Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜூலியா ✠(St. Julia of Corsica)
  Limage contient peut-tre : 1 personne, debout et intrieur  
நினைவுத் திருநாள் : (மே/ May 23)
✠ புனிதர் ஜூலியா ✠(St. Julia of Corsica)

* கன்னியர்/ மறைசாட்சி :
(Virgin, Martyr)

*பிறப்பு : ஜூலை 25
கர்தாஜ், மேற்கத்திய ரோமப் பேரரசு
(Carthage, Western Roman Empire)

*இறப்பு : கி. பி. 5ம் நூற்றாண்டு (439)
கோர்ஸிகா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Corsica, Western Roman Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

*புனிதர் பட்டம் : ஃபெப்ரவரி 14

*நினைவுத் திருவிழா : மே 23

*பாதுகாவல் :
கோர்ஸிகா (Corsica), லிவோர்னோ (Livorno),
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் (Torture victims)
கைகள் மற்றும் கால்களின் நோய்க்குறிகள் (Pathologies of the hands and the feet)

புனிதர் "கோர்சிகாவின் ஜூலியா" (Saint Julia of Corsica) என்றும், புனிதர் "கார்தாஜ்ன் ஜூலியா" (Saint Julia of Carthage) என்றும், புனிதர் நோன்ஸாவின் ஜூலியா (Saint Julia of Nonza) என்றும் அறியப்படும் புனிதர் ஜூலியா, கன்னியரும், மறைசாட்சியும் ஆவார். இவரும் புனிதர் "டெவோட்டாவும் (Saint Devota) கோர்ஸிகாவின் (Corsica) பாதுகாவலர்களாக திருச்சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரோமானிய ஆட்சியின் கீழே "கோர்சிகா" கிறிஸ்தவ மறையை தழுவியதன் முன்னர் (Pre-Christian Corsica under Roman rule) நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது இவர்கள் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாக சரித்திரம் இயம்புகின்றது.

"விக்டர் விட்டேன்சிஸ்" (Victor Vitensis) எனும் ஒரு ஆபிரிக்க ஆயர் (Bishop of Africa), ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆபிரிக்க பிராந்திய நாடான "வண்டல்ஸ்" (Vandals) நாட்டின் அரசர்கள் "ஜீஸெரிக்" (Geiserici) மற்றும் "ஹனுரிக்" (Hunirici) ஆகியோரின் காலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் பற்றிய சரித்திர பதிவுகளை எழுதினார்.

கி,பி, 429ம் ஆண்டு, அரசன் "ஜீஸெரிக்" (Geiseric) சுமார் 80,000 பழங்குடியினருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆபிரிக்கா நோக்கி படையெடுத்தான். கி.பி. சுமார் 439ம் ஆண்டு, "கார்தாஜ்" (Carthage) நாட்டை கைப்பற்றினான். அதன் பின்னர் அவன் அங்குள்ள கிறிஸ்தவ மக்களை "ஆரியனிஸ" (Arianism) மதத்திற்கு மாற்ற எடுத்துக்கொண்ட கொடுங்கோல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அப்போதிருந்த கிறிஸ்தவ ஆயர்கள் எவராலும் மறக்கவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாததாகும்.

ஜூலியா, ஒரு "கார்தாஜ்" (Carthaginian girl) பெண்ணாவார். அவர் "யூசேபியஸ்" (Eusebius) என்பவனால் அவரது நகரிலிருந்து பிடித்து கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரை அடிமையாக விற்றான். இதுபோலவே கீழ்படியாத கிறிஸ்தவர்கள் பலரை அவர்கள் அகற்றினார்கள். "யூசேபியஸ்" (Eusebius) ஒரு பாலஸ்தீனிய நாட்டின் சிரிய (Citizen of Syria in Palestine) பிரஜை ஆவான். "கேப் கோர்ஸ்" (Cap Corse) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் போதையின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். அவர்களின் பாவச் செயல்களுக்காக ஜூலியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கப்பலிலுள்ள ஒரு பெண், பாகனிய கடவுளர்களை பூஜிக்க மறுப்பதாகவும், ஏளனம் செய்வதாகவும் "ஃபெலிக்ஸ் சாக்சோ" (Felix Saxo) என்பவனிடம் கூறினர். ஃபெலிக்ஸ், அப்பெண்ணை நமது வழிக்கு கொண்டுவாருங்கள்; அல்லது அவளை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று யூசேபியஸிடம் சொன்னான். யூசேபியஸோ, நான் "எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்" என்றான்.

"ஃபெலிக்ஸ் சாக்சோ" (Felix Saxo) நயமாகவும் பயமுறுத்தியும் முயன்று பார்த்தான். ஆனால், ஜூலியா கிறிஸ்துவின் விசுவாசத்தை கைவிட மறுத்துவிட்டார். ஆகவே, சிறிதும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு ஜூலியா மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா