்றது என பாத்திரத்தை திறந்து பார்த்த போது
அவனுக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி, தோசை இருந்தது ஆனால்
சட்டினி இல்லை; பூரி இருந்தது ஆனால் குருமா இல்லை; பொங்கல்
இருந்தது ஆனால் சாம்பார் இல்லை; பிரட் இருந்தது ஆனால் ஜாம்
இல்லை; உடனே மனைவியை அழைத்து அனைத்தும் பாதிபாதியாக
இருக்கின்றது இதையெல்லாம் எப்படி சாப்பிடுவது எனக்
கேட்டான். உடனே மனைவி நேற்று பங்குத்தந்தை என்ன கூறினார்!
மறந்துவிட்டதா உங்களுக்கு என்றாள். நேற்று பங்குத்தந்தை நீ
பாதி; நான் பாதி என்று சொன்னாறே ஞாபகம் இல்லையா? நான்
அனைத்திலும் பாதி பாதி செய்துவிட்டேன் உங்களுக்கான பாதியை
நீங்கள் சீக்கிரம் செய்தால் நாம் சீக்கிரமாக சாப்பிடலாம்
என்றாள். கணவன் அப்படியே மயங்கி விட்டான்.
பிரிமானவர்களே இதுதான் இன்றைய குடும்ப சூழல். யாரும்
யாருக்கு தாழ்ந்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவருமே கணக்கு
பார்த்துக் கொண்டு வாழும் வாழ்க்கை அதிகமாகி விட்டது.
ஒவ்வொரு குடும்பத்திலும் யார் பெரியவன்? யார் பெரியவள்?
என்ற மனநிலை பரந்து விரிந்து காணப்படுகின்றது. ஆனாலும்
அருட்சாதனம்
ஆகாதவர்கள் அருட்சாதனம்
செய்துகொள்ள
ஆசைப்படுகின்றனர். ஆனால் அருட்சாதனம்
ஆனவர்கள் ஏன்டா
அருட்சாதனம்
செய்தோம் என கவலைப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இன்று நம்முடைய குடும்பத்தின்
உண்மையான நிலை எப்படி இருக்கின்றது? எத்தனை குடும்ப
உறுப்பினர்கள் ஒருவர் மற்றவரோடு அத்தை, மாமா, மச்சான்,
கொளுந்தன், கொளுந்தியாள், பேரப்பிள்ளைகள் என்று சந்தோசமாக
இருக்கின்றனர்? எத்தனை குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து
கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர்? என்று சிந்தித்துப்
பார்க்க அனைவரும் கடமைப் பட்டிருக்கின்றோம்.
ஒருமுறை கணவன் தன் மனைவியைப் பார்த்து இன்று எனது துணிகளை
துவைத்துவை என்று கூறினான். உடனே மனைவி நான் ஒன்றும்
வேலைக்காரி கிடையாது உங்களது துணிகளை துவைப்பதற்கு என்று
சொல்லி துவைக்க மறுத்துவிட்டாள். வேறு என்ன செய்வது கணவன்
எழுந்து தனது துணிகளை துவைத்து வந்தான். அன்று இரவு
இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டில்
திருடன் புகுந்து மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து
நகைகளை கழட்டித்தரச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தான்.
உடனே மனைவி என்னை காப்பாற்றுங்கள் என அலறினாள். கணவன்
எழுந்து பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.
உடனே மனைவி நீயெல்லாம் ஒரு கணவனா எழுந்து வந்து என்னை
காப்பாற்று என கத்தினாள். உடனே கணவன் எழுந்து நான் ஒன்றும்
போலிஸ்காரன் அல்ல உன்னை காப்பாற்றுவதற்கு; நான் கணவன்
மட்டும் தான் என்று சொன்னானாம். ஆம் அன்புக்குரியவர்களே
இதுதான் இன்றைய குடும்பச் சூழல்.
ஆனால் குடும்பம் என்பதற்கு நம்முடைய முன்னோர்கள் மிக
முக்கியத்துவத்தைக் கொடுத்து குடும்பத்தை போற்றி வந்தனர்.
குடும்பம் ஒரு கோவில், குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம்
ஒரு பல்கலைக்கழகம், குடும்பம் கடவுள் வாழும் இல்லம், என பல
பெயரில் குடும்பத்தை அழைத்தனர். அப்படியே குடும்பத்திற்கான
முக்கியத்துவத்தையும் கொடுத்தனர். குடும்பத்தின்
முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தவர்களில் ஒருவர் தான்
நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். இவர் தன்னுடைய
குடும்பத்தை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைக்கின்றார்.
கடவுளின் அசீர்வாதத்தால் தனது குடும்ப வாழ்வைத்
தொடங்குகின்றார். அதன் பயனாக கடவுளும் இவரது குடும்பத்தை
பன் மடங்கு ஆசீர்வாதங்களால் நிரப்புகின்றார். எந்த
அளவிற்கு என்றால் ஆகாயத்தின் விண்மீனைப் போலவும், கடற்கரை
மணலைப் போலவும் அக்குடும்பத்தின் சந்ததிகளை கடவுள்
உருவாக்குகின்றார்.
ஆபிரகாமின் குடும்பத்தை கடவுள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
01. ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்ற முறையில் வாழ்ந்து வந்தார்.
ஒவ்வொரு குடும்பத்தின் அஸ்திவாரமும் திருமணத்தில்
ஆரம்பிக்கின்றது என பார்த்தோம். அந்த திருமணத்தின் நிறைவு
குழந்தைச் செல்வத்தில் முடிகின்றது. ஒரு குடும்பம்
நிறைவான, முழுமையை அடைகிறது என்றால் அதற்கு காரணம் கணவன்,
மனைவி மற்றும் குழந்தைகள் தான். குழந்தைகள் இல்லாத
குடும்பம் தெய்வங்கள் இல்லாத கோயில்கள் ஆகும். அல்லது
புத்தகங்கள் இல்லாத பல்கலைகழகங்கள் ஆகும். ஆக குழந்தைச்
செல்வம் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் நிறைவுபெறச்
செய்கின்றது. பிள்ளைகள் இல்லாத குடும்பங்களில் தம்பதிகளை,
வெறுமை, தனிமை, இழிச்சொல் போன்ற துன்பங்களுக்கும், மன
உளைச்சல்களுக்கும் ஆளகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லை
என்று சொன்னால் கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை முற்றிலும்
இழந்து விடுகின்றனர்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வுகளை நாம்
பார்க்கலாம். அருட்சாதனம்
முடிந்து ஒன்று அல்லது இரண்டு
ஆண்டிலே அத்தம்பதியினர் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்
இல்லை என்றால் அவர்களைச் இச்சமூகம் எப்படிப்பட்ட முறையில்
சித்தறிக்கின்றது என்பதை நாம் அறிந்ததே. குழந்தைகளை
பெற்றெடுக்கவில்லையென்றால் மருத்துவர்களை நாடுகின்றனர்.
அப்படியும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் கோவில்
கோவிலாக மடிப்பிச்சை ஏந்தி கடவுளின் வரத்திற்காக எத்தனையோ
போர் காத்திருக்கின்றனர். இந்த கடவுள் கொடுக்க மாட்டாரா
அல்லது அந்த கடவுள் கொடுக்க மாட்டாரா என ஒவ்வொரு கடவுளை
நோக்கியும் மக்கள் செல்கின்றனர். அப்படியும் குழந்தைகள்
கிடைக்க வில்லையென்றால் கடவுள் மீது உள்ள நம்பிக்கையை
முற்றிலும் இழந்து விடுகின்றனர். கடவுளை வெறுக்கத் தொடங்கி
விடுகின்றனர்.
ஆனால் ஆபிரகாமும், சாராவும், குழந்தைகள் இல்லாமல் ஒரு
ஆண்டு அல்ல இரு ஆண்டு அல்ல 99 ஆண்டுகள் வாழ்கின்றனர்.
அத்தம்பதியினர் எத்தகைய பழிச்சொல்லுக்கு ஆழாயிருக்க
நேரிடும். எத்தனைபேர் அவர் அவர்களை ஏளனம் செய்திருக்க
கூடும். ஆனாலும் கடவுளை எதிர்த்து ஒருபழிச்சொல்லோ, கடவுளை
புறக்கணித்து வேற்று தெய்வத்திற்கு வணக்கமோ, ஆராதனையோ
செய்யாதவர்கள். கடைசி வரை கடவுளுக்கு ஏற்ற முறையில்
தங்களது வாழ்வை நடத்துகின்றார். எனவே கடவுள் அவர்களை
தேர்ந்தெடுத்து ஆசீர்வதிக்கின்றார்.
02. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்கள்
ஆம் அன்புக்குரியவர்களே கடவுளை நம்பியவர்கள் எப்போதும்
கைவிடப்படார் எனக் கேள்விப் பட்டிருக்கின்றோம். அதற்கு
உதாரணமாக ஆபிரகாமை எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய வாழ்வில்
எல்லச் சூழ்நிலையிலும் கடவுள் மீது கொண்டள்ள நம்பிக்கையை
மட்டும் அவர் இழக்கவே இல்லை. பிரியமானவர்களே!
உதாரணமாக உங்களைப் பார்த்து திருச்சி வரை சென்று வாருங்கள்
என நான் கூறுகின்றேன் என வைத்துக் கொள்வோம். பதிலுக்கு
நீங்கள் என்ன செய்வீர்கள். திருச்சிக்கா? எதற்கு நான்
செல்ல வேண்டும்? எனக்கு அங்கு என்ன வேலை இருக்கின்றது?
என்று பல கேள்வில் நம் முன்னால் எளும்.
ஆனால் ஆபிரகாமுக்கு கடவுளும் இதைப்போன்று கூறுகின்றார் "
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன்
இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும்
புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.
உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன்.
உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக
விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி
வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன்
வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்"
என்றார்.
கடவுளின் வார்த்தையைக் கேட்டு எங்கு செல்லவேண்டும்? ஏன்
செல்ல வேண்டும்? எதற்காக சொல்ல வேண்டும்? என ஒரு
வார்த்தைகூட ஆபிரகாம் கடவுளிடம் கேட்கவில்லை. மாறக
விவிலியம் கூறுகின்றது " ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே
அவர் புறப்பட்டுச் சென்றார். அப்படிச்செல்கின்ற போது
அவருக்கு வயது எழுபத்தைந்து. தொ.நூல் 12:1-4. அந்த
எழுபத்தைந்து வயதிலே கடவுள் மீது நம்பிக்கை கொண்டு கடவுள்
காண்பித்த நாட்டிற்கு நம்பிக்கையோடு செல்கின்றார். எனவே
கடவுள் ஆபிரகாமின் குடும்பத்தை தேர்ந்தெடுத்து தனது
ஆசீர்வாதத்தால் நிரப்புகின்றார்.
03. கடவுளிடத்தில் தன்னுடைய தேவையை தைரியமாக கேட்கின்றார்
அன்புக்குரியவர்களே ஒரு முக்கியமான விலையுயர்ந்த பொருட்களை
யாரிடம் நாம் தைரியமாக கேட்கவோ? வாங்கவோ? முடியும்.
முதலில் அந்த மனிதர் நமக்கு பரிச்சயமானவராக, அதாவது
மிகவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். உதாரணமாக எனக்கு
ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்றால் நான் என்
பெற்றோரிடத்திலே கேட்கலாம், அல்லது என்னை யார் அதிகம்
அன்பு செய்கின்றார்களோ அவர்களிடம் நான் கேட்கலாம். காரணம்
அவர்களுக்குத் தான் நம்முடைய (என்னுடைய) தேவைகள் அனைத்தும்
தெரியும். மேலும் நம்முடைய தேவையை நிறைவு செய்யும் கடமை
அவர்களுக்கு மட்டும் தான் உண்டு.
இன்றைய முதல் வாசகத்திலே ஆபிரகமாம் கடவுளை நோக்கி
கேட்கின்றார். அப்படியானல் கடவுள் அவருக்கு மிகவும்
பரிட்சயமானவர். கடவுளை நன்கு அறிந்து, தெரிந்து
வைத்திருக்க வேண்டும். ஆபிரகாம் கடவுளிடம் கேட்கின்றார்
"என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ
குழந்தையே இல்லையே" . பிரியமானவர்களே சற்று இந்த கேள்வியை
உற்று கவனியுங்கள். ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்?
அப்படியென்றால் கடவுளிடம் நிறையமுறை அவர் இதைப்பற்றி
கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக கடவுள் ஆபிரகாமுக்கு
கொடுத்த வாக்குறுதியை மீண்டும் கடவுளுக்கு நினைவு
படுத்துகின்றார். அதாவது கடவுளே ஒவ்வொருமுறை நீர் காட்சி
தரும்போதும் எனக்கு இதைத் தருவேன், அதைத் தருவேன் என
வாக்களிக்கின்றீர். இப்பொழுது எனக்கு முக்கிய தேவையாக
இருப்பது ஒரே ஒரு குழந்தை மட்டும் தான். என கடவுளிடம்
பிள்ளைக்கு உரிய பாசத்தில் கேட்கின்றார்.
கடவுளும் உடனே பதில் தருகின்றார். ஆண்டவர் ஆபிராகமை வெளியே
அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால்,
விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும்
இருப்பர்"என்றார். ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆக
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்த குடும்பம் கடற்கரை மணலைப்
போலவும் ஆகாயத்தின் விண்மீனைப் போலவும், ஆசீரை
பெற்றுக்கொண்டது. இன்று நம்முடைய குடும்பங்கள் எதை
மையமாகக் கொண்டுள்ளது? என்று சற்று சிந்திப்போமா? நம்முடைய
குடும்பங்கள் கடவுளின் ஆசீர்வாதத்தை தேடும் குடும்பங்களா?
அல்லது பணம், பதவி, பட்டம் இவற்றை தேடும் குடும்பங்களா?
சிந்திப்போம்!.
இன்றைய நற்செய்தியிலே அன்னை மரியாவின் குடும்பம்
திருக்குடும்பம் என அழைக்கப்படுகிறது. காரணம் அன்பு,
ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளை
உள்ளடக்கியதாக இருந்தது. வழக்கமாக நமது ஊர்களில் ஒரு
பழமொழி ஒன்று உண்டு தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை
என்று. ஒரு குழந்தை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள
வேண்டுமென்றால் அதன் குடும்பத்தை பற்றி தெரிந்திருந்தால்
போதும். அதனால்த்தான் ஒருதிரைப்பட பாடல் இவ்வாறு
கூறுகின்றது எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே; அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை
வளர்ப்திலே என்று!
அப்படியாக அன்னை மரியாவின் குடும்பம் எத்தகையது என்பதை
இயேசு தனது வாழ்க்கையில் வெளிப்படுத்துகின்றார். இயேசு
உலகில் வாழ்ந்தபோது அன்பு செய்யுங்கள் என போதித்தார்;
அத்தோடு மட்டுமல்லாமல் அன்பு செய்தும் வாழ்ந்தார்; எந்த
அளவிற்கு என்றால் தன்னுடைய பகைவர்களையும் அன்பு செய்யும்
அளவிற்கு அன்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் தான் இயேசு.
அன்னை மரியாள், சூசையப்பரிடமிருந்து இயேசு அன்பின் ஊற்றை
பெற்றுக் கொள்கின்றார். மேலும் ஒற்றுமையின் அடையாளமாகவும்
திருக்குடும்பம் திழ்கின்றது. எந்த அளவிற்கு என்றால்
வானதூதர் சொல்வதையெல்லம் சூசையும், மரியாவும் முழுமையாக
நம்பி ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்ததை நாம் பார்க்க
முடிகின்றது.
திருக்குடும்பத்தைப் பற்றி ஒரு கதை கூறுவார்கள். அதாவது
இராயப்பர் விண்ணகத்தின் வாயிலிலே நின்றுகொண்டு மனிதர்கள்
செய்த நல்லது, கெட்டதிற்கு ஏற்ப தீர்பு அளித்துக்
கொண்டிருந்தார். நல்லவர்களை விண்ணகத்திற்குள்ளும்,
தீயவர்களை நரகத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
உதராணமாக ஒரு நாளைக்கு இருபது நல்லவர்களை விண்ணகத்திற்கும்
எண்பது கெட்டவர்களை நரகத்திற்கும் அனுப்பிக்
கொண்டிருந்தார். ஆனால் நரகத்தைக் காட்டிலும் விண்ணகத்தில்
மக்கள் கூட்டம் அதிமாகிக் கொண்டே போனது. எப்படி என்று
தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தார் இராயப்பர்!.
ஒவ்வொருநாளும் நூறுபேர், நூற்று ஐம்பது பேர் என தினமும்
அதிகரித்துக் கொண்டே இருந்தது. எப்படியாவது இதை
கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்து ஒருநாள் இராயப்பர்
விண்ணகத்தின் நுழைவாயிலை மூடிவிட்டு அமர்ந்திருந்தார்.
ஆனால் மக்கள் கூட்டம் விண்ணகத்துக்குள் வந்து
கொண்டிருந்தனர். இராயப்பர் எழுந்து எங்கிருந்து இந்த
மக்கள் கூட்டம் வருகின்றது என்று பார்க்கப் போனார்.
அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அதாவது சூசையப்பர்
விண்ணகத்தின் ஓரத்தில் நின்று கொண்டு கீழிருந்து மக்களை
விண்ணகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இராயப்பர்
சூசையப்பரிடம் சென்று தந்தையே! நீர் செய்வது முறையா? நான்
மக்களின் செயலுக்கேற்ப அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என
கண்டுபிடித்து நல்லவர்களை மட்டும் விண்ணகத்திற்கு
அனுப்பினால் நீரோ நல்லவன், கெட்டவன் என்று பாராமல்
அனைவரையும் உள்ளே அனுப்புகின்றாய் என்று கோபப்பட்டு
இருவரும் கடும் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர்.
உடனே சூசையப்பர் இராயப்பரை பார்த்து நீர் மனிதர்களை
நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார் என்று பார்க்கின்றீர்.
ஆனால் நானோ கெட்டவர்களிலும் நல்லவர்கள் உண்டா என நான்
பார்க்கின்றேன். ஆகவே நேர்மையாளனாகிய நான் எனக்கு
நல்லவர்கள் யார் என்று தெரிகின்றார்களோ அவர்களை என்னுடைய
ஜெபத்தால் விண்ணுலகம் கொண்டு வருகின்றேன். நான் செய்வது
தவறு என்றால் எனக்கு விண்ணகத்தில் இருக்க விருப்பமில்லை
என் கூறிக்கொண்டே தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு
விண்ணகத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தார். இதைப் பார்த்த
மரியாள் என்னுடைய கணவன் இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை
நானும் எனது கணவனோடு செல்கின்றேன் என்று மரியாவும் அவரோடு
புறப்பட்டார். இதையனைத்தையும் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த இயேசு எழுந்து வந்து என்னுடைய தாயும்,
தந்தையும் இங்கு இருக்க இடமில்லையென்றால் எனக்கென்ன இங்கு
வேளை நானும் எனது பெற்றோருடன் செல்கின்றேன் என்று அவரும்
கிளம்பினாராம். உடனே இராயப்படிர் ஓடி வந்து நீங்கள்
மூவரும் இங்கு இல்லை என்றால் எங்களுக்கு என்ன வேலை
நாங்களும் உங்களோடு வருகின்றோம் எனச் சொல்லி சூசையப்பரிடம்
மன்னிப்பு கேட்டு திருக்குடும்பத்தை விண்ணகத்திலே
தங்குமாறு வேண்டினாராம்.
ஆம் அன்பக்குரியவர்களே சூசையப்பர் இல்லையென்றால் மரியாள்
இல்லை, மரியாள் இல்லையென்றால் இயேசு இல்லை, இயேசு
இல்லையென்றால் சீடர்கள் இல்லை, சீடர்கள் இல்லையென்றல்;
நீங்களும், நானும் இல்லை. ஆக திருக்குடும்பம் ஒற்றுமையின்
அடையாளமாகத் திகழ்கின்றது. இன்று நம்முடைய குடும்பங்கள்
ஒற்றுமையின் அடையாளமா? அல்லது பிரிவினையின் கூடாரம?
சிந்திப்போம்.
இன்று பணத்திற்காகவும், சொத்திற்காகவும் எத்தனை
குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன இன்று எத்தனை
குடும்பங்களில் பெற்றோர்கள் தாத்தாவிடம் பேசாதே,
சித்தப்பாவிடம் பேசாதே, மாமா வீட்டிற்கு செல்லாதே,
அண்ணனோடு உறவாடதே என மனித உறவுகளை சிதைத்து சிறுவயதிலே
குழந்தைகளுக்கு நஞ்சை கற்றுக்கொடுக்கும் குடும்பத்தினர்
நம்மில் எத்தனை பேர்? உறவுகளை இழந்து அநாதைகளாக வாழும்
குடும்பத்தினர் நம்மில் எத்தனை பேர்? சிந்திப்போம்.
திருமணத்திற்கு முன் வரை ஒன்றாக இருந்த எத்தனை
குடும்பங்கள் திருமணத்திற்கு பின்னர் தனிக்குடும்பாக
மாறிவிட்டன. இன்று உன்னுடைய குடும்பம் தனிக்குடும்பமா?
அல்லது கூட்டுக்குடும்பமா? குடும்பம் என்றுசொன்னாலே மக்கள்
அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து வாழ்வது தான் குடும்பம்
ஆகும். ஆனால் குடும்பம் என்ற பெயரில் இன்று நாம்
தனித்தனித் தீவுகளாக வாழ்ந்து வருகின்றோம். இன்று உயிருள்ள
உறவுகளை தொலைத்துவிட்டு உயிறற்ற ஃபேஸ்புக், கணிணி,
வாட்ஸ்அப் போன்றவற்றில் உறவாடிக் கொண்டிருக்கின்றோம்.
ஒருமுறை ஒரு பெண் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்புகையில்
அங்கே சில மனிதர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த
பெண் ஒரு பிச்சைக்காரரிடம் சென்று உங்களை இதற்கு முன்பு
எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்றாள். அதற்கு அந்த
பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல
ஃபிரெண்ட்ஸா இருக்கோம் என்றானாம். இன்று சொந்தக்குடும்ப
உறுப்பினர்களிடையே நல்ல உறவு பரிமாற்றம் கிடையாது. ஆனால்
இதுபோன்ற ஃபேஸ்புக், கணிணி, வாட்ஸ்அப் போன்றவற்றில்
உறவுகளை கொண்டடி வருகின்றோம்.
இத்தருணத்தில் நம்முடைய குடும்பங்கள் செங்கற்களால்
கட்டப்பட்ட குடும்பமா? அல்லது தேனீக்களின் குடும்பமா?,
காக்கை கூட்டமா? அல்லது திருக்குடும்பமா?
செங்கற்களால் கட்டப்பட்ட குடும்பம்:
நம்முடைய பெரும்பாலன வீடுகள் செங்கற்கலால் கட்டப்பட்டவை.
ஒரு நிமிடம் அவற்றை உற்று நோக்குங்கள். செங்கற்கள் வைத்து
வீடுகள் கட்டும்போது அவை ஒன்றோடு ஒன்று
ஒட்டிக்கொண்டிருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக
அமர்ந்திருக்கும், ஆனால் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளாது,
ஒரு செங்களுக்கும் மற்றொரு செங்களுக்கும் உறவுகள்
இருக்காது. ஆனால் இப்படி இவை ஒற்றுமையாக ஒன்றோடு ஒன்று
இருக்கமாக பிணைக்கப்பட்டு இருந்தலும் அவற்றிற்கு உயிர்
கிடையாது. உயிர் இல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்
கொண்டிருக்கின்றன. உயிரில்லாத செங்கற்கள் ஒன்றின்மீது
ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு வாழ்வதால் பயன் ஏதேனும் உண்டா?
அதைப்போலத்தான் வெளியிலே மக்கள் பார்க்க வேண்டும்
என்பதற்காக நம்முடைய குடும்பங்கள் ஒன்றோடு ஒன்று
ஒற்றுமையாக இணைந்து இருப்பது போல நடித்துக்
கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையிலே உறவுகள் இல்லாத இறந்த
பிணங்களைப்போல வாழ்ந்து வருகின்றோம். இப்படி வாழ்ந்து நாம்
யாரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.
தேனீக்களின் வீடு:
பிரியமானவர்களே ஒற்றுமைக்கு உதாரணம் தேனீக்களைச்
சொல்லலாம். இந்த தேனிக்கள் தங்களது தேன் கூட்டில்
ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு தேனீக்கும்
தனித்தனி அறைகள் இருக்கும். ஒற்றுமையாக ஒரே தேன்கூட்டில்
அவை வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தனித் தீவுகாளாக
வாழ்கின்றன. ஒவ்வொன்றும் தான் உண்டு தன் வேலை உண்டு என
மற்றவர் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கின்றன.
இந்த தேனீக்களின் குடும்பத்தைப் போலத்தான் நம்முடைய பல
குடும்பங்கள் காணப்படுகின்றன. ஒரே குடும்பத்தில்
இருப்பார்கள் ஒருவர் மற்றவரோடு பேசிக்கொள்ள மாட்டார்கள்.
மகன் ஒரு பக்கம், மகள் ஒருபக்கம், கணவன், மனைவி
ஒவ்வொருவரும் வெவ்வேறு பக்கம் என தனித்தனி தீவுகளாக
நம்முடைய உறவு வட்டங்கள் காணப்படுகின்றன. ஒருவர் மற்றவர்
மீது அக்கறை இல்லாதவர்களாக வாழ்ந்து வருகின்றோம்.
அதனால்த்தான் என்னவோ முதியோர் இல்லங்களும், சிறார்
இல்லங்களும், அனாதை இல்லங்களும் நமது ஊர்களில் நிறைந்து
காணப்படுகின்றன.
காக்கை குடும்பம்:
பிரியமானவர்களே காக்கை நிறத்தில் கறுப்பானாலும் உள்ளதில்
கருணை உள்ளம் படைத்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்
குஞ்சு என சொல்ல கேள்விபட்டிருக்கின்றோம். தன்னுடைய
ஒவ்வொரு குஞ்சுகளையும் மிகவும் அக்கறை எடுத்து பேணி
பாதுகாக்கும், ஒன்றை விட்டு மற்றொன்று தனியாக சாப்பிடாது.
தனக்கு கிடைத்தது எதுவானாலும் மற்றவர்களோடு பகிர்ந்து
உண்ணும் மனப்பான்மை கொண்டது. ஒரு காகாம் தனது
கூட்டத்திலிருந்தோ அல்லது வேறொரு கூட்டத்திலிருந்தோ
இறந்துவிட்டது எனச் சொன்னால் அனைத்து காகங்களும் ஒன்று
கூடி அதற்காக அழுது ஓழமிட்டு அதனுடைய துக்கத்தில் அனைத்து
காகங்களும் பங்கெடுக்கும். ஆம் அன்புக்குரியவர்களே
மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புநலன்கள் அனைத்தும் இன்று
விலங்குகளிடத்தில் காணப்படுகின்றன. அதனால்த்தான் என்னவோ
மேலை நாடுகளில் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை
காட்டிலும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை
தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்த்து வருகின்றனர்.
ஆனால் மனித குடும்பம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என
திருக்குடும்பம் நமக்கு கற்பிக்கின்றது.
திருக்குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என்ற உறவோடு,
ஒருவர் மற்றவர் மீது அன்புசெலுத்தி, ஒருவர் மற்றவரை
புரிந்துகொண்டு, அனைவர் மீதும் அக்கறை கொண்டு,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உயிருள்ள, இரத்தமும்
சதையும் இணைந்துள்ள குடும்பமாக வாழ்ந்து, கடைசி வரை
கடவுளின் திட்டத்திற்கு கீழ்படிந்து, அனைத்து
துன்பங்களையும் சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும்
முன்மாதிரியாக கணவன் சூசையும், மனைவி மரியாளும் வாழ்ந்து
தன்னுடைய மகனை அறிவிலும், ஞானத்திலும், தெய்வபயத்திலும்
வளர்த்து, தன்னுடைய மகன் தன்னுடைய வயிற்றில் பிறந்தாலும்
இந்த சமூதாயம் வாழ்வு பெற, மனிதகுலம் முழுவதும் மீட்புபெற
உலகத்திற்கே தான் பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை
இவ்லகத்தின் ஈடேற்றத்திற்காக கையளிக்கின்றனர். அதானல்த்
தான் இக்குடும்பத்தை திருக்குடும்பம் என நாம்
அழைக்கின்றோம்.
இன்று நம்மில் எத்தனை குடும்பங்கள் திருக்குடும்பத்தின்
முன்மாதிரிகையை பின்பற்றுகின்றோம். ஆம் அன்புக்குரியவர்களே
இன்று நாம் வருடத்தின் கடைசி நாளில் குடும்பமாக
குழுமியிருக்கின்றோம். கடந்த காலம் முடிந்து விட்டது.
இனிவருகின்ற நாட்களில் திருக்குடும்பத்தின் முன்மாதிரிகளை
பின்பற்ற வாக்குறுதிகள் எடுப்போம். அன்னை மரியாவின்
குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு புண்ணியத்தை நம்முடைய
வாழ்வாக்க முயற்சி செய்வோம். பாலன் இயேசு தனது பெற்றோர்
வழியாக நமது குடும்பத்தையும், பங்கு என்ற குடும்பத்தையும்,
சமூகம் என்ற குடும்பத்தையும் தன்னுடைய பிஞ்சு கரங்களால்
ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
ஆபீசில் ஒருவர்: என்மனைவியை எப்படி திருத்துறதுனு ஒன்னுமே
எனக்கு புரியல சார் எப்ப பாத்தாலும் டி.வி
பார்த்துக்கொண்டே இருக்கின்றார் என்றாரம்.
நண்பர்: " டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானேஇதை ஏன்
இவ்வளவு பெரிசா சொல்றீங்க எனக் கேட்டாராம்.
" அட! நீ வேறப்பா கரண்ட் இருக்கும்போது டி.வி பார்ப்பது
சரி. ஏற்றுக்கொள்ளலாம். என் வீட்டில் கரண்ட் இல்லைன்னாலும்
டி.விப்பெட்டியவே வெரிக்க பாத்துக்கிடே
உக்கார்ந்திருக்காங்க! என்றாராம்.
இன்று நாம் டி.விப்பெட்டியை பார்த்து குடும்பம்
நடத்துகின்றோமா? அல்லது திருக்குடும்பத்தைப் பார்த்து
குடும்பம் நடத்தப் போகின்றோமா? முடிவு உங்கள் கையில்....
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
திருக்குடும்ப பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (சீராக் 3:3-7,14-17)
கி.மு. 180-இல் ஞானத்தைப் புகழ்ந்து எழுதியவர் சீராக்.
மக்கள் ஒரு குலமாக ஒற்றுமையுடன் வாழ்வது சவாலாக கருதப்-
படும் நிலையில், குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களின்
கடமைகளை பற்றி இன்றைய முதல் வாசகத்தில் ஆசிரியர்
பேசுகிறார். கடவுள் பயம் ஞானத்தின் தொடக்கம் (சீராக்
1:1-14). கடவுளுக்கு அஞ்சுபவன் பெற்றோரைப் போற்றி வாழ்வான்
என்ற கருத்து, வி.ப. 20:12-இல் வரும் "உன் தந்தையையும்
தாயையும் மதித்து நட" என்ற 4-ஆம் கட்டளையை விளக்கும்
வண்ணமாக அமைகிறது. இரண்டாம் வாசகப் பின்னணி (கொலோ.3:12-21)
கிறிஸ்து எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கிறார் என்று
கிறிஸ்துவை மையப்படுத்தி தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய
கடிதமிது. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் குடும்பம்
கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளைப் பற்றிக்
குறிப்பிடுகிறார். கிறிஸ்துவைப் பின்பற்றிக் கடவுளைப்
போற்றிப் புகழ அழைப்பதோடு கிறிஸ்துவின் அன்பும் அமைதியும்
உங்களது உள்ளங்களை ஆளட்டும் என்று வாழ்த்துச் சொல்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 2:13-15,19-23)
மத்தேயு 1:1-2:23 நற்செய்தியின் இப்பகுதி இயேசுவின்
பிறப்பு மற்றும் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை
உள்ளடக்கியுள்ளது. இந்நற்செய்தி வாசகம், குழந்தை இயேசுவின்
வாழ்க்கையில் ஒன்றன்- பின் ஒன்றாக வந்த
ஆபத்துக்களைப்பற்றியும் அதனால் யோசேப்பும் மரியாவும்
அனுபவித்த இன்னல்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது.
நற்செய்தியாளர் இப்பகுதியில் யோசேப்புவிற்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார். யோசேப்பு எப்படி
இறைவார்த்தைப்படி மரியாளையும் குழந்தை இயேசுவையும்
வழிநடத்துகிறார் என்பதை நற்செய்தி விளக்குகிறது.
மறையுரை
அது ஒரு அளவான குடும்பம். அழகான குடும்பம். அன்பு மயமான
குடும்பம். இறைவார்த்தையை வாழ்வாக்கிய குடும்பம். அதுதான்
இயேசு, மரியா, யோசேப்பு குடும்பம். நாம் இன்று கொண்டாடும்
திருக்குடும்பம். நதியைத் தேடும் கடலாக மனிதனைத் தேடிவந்த
இயேசுவின் குடும்பம் நவீன குடும்பங்களின் கலங்கரை
விளக்கம். துன்பத்தில் துடிக்கின்ற, வறுமையில் வாடுகின்ற,
சந்தேகத்தில் சாகின்ற, அலைகடலில் அலைக்கழிக்கப்படுகின்ற
இன்றைய குடும்பங்கள் கரைசேர முன்னோடியாக விளங்கும்
நாசரேத்தூர் குடும்பம் ஒரு கலங்கரை விளக்கமே. அக்குடும்பம்
இறைவார்த்தையின்படி வாழ்ந்த குடும்பம்.
அக்குடும்பத்திலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம்.
அன்னை மரியாள்
மரியாளிடம் சிறந்து விளங்கிய குணங்கள் 2: இறைவார்த்தைக்கு
கீழ்படிதல் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவுதல்.
கபிரியேல் தூதர் கன்னிமரியாளிடம் இயேசுவின் பிறப்பைப்பற்றி
முன்னறிவித்தபோது, தனது தயக்கத்தை துவக்கத்தில்
வெளிப்படுத்தினாலும் பிறகு "இதோ ஆண்டவரின் அடிமை உம்
சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 2:38) என்று சொல்லி
இறைவனது சொல்லுக்கு அடிபணிந்தாள். அது முதற்கொண்டு இறை
திருவுளத்திற்கு தன்னையே அர்பணித்ததோடு மட்டுமல்லாமல்,
கணவர் யோசேப்போடு அனுசரித்து வாழ்ந்தார். தூய பவுல்
ஆண்டவருக்கு அடிபணிபவரைப் பற்றி உரோமையர் 6:16-இல்
'நீங்கள் கடவுளுக்குக் கீழ்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்
ஆவீர்கள்' என்று மொழிகின்-றார்.
உதவும் கரங்கள்
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்', என்ற வள்ளளாரின்
வாக்கிற்கிணங்க அன்னையவள் எலிசபெத்து முதிர்ந்த வயதில் 6
மாத கர்பிணியாயிருப்பதை வானதூதர் வழி அறிந்தவுடன் தமது
உதவி தேவைப்படுமே என்பதை உணர்ந்து விரைந்து சென்று
உதவினார். தேவையில் இருப்போருக்கு உதவும்போது, கடவுளின்
உதவி உங்களுக்கு உண்டு என்பதற்கேற்ப கானாவூர் கல்யாணத்தில்
திராட்சை ரசம் தீர்ந்ததை அறிந்த மரியாள், தம் திருமகனிடம்
குறையைத் தீர்க்குமாறு பரிந்து பேசுகிறாள்.
அன்னையின் வாழ்வில் உதவுதல் என்ற வார்த்தையை
சிந்திக்கும்போது, 'மற்றவர்களை மகிழ்விக்க விரும்பினால்
அவர்களுக்கு உதவி செய். நீவிர் மகிழ விரும்பினால்
பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள்' என்ற ஒரு செய்தியை
நமக்கு அளிக்கிறது.
யோசேப்பு
யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை. கனவுகளின் வழியாக
இறைதிருவுளத்தை உணர்ந்து செயல்பட்டவர். பழைய ஏற்பாட்டில்
யாக்கோபின் மகன் யோசேப்பும் கனவு கண்டார். அவருடைய
கனவுகளும் விளக்கங்களும் மதிப்பையும் மரியாதையையும்
பெற்றுத் தந்தன. எகிப்து தேசத்தின் ஆளுநராக்கியது. ஆனால்
புதிய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு தங்கமான மனசுக்காரர்.
ஆனால் தங்கமோ வெள்ளியோ அவரிடமில்லை. சாதாரண தச்சராக வேலை
பார்த்தார். இவரது கனவுகள் சோதனைக் கனவுகள், தியாகக்
கனவுகள். எருசலேமுக்கும் எகிப்துக்கும் இடையே அலைய வைத்த,
மீட்புப் பாதையில் பயணிக்க வைத்த கனவுகள்.
மரியாளுடன் மண ஒப்பந்தம் ஆனவுடன் மரியாள்
கருவுற்றிருப்பதைக் கண்டவர், இருதலைக் கொல்லியாகத்
தவித்தார். ஒரு புறம் கன்னி மரியாளின் வாழ்க்கை, மறுபக்கம்
தவறு செய்யாத தன் மீது வரவிருந்த அவப் பெயர். இத்தகைய
குழப்ப நிலையிலும் கனவில் வந்த வான தூதரின் விளக்கத்தைக்
கேட்டு மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவ்வாறு
இறைவார்த்தையை தனது வாழ்வாக்கினார் (மத்தேயு 1:18-25).
இன்றைய நற்செய்தி பகுதியில் (மத்தேயு 2:13-15,19-23)
யோசேப்பின் பெயர் நான்கு முறை வருகிறது. வேறு எந்தப்
பெயரும் வரவில்லை. மத்தேயு 2:13-இல் வான தூதரின்
அறிவுரையைக் கனவில் கண்ட சூசை எகிப்துக்கு பயணமானார்.
அங்கு அறிமுகமற்ற நாட்டில், புதுவித மக்களோடு மரியாளையும்
குழந்தை இயேசுவையும் பேணி காக்க இன்னல் பல பட்டிருக்க
வேண்டும். மீண்டும் வானதூதர் வழியாக ஆண்டவரது வார்த்தையைப்
பெற்றவர் (மத்தேயு 2:20) தாய் நாடு திரும்பியவர் கலிலேயப்
பகுதியான நாசரேத்தூரில் குடியமர்ந்தார். இவ்வாறு இயேசுவின்
பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் இறைவார்த்தைக்கு கீழ்படிந்து
நடந்தாரென வாசிக்கிறோம்.
உழைப்பாளி யோசேப்பு
6 நாள் நீ உன் வேலையைச் செய்வாய் (வி.ப. 23:12) என்ற
விவிலிய வார்த்தைகளுக்கிணங்க யோசேப்பு தச்சு வேலை செய்து
வந்தார். தச்சு வேலைக்குக் கலை நுணுக்கமும் கடின உழைப்பும்
தேவை. உழைப்பின்றி உயர்வில்லை. "உழைக்க மறுப்பவன்
உண்ணலாகாது" (2தெச. 3:10). உழைப்பு என்பது உயர்வானது.
உழைப்பு உலகை வாழ வைக்கிறது. உழைப்பாளி கடவுளின் படைப்பு
திட்டத்தில் பங்கேற்கின்றார். "கடின உழைப்பையும் உழவுத்
தொழிலையும் வெறுக்காதே, இவை உன்னதக் கடவுளால்
ஏற்படுத்தப்பட்டவை" (சீரா. 7:15) என்ற வார்த்தைகள் உழைப்பை
உயர்த்தி பிடிக்கின்றன. நம் குடும்பத்தில் தந்தை தியாக
உள்ளத்தோடு உழைத்துக் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என
நமக்கு அறிவுறுத்துகிறது.
நகரில் வாகனங்களின் புகை மண்டலத்தையே கண்டு வெறுத்துப்போன
நகர வாசி, கிராமத்துப் பக்கம் சென்றவர் பசுமையான வயல்
வெளியைக் கண்டு, உடலோடு உரசிச் சென்ற தென்றலை உணர்ந்து
மகிழ்ந்தார். சற்று தூரத்தில் சேற்றில் நாற்று நடும்
பெண்களைக் கண்டவுடன் முகத்தில் மாற்றம். இதென்ன
இப்படியிருக்கிறது? இதில் கையை வைத்து எப்படி வேலை
செய்கின்றனர்? எனச் சலித்துக் கொண்டார். பக்கத்திலிருந்த
பெரியவர், தம்பி, நாங்க சேத்துல கைய வைக்கலென்னா, நீங்கச்
சோத்துல கைய வைக்க முடியாது என்றார். இது உழைப்பின் உயர்வை
உணர்த்தும் உன்னத வரிகள். தச்சு வேலை செய்த சூசை
உழைப்பாளிகளின் பாதுகாவலராகத் திகழ்கின்றார். அவரைப்
பின்பற்றி நாமும் உழைத்துக் கடவுளின் படைப்பு வேளையில்
பங்கெடுப்போம்.
இயேசு
இன்றைய முதல் வாசகத்தில் ஆசிரியர், பெற்றோர் மட்டில்
குழந்தைகளின் கடமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெற்றோருக்கு
கீழ்படிவதோடு அவர்களை மதித்து வாழ வேண்டுமென்பது அவரது
அறிவுரை. பத்துக்கட்டளைகளில் நான்காம் கட்டளை: "உன்
தந்தையையும் தாயையும் மதித்து நட" என்றுரைக்கிறது (வி.ப.
20:12). இந்த இறை வார்த்தைகளுக்கிணங்க, "இயேசு தம்
பெற்றோருக்கு பணிந்து நடந்தார்" என்று வாசிக்கிறோம்
(லூக்கா 2:51). இரண்டாம் வாசகம் கொலோசையர்களை பரிவு,
இரக்கம், நல்லெண்ணம், மனத்- தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய
நற்பண்புகளால் அணி செய்து கொள்ள அழைக்கிறது. இப்பண்புகள்
குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும், மற்றவர்களோடும்
நல்லுறவை வளர்க்கப் பயன்படும்.
இன்றைய குடும்பங்கள் பெரும்பான்மையாக திருக்குடும்பங்களாக
மாறப் பெருமளவு தயங்குகின்றன. உறவு முறைகளில் பிளவுகள்,
ஒருவர் மற்றவருக்கு அந்நியராக இருக்கும் நிலை குடும்ப
பிணைப்பைக் கேவலப்படுத்துகிறது. ஒரு தாயின் பிள்ளைகளான
அண்ணன் தம்பியரிடையே ஏற்படும் சண்டைச் சச்சரவுகள் வெட்டு,
குத்து என்று போய்க் கொலையில் முடிவடைகின்றன. கணவன் மனைவி
இடையே இருக்க வேண்டிய நம்பிக்கை அவ- நம்பிக்கையாக உரு
எடுக்கின்றது. பெற்றோர், பிள்ளைகள் மத்தியில் இருக்க
வேண்டிய தூய்மையான உறவு போலியாகப் போகிறது. பலவிதமான
முன்னேற்றங்களைக் குறித்து கவலைப்படும் நாம், குடும்ப உறவு
முறைகளைக் காக்கவும் கடமைப்பட்டுள்ளோம். "ஒரு சிலர்தான்
உலக வளர்ச்சிக்காகச் சிறப்பான காரியங்களை செய்து
முடிக்கின்றனர். ஆனால் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை
இருக்குமென்றால் அது அவர்களது குடும்ப உறவுகளின் நிலையை
உயரச் செய்வது தான்" என்பது அறிஞர் ஜார்ஜ் எலியட் கூறும்
கருத்து. இயேசு, மரியா, யோசேப்புவின் குடும்பத்தை நவீன
உலகில் மறுபிறவி எடுக்கச் செய்வோம். நமது குடும்பங்கள் இறை
வார்த்தையின்படி வாழ்ந்து திருக்குடும்பத்திற்கு சான்று
பகரட்டும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 குடும்ப உறவே சமூக உறவுக்கு அடித்தளம்.
முதற்குடும்பத்தை இறைவன் படைப்பு நிகழ்வில்
உருவாக்குகிறார். அது இறைத் திருவுளம்.
🕇 திருக்குடும்பத்தின் இன்னலான தருணங்கள் அவநம்பிக்கையை
அல்ல மாறாகப் புது நம்பிக்கையை நமக்களிக்கின்றன. இறை-
வல்லமையில் நம்பிக்கை வைத்து வென்ற திருக்குடும்பம் நமக்கு
ஒரு முன் மாதிரி.
🕇 திருச்சபை மீட்புத் திட்டத்தில் ஒரு பெருங்குடும்பமாக
திகழ்கிறது.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
திருக்குடும்ப விழா
சீஞா 3:2-7, 12-14 அக்கொலோ 3:12-21 மத் 2:13-15, 19-23
இன்று திருச்சபை திருக்குடும்பத்திருவிழாவை
கொண்டாடுகின்றது. இன்றைய இறைவாக்குகள் எல்லாம்
குடும்பத்தைச் சுற்றி சுழல்கின்றன. முதல் வாசகம்
தந்தையையும், தாயையும் மேன்மைபடுத்துவது பற்றியும்,
முதுமையில் அவர்களுக்கு உதவுவது, பரிவு காட்டுவது
பற்றியும் பேசுகின்றது. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார்
கிறிஸ்தவ நற்பண்புகளை எப்படிக் கைக்கொள்வது என்பது பற்றி
விவரித்துத் திருமணமான ஆண்களும், பெண்களும் கணவன் மனைவியாக
எப்படி ஒழுக வேண்டும் என்றும் பெற்றோர்- பிள்ளை உறவு
எப்படி இருக்க வேண்டும் என்றும் விளக்குகின்றார்.
நற்செய்தியில் இப்பண்புகளையெல்லாம் கொண்டு நாசரேத்துத்
திருக்குடும்பம் எப்படி வாழ்ந்தது என மத்தேயு நமக்குப்
படம் பிடித்துக் காட்டுகின்றார். இனி நற்செய்தி தரும்
கருத்துக்களை விளக்க முயல்வோம்.
பின்னணியும் அமைப்பும்
மத்தேயு நற்செய்தியின் முதல் இரு அதிகாரங்கள் இயேசுவின்
பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளை விவரிக்கின்றன.
அவற்றுள் முதல் அதிகாரம் இயேசு யார்? எனும் வினாவிற்கு
விடை காணுகின்றது. இரண்டாம் அதிகாரம் எங்கே? அல்லது
எங்கிருந்து? எனும் வினாக்களுக்கு விடை தேடுகின்றது. எனவே
இரண்டாம் அதிகாரத்தை ஞானியர் வருகை (வச1- 12), எகிப்துக்கு
ஓடிப்போதல் (வச.13-15), மழலையர் கொலை செய்யப்படல்
(வச.16-18), எகிப்திலிருந்து திரும்புதல் (19-23) என
வழக்கமாகப் பிரித்தாலும் இடங்களை முதன்மைப்படுத்தி
எருசலேம் (வச 1-6), பெத்லகேம் (வச.7-12), எகிப்து
(வச.13-15), பெத்லகேம், ராமா (வச.16-18), எகிப்து மற்றும்
நாசரேத்து (வச.19-23) எனப் பிரிப்பதும் சரியாக அமையும்.
இறுதி மூன்று பகுதிகளும் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு
முழுவதும் இவ்வாறு பிரிப்பதற்கு காரணமாய் அமைகின்றன.
இயேசுவின் பிறப்பும் மோசேயின் பிறப்பும்
இயேசுவின் பிறப்பைப் பற்றிய நிகழ்வுகளை மத்தேயுவின்
விவரிப்பின்படி வாசிக்கும்போது, அவற்றுள் பல மோசேயின்
பிறப்பைச் சூழ்ந்து நிகழ்ந்த பல நிகழ்வுகளை நமக்கு
நினைவூட்டுகின்றன. மோசே நிகழ்வுகள் நமக்கு இயேசுவின்
பிறப்பு நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் ஆழமான
பொருளைச் சுவைக்கவும் நமக்கு உதவுகின்றன. எனவே மோசே- இயேசு
பிறப்பிற்கு இடையேயுள்ள ஒருசில ஒற்றுமைகளை இங்கு பட்டியலிட
விரும்புகின்றேன்.
1. எகிப்தின் கொடுங்கோல் மன்னன் பார்வோன் மோசேவையும்,
பிறக்கும் ஆண்மகவுகளையும் கொன்றுவிடவும், நைல் நதியில்
எறிந்துவிடவும் ஆணையிட்டான் (விப 1:16,22). கொடுங்கோலன்
ஏரோதுவும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண்
குழந்தைகளையும் கொன்றழிக்கின்றான் (வச. 16-18)
2. பார்வோனின் மகளின் செயலால் மோசே அற்புதமான விதத்தில்
காப்பாற்றப் படுகின்றார்(காண்.விப 2:1-10). ஆண்டவருடைய
தூதரின் செயல்பட்டால் குழந்தை இயேசு
காப்பாற்றப்படுகின்றார்.
3. எகிப்தியனைக் கொன்றதால் தான் தண்டிக்கப்படுவோம் எனப்
பயந்து இளைஞர் மோசே மிதியான் நாட்டுக்குத் தப்பி ஒடி
உயிர்பிழைக்கின்றார் (காண். விப 2:15). திருக்குடும்பமும்
எகிப்துக்குத் தப்பியோடி உயிர்பிழைக்கின்றது (வச.14)
4. பார்வோன் மன்னனின் இறப்புக்குப் பின் (காண். விப 2:
23), எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில் உன் உயிரைப்
பறிக்கத் தேடியவர்கள் எல்லாரும் இறந்து விட்டனர்" (விப
4:19) என்று கூறி கடவுள் மோசேவை மிதியான் நாட்டிலிருந்து
எகிப்திற்கு கொணர்கின்றார். "ஏனெனில் குழந்தையின் உயிரைப்
பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" (வச.20) என்று
கூறி ஆண்டவருடையத்தூதர் இயேசுவையும் திருக்குடும்பத்தையும்
எகிப்திலிருந்து இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுவருகின்றார்.
எனவே கொடுங்கோல் மன்னனின் கட்டளை, மாசற்ற குழந்தைகளின்
இறப்பு, வேற்று நாட்டுக்கு ஓடிப்போதல், கொடுங்கோல் அரசனின்
இறப்புக்குப் பின் நாடு திரும்புதல் ஆகியவற்றில் மோசே -
இயேசு நிகழ்வுகள் ஒத்துப் போகின்றன. இதனால் இயேசு புது
மோசே, இரண்டாம் மோசே, மீட்பர் ஆகிய கருத்துக்கள்
நிறுவப்படுகின்றன. அதோடு குடும்பங்களின் சோதனை நேரங்களில்
கடவுள் உடன் இருந்து காப்பாற்றுவர், வழிநடத்துவர் எனும்
நம்பிக்கைச் செய்தியையும் அளிக்கின்றன.
இயேசுவின் பிறப்பில் அவரின் இறப்பின் அடையாளம்
ஒருபுறம் இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பேசும்போது
பின்னோக்கி அது மோசேவைப் பற்றி நினைவூட்டுகின்ற
அதேவேளையில், அது முன்னோக்கி இயேசுவின் இறப்பைப் பற்றிய
அடையாளங்களையும் ஆங்காங்கே தெளித்து வைத்திருக்கின்றது
என்பது நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றது. அத்தகைய
அடையாளங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.
1. 'யூதர்களின் அரசர்' (வச.2) எனும் சொல்லாடல் இங்கும்
இயேசுவின் பாடுகளின் போதும் (காண் மத் 27:11,29,37)
பேசப்படுகின்றது.
2. யூதர்களின் அரசர்பற்றிய பேச்சு அரசனுக்கும்
எருசலேமுக்கும் கலக்கத்தை உண்டாக்குகின்றது (வச.3).
3. எல்லாத் தலைமை குருக்களும், மறைநூல் அறிஞர்களையும்
ஒன்றுகூடி விவாதிக்கின்றனர்.(வச.4)
4. ஞானியர் வருகை பிற இனத்தார் இயேசுவை ஏற்றுக் கொண்டதை
குறித்தால், இயேசு நற்செய்தியை பிற இனத்தார்க்கு அறிவிக்க
கட்டளையிடுகின்றார் (காண். மத் 28:19)
5. ஞானியர் 'நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கியது'
(வச.11) நமக்குச் சீடர்கள் இயேசுவை பணிந்ததை நமக்கு
நினைவூட்டுகின்றது (காண். மத் 28:17).இவ்வாறு இயேசுவின்
இறப்பு இயேசுவின் பிறப்பு முதலே தொட்டுத் தொடர்ந்து
வருகின்றது. இயேசுவின் பிறப்பு அவரது மீட்பளிக்கும்
இறப்பிலே நிறைவடைகின்றது. பேராயர் புல்டன்ஷீன் கூறுவது போல
எல்லா மனிதரும் வாழ்வதற்காகப் பிறக்கின்றனர். இயேசு ஒருவர்
மட்டுமே இறப்பதற்காக பிறந்தார்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
திருக்குடும்ப விழா முதல் ஆண்டு
முதல் வாசகம் : சீஞா 3:2-6:12-14
"சீராக் மகன் இயேசு" இந்நூலை எழுதியதாகக் குறிப்பு உள்ளது
(50:27). ஏறத்தாழ கி.மு. 200-இல் இவர் வாழ்ந்திருக்கலாம்.
பழமொழி மரபிலே இறை ஞானத்தைப் புகட்டும் இவரது நூல் பல
கருத்துக்களைக் கொண்டது. மனம் திரும்புதல், இறைச்சட்டம்,
சமூக உறவு, நல்லாட்சி, மனிதனின் தன்மை, பாவம், சாவு,
தெய்வபயம், முன்னோர் வாழ்த்து முதலியன இவருடைய நூலில்
வரும் ஒரு சில முக்கிய கருத்துகளாகும்.
பெற்றோருக்குப் பணிந்து நடத்தல்
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற தமிழ் மரபு
"தந்தை தாய்ப் பேண்" என்றும் கட்டளை இடுகிறது.
திருக்குடும்பத் திருநாளாகிய இன்று, பெற்றோர்-பிள்ளைகள்
உறவுபற்றி விவிலியம் கூறுவது காணத்தக்கது. இறைவன் சீனாய்
மலையில் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்
கட்டளைகளில் ஒன்றாக, "உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும்
நாட்டில் உன் வாழ் நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும்
தாயையும் மதித்து நட" (விய 20: 12, இச 5: 16) என்கிறார்.
இயேசுவின் பாலப் பருவத்தைப் பற்றிக் கூறவரும் லூக்கா,
"அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப்
பணிந்து நடந்தார்" (லூக் 2:51) என்று கூறுகிறார்.
"பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்" (எபே
6 : 1, கொலோ 3: 20) என்பது பவுல் அடிகளின் அறிவுரை. இன்றைய
வாசகமும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. "தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை."
பெற்றோரைப் பேணல்
தாய் தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்
கொள்கின்றனர் (சீஞா 3: 3). மீட்பருடைய முக்கியமான வழி
பாவங்களை விலக்குவதும், பாவங்களுக்குப் பரிகாரம்
செய்வதுமாகும் (3:4). சிறப்பாக, தாய் தந்தையருக்கு
எதிராகச் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதும் அவற்றை
விலக்கி நடப்பதும் மீட்படைய இன்றியமையாதன. ஏனெனில் தாய்
தந்தையர் நம் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு பக்தி
முதலியவற்றில் முக்கிய இடம் பெறுகின்றனர். நம்மைத்
தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர்கள் அவர்களே.
அவர்களின்றி நாம் கிடையாது. அவர்களுடைய பக்தி, உழைப்பு,
கவனம், கரிசனையின்றி நாம் நம்முடைய இன்றைய நிலையை
அடைந்திருக்க மாட்டோம் என்பதை உணர்ந்து, அவர்களுக்குச்
சீரும் சிறப்பும் செய்தல் நம் கடன். "மகன் தந்தைக்காற்றும்
உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்பது
வள்ளுவர் வாக்கு (70). நாம் இறைவனுக்குப்
பிரியப்பட்டவர்களாய் வாழ வேண்டுமாயின், நம்முடைய
வேண்டுதல்கள் பலனளிக்க வேண்டுமாயின் (3: 4) நம் தாய்
தந்தையரைப் பேணி நடக்க வேண்டும். முக்கியமாக அவர்களுடைய
தள்ளாத பருவத்திலே நம்முடைய கடமை அவர்கள்பால்
சிறப்புற்றிருக்க வேண்டும். யோசேப்புக்கும் மரியாவுக்கும்
கீழ்ப்படிந்திருந்த இயேசு இக்கடமையை நமக்கும்
உணர்த்துவாராக.
பெற்றோர் கடமை
தாய் தந்தையருக்கும் பிள்ளைகள்பால் கடமைகள் உண்டு.
பெற்றுவிட்டதெல்லாம் பிள்ளையாகாது. பெறுவது எளிது,
பெற்றதைப் பொறுப்புடன் வளர்ப்பது அரிது. "தாயைப் போலப்
பிள்ளை, நூலைப் போல சேலை" என்பர். "அப்பன் எப்படி, மகனும்
அப்படியே" என்பது வழக்கு. எனவே பாலூட்டிச் சீராட்டித்
தாலாட்டிப் பிள்ளைகளை வளர்ப்பதோடு நில்லாது, படிப்பு,
பக்தி, ஒழுக்கம், கடமை, அன்பு இவற்றிலே தாங்களும்
வளர்ந்து, தங்கள் பிள்ளைகளையும் வளர்த்தல் இன்றியமையாக்
கடன். "அப்பன் ஆட்டைக் கடித்தான், மகன் மாட்டைக்
கடித்தான்" என்ற நிலையை அகற்றி, தாய் தந்தையர் தங்கள்
பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகவும் முன்னோடிகளாகவும்
வாழ்தல் வேண்டும். யோசேப்பும் மரியாவும் என்ன முறையிலே
குழந்தை இயேசுவை அன்பிலும் பண்பிலும் பக்தியிலும்
வளர்த்திருப்பார்கள் (லூக் 2:21-52) என்பதை உணர்ந்து,
அந்தத் திருக்குடும்பத்தின் மாதிரிகையைப் பின்பற்றுவோமாக!
தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி
கிட்டும்.
இரண்டாம் வாசகம் ; கொலோ 3:12-21
கொலோசேயருக்கு எழுதிய திருமடலின் இறுதிப் பகுதியிலே புனித
பவுல் மக்களுக்குப் பல பொது அறிவுரைகள் வழங்குகிறார்.
கிறிஸ்துவ வாழ்வுக்கு, குடும்ப நலனுக்குரிய அவை நமது
குடும்ப வாழ்வையும் கிறிஸ்துவ வாழ்வையும் பண்படுத்த
மிகவும் இன்றியமையாதன என்பதை உணர்ந்து,
குடும்பங்களுக்கெல்லாம் முன்னோடியும் மாதிரிகையுமான
திருக்குடும்பத்திடம் வேண்டிக்கொள்வோம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
ஒவ்வொரு குடும்பமும் நற்குடும்பமாய் வாழ அடிப்படைக்
கடமைகள் சிலவற்றை எல்லோரும் நிறைவேற்ற வேண்டும் (கொலோ 3:
18-21, எபே 5: 25-32, 6:1-4; 1 பேது 3:1-4 முதலியன).
இவ்வடிப்படைக் கடமைகளை யெல்லாம் இணைத்து வைப்பது அன்பு
(கொலோ 3:14). ஆம் கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவரிடத்திலும்
அன்பு முதலிடம் பெற்றால், அனைத்தும் அக்குடும்பத்திற்கு
அமைந்துவிட்டதாகக் கொள்ளலாம். "தான்" "தனது" என்பதை
மறந்து, மறுத்த நிலையிலே "அவர்", "அவரது" என்பது
ஒவ்வொருவர் மனத்திலும் செயலிலும் முக்கியத்துவம்
பெறும்போது "ஒருவர் ஒருவரிடமிருந்து எதைப் பெறுவோம்"
என்னும் "சுயபற்று" தலையெடுக்காது. மாறாக, "ஒருவர்
ஒருவருக்கு எதைக் கொடுப்போம்" என்னும் திறந்த உள்ளம்
உருவாகும். இதுவே நற்குடும்ப வாழ்வுக்கு அடிப்படை. இதுவே
"ஆண்டவருக்குள் வாழும் முறை" (3:18), "ஆண்டவருக்கு
உகந்தது" (3:20). இவ்வுரைகல்லிலே நமது குடும்ப வாழ்வைச்
சோதித்துப் பார்த்துச் சீர்திருத்த முயல்வோம்.
திருக்குடும்பம் துணை நிற்க வேண்டுவோம்.
கூடிச் செபிக்கும் குடும்பம் ஒருமனப்பட்டு வாழும்
குடும்பமாகும்
குடும்பத்தினர் இணைந்து இறைவன்முன் வருவதற்கு மிக உதவுவது
இறை வார்த்தையான விவிலியம். எனவேதான் கிறிஸ்துவின்
வார்த்தையைத் தினமும் கேட்க வேண்டும். வார்த்தையைக்
கேட்கும் போதுதான், அவ்வார்த்தைவழி நடக்கத் தூண்டும். நல்ல
வார்த்தைகள் நம் வாயிலிருந்து வெளிப்படும் (எபே 4 : 29);
நல்ல வாழ்வு நம் குடும்பங்களிலே மலரும். வேத வாசகங்களும்
திருப்பாடல்களும் நமது குடும்ப செபங்களிலே முக்கிய இடம்
பெறுகின்றனவா? (எபே 5 : 19-20) "மறைநூலை அறியாதிருப்பது
கிறிஸ்துவை அறியாதிருப்பதாகும் "என்கிறார் புனித
எரோணிமுசு.
குடும்ப செபங்களிலே செய்நன்றிக்கு முக்கிய இடம் கொடுக்க
வேண்டும் (3:16-17, எபே 5:19-20). "செய்நன்றி கொன்றார்க்கு
உய்வில்லை" என்பார் வள்ளுவர். நம் அன்றாட வாழ்க்கையிலே
இறைவன் நமக்கும் நம் குடும்பத்துக்கும், ஊருக்கும்
உலகுக்கும் செய்துவரும் அனைத்து நன்மைகளுக்கும்
நன்றியுள்ளம் படைத்தவர்களாக வாழ வேண்டும்.
சமாதானமுள்ள குடும்பம் பேறுபெற்ற குடும்பம்
இறைவன் அளிக்கும் சமாதானத்தைப் (லூக் 2:14) பெற்று, அவரோடு
தூய்மையான வாழ்வுவழி இணைந்து, அவரின் பிள்ளைகளாகிய
பிறரோடும் ஒன்றுபட்டு, "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும்
ஓரினம்" என்ற முறையில் வாழ்வதே கடவுளின் பிள்ளைகளுக்கு
ஏற்ற வாழ்வு (மத் 5:9). உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றே
(1கொரி 12:12, உரோ 12:4-5) என்பதை மனத்திலிறுத்தி, சமாதான
வாழ்வுக்காக எதையும் விட்டுக் கொடுக்க, எத்துணைத்
தியாகமும் செய்யத் தயாராயிருப்போம். அப்போது "அறிவெல்லாம்
கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள்
உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்" ( பிலி 4 :7).
கிறிஸ்துவின் வார்த்தை நிறை வளத்தோடு உங்களுள்
குடிகொள்வதாக.
நற்செய்தி: மத் 2:13-15, 19-23
கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் அனைவரும் மரியாவையும்
யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடக்கும் குழந்தையையும்
காண்கிறோம். அமைதியில் மட்டுமன்று, அவதியில்
ஒருங்கிணைந்திருக்கும் திருக்குடும்பத்தை, நமக்கு ஓர்
எடுத்துக்காட்டாக இன்றைய நற்செய்தி நம்முன் வைக்கிறது.
ஆண்டவர் திட்டத்திற்குப் பணிதல்
கொடுங்கோலன் பெரிய ஏரோது "யூதரின் அரசன்" என ஞானிகள்
அழைத்த அக்குழந்தையைத் தொலைக்கத் தேடுகிறான் (2:13).
கடவுளோ தமது திட்டப்படி, தேவ பாலகனைப் பாதுகாக்கிறார்.
ஆனால் மற்ற மாசற்ற குழந்தைகள் கொலையுறாவண்ணம் செய்கிறார்
அல்லர். கனவிலே தூதன் வழி முன்எச்சரிக்கை விடுக்கிறார்;
ஆனால் குழந்தையோடு எகிப்துக்கு உடனே ஓடும் பொறுப்பை
யோசேப்பு மரியாவிடம் விட்டுவிடுகிறார். "ஆண்டவரின் மனத்தை
அறிபவர் யார்?" அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார்?"
(உரோ 11:34, சாஞா 9:13).
அதுவும் ஆபத்துக் காலங்களில் முன்பு யூதர்கள், பின்பு
கிறிஸ்தவர்கள், அதற்குப் பின் கிறிஸ்தவ எதிரிகள் எனும்
பலரும் ஓடி ஒழியும் இந்த எகிப்து என்ன அருகிலா உள்ளது? 300
கல் தூரம்; 10-12 நாள் பயணம். பாதையும் பாலைவனத்தூடேதான்.
ஆனால் குடும்பத் தலைவரான யோசேப்பு, செய்தி அறிந்ததும்
எழுந்து சேயையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு
எகிப்துக்கு விரைகிறார். மரியாவும் எவ்விதக் கேள்வியோ
முறைப்பாடோ இன்றி, உடனே தேவ திருவுளத்துக்குப் பணிகிறார்.
"பணிவார் பிணி தீர்த்தருளும்" இறைவனும் அவர்களுக்கு
உதவுகிறார்.
ஆண்டவரின் பாதுகாப்பு
எகிப்துக்குச் சென்றவர்களைச் சில ஆண்டுகளுக்குப் பின்
மீண்டும் சொந்த நாட்டுக்குக் திரும்பும்படி அழைக்கிறார்
இறைவன். அவர்களும் இஸ்ரயேல் நாட்டுக்கு வருகின்றனர்.
பெத்லகேமிற்கு அல்ல; நாசரேத்துக்கு மீண்டும் போய் வாழ்க்கை
நடத்துகின்றனர். இவ்வாறு தம்மை நம்புவோரைக் கடவுள் பல
நேரங்களில் புரியாத முறையில் கடுமையாகச் சோதிக்கிறார்.
ஆனால் அதே வேளையில் சிறந்த முறையில் பாதுகாக்கின்றார் (2
அர 2: 9, யாக் 1: 12-15). இதைக் திருக்குடும்பம்
நம்புகின்றது. நம்பும்படி நம்மையும் அழைக்கின்றது.
எகிப்துக்குப் போவது, அங்கிருந்து திரும்புவது எனும்
இவ்விரு நிகழ்ச்சிகளையும் மத்தேயு யோசேப்பை முன்னணியில்
வைத்து, பழைய ஏற்பாட்டு வசனங்களோடு விளக்குகிறார் (தொநூ
46:3, ஒசே 14:2). "இவ்வாறு நாசரேயன் எனப்படுவார்" எனும்
இறைவாக்கு நிறைவேற வேண்டியிருந்தது(2:23) என்பதின் பொருள்
முற்றும் தெளிவாக இல்லை. மரியோடும் யோசேப்போடும் இயேசு
இறைவனது திட்டப்படி வாழ்கிறார். எனவே சாம்சனைப் போல
"நாசரேயன்" ஆகிறார் (நீத 13: 5, 7) என்பதையோ, அல்லது எசாயா
குறிப்பிடும் ஈசாப்பு தண்டின் "நேசர்" ஆக, அதாவது கிளையாக
(எசா 11 1) வாக்குத்தத்தம் பெற்ற அருள்பொழிவு அரசராக இயேசு
வருகிறார் என்பதையோ இவ்வசனம் குறிக்கலாம். "நாசரேத்தூரான்"
என்பதையும் சுட்டலாம்.
ஆண்டவருடன் ஒத்துழைப்பு
நல்ல குடும்பங்களிலும், அவர்களின் கட்டுப்பாட்டுக்கு மீறிய
வெளிக் காரணங்களால், ஏரோது போன்ற தீய சக்திகளால், பல
வேளைகளில் துயர் தொல்லைகள், இடர் கலக்கங்கள் எழலாம். மிகப்
புனிதமான, மிகப் பிரிய திருக்குடும்பத்திடம் இறைவன்
கேட்டது போல், நம்மிடமும் நம்மால் முடிந்ததைச் செய்தபின்,
தேவ திருவுளத்துக்குப் பணியும்படி கேட்கலாம். எனவே, நமக்கு
வரும் துன்ப துயரங்களை, நம் மீட்புக்காகவும், பிறர்
மீட்புக்காகவும் திருக்குடும்பத்தைப் போல் ஏற்று,
அமைதியோடு, இறைவனுடன் ஒத்துழைப்போமாக. யோசேப்பு மரியாவோடு
இருந்த அதே அமைதியின் அண்ணல் இயேசு, இன்றும் நம்மோடு
இருக்கிறார் அன்றோ? "யாவர்கோன் என்னையும் வந்தாண்டு
கொண்டான்; யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்"
(திருவாசகம்) என்பது நமது விருது வாக்காய் அமையட்டும்.
எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலே கூட்டிக்கொண்டு
எகிப்துக்குச் சென்றார்.
அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, 'ஆண்டவரே...மக்கள்
அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என்
கண்கள் கண்டுகொண்டன' என்றார்'' (லூக்கா 2:28,31)
-- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில்
மட்டுமே உள்ளது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டதையும்
இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டதையும் குறிப்பிட்ட பிறகு
(லூக் 2:21) லூக்கா இயேசுவின் அர்ப்பணம் பற்றிப்
பேசுகிறார். திருச்சட்ட மரபினை யோசேப்பும் மரியாவும் கடைப்பிடித்தார்கள்.
எனவே, ஆண்மகவு பிறந்ததும் அதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க எருசலேம்
கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இறைப்பற்றுக் கொண்டு
நேர்மையாக வாழ்ந்துவந்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர்
சிமியோன். கோவிலில் வயது முதிர்ந்த அன்னா என்னும் இறைவாக்கினரும்
இருந்தார். இந்த இருவரையும் யூத சமய மரபின் உருவகங்களாக
நாம் காணலாம். அதாவது, இஸ்ரயேலர் கடவுளின் வாக்குறுதி ஒருநாள்
நிறைவேறும் என்றும், மெசியா மக்களிடையே வருவார் என்றும் எதிர்பார்த்துக்
காத்திருந்தார்கள். சிமியோனும் அன்னாவும் அந்த மரபின் வழி
வந்தவர்கள். மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள்.
அவர்கள் இயேசு குழந்தையைக் கண்டதும் அவரே மெசியா என்பதை அறிந்துகொள்கிறார்கள்.
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார்; கடவுளைப்
போற்றுகிறார்; தம் குரலை எழுப்பி, இயேசு ''பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி'' (லூக் 2:32) என அறிக்கையிடுகிறார்.
-- இயேசுவின் வருகை சிமியோனின் வாழ்விலும் அன்னாவின்
வாழ்விலும் நிறைவு கொணர்ந்தது. கடவுள் தம் மக்களைத் தேடி
வருகிறார் என்பதை சிமியோனும் அன்னாவும் உணர்ந்திருந்தார்கள்.
இயேசுவின் வழியாகக் கடவுளின் திட்டம் நிறைவேறுகிறது என்பதையும்
அவர்கள் அறிந்தார்கள். கடவுளின் வருகையை எதிர்பார்த்துக்
காத்திருப்போர் ஒரு நாளும் ஏமாற்றமடையார் என்பதை இங்கே
காண்கிறோம். நம் வாழ்வில் கடவுள் புகுந்திட நாம் திறந்த உள்ளம்
கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருளை அகற்றும் ஒளியாக வருகின்ற
இயேசு கிறிஸ்து நம் இதயத்தையும் வாழ்வையும் ஒளிர்விப்பார்
என நாம் உறுதியாக நம்ப வேண்டும். அப்போது நம் வாழ்வில் நிலவுகின்ற
இருள் மறைந்துவிடும்; நாமும் கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்படுவோம்.
ஒளிபடைத்த கண்களோடு நாம் கடவுளின் திருவுளத்தைக் கண்டு, அதை
நம் வாழ்வில் செயல்படுத்த முன்வருவோம்.
சிந்தனை 7
ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்
ஆண்டின் இறுதி நாளாகிய இன்று நமது தாய் திருச்சபை திருக்
குடும்ப திருவிழாவைக் கொண்டாடுகின்றது. இன்றைய இறைவாசகங்கள்
இறைவன்மேல் நம்பிக்கை கொண்ட இரண்டு குடும்பங்களை எடுத்துக்
காட்டாக நம்முன் வைக்கின்றது. இறைவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து,
அவரின்மேல் ஆழமான விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டவர்கள்தான்
ஆபிரகாம், சாராவின் குடும்பம், இறைமகன் இயேசுவின் பெற்றோர்களாகிய
அன்னை மரியாள், யோசேப்பின் குடும்பம். ஆபிரகாம் ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்,
மேலும் ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்.
உனக்குப் பெரும் கைமாறு கிடைக்கும் என்ற இறைவார்த்தைகள் ஆபிரகாமிற்கு
ஓர் புதிய ஆற்றலையும், நம்பிக்கையும் கொடுத்திருக்கும். ஆகையால்தான்
இறைவன் தனக்கு கொடுத்த ஒரே மகனையும் பலியிட முன்வருகின்றார்.
ஆபிரகாமும் சாராவும் வயதில் முதியவராகவும் இருந்ததால் அவர்களுக்கு
குழந்தை பெறாத குறையை இறைவன் நீக்கி வைக்கின்றார். ஆபிரகாம்
இறைவனின் வாக்குறுதியையும் உடன்படிக்கையும் நம்பியதால் அவரை
விசுவாசத்தின் தந்தை என்று அழைககின்றோம். எனக்கு வாக்களித்தவர்
நம்பிக்கைகுரியவர் என அவர் உள்ளத்தின் ஆழத்தில் நம்பியதால்
துணிந்து இறைவன் காட்டிய பாதையில் பயணிக்க துணிகின்றார்.
இறைவன் ஆபிரகாமை அழைத்தபோது இவ்வாறு கூறகின்றார் " உன்
நாட்டிலிருந்து உன் இனத்தவரிடமிருந்தும். புறப்பட்டு நான்
உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான்
பெரிய இனமாக்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச்
செய்வேன்.நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி
கூறுவோர்க்கு நான் ஆசி வழுங்குவேன். உன்னைச் சபிப்போரை
நானும் சபிப்பேன் உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும்
ஆசி பெறும் என்று கூறிய இறைவனின் வாக்குறுதி அவருடைய
வாழ்க்கையில் முழுமையாக நிறைவேறியது என்பதை திருவிலியத்தில்
காண்கின்றோம். இறைவனின் உடனிருப்பும் வாக்குறுதியும் அவரை
குணத்திலும் நற்பண்புகளிலும், தாளார மனத்திலும் வளரச் செய்தது.
ஆபிரகாம் தாராள மனம் கொண்டதால்தான் லோத்துவுக்கு முதலிடம்
தந்து நாட்டைப் பிரிக்க முதல் உரிமையைக் கொடுக்கின்றார்.
சோதோமுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். சாலேம் அரசர் உன்னத
கடவுளின் அர்ச்சகராக விளங்கிய மெல்கிசெதேயின் ஆசீரையும்
பெற்று இறைவனுக்கு உகந்தவராக விளங்கினார். இறைவனின்
வாக்குறுதியை நம்பி, விசுவசித்து துணிவு நற்பண்பு, தியாகம்,
பொறுப்பு, கடமை, வழிநடத்துதல், மனுக்குலத்துக்கே மிகஆசீர்வாதமாய்
திகழ்ந்தவர் நமது விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம். நானும்
நீங்களும் இறைவன்மேல் நம்பிக்கை கொண்டு பிறருக்கு ஆசீயாக
விளங்குகின்றோமா?
திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தியில் இயேசுவின்
பெற்றோர்களாகிய அன்னை மாரியாவும் யோசேப்பும் மோசேயின் சட்டப்படி
குழுந்தை இயேசுவை இறைவனுக்கு அர்ப்பணிக்க எருசலேம் தேவாலத்திற்கு
கொண்டு சென்றார்கள். அன்னை மரியாள் இறைவனின் அருளினால்
நிறையப்பெற்று இறைமகன் இயேசுவை மீட்பராக நமக்கு கொடுத்த அன்பு
தாய். எளியேரின் காணிக்கையை அவர்கள் கொண்டு செல்கின்றார்கள்.
அன்னை மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
அவர் நேர்மையாளர். ஆனாலும் ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில்
தோன்றி ,யோசேப்பே தாவீதின் மகனே உன் மனைவி மரியாவை ஏற்றுக்
கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய
ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு
இயெசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய
பாவங்களிலிருந்து மீட்பார் என்றார் என்பதை மனதில்
சிந்தித்து செயலாக்குகின்றார். ஆண்டவரின் தூதர் தமக்கு
கூறிய வார்த்தையை நம்பி அன்னை மரியாளை தம் மனைவியாக ஏற்றுக்
கொண்டு இறைமகனை உலகிற்கு கொண்டுவர அன்னை மரியாளுடன் ஒத்துழைகின்றார்.
இறைமகனின் பெற்றோர்களுக்கு தன் அன்பு மகனை உலகில் பிறப்பதற்கு
ஏற்ற அரண்மனையோ, வீடோ, சத்திரமோ, தங்கும் விடுதியோ இல்லை
ஆனால் அவர்களுக்கு கிடைத்த இடமோ மாட்டுத் தொழுவம். அவர்களுடைய
உறவினர்களோ இடையர்கள். எளிமையின் தோற்றம். ஏழ்மையின் பிறப்பிடமாக
தோன்றியவர் நமது அமைதியின் அரசர். தாழ்ச்சி என்னும் கொடையை
நமக்கு கற்றுத் தரும் அரசர். அவரைப் போல் ஏழ்மையில் வாழ்வதற்கு
கற்றுக் கொள்வோம். அன்னை மரியாள் தூய ஆவியால் நிழலிட்டது
போல் நமது குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆவியால்
நிரம்பிட வேண்டுமென்று முயற்சிப்போம்.
திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தியில் இயேசுவின்
பெற்றோர்களாகிய அன்னை மாரியாவும் யோசேப்பும் மோசேயின் சட்டப்படி
குழுந்தை இயேசுவை இறைவனுக்கு அர்ப்பணிக்க எருசலேம் தேவாலத்திற்கு
கொண்டு சென்றார்கள். அன்னை மரியாள் இறைவனின் அருளினால்
நிறையப்பெற்று இறைமகன் இயேசுவை மீட்பராக நமக்கு கொடுத்த அன்பு
தாய். எளியேரின் காணிக்கையை அவர்கள் கொண்டு செல்கின்றார்கள்.
அன்னை மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
அவர் நேர்மையாளர். ஆனாலும் ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில்
தோன்றி ,யோசேப்பே தாவீதின் மகனே உன் மனைவி மரியாவை ஏற்றுக்
கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய
ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு
இயெசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய
பாவங்களிலிருந்து மீட்பார் என்றார் என்பதை மனதில்
சிந்தித்து செயலாக்குகின்றார். ஆண்டவரின் தூதர் தமக்கு
கூறிய வார்த்தையை நம்பி அன்னை மரியாளை தம் மனைவியாக ஏற்றுக்
கொண்டு இறைமகனை உலகிற்கு கொண்டுவர அன்னை மரியாளுடன் ஒத்துழைகின்றார்.
இறைமகனின் பெற்றோர்களுக்கு தன் அன்பு மகனை உலகில் பிறப்பதற்கு
ஏற்ற அரண்மனையோ, வீடோ, சத்திரமோ, தங்கும் விடுதியோ இல்லை
ஆனால் அவர்களுக்கு கிடைத்த இடமோ மாட்டுத் தொழுவம். அவர்களுடைய
உறவினர்களோ இடையர்கள். எளிமையின் தோற்றம். ஏழ்மையின் பிறப்பிடமாக
தோன்றியவர் நமது அமைதியின் அரசர். தாழ்ச்சி என்னும் கொடையை
நமக்கு கற்றுத் தரும் அரசர். அவரைப் போல் ஏழ்மையில் வாழ்வதற்கு
கற்றுக் கொள்வோம். அன்னை மரியாள் தூய ஆவியால் நிழலிட்டது
போல் நமது குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆவியால்
நிரம்பிட வேண்டுமென்று முயற்சிப்போம்.
இன்றும் எத்தனையோ இறைவனில் விசுவாசமும் நம்பிக்கையும்
கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக இரவும் பகலும்
அயராது உழைத்து தங்களுடைய குழந்தைகள் அறிவிலும் ஞானத்திலும்
வளர வேண்டுமென்று விரும்புகின்றார்கள். மற்றும் சிலப்
பெற்றோர்கள் உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வளர்க்க விரும்பும்போது ஞானக்காரியங்களில் ஆர்வம் காட்டுவதில்லை
இதனால்தான் பிள்ளைகள் வாழ்க்கையில் திசைதிரும்பி
சொல்கின்றார்கள். இறைவாக்கினர் சிமியோனும், பானுவேலின் மகளாகிய
அன்னா என்பவரும் குழந்தை இயேசுவைப்பற்றி பாராட்டியபோது மகிழ்ந்திருப்பார்கள்தானே.
உமது மகன் பிற இனத்தாருக்கு ஒளியாக இருப்பார் என்று ஆசி
கூறிய போதும், அன்னா அவரைப் பார்த்ததும் இறைவனைப் போற்றிப்
புகழ்ந்தும், எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லாரிடமும்
அவர்களுடைய குழந்தையைப்பற்றி கூறியபோதும் எவ்வளவு ஆனந்தம்
கொண்டிருப்பார்கள். இன்று நம்முடைய குழந்தைகளைக் கண்டு இவ்வாறு
கூறுகின்றார்களா? சிந்திப்போம். உலகில்வாழும அனைத்து
பெற்றோர்களும் இறைநம்பிக்கையில் ஆழமாக வளர்ந்து அவர்களுடைய
இறைஅனுபவத்தை தங்களுடைய குழந்தைகளுடன் பகிர்ந்து அவர்களுடைய
வாழ்க்கையை இறைவார்த்தையில் கட்டி எழுப்ப அவர்களுக்கு என்றும்
உற்றத் துணையாக இருக்க வேண்டுமென்று ஞாயிறு திருப்பலியில்
சிறப்பாக மன்றாடுவோம். உலகில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும்
இறைவன் வாக்குறுதி தந்து, ஓர் அழியாத உடன்படிக்கையை
செய்துள்ளார். அவர் வாக்குமாறாத இறைவன் அவரை முழுமையாக நம்பி
விசுவசித்து அவர் பாதையில் பயணிக்கும்போது வெற்றி உண்டு என்பது
நிச்சயம். இன்று அழியாத உறவில் வாழக்கூடிய குடும்பங்கள் எத்தனையோ
பிளவுபட்டு வாழ்வதை அறிந்து இருக்கின்றோம். அவர்களுடைய
குடும்பத்தில் அன்பு அமைதி மகிழ்ச்சி ஒற்றுமை மீண்டும் பிறந்திட
அமைதியின் அரசரிடம் மன்றாடுவோம். அனைத்து இளம் உள்ளங்கள்
இறைஉறவிலும் இறைவார்த்தையிலும் தங்களுடைய வாழ்வை கட்டி எழுப்பி
இறைமகன் இயேசு வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கும்
மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தது போல் இவர்களும் வாழ்வதற்கு
உதவிக்கரம் கொடுப்போம்.
இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும்
மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். லூக்கா 2:52
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!