Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 புனித எலிசபெத் ✠ (St. Elizabeth)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : நவம்பர் 05
✠ புனிதர் எலிசபெத் ✠(St. Elizabeth)

*நன்னெறியாளர் : (Righteous)

*பிறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எபிரோன் (ஜோஷுவா 21:11)

*இறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு (அநேகமாக எபிரோன்)

*ஏற்கும் சமயம் :ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*கீழ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை (Eastern Orthodox Church)

*ஓரியண்ட்டல் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை (Oriental Orthodox Church)

*ஆங்கிலிக்கன் திருச்சபை (Anglican Church)

*லூதரன் திருச்சபை (Lutheran Church)

*பாதுகாவல் : கர்ப்பிணிப் பெண்கள்

எலிசபெத், லூக்கா நற்செய்திகளின்படி செக்கரியாவின் மனைவியும், திருமுழுக்கு அருளப்பரின் தாயாரும் ஆவார்.

திருவிவிலிய சரிதம் :

லூக்கா நற்செய்திகளின்படி, எலிசபெத் "ஆரோனின்" மகளாவார். இவரும் இவரது கணவரான செக்கரியாவும் இறைவனின் பார்வையில் நன்னெறியாளர்களாய் வாழ்ந்தனர். ஆனால், குழந்தைகளில்லாதவர்களாய் வாழ்ந்தனர். செக்கரியா ஆலய பணிகளில் இருந்தபோது இறைதூதர் காபிரியல் அவர்முன்னே தோன்றி கூறியதாவது :

"செக்கரியாவே பயப்படாதே; உமது இறைவேண்டல்கள் கேட்கப்பட்டன; உமது மனைவி கருத்தாங்கி, ஒரு ஆண் மகவை ஈன்றெடுப்பாள்; நீர் அதற்கு யோவான் என்று பெயரிடுவீர்; அவன் உங்களுக்கு ஒரு சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய் இருப்பான்; அவர் இறைவனின் பார்வையில் பெரியவனாய் இருப்பதால் அநேகர் அவரது பிறப்பால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்; அவர் திராட்சை இரசமும் வேறு பானங்களையும் அருந்தார். அவர் பிறப்பின் முன்பே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்.  - லூக்கா 1:1315

தாமும், தமது மனைவி எலிசபெத்தும் முதிர் வயதினர் என்ற காரணத்தால் செக்கரியா, இறைதூதர் காபிரியேலின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கவில்லை. இதையறிந்த காபிரியேல் தூதர், செக்கரியாவை நோக்கி, "உமது விசுவாசமின்மையால் நீர் வாய் பேச இயலாத ஊமையாவீர்; எமது வாக்கு நிறைவேறும்வரை நீர் ஊமையாக இருப்பீர்" என்று இயம்பி மறைந்தார். - லூக்கா 1:16-23

மற்றும், லூக்கா நற்செய்திகள் (1:2425), (1:26-40), (1:4145), (1:46-55), (1:5664), (1:65-80) ஆகியவற்றில் எலிசபெத் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகள் (Apocrypha) :

எலிசபெத் மேலும் பல அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகளிலும் குறிப்பிடப்படுகிறார்.

இஸ்லாம் மத திருமறை நூலாகிய "திருக்குர்ஆனிலும்" இவர் கௌரவிக்கப்படுகிறார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா