![]() 1) புதிய ஏற்பாடு என்பது என்ன? இயேசுக்கிறீஸ்துவின் வருகைக்குப் பிறகு எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். 2) புதிய ஏற்பாட்டில் உள்ள மொத்த நூல்கள் எத்தனை? 27 3) புதிய ஏற்பாடு நூல்கள் யாவை? நற்செய்திகள் திருத்துர்தர் பணி (அப்போஸ்தலர் பணி) புனித சின்னப்பரின் 13 திருமுகங்கள் மற்ற சீடர்களின் 8 திருமுகங்கள் திரு வெளிப்பாடு 4) புதிய ஏற்பாடு எப்போது எழுதப்பட்டது? கி.பி 46க்கும் கி.பி 100க்கும் இடைக்காலங்களில் 5) இவ் 27 நூல்களையும் தொகுத்தளித்தவர் யார்? ஆபிரிக்க ஆயர்களின் உதவியினால் புனித அகுஸ்தினார் தொகுத்தளித்தார். 6) புதிய ஏற்பாடு ஏற்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள் யாவர்? * புனித மத்தேயு * புனித மாற்கு * புனித லுர்க்காஸ் * புனித அருளப்பர் (புனித யோவான்) * புனித சின்னப்பர் * புனித இராயப்பர் (பேதுரு) * புனித யாக்கோப்பு * புனித யூதா 7) புனித பவூலடியார் எழுதிய திருமுகங்கள் எத்தனை? அவை யாவை? 13 திருமுகங்கள். 1) உரோமையர் 2) 1கொரிந்தியர் 3) 2 கொரிந்தியர் 4) கலாத்தியர் 5) எபேசியர் 6) பிலிப்பியர் 7) கொலோசேயர் 8) பிலமோன் 9) 1தெசலோனிகர் 10)2 தெசலோனிகர் 11)1திமோத்தேயு 12)2திமோத்தேயு 13) தீத்து 8) புதுத் திருமுகங்கள் எனப்படுபவை யாவை? < எபிரேயர் < யாகப்பர் < 1பேதுறு < 2பேதுறு < 1யோவான் < 2யோவான் < 3யோவான் < யூதா 9) ஆக மொத்தம் 8 நூல்கள். |