Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் மசியாஸ் ✠(St. John Macias)
  Limage contient peut-tre : 1 personne, gros plan  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 18)
✠ புனிதர் ஜான் மசியாஸ் ✠(St. John Macias)

 ✠
டோமினிக்கன் துறவி :
(Dominican Friar)

பிறப்பு : மார்ச் 2, 1585
ரிபேரா டெல் ஃப்ரெஸ்னோ, எக்ஸ்ட்ரீமடுரா, ஸ்பெயின்
(Ribera del Fresno, Extremadura, Spain)

இறப்பு : செப்டம்பர் 16, 1645
லிமா, பெரு, புதிய ஸ்பெயின்
(Lima, Viceroyalty of Peru, New Spain)

ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)

முக்திபேறு பட்டம் : கி.பி. 1837
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

புனிதர் பட்டம் : கி.பி. 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

முக்கிய திருத்தலம் :
ஜெபமாலை அன்னை பேராலயம், லிமா, பெரு
(Basilica of Our Lady of the Rosary, Lima, Peru)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 18

புனிதர் ஜான் மசியாஸ், 1620ம் ஆண்டு, பெரு (Peru) நாட்டில் சுவிசேஷ பணியாற்றிய ஒரு ஸ்பேனிஷ் டோமினிக்கன் துறவி (Spanish-born Dominican Friar) ஆவார். இவரது பிரதான உருவப்படம், லிமா (Lima) நகரிலுள்ள செபமாலை அன்னை பேராலய திருப்பலி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டு, பெரு (Peru) நாட்டின் லிமா (Lima) நகரிலுள்ள "சேன் லூயிஸ்" (San Luis) எனுமிடத்தில், இவரை கௌரவிக்கும் விதமாக, இவர் பெயரில் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

"ஜுவான் டி ஆர்க்கஸ் ஒய் சான்செஸ்" (Juan de Arcas y Snchez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1585ம் ஆண்டு, மார்ச் மாதம், 2ம் தேதியன்று பிறந்தார். இவரது பெற்றோரான "பெட்ரோ டி அர்காஸ்" (Pedro de Arcas) மற்றும் "ஜுவானா சேன்செஸ்" (Juana Snchez) இருவரும் ஏழை விவசாயிகளாவர். நாலு வயதான இவரும் இவரது சகோதரி மேரியும் சிறுவர்களாக இருக்கையிலேயே இவரது பெற்றோர் மரித்துப் போயினர். சிறுவர்கள் இருவரையும் இவர்களது தாய்மாமன் வளர்த்தார். அவரது கடைசி பெயர் "மசியாஸ்" (Macias) ஆகும். சிறுவர்கள் இருவருமே தங்களது கடைசி பெயராக இப்பெயரையே ஏற்றனர். இவர்களது தாய்மாமன், ஜுவானை கால்நடைகள் மேய்க்க பயிற்றுவித்தார். ஜுவான் செபமாலை செபிப்பதிலேயே நீண்ட மணிநேரங்களை செலவிட்டார்.

ஜுவான், ஒருமுறை தமக்கு பதினாறு வயதாகையில், பக்கத்து கிராமமொன்றில் திருப்பலி காண போயிருக்கையில், டோமினிக்கன் துறவி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. தாமும் ஒரு டோமினிக்கன் ஆவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில்கொள்ள தொடங்கினார். தமது வாழ்க்கையில் கடவுளுடைய சித்தத்தை இவர் தேட ஆரம்பித்தபோது, இவரது பாதுகாவல் புனிதரான தூய யோவான் அப்போஸ்தலரும், அன்னை கன்னி மரியாளும் அடிக்கடி இவருக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

25 வயதான மசியாஸ், பின்னர் ஒரு பணக்கார தொழிலதிபருடன் பணிபுரியத் தொடங்கினார். அவர் இவரை தென் அமெரிக்காவிற்கு பயணிக்க வாய்ப்பளித்தார். "கொலம்பியாவின்" (Colombia) "கார்டகெனா டி இண்டியாஸுக்கு" (Cartagena de Indias) முதன் முதலாக வந்து சேர்ந்த இவர், பின்னர், "ரெய்னோ டி நியுவா கிரணடா" (Reino de Nueva Granada), "பாஸ்டோ" (Pasto), "கியூட்டோ" (Quito), "எக்குவடோர்" (Ecuador) ஆகிய இடங்களுக்கும், இறுதியில் 1619ம் ஆண்டு, பெரு (Per) நாட்டின் லிமா (Lima) நகருக்கும் சென்றார். அங்கேயே தமது வாழ்நாளின் மீதமுள்ள காலத்தை கழித்தார்.

கி.பி. 1622ம் ஆண்டு, ஜனவரி மாதம், 23ம் நாளன்று, லிமா நகரின் "தூய மகதலின் மரியா" (St. Mary Magdalene) எனும் இடத்திலுள்ள டோமினிக்கன் துறவு இல்லத்தில் சேர்ந்தார். குருத்துவம் பெறாத பொதுநிலை சகோதரராக துறவு இல்லத்தில் சேர்ந்த ஜுவான், மறைபோதகம் செய்வதற்குப் பதிலாக, மடாலயத்தில் தேவையான உடல் உழைப்பைச் செய்யத் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து, 1623ம் ஆண்டு, ஜனவரி மாதம், 25ம் தேதியன்று, அவர் தனது இறுதி பிரமாணங்களை ஏற்றார். "தூய மகதலின் மரியா" துறவு மடத்தில் உதவி சுமை தூக்குபவராகவும் (Assistant Porter), வாயில் காப்பவராகவும் (Doorkeeper) பணி புரிந்த ஜுவான், மடத்தில் வாயிலிலேயே தங்கினார்.

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் அறிவுரை:
ஜுவான் மசியாஸ், அவரது வாழ்க்கையின் இரண்டு பெரும் விடயங்களுக்காக மிகவும் அறியப்பட்டிருந்தார். முதலாவதாக, அவர் செபமாலை செபிப்பதில் பிரியமானவராக இருந்தார். குழந்தைப் பருவத்திலேயே ஸ்பெயின் நாட்டிலிருந்தபோது தொடங்கிய இப்பழக்கம், அவரது தாய்மாமனின் கால்நடைகளை மேய்க்கும்போதும் தொடர்ந்தது. இரண்டாவதாக, ஏழைகளின்பால் அவர் காட்டிய பெருந்தன்மைக்காக அவர் அறியப்பட்டார். அவர்களில் 200 பேருக்கு அவர் தினந்தோறும் உணவளித்தார். தமது ஒரு சிறிய கழுதையை லிமா நகர் முழுதும் அனுப்பி இவ்வுதவிப் பணிகளை செய்தார். இந்த கழுதையின் மேலே, ஏழை எளியவர்க்கு உதவுமாறு வேண்டி ஒரு சிறு பதாகை கட்டப்பட்டிருக்கும். கழுதை, தனது பாதையை முழுமையாக அறிந்திருந்தால், தெருக்களில் பயணம் செய்து நகரத்தின் ஏழைகளுக்கு வேண்டிய பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பிவரும். அடிக்கடி, கழுதை சில இடங்களில் நின்று, சத்தமாக சத்தமிடுவதால், வீடுகளின் உள்ளேயிருக்கும் மக்கள் தங்கள் நன்கொடைகளை செய்ய வெளியே வருவார்கள்.

துறவு மடத்தில், மசியாஸின் வாழ்க்கையானது, உற்சாகமான ஜெபம், அடிக்கடி தவம் மற்றும் கருணைப் பணிகளுடன் நிறைந்திருந்தது. இவரது கடின மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக, அவர் விரைவில் நோயுற்றார். மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆயினும்கூட, அவர் துறவு மடத்தின் வாயில்களில் காத்திருந்த மற்ற நோயாளிகளின் கவனிப்பிற்கும் அவர் தொடர்ந்து புன்னகையுடன் கவனம் செலுத்தினார். யாசகர்களும், ஊனமுற்றோரும், மற்றும் பிற பின்தங்கிய நபர்களும் லிமா முழுவதும் காணப்படுகின்றனர். அவர்கள் ஆலோசனை மற்றும் ஆறுதலுக்காக மடாலய வாயில்களில் அவரிடம் திரண்டனர். ஏழைகள் உணவிற்காகவும், செல்வந்தர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுக்காகவும் அவரிடம் வந்தனர். இருப்பினும் மசியாஸ், மற்றவர்களுடன் உரையாடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பற்றி சிந்திக்காமல், அதிக நேரத்தை தனிமையில் செபத்திலும் தவத்திலும் செலவழிக்க விரும்பினார். அவர் இதனை தமது மடத்தின் மடாதிபதி அருட்தந்தை "ரமிரேஸ்" (Father Abbot Ramrez) என்பவரிடம் ஒப்புக்கொண்டார். மடாதிபதி "ரமிரேஸ்" இவரைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.:
"அவர் கீழ்ப்படிதலையும் அவர் ஏற்ற பிரமாணங்களையும் ஒருபோதாவது பின்பற்றவில்லை என்றால், யாரும் அவரது முகத்தைக் கூட பார்த்திருக்கப்போவதில்லை."

ஆனால் 20 வருடங்களுக்கும் மேலாக அவர் செய்துவந்த துறவு மடத்தின் சுமைதூக்கும் பணி மற்றும் அவரது உத்தியோகபூர்வ நிலைப்பாடானது, தனிமையில் இயங்கும் தன் இயல்பான மனோபாவங்களுக்கு எதிரானது எனினும், அவர் தமது கீழ்ப்படிதலையும் தமது சத்திய பிரமாணத்தை ஒழுங்கமைப்பதையும் தொடர்ந்தார். இதுவே அவரை மகிழ்ச்சி நிறைந்த நிறைவேற்றத்துடன் நிரப்பியது. அவர் 1645ம் ஆண்டு, இயற்கையான காரணங்களால் மரித்தார்.

 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா