Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சிரில் ✠(St. Cyril of Alexandria)
   
நினைவுத் திருநாள் : (ஜூன் / Juin 27)
✠ புனிதர் சிரில் ✠(St. Cyril of Alexandria)

 
திருச்சபையின் தூண், ஆயர், மறைவல்லுநர் :
(The Pillar of Faith; Bishop and Doctor of the Church)

பிறப்பு : கி.பி. 376

இறப்பு : கி.பி. 444

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglicanism)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)
காப்டிக் திருச்சபை
(Coptic Church)

நினைவுத் திருவிழா : ஜூன் 27

சித்தரிக்கப்படும் வகை :
நற்செய்திகளோடு ஆயர் உடையில்
ஆசீர் வழங்குவது போல

பாதுகாவல் : அலெக்சாண்டிரியா (Alexandria)

புனிதர் சிரில், புனிதர் "தியோபிலஸ்" (Theophilus) கி.பி. 412ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 15ம் நாளன்று, மரணமடைந்ததன் பிறகு, அதே வருடம், அக்டோபர் மாதம், 18ம் தேதியன்று, அலெக்சாண்டிரியா நகரத்தின் ஆயரானார். இவரது பதவி காலத்தில், ரோமப் பேரரசில் இந்நகரம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. ரோம பேரரசுக்குள்ளே இந்நகர் அதன் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்த போது அவர் ஆயராக ஆட்சியில் அமர்ந்து இருந்தார். நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளின் கிறிஸ்தவ சர்ச்சைகளில் முன்னணி கதாபாத்திரமாக இருந்தார்.

கிபி 431ம் ஆண்டு கூடிய "எபேசஸ்" பொதுச்சங்கத்தில் (Council of Ephesus) இவர் முக்கிய பங்கு வகித்தார். இச்சங்கம், கிறிஸ்து ஒருவரே இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் கொண்டவர் எனவும் மரியாள், கடவுளும் மனிதருமான இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் ஆவார் எனவும் அறிக்கையிட்டது. "இயேசுவில் கடவுள் என்றும் மனிதர் என்றும் இருவர் உண்டு" எனப்படும் "நெஸ்டோரியஸ்" (Nestorius) என்னும் "கான்ஸ்டன்டினோபல்" ஆயரின் (Patriarch of Constantinople) கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. இதன் விளைவாக "நெஸ்டோரியஸ்" தனது ஆயர் பதவியை இழந்தார். இச்சங்கத்தில் இவர் ஆற்றிய பணிகளால், கிறிஸ்தவர்களிடையே இவருக்கு திருச்சபையின் தூண் எனவும், திருச்சபைத் தந்தையர்களின் முத்திரை எனவும் பெயர் வழங்கப்படலாயிற்று.

புனிதர் சிரில், திருச்சபைத் தந்தையர்களில் (Church Fathers) ஒருவராகவும், திருச்சபையின் மறைவல்லுநர்களுல் (Doctors of the Church) ஒருவராகவும் கருதப்படுகின்றார்.

இவரின் முன் கோபம், இவரின் எதிரிகள் இவரைச் சாட காரணமாயிருந்தது. ரோமப் பேரரசன் (Roman Emperor) "இரண்டாம் தியோடோசியஸ்" (Theodosius II), இவரை தலைக் கனம் பிடித்தவர் என சாடினான்.

எதிர்-திருத்தந்தை "நோவேஷியனி'ன்" (Novatians) ஆதரவாளர்களையும், யூதர்களையும் அலெக்சாந்திரியா நகரில் இருந்து வெளியேற்றியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு எனவும் கூறுவர். ஆனால் இக்கூற்றுக்கு தகுந்த சான்று இல்லாததால் இதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

புனிதர்கள் என்று கூறினால் குறையே இல்லாதவர்கள் என்று பொருளில்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. இவர் கோபக்காரர். பொறுமை இல்லாதவர். சற்று விவேகம் அற்றவர். இவர் நொவேஷியன் (Novesien) என்று பெயர் கொண்ட ஆலயங்களை இழுத்து மூடினார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் மீது பழி சுமத்தினார். யூதர்களின் செல்வங்களை பறித்தார். அவர்களை அலெக்சாண்டிரியா நகரினின்று வெளியேற்றினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா