Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஹிலாரி ✠(St. Hilary of Arles)
   
நினைவுத் திருநாள் : (மே/ May 5)
புனிதர் ஹிலாரி ✠(St. Hilary of Arles)

ஆர்ல்ஸ் ஆயர் : (Bishop of Arles)

பிறப்பு : கி.பி. 403

இறப்பு : கி.பி. 449

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள் : மே 5

புனிதர் ஹிலாரி, தென் ஃபிரான்ஸ் (Southern France) நாட்டின் ஆர்ல்ஸ் (Arles) மறைமாவட்ட ஆயரும், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளால் புனிதராக அங்கீகரிக்கப்பட்டவருமாவார். இவரது நினைவுத் திருநாள் மே மாதம் ஐந்தாம் நாளன்று நினைவுகூறப்படுகின்றது.

ஹிலாரி, தமது பதினேழு வயதில், "செயின்ட் ஹோனரட்" (Island of Saint-Honorat) தீவிலுள்ள "சிஸ்டேர்சியன்" துறவறமான (Cistercian monastery) "லெரின்ஸ்" (Lrins Abbey) மடத்தில் சேர்ந்தார். அக்காலத்தில், அவரது உறவினரான "புனிதர் ஹோனரடஸ்" (Saint Honoratus of Arles) "லெரின்ஸ்" மடத்தின் மடாதிபதியாக இருந்தார். அவரே ஆர்ல்ஸ் மறைமாவட்டத்தின் ஆதிகால ஆயராகவும் இருந்தார். ஹிலாரி இதற்கு முன்னதாக "டிஜோனில்" (Dijon) வாழ்ந்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள், அவர் "பெல்கிக்கா" (Belgica) அல்லது "ப்ரோவென்ஸ்" (Provence) நகரிலிருந்து வந்ததாக நம்புகின்றனர்.

இவர், மேற்கத்திய ரோமப் பேரரசின் அரசியல்வாதியான "ஹிலாரியஸ்" (Hilarius) என்பவரது மகன் அல்லது உறவினர் என்று நம்பப்படுகின்றார். ஹிலாரியஸ், கி.பி. 396ம் ஆண்டில் "கௌல்" (Gaul) நகரிலும், கி.பி. 408ம் ஆண்டில் ரோம் நகரிலும் தலைமை அதிகாரியாக (Prefect) இருந்துள்ளார்.

ஹிலாரி, தமது உறவினரான ஆர்ல்ஸ் ஆயர், "புனிதர் ஹோனரடஸ்" என்பவருக்குப் பின்னர் 429ம் ஆண்டு, ஆர்ல்ஸ் ஆயராக பதவியேற்றார். இவர், புனிதர் அகுஸ்தினாரை (St Augustine) முன்னுதாரணமாக ஏற்று, அவரது சபைக் குருமார்களை ஒரு "சபைக்குள்" ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது; அவர்கள் கடுமையான சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பயிற்சிகளுக்கு தங்கள் நேரத்தை அர்ப்பணித்தனர். ஹிலாரி, தமது உழைப்பு முழுவதையும் ஏழை மக்களுக்கே பகிர்ந்தளித்தார்.

கைதிகளை மீட்கும் பொருட்டு, இவர் ஆலயங்களின் பரிசுத்த பாத்திரங்களை (Sacred vessels) விற்றார். அவர் ஒரு அற்புதமான பேச்சாளர் (Orator) ஆனார். அவர் பயணம் செய்த எல்லா இடங்களுக்கும் நடை பயணமாகவே பயணித்தார். எப்போதும் எளிய ஆடை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அது பிரகாசமான பக்கமாகும். ஹிலாரி பிற பிஷப்புகளுடன் தனது உறவுகளில் சிக்கலை எதிர்கொண்டார். அவரிடம் சில அதிகார வரம்பு இருந்தது. அவர், பாரபட்சம் பாராது, ஒரு ஆயரை பதவியை விட்டு விலக்கினார். நோய்வாய்ப்பட்டிருந்த ஆயர் ஒருவருக்குப் பதிலாக, வேறு ஒருவரை ஆயராக தேர்வு செய்தார். ஆனால், விடயம் சிக்கலானது. நோய்வாய்ப்பட்ட ஆயர் மரிக்கவில்லை. திருத்தந்தை புனிதர் பெரிய லியோ (Pope Saint Leo the Great), ஹிலாரியை ஒரு ஆயராகவே வைத்திருந்தார். ஆனால் அவருடைய சில அதிகாரங்களைக் கைப்பற்றினார்.

ஹிலாரி, கி.பி. 449ம் ஆண்டு மரித்தார். மிகவும் சரியான நேரத்தில், ஒரு ஆயர் எப்படி இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட திறமைசாலியாகவும் பக்திமானாகவும் ஹிலாரி இருந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா