Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் டுரீபியஸ் ✠(St. Turibius of Mogrovejo)
  Limage contient peut-tre : 1 personne, intrieur  
நினைவுத் திருநாள் : மார்ச் 23
✠ புனிதர் டுரீபியஸ் ✠(St. Turibius of Mogrovejo)
 
*பேராயர், மறைப்பணியாளர் : (Archbishop, Missionary)

*பிறப்பு : நவம்பர் 16, 1538
மயோர்கா டி கம்போஸ், லியோன் அரசு, ஸ்பெய்ன்
(Mayorga de Campos, Kingdom of León, Spain)

*இறப்பு : மார்ச் 23, 1606 (வயது 67)
ஸனா, வைசிராய் காலணியாதிக்க பெரு, பெரு
(Sana, Viceroyalty of Peru, Peru)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
குருபரிபாலன திருச்சபை (ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளிலுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை)
(Episcopal Church (Anglican Church in the US and Scotland)

*முக்திபேறு பட்டம் : ஜூலை 2, 1679
திருத்தந்தை பதினோராம் இன்னொசென்ட்
(Pope Innocent XI)

*புனிதர் பட்டம் : 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

பாதுகாவல் :
பெரு (Peru), லிமா (Lima), இலத்தின் அமெரிக்க ஆயர்கள் (Latin American bishops), பிறப்புரிமை (Native rights), சாரணர்கள் (Scouts), "வல்லடோலிட்" - வட ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு நகரம் (Valladolid, a city in northern Spain)

புனிதர் டுரீபியஸ், "ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர்பதவி" (Spanish Roman Catholic prelate) வகித்தவரும், 1579ம் ஆண்டுமுதல், 1606ம் ஆண்டில் தமது மரணம்வரை (சுமார் இருபத்தேழு வருடங்கள்) "லிமா" உயர்மறைமாவட்டத்தின் (Archbishop of Lima) பேராயராக பணியாற்றியவருமாவார். முதலில் மனிதநேயமும், சட்டமும் கற்ற இவர், பின்னர் பேராசிரியராகவும், அரசன் இரண்டாம் பிலிப்புவின் (King Philip II) உத்தரவின் பேரில் நீதி விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றினார். இவரது பக்தியும், கற்கும் திறனும் அரசனின் காதுகளைச் சென்றடைந்தது. அக்காலத்தில் இது வழக்கமில்லை எனினும், அரசுமுறை அனுபவமோ, நீதி விசாரணைகளில் முன் அனுபவமோ இல்லாத டுரீபியஸுக்கு இப்பதவி கிட்டியது. நீதி விசாரணைகளில் இவர் செய்திருந்த குறிப்பிடத்தக்க பணிகள் இவருக்கு அரசனிடம் புகழைத் தேடித் தந்தது. இதன் காரணமாக, அவ்வமயம் காலியாக இருந்த லிமா உயர்மறைமாவட்ட பேராயர் பதவியில் இவரை நியமித்தார். தமது எதிர்ப்பையும் மீறி, திருத்தந்தை அதனை அங்கீகரித்தார்.

"டொரீபியோ அல்ஃபோன்சோ டி மொக்ரோவேஜோ" (Toribio Alfonso de Mogrovejo) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் நாட்டின் உயர் குடியில் பிறந்தவர் ஆவார். சிறந்த கல்விமானான டுரீபியஸ், புகழ் பெற்ற 'சலமான்கா' நகரின் பல்கலை கழகத்தின் (University of Salamanca) சட்ட பேராசிரியரும் ஆவார்.

1578ம் ஆண்டு, கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு பெற்ற இவர், பெரு நகருக்கு அனுப்பப்பட்டார். அரசன் இரண்டாம் பிலிப்புவால் (King Philip II) "லிமா" நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1579ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகொரி (Pope Gregory XIII) அதற்கு அங்கீகாரம் அளித்தார். 580ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், "செவில்" (Seville) உயர் மறைமாவட்ட பேராயர் "கிறிஸ்டோபல் ரோஜஸ் செண்டோவல்" (Cristóbal Rojas Sandoval, Archbishop of Seville) அவர்களால் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

970 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிமா நகருக்கு நடை பயணமாக சென்றபடி தமது அருட் பணியை தொடங்கினார். கவர்ந்திழுக்கும் நாவன்மை கொண்ட போதகரான டுரீபியஸ், எண்ணற்ற பூர்வீக குடியினருக்கு திருமுழுக்கு அளித்ததுடன், அவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனமும் வழங்கினார். "லிமா நகர புனிதர் ரோஸ்" (St. Rose of Lima) மற்றும் "புனிதர் மார்ட்டின்" (St. Martin de Porres.) உள்ளிட்டோர் இவரால் திருமுழுக்கு பெற்று உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றவர்களே.

இவர் சாலைகள், உறைவிட பள்ளிகள், பல பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் கிறிஸ்தவ தொழுகைக் கூடங்களைக் கட்டினார். 1591ம் ஆண்டு, மேற்கு துருவத்தில் (Western Hemisphere) முதல் குருத்துவ பள்ளியை (First Seminary) நிறுவினார். 1604ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இரண்டாம் நாளன்று, "மூன்றாம் லிமா பேராலயத்தின்" (Third Lima Cathedral) முதல் பகுதியை திறந்து வைத்தார்.

டுரீபியஸ், தமது பணி காலத்தில் பதின்மூன்று பேராய மாநாடுகளைக் (Diocesan Synods) கூட்டினார். மூன்றுமுறை மாகாண சபைகளுக்கான (Provincial Councils) கூட்டங்களைக் கூட்டினார். இவரது காலத்தில், லிமா (Lima) மகத்தான உயர் மறைமாவட்டமாக (Immense Archdiocese) மாறியது.

மக்களின் குடியுரிமைகளுக்காக, பெரு நாட்டு ஆட்சியாளர்களுக்கெதிராக போராடிய இவர், அம்மக்களால் தங்களது பரிந்து போராடும் தலைவராக பார்க்கப்பட்டார். அங்குள்ள பேச்சு வழக்கினைக் கற்றுக்கொண்ட இவர், எண்ணற்ற பூர்வீக குடிகளை கிறிஸ்தவர்களாக மாற்றினார்.

தாம் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னமே இவர் தமது இறப்பின் நாளையும் நேரத்தையும் கணித்தார். இருப்பினும், தமது இறை பணியை விடாது செய்து வந்தார். "பகஸ்மயோ" (Pacasmayo) என்ற இடத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், தமது பணியைத் தொடர்ந்தபடியே, மிகவும் மோசமான நிலையில் "ஸனா" (Sana) வந்தடைந்தார். தாம் கணித்தபடியே 1606ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் நாளன்று, மரணமடைந்தார்.

டுரீபியஸ், தமது பணி காலத்தில் எண்ணற்ற குருக்களுக்கும் ஆயர்களுக்கும் பேராயர்களுக்கும் அருட்பொழிவு செய்வித்தார்.



தூய தூரியியுஸ் (மார்ச் 23)

ஆண்டவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (லூக் 4: 18-19)

வாழ்க்கை வரலாறு

தூரியியுஸ், 1538 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 16 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள மயோர்க்கா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். அப்படியிருந்தாலும் இவர் சிறுவயதிலே மிகவும் பக்தியாக வளர்ந்து வந்தார். குறிப்பாக மரியன்னையின் மீது எப்போதும் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார். அது மட்டுமல்லாமல், பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தன்னுடைய மதிய உணவை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து தான் பசியோடு இருந்தார்.

தொடக்கக் கல்வியை வல்லாடோலிட் பள்ளிக்கூடத்தில் கற்ற தூரியியுஸ், உயர்கல்வியை சல்மான்கா பல்கலைக்கழகத்தில் கற்றார் அங்கு கற்ற கல்வியின் பயனாக அவர் வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞராக உயர்ந்த பின்பு தூரியியுஸ் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்துவந்தார். தூரியியுசிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு மன்னர் இரண்டாம் பிலிப் அவரை க்ரானடா பகுதியில் நீதிபதியாக நியமித்தார். நீதிபதியாக உயர்ந்த பின்பும் தூரியியுஸ் தன்னுடைய பணியினைச் செவ்வனே செய்து வந்தார்.

இதற்கிடையில் தூரியியுசுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அதற்கான கல்வியைக் கற்று 1578 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாக மாறிய பின்பு, இவர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்துவிட்டு இவரை இரண்டு ஆண்டுகள் கழித்து பெருவின் ஆயராக உயர்த்தினார்கள். எனவே, இவர் தன்னுடைய சொந்த மண்ணைவிட்டு பெருவிற்கு வந்தார். பெருவிற்கு வந்த சமயத்தில் மக்கள் கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே இவர் முழு மூச்சுடன் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய 50 ஆயிரம் மைல்களுக்கு கால்நடையாகவே பயணம் செய்து ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இவர் ஆற்றிய நற்செய்திப் பணியின் வழியாக நிறையப் பேர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். தூய லீமா ரோஸ், தூய மார்டின் தி போரஸ் போன்றோர் எல்லாம் இவர் ஆற்றிய நற்செய்திப் பணியினால் கிறிஸ்துவ மறையைத் தழுவி புனிதர்கள் ஆனார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தூரியியுசின் பணிகள் இதோடு நின்றுவிடவில்லை, நிறையப் பள்ளிக்கூடங்களையும் மருத்துவ மனைகளையும் ஏன் குருமடத்தையும் கட்டி எழுப்பினார். இதனால் ஏரளாமான மக்கள் பயன் அடைந்தார்கள்.

தூரியியுஸ் இடையராது பணிகள் செய்து வந்ததால், அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே, அவர் 1606 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 23 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு, திருத்தந்தை 13 ஆம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பகிர்ந்துண்டு வாழ்தல்

தூய தூரியியுசிடமிருந்து நாம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இருந்தாலும் இவர் பகிர்ந்து வாழ்தலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். தன்னுடைய மாணவப் பருவத்தில் தன்னுடைய உணவினை ஏழை மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, பகிர்ந்து வாழவேண்டும் என்னும் நெறியை நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகின்றார். நாம் நம்மிடமிருகின்ற உணவை, உடைமைகளை இன்ன பிறதை பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று. (மத் 14: 16). ஆம், தேவையில், பசியோடு இருக்கின்ற மக்களுக்கு உணவு கொடுப்பது நம்முடைய கடமையாகும்.

ஒரு சமயம் கையில் காசில்லாமல் ஓரிரு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் அலைந்து திரிந்த ஒரு பெரியவருக்கு ஐம்பது ருபாய் கிடைத்தது (சாலையில் கீழே கிடந்தது). அதை எடுத்துக்கொண்டு, கடையில் கொடுத்து, உணவு வாங்கி, அதனை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். அந்நேரம் பார்த்து மூன்று சிறுவர்கள் அவரிடத்தில், "ஐயா! நாங்கள் சாப்பிட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, எங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்" என்றார்கள். அவர் வேறொன்றும் பேசாமல், தன்னிடம் இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்து அவர்களிடத்தில் கொடுத்தார். அவர்களும் மிகவும் நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்டு உண்டார்கள். பின்னர் அவர்கள் போகின்றபோது ஒரு பழங்காலத்து நாணயத்தைப் அன்பளிப்பாக அவரிடம் கொடுத்துச் சென்றார்கள். பெரியவர் அந்த பழங்காலத்து நாணயத்தை அகழ்வாராய்ச்சி துறையினரிடம் கொடுக்க ,அவர்கள் அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை சன்மானமாகக் கொடுத்தார்கள். பெரியவர் அதைப் பெற்றுக்கொண்டு மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

பெரியவர் தன்னிடம் இருந்த உணவை சிறுவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதனால் அவர் வேறொரு விதத்தில் ஆசிர்வதிக்கப்பட்டார். நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழும்போது நாமும் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, தூய தூரியியுசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- Fr. Maria Antonyraj, Palayamkottai.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா