Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பீட்டர் டமியான் ✠ (St. Peter Damian)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 21
   ✠ புனிதர் பீட்டர் டமியான் ✠ (St. Peter Damian)

*கர்தினால்-ஆயர், மறைவல்லுநர் :
(Cardinal, Doctor of the Church)

*பிறப்பு : கி.பி. 1007
ரவேன்னா, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமாக்னா பிராந்தியம்
(Ravenna, Emilia-Romagna region of Northern Italy)

*இறப்பு : ஃபெப்ரவரி 22, 1072
ஃபயேன்சா, ரவேன்னா, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமாக்னா பிராந்தியம்
(Faenza, Province of Ravenna, Emilia-Romagna region of Northern Italy)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

*சித்தரிக்கப்படும் வகை : கர்தினால்களின் உடையில்

புனிதர் பீட்டர் டமியான், ஒரு சீர்திருத்த டொமினிக்கன் துறவியும், திருத்தந்தை ஒன்பதாம் லியோ (Pope Leo IX) காலத்தில் ரோமின் புறநகரின் "ஓஸ்தி" (Ostia) மறைமாவட்ட கர்தினால்-ஆயருமாவார். "டான்டே" (Dante) எனும் பிரபல இத்தாலிய கவிஞர், இவரை "புனிதர் அசிசியின் பிரான்சிஸுக்கு" (Saint Francis of Assisi) முன்னோடியாகக் கருதி தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார். இவர், 1823ம் ஆண்டு, திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார்.

கி.பி. சுமார் 1007ம் ஆண்டு, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமாக்னா பிராந்தியத்திலுள்ள ரவென்னா நகரிலுள்ள பிரபல ஆனால் ஏழைக் குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்த இவர், சிறுவயதிலேயே அனாதரவானார். ஆரம்பத்தில் இவரை தத்தெடுத்த சகோதரர்களில் ஒருவரால் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டார்.

சொந்த சகோதரர் புறக்கணித்ததால், ஏழ்மையிலிருந்து தப்பி, ரவென்னா (Archpriest of Ravenna) மறைமாவட்டத்தின் குருவாக இருந்த தமது இன்னொரு சகோதரரான "டமியானஸ்" (Damianus) என்பவரிடம் அடைக்கலம் புகுந்தார். அவர் பீட்டர் டமியானை நல்ல கல்விக் கூடங்களுக்கு அனுப்பி கல்வி கற்க செய்தார். அதன் காரணமாக, பீட்டர் ஒரு பேராசிரியராக உயர்ந்தார். அவர் மிகவும் ஒழுக்க சீலராக இருந்தார். கடுமையான உழைப்புடன், ஜெபிப்பதற்கென்று பல மணிநேரம் செலவிட்டார்.

விரைவிலேயே அவர் பேராசிரியர் பணியை விட முடிவு செய்ததுடன், அவேல்லானா'விலுள்ள ஃபோன்டே எனும் இடத்திலுள்ள புனித ரோமுவால்டின் வின் ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையில் (Benedictines of the reform of St. Romuald at Fonte Avellana) சேர்ந்து முழுநேர ஜெப வாழ்வில் இணைய முடிவு செய்தார். அங்கே இரண்டு துறவியர் இருந்தனர். பீட்டர் உறக்கத்தை குறைத்துக் கொண்டு, அதிக நேரம் ஜெபிப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். அதன் காரணமாக, அவர் தூக்கமின்மை (Insomnia) நோயால் பாதிக்கப்பட்டார். அவர், தமது ஆரோக்கியத்திற்காக, ஜெபிக்காத வேளைகளில் திருவிவிலியம் படிப்பதில் செலவிட்டார்.

ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையின் மடாதிபதி தமது மரணத்தின்போது, பீட்டரை தமது மடத்துக்கு தலைவராக நியமித்தார். பீட்டர், மேலும் ஐந்து துறவியரை அங்கு சேர்த்தார். அவர், தமது சகோதரர்களையும் தனிமை மற்றும் ஜெப வாழ்வுக்கு ஊக்கப்படுத்தினார்.

ரோமிலுள்ள இரண்டு ஆசிரமங்களுக்கும் அரசு அலுவகங்களுக்குமிடையே இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.

அவர் கடுமையாக உழைத்து, "தன் சுய நலனுக்காக கிறிஸ்தவ ஆலயங்களின் புனிதப் பொருள்களைப் பயன்படுத்தும்" (Simony) முறையை ஒழித்தார். தமது கத்தோலிக்க குருக்கள் கடின பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க ஊக்குவித்தார். மறைமாவட்ட குருமார்கள் ஒன்றாக வசிக்கவும், ஜெபம் மற்றும் மத காரியங்களில் ஈடுபடவும் வற்புறுத்தினார். பழமையான ஒழுக்கத்தை மீட்டார். வறுமை மீறல், தேவையற்ற பயணங்கள், மற்றும் சொகுசு வாழ்க்கை முறையைக் கண்டித்தார்.

அவர், பெசான்கான் ஆயருக்கு (Bishop of Besancon) எழுதிய ஒரு கடிதத்தில், அங்குள்ள தேவாலய அலுவலகத்தில் இறை பாடல் பாடுபவர்கள், பாடல் பாடுகையில் அமர்ந்திருந்ததாக குறை கூறினார்.

அவர், பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் சுமார் 170 கடிதங்கள் நடப்பிலுள்ளன. நம்மிடையே இன்றும் அவர் எழுதிய சுமார் 53 மத சொற்பொழிவுகள், ஏழு உயிர்ப்புகள் மற்றும் சுயசரிதங்கள் உள்ளன.

அவர் தமது எழுத்துக்களில் கோட்பாடுகளைவிட, கதைகள் மற்றும் மேற்கோள்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். அவர் எழுதிய வழிப்பாட்டு அலுவலக சந்தங்கள் லத்தீன் மொழியில் அவரது திறமைக்கு சான்றாகும்.

டான்டே அலிகியேரி, இவரை புனித அசிசியின் ஃபிரான்சிசுக்கு முன்னோடியாகக் கருதி, தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார்.

அவர், தம்மை ஒஸ்டியா மாகான கர்தினால்-ஆயர் (Cardinal-Bishop of Ostia) பதவிலிருந்து விடுவிக்குமாறு அடிக்கடி கேட்டுகொண்டார். இறுதியாக, இரண்டாம் அலெக்சாண்டர் (Alexander II) அவரை விடுவித்தார். பீட்டர் தமியான் மீண்டும் ஒரு துறவியாகியதில் பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அவர் திருத்தந்தையின் தூதராக பணிபுரிய இப்போதும் அழைக்கப்பட்டார்.

ஒருமுறை, தனக்களிக்கப்பட்ட ஒரு பணியை முடித்துவிட்டு ரவேன்னாவிலிருந்து (Ravenna) திரும்புகையில் ஜூரத்தால் பாதிக்கப்பட்டார். துறவிகள் சூழ்ந்திருக்க, ஃபெப்ரவரி 22, 1072 அன்று அவர் உயிர் துறந்தார்.

புனிதர் பட்டம் :
இவரை கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ (Pope Leo XII) 1823ம் ஆண்டில் அறிவித்தார். இவரின் நினைவுத் திருவிழா நாள் ஃபெப்ரவரி மாதம், 21ம் நாளாகும்.

இவருக்கு முறைப்படி புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவரின் இறப்பு முதலே இவருக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளனர். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆறு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது ஃபயேன்ஸா (Cathedral of Faenza) மறைமாவட்ட முதன்மைப் பேராலயத்தில் உள்ளது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா