Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் தியோஃபிலஸ் ✠(St. Theophilus of Corte)
  Limage contient peut-tre : 1 personne, debout  
நினைவுத் திருநாள் : (மே/ May 19)
✠ புனிதர் தியோஃபிலஸ் ✠(St. Theophilus of Corte)

 *குரு, நிறுவனர் :(Priest and Founder)

*பிறப்பு : அக்டோபர் 30, 1676
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

*இறப்பு : ஜூன் 17, 1740 (வயது 63)
கோர்டே, கோர்சிகா, ஜெனோவா குடியரசு
(Corte, Corsica, Republic of Genoa)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

*முக்திபேறு பட்டம் : ஜனவரி 19, 1896
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

*புனிதர் பட்டம் : ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

*நினைவுத் திருவிழா : மே 19

புனிதர் தியோஃபிலஸ், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும், ஃபிரான்சிஸ்கன் (Order of Friars Minor) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட (Professed member) உறுப்பினருமாவார்.

மறையுரைகளாற்றுவதிலும், மறை போதனையிலும் பிரசித்தி பெற்ற இவர், வட இத்தாலிய நகரங்களிலும், தாம் பிறந்த "கோர்சிகா தீவு" (Corsica island) முழுவதும் ஃபிரான்சிஸ்கன் (Franciscans) இல்லங்களை நிறுவும் முயற்சிகளில் சீர்திருத்தவாதியாக செயல்பட்டார்.

தமது மகிழ்ச்சியான நடவடிக்கைகளுக்காக அறியப்பட்ட இவர், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராயுமிருந்தார். அதே நேரத்தில் தனிமை, அமைதியான, மற்றும் அவரது படாடோபமற்ற அர்ப்பணிப்புக்காகவும் அவர் அறியப்பட்டார்.

"பியாஜியோ அர்ரிகி" (Biagio Arrighi) எனும் இயற்பெயர் கொண்ட இவர், 1676ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 30ம் தேதியன்று, கோர்சிகா தீவுகளில் (Corsica island) பிறந்தார். கோர்சிகா தீவின் பிரபுக்களில் ஒருவரான "ஜியோவன்னி அன்டோனியோ" (Giovanni Antonio) இவரது தந்தையார் ஆவார். இவரது தாயாரின் பெயர், "மடலினா" (Maddalena) ஆகும்.

ஃபிரான்சிஸ்கன் துறவியரிடம் கல்வி கற்ற இவர், 1693ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 21ம் நாளன்று அச்சபையிலேயே இணைந்து, தியோஃபிலஸ் எனும் ஆன்மீக பெயரை ஏற்றுக்கொண்டார்.

தனிமையையும் அமைதியையும் மிகவும் நேசித்த அவர், அதையே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான மென்மையான முறையாக கண்டார். தன்னுடைய சக ஃபிரான்சிஸ்கன் துறவியரிடமும் கடவுளுடைய நற்குணத்தைப் பிரதிபலிப்பதற்கான வழிமுறையாக இதனையே வலியுறுத்தினார்.

ரோம் நகரில் தமது இறையியல் படிப்புகளை தனித்தன்மையுடன் நிறைவு செய்த அவர், நேபிள்ஸ் (Naples) நகரிலும் தனது இறையியல் படிப்பைத் தொடங்கினார். 1694ம் ஆண்டு, "சலேர்னோ" (Salerno) நகரில் தமது உறுதிமொழிகளை ஏற்ற தியோபிலஸ், 1700ம் ஆண்டு, நவம்பர் மாதம், 30ம் நாளன்று, இத்தாலியின் நேப்பிள்ஸ் (Naples) நகரிலுள்ள "தூய மரியா லா நோவா" பள்ளியில் (Convent of Santa Maria La Nova) குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்றதும், "சுபியாகோ" (Subiaco) நகரின் அருகேயுள்ள "சிவிடெல்லா" (Civitella) எனுமிடத்திலுள்ள ஒரு புராதன பள்ளியை சீரமைப்பதற்கான அனுமதியை தமது தலைமை துறவியரிடம் கெஞ்சி பெற்றார். இத்தாலியின் டுஸ்கான் பிராந்தியம் (Tuscan Region) மற்றும் கோர்சிகா (Corscia) தீவுகளில் "ஸுவானி" (Zuani) மற்றும் "ஃபியூசெச்சியோ" (Fucecchio) ஆகிய இடங்களில், தமது சபைக்கான இல்லங்களை நிறுவினார்.

அவர் எப்போதும் சற்று நோயாக இருந்தபோதிலும், கடவுளுடைய மக்களின் தேவைகளுக்காக நோயாளிகளுக்காகவும், கல்லறைகளிலும் தாராளமானவராக விளங்கினார். உழைத்துக் களைத்துப்போன தியோபிலஸ், 1740ம் ஆண்டு, ஜூன் மாதம், 17ம் தேதியன்று, தமது 63 வயதில் மரித்தார். 1896ம் ஆண்டு முக்திபேறு பெற்ற தியோபிலஸ், 1930ம் ஆண்டு, புனிதர் பட்டம் பெற்றார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா