Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கைல்ஸ் ✠(St. Giles)
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / SEP 01)
✠ புனிதர் கைல்ஸ் ✠(St. Giles)

 மடாதிபதி :(Abbot)

பிறப்பு : கி.பி. 650
ஏதென்ஸ், அச்செயா, கிழக்கு ரோமப் பேரரசு
(Athens, Achaea, Eastern Roman Empire)

இறப்பு : செப்டம்பர் 1, 710
செப்டிமேனியா, விஸிகோத் அரசு, (தென் ஃபிரான்ஸ்)
(Septimania, Kingdom of the Visigoths (Languedoc, Southern France))

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

முக்கிய திருத்தலங்கள் :
புனிதர் கைல்ஸ் துறவு மடம், ஃபிரான்ஸ்
புனிதர் கைல்ஸ் தேவாலயம், எடின்பர்க், ஸ்காட்லாந்து
(Abbey of Saint-Gilles (Saint-Gilles, France)
St. Giles' Cathedral (Edinburgh, Scotland)

பாதுகாவல் :
பிச்சைக்காரர்கள்; கொல்லர்கள்; மார்பக புற்றுநோய்; தாய்ப்பால் ஊட்டுதல்; புற்றுநோயாளிகள்; ஊனமுற்றோர்; எடின்பர்க் (ஸ்காட்லாந்து); வலிப்பு; காடுகள்; துறவிகள்; குதிரைகள்; தொழு நோயாளிகள்; மன நோய்; தீயவர்கள்; ஏழை மக்கள்; ஆட்டுக்கடா; தூண்டுகோல் தயாரிப்போர்; மலட்டுத்தன்மை.

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 1

புனிதர் கைல்ஸ், ஏதேன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கிரேக்க துறவியும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவரது சரிதம், "புரோவென்ஸ்"(Provence) மற்றும் "செப்டிமீனியா"(Septimania) பிராந்தியங்களை மையமாக கொண்டதாகும். "தூய கைல்ஸ்-டு-கர்ட்" (Saint-Gilles-du-Gard) எனுமிடத்தில் இவர் நிறுவிய துறவு மடம், இவரது சமாதியாகவும் பிரபல திருயாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகின்றது. இவர், பதினான்கு தூய (Fourteen Holy Helpers) உதவியாளர்களில் ஒருவராவார்.

கைல்ஸ் ஆரம்பத்தில் இன்றைய தென் ஃபிரான்ஸ் நாட்டின் "செப்டிமானியாவில்"(Septimania) "கர்ட்"நதி (River Gard) மற்றும் "ரோன்"(Rhône) நதிகளின் முகத்துவாரத்தில் வசித்தார். இவர், "ஏதென்ஸ்"(Athens) நாட்டின் அரசனான "தியோடோர்"(King Theodore) மற்றும் அரசி "பெலஜியா"(Queen Pelagia) ஆகியோரின் மகன் என்ற கூற்று முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கற்பனையே என்று ஆரம்பகால சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இறுதியில், "நிமேஸ்"(Nîmes) பிராந்தியத்தினருகேயுள்ள அடர்ந்த காடுகளின் உட்பகுதிகளுக்கு பின்வாங்கிச் சென்ற இவர், பல ஆண்டு காலம் அங்கேயே தீவிர தனிமையில் வாழ்ந்தார். அவருக்கு துணையாக ஒரு மான் மட்டுமே எப்போதும் உடன் இருந்தது என்பர். பலவேளைகளில், தமது பால் தந்து இவரது பசியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

கைல்ஸ், புலால் உணவு உண்பதை முற்றிலும் தவிர்த்திருந்தார். இந்த பின்வாங்கல், அரசனின் வேட்டைக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தஞ்சம் அடைந்த இடத்திலேயே அடைக்கலம் புகுந்தார். ஒருமுறை, இவரது மானை நோக்கி வீசப்பட்ட அம்பு ஒன்று, இவரை தைத்தது. இவர் காயமடைந்தார். இதனால், பின்னாளில் இவர் ஊனமுற்றோரின் பாதுகாவலர் ஆனார்.

வரலாற்று அமைப்பின் காரணமாக, "விசிகோத்"(Visigoth) அரசனான "வம்பா"(Wamba) ஒரு கபடமற்றவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அரசன் "வம்பா, துறவி கைல்சை அவரது பணிவின் காரணமாக, மிகவும் மரியாதையாக நடத்தினார். அரசன் வம்பா, இவருக்காக பள்ளத்தாக்கில் "புனிதர் கைல்ஸ் துறவு மடம்"(Saint-Gilles-du-Gard) எனும் துறவு மடத்தை கட்டி கொடுத்தார். கைல்ஸ், துறவு மடத்தில் "பெனடிக்டைன்"(Benedictine rule) ஒழுங்கு விதிகளை அமல்படுத்தினார்.

கைல்ஸ், தமது துறவு மடத்திலேயே, புனிதத்தன்மை மற்றும் அற்புதங்களின் மிக உயர்ந்த புகழுடன் 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரித்தார்.

இங்கிலாந்தில், பல பண்டைய தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகள் கைல்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. "புருஸ்ஸல்ஸ்"(Brussels) நகரின் ஒரு பகுதிக்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில், 14 பரிசுத்த உதவியாளர்கள் என அழைக்கப்படுபவர்களுள் ஒருவராக கைல்ஸ் உட்படுத்தப்பட்டுள்ளார். நோயிலிருந்து மீள்வதற்காகவும், மரண வேளையில் வல்லமைக்காகவும் இந்த பரிசுத்த உதவியாளர்களை நோக்கி செபிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஜேர்மனி, ஹங்கேரி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் "பரிசுத்த உதவியாளர்களுக்கான" பக்தி தீவிரமாக உள்ளது. அத்தகைய பக்தியால் அவரது புகழ் பரவியது. கைல்ஸ் விரைவிலேயே ஏழைகள் மற்றும் ஊனமுற்றோரின் பாதுகாவலரானார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா