Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ தூய லூர்து அன்னை ✠ (Our Lady of Lourdes)
   
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 11
 
 
✠ தூய லூர்து அன்னை ✠ (Our Lady of Lourdes)

*இடம் : லூர்து, ஃபிரான்ஸ் (Lourdes, France)

*திருநாள் : ஃபெப்ரவரி 11, 1858

*சாட்சிகள் :
புனிதர் பெர்னதெத் சூபிரஸ்
(Saint Bernadette Soubirous)

*வகை :
மரியாளின் தரிசனங்கள்
(Marian apparition)

*கத்தோலிக்க ஏற்பு : ஜூலை 3, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

*திருத்தலம் :
லூர்து அன்னை திருத்தலம், லூர்து நகர், ஃபிரான்ஸ்
(Sanctuary of Our Lady of Lourdes, Lourdes, France)

*பாதுகாவல் :
லூர்து நகர் (Lourdes), ஃபிரான்ஸ் (France),
தென் கொரியா, (South Korea), நோயாளிகள்,
லான்காஸ்டர் மறை மாவட்டம் (Diocese of Lancaster), நோய்களிலிருந்து பாதுகாவல் (Protection from Diseases)

தூய லூர்து அன்னை என்ற பெயர், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் முதல், 1858ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாள் வரை "பெர்னதெத் சூபிரஸ்" (Bernadette Soubirous) என்ற சிறுமிக்கு அன்னை மரியாள் அளித்த திருக்காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த திருக்காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் திருக்காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா ஃபெப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மரியாளின் திருக்காட்சிகள் :
ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிரஸ். இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் தேதி, இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.

அன்னை மரியாள் ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும், முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக் கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு செபமாலை வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.

பெர்னதெத் அன்னையின் முதல் திருக்காட்சியைக் கண்டபோது, மரியாள் அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மரியாளின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். ஃபெப்ரவரி மாதம், 18ம் தேதி, மரியாளைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர். ஒரு திருக்காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.

ஃபெப்ரவரி 25ம் தேதி திருக்காட்சியின்போது, மரியாளின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது. மார்ச் மாதம், 25ம் தேதி அன்னை மரியாள் பெர்னதெத்திடம், "நாமே அமல உற்பவம்" ("Que Soy Era Immaculada Concepciou") என்று தம்மைப் பற்றிக் கூறினார். இதற்கு, "பாவம் எதுவுமின்றி பிறந்தவர்" என்பது அர்த்தம்.

மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு தரிசனமளித்த மரியன்னை, அவற்றில் 15 திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.

ஏப்ரல் மாதம், 7ம் தேதி, பெர்னதெத் அன்னையின் 16வது திருக்காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை. ஜூலை மாதம், 16ம் தேதி அன்னை மரியாளின் கடைசி திருக்காட்சியைக் கண்ட பெர்னதெத், "இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை" என்று கூறினார்.

தரிசன பின்னணி :
கிறிஸ்தவ வரலாற்றில் அன்னை மரியாளின் திருக்காட்சிகள் முதல் நூற்றாண்டு முதலே பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகின் பல இடங்களிலும் அன்னையின் திருக்காட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு திருக்காட்சியும் கடவுளின் ஏதேனும் ஒரு செய்தியை வழங்குவதாக விளங்குகிறது. லூர்து நகரின் திருக்காட்சியும் அப்படிப்பட்ட ஒரு திருக்காட்சியாகவே இயற்கைக்கு மேற்பட்ட விதத்தில் அமைந்துள்ளது.

திருத்தந்தை 9ம் பயஸ் 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, "மரியாள், தாம் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், சிறப்பு சலுகையினாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசுவின் பேறுபலன்களினாலும், சென்மப் பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் திருச்சபையின் போதனை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். எனவே, இறைமக்கள் இதில் என்றும் தளராத உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும்" என்று கூறி, மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதை உறுதி செய்யும் வகையிலேயே கன்னி மரியாள் லூர்து நகரில் திருக்காட்சியளித்தார்.

லூர்து பேராலயம் :
பெர்னதெத், அன்னை மரியாளின் திருக்காட்சிகளை கண்ட நாட்களிலேயே, லூர்து திருக்காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1858ம் ஆண்டு, நவம்பர் மாதம், 17ம் தேதி, திருக்காட்சிகளைப் பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இறுதியாக 1862ம் ஆண்டு, ஜனவரி மாதம், 18ம் தேதி, டர்பெஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ், "பெர்னதெத் சூபிரசுக்கு கன்னி மரியாள் தரிசனம் தந்தபோது, இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயல்பாடுகள் நிகழ்ந்தது உண்மையே" என்று அறிவித்தார். திருத்தந்தை 9ம் பயஸ், லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் லூர்து நகர், அன்னை மரியாளின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.

அதன் பிறகு அன்னை மரியாள் திருக்காட்சியளித்த மசபியேல் குகையின் அருகே, மரியாளின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. காட்சியின்போது தோன்றிய நீரூற்றும், பெரிய ஓடையாக மாறி ஆற்றில் கலப்பதுடன், நம்பிக்கையோடு அதன் நீரைப் பருகுவோருக்கு குணமளிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் லூர்து அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.

செபிப்போம் :
"நாமே மாசில்லா உற்பவம்" என்று திருவாய் மலர்ந்த அன்னையே!
எம்மையும், எம் குடும்பத்தையும், இச்சமூகத்தையும், உம்மை விசுவசிக்காத சகோதர்களையும் உமது பொற்பாதத்தில் ஒப்படைகிறோம்!
உலக மாந்தரனைவரினதும் அன்புத்தாயே!
உம்மையே தஞ்சமென ஓடிவரும் அடியோர் மேலே தயவாயிரும் அம்மா!
கருணையின் ஊற்றுக்கண்ணான மாதாவே!
நீர் பரிந்துரைத்தால் தண்ணீரும் இரசமாகும் என்பதனை உளமார உணர்ந்து விசுவசிக்கும் எம்மை கரம் பிடித்து வழி நடத்துமம்மா!
எல்லையில்லாத உமது திருஇருதயத்தின் அன்பால் எம்மைக் காக்கும் அதிதூய இறை அன்னையே!
உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவின் திருவார்த்தைகளின் வழிநடக்க எமக்கு கற்றுத் தாருமம்மா!

லோக நாயகியே! ஆரோக்கிய அன்னையே! சகாய தாயே! அடைக்கல மாதாவே! பனிமய அன்னையே! சந்தன மாதாவே! மடு மாதாவே! செல்வ மாதாவே! பெரிய நாயகி அன்னையே! அதிசய மணல் மாதாவே! அதிசய மின்னல் மாதாவே! பூண்டி புதுமை அன்னையே! லூர்து அன்னையே! காணிக்கை மாதாவே! ஜெபமாலை அன்னையே!
நீர் அருளித்தந்த செபமாலையை நாங்கள் விட்டுவிடாதிருக்கும் வரமருளும் அம்மா!
ஆமென்

மாசில்லாக் கன்னியே, மாதாவே உம்மேல்...
நேசமில்லாதவர் நீசரே ஆவார்...
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)

நிகழ்வு

12.02.1999 அன்று இந்துப் பத்திரிகையில் வந்த செய்தி. எத்தனையோ மருத்துவர்களாலும், மருந்து மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாத முடக்குவாதமுற்ற ஒருவர் பிரான்சு நகரில் இருக்கும் லூர்து நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் அன்னையின் அற்புத நீரூற்றில் குளிப்பாட்டப் பட்டார். பின்னர் அவர் அங்கு நடந்த நற்கருணை ஆராதனைக்குக் கொண்டுவரப்பட்டார். குருவானவர் நற்கருணை ஆண்டவரை எல்லோரும் ஆராதிக்கும் வண்ணம் தூக்கிக்காட்டியபோது அதுவரை உயிரற்றவர் போன்று கிடந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதர் திடிரென தன்னுணர்வு பெற்றார். சிறுது நேரத்தில் அவர் எழுந்துநிற்கத் தொடங்கினார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இறைவன் லூர்தன்னை வழியாகச் செய்த இந்த அற்புதச் செயலை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.


ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்கள் லூர்து நகருக்கு நம்பிக்கையோடு செல்கிறார்கள். அதில் நிறையப் பேர் தீராத வியாதிகளிலிருந்து குணம்பெற்றுச் செல்கிறார்கள். அப்படிக் குணப்பெற்ற ஒருவர்தான் இந்த முடக்குவாதமுற்ற மனிதர்.


வரலாற்றுப் பின்னணி


1850 ஆம் ஆண்டு வரை பிரான்சில் இருக்கும் லூர்து நகர் ஒரு சாதாரண நகர்தான். அங்கே வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்தான். லூர்தன்னை காட்சி கொடுத்த பெர்னதத் என்ற சிறுமியும்கூட ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்குத்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியிலிருந்து ஜூலை 16 ஆம் தேதி வரை பிரனீஸ் என்ற மலையில் உள்ள மசபெல் குகையில் பதினெட்டு முறை மரியன்னை காட்சி கொடுத்தார்.


முதல் மூன்று காட்களில் மரியன்னை, பெர்னதத் என்ற அந்த சிறுமியிடம் எதுவும் பேசவில்லை. வானத்திலிருந்து ஒளிமயமான பெண் ஒருத்தி வெள்ளைநிற உடையில் நீலநிற இடைக்கச்சையுடன் அந்த சிறுமிக்குக் காட்சி அளித்தார். இக்காட்சியானது பெர்னதத்தோடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்குக் கிடைக்கவில்லை, அவர்கள் ஏதோ ஓர் ஒளி தோன்றி மறைவதைத் தான் பார்த்தார்கள். பெர்னதத்தான் அந்த அற்புதக் காட்சியைக் கண்டாள்.


ஒன்பதாம் முறையாக மரியன்னை பெர்னதத்துக்கு காட்சி கொடுக்கும்போது, அவளிடம் மசபெல் குகைக்கு முன்பாக ஓரிடத்தில் கைகளை வைத்துத் தோண்டுமாறு கேட்டுக்கொண்டார். பெர்னதத்தும் அங்கே தோண்டியபோது தண்ணீர் மெதுவாக வந்தது. ஆனால் அது தெளிவில்லாமல் இருந்தது. அடுத்த இருபத்து நான்கு நேரத்திற்குள் அத்தண்ணீர் வற்றாத ஜீவ நதியாகப் பிறப்பெடுத்தது. ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஜீவ ஊற்று வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 13 ஆம் முறையாக மரியன்னை பெர்னத்துக்குத் தோன்றியபோது, அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே சிறுமி தன்னுடைய பங்குத் தந்தையாம் பெயர்மேல் (Peyermale) என்பவரைச் சந்தித்து, இச்செய்தியைச் சொன்னார். தொடக்கத்தில் சிறுமி இச்செய்தியைச் சொன்னபோது, அவர் நம்பவில்லை. பின்னர் அதனை நம்பினார்.


பதினாறாம் முறையாக அதாவது மார்ச் 25 ஆம் நாள் (கபிரியேல் அதிதூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதினம்), மரியன்னை காட்சி கொடுத்தபோது அவ்விடத்தில் ஊரே கூடியிருந்தது. அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பெர்னதத்திடம், அவருடைய பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். அச்சிறுமி அப்படியே கேட்க, "நாமே அமல உற்பவம்" என்று பதிலுரைத்தார். உடனே மக்கள் அனைவரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். ஏனென்றால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதாவது 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள்தான், திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் மரியாள் அமல உற்பவி என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்திருந்தார். இப்போது மரியாளே தன்னை நாமே அமல உற்பவம் என்று சொல்லியதால், திருச்சபையின் விசுவாச சத்தியத்தை மரியாளின் கூற்று உறுதி செய்துவிட்டது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.


மரியன்னை பெர்னதத் என்ற அந்த சிறுமிக்கு அதன்பிறகும் காட்சியளித்தார். அப்போதெல்லாம் மரியாள் அவளிடம், "குருக்களுக்காக ஜெபியுங்கள், பாவத்திற்கு பொருத்தனைகள் செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெர்னதத்திடம், "நான் உனக்குக் உனக்குக் காட்சி தந்ததனால், உனக்குத் துன்பங்கள் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணுலக வாழ்வில் உனக்குத் துன்பங்கள் உண்டு. ஆனால் விண்ணுலகில் உனக்கு பேரானந்தம் உண்டு" என்று சொல்வார். பெர்னதத் என்ற அந்தச் சிறுமி, அருட்சகோதரியாக மாறி, இறக்கும்வரைக்கும் அவர் துன்பங்களைச் சந்தித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் .


இன்றைக்கு லூர்து நகரில் எத்தனையோ புதுமைகள், அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. லூயிஸ் பிரிட்டோ என்பவருக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது, அதே போன்று மூன்றாம் நெப்போலியனின் மகனுக்கு நோயிலிருந்து நலம் கிடைத்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் அருளால் லூர்து நகரில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அவற்றைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


லூர்தன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த் நல்ல நாளில் அன்னை நமக்கு என்ன செய்தியைத் தருகிறார் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


1. அன்னை பிள்ளைகளாகிய நம்மீது கொண்டிருக்கும் அன்பு


ஒவ்வொருமுறையும் அன்னையானவள் காட்சி கொடுக்கும்போது, அவளது காட்சிகள் அனைத்தும் பிள்ளைகளாகிய நம்மீதுகொண்ட பேரன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. நாம் மனம்திரும்பி நடக்கவேண்டும், இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும் என்றுதான் அன்னையானவள் ஒவ்வொரு காட்சியிலும் சொல்கிறார். இவையனைத்தும் அன்னை, பிள்ளைகளாகிய நம்மீது எத்தகைய அன்பைக் கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. உண்மையிலே நாம் அந்த அன்னையின் அன்பை, நம் அன்னையரின் அன்பினை உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் அன்னையின் அன்பை உணராத பிள்ளைகளாகவே இருக்கின்றோம். இது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. "தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் பணிந்திடுவோம்" என்கிறது ஒரு கிறிஸ்தவப் பாடல். இது எத்தனை உண்மை.


இளைஞன் ஒருவன் கொடிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டான். இச்செய்தியைக் கேட்ட அந்த இளைஞனின் தாய் அலறியடித்து சிறைசாலைக்கு ஓடிவந்தாள். அப்போது அவளைப் பார்த்த சிறைச்சாலை அதிகாரி, "அம்மா! உங்கள் மகன் இப்போது யாரையும் பார்ப்பதாய் இல்லை, அவன் எல்லாரையும் வெறுத்து ஒதுக்குகிறான். ஏன் உங்களையும்கூட அவன் வெறுத்து ஒதுக்குகிறான். அதனால் தயவுசெய்து நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்" என்றார். அதற்கு அந்த அன்னை, "என் மகன் என்னை வெறுத்து ஒதுக்கலாம், பார்க்கமாட்டேன் என்று புறக்கணிக்கலாம். ஆனால், நான் அவனை எப்போதும் அன்பு செய்கிறேன்" என்றாள். இதுதான் தாயின் அன்பு. வெறுத்து ஒதுக்குகின்ற மகனுக்கும் அன்பைப் பொழிவதுதுன் உண்மையான தாயன்பு. அத்தகைய அன்பினை அன்னை மரியாள் நம்மிடத்தில் கொண்டிருக்கிறார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அன்னை மரியின், நம் அன்னையின் அன்பை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.


2. மனமாற்றம் பெறவேண்டும்


அன்னையானவள் ஒவ்வொரு காட்சியிலும் சொல்லக்கூடிய செய்தி மனமாற வேண்டும் என்பதாகும். லூர்து நகர் காட்சியிலும்கூட அன்னை பெர்னதத்திடம் அத்தகைய செய்தியைத்தான் சொன்னார்.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனையைத் தொடங்குகிறபோது, "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15) என்றுதான் சொல்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்துபோது நம்முடைய வாழ்க்கையில் மனமாற்றம் எந்தளவுக்கு முக்கியத்தும் வாய்ந்தது எனப் புரிந்துகொள்ளலாம். நம்முடைய வாழ்க்கை இறைவனுக்கு உகந்த வாழ்க்கையாக இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய மனம்போன போக்கில் வாழ்ந்து, மேலும் மேலும் பாவத்தைச் செய்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மனமாறிய மக்களாக வாழவேண்டும்.


கர்நாடாக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பசவராஜ் நிங்கப்பா பெல கஜ்ஜாரி (46) என்பவர் கடந்த 30 ஆண்டுகளில் 261 வீடுகளில் பணம் மற்றும் நகைகளை திருடியவர். திருட்டு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்தவர். அப்படிப்பட்டவர் கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திருடும்போது கையும், களவுமாக சிக்கிக்கொண்டார். சிக்கிய அவரை தண்டிக்காமல் உட்கார வைத்து பேராசிரியர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பேராசிரியர் வழங்கிய அறிவுரையால் அவர் மனம் திருந்தி வாழ ஆசைப்பட்டார். அதனால் அவர் இப்போது தான் திருடிய வீடுகளுக்கு நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார். இது பலரை வியப்படைய செய்துள்ளது. (மே 11, 2016 தினகரன் பத்திரிக்கை)


நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனமாறி, இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கும்போது அது எல்லாருக்கும் ஏன் இறைவனுக்கும் ஆனந்தம்தான். ஆகவே, லூர்தன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த் நல்ல நாளில் அவர் நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். பாவத்திலிருந்து மனம் மாறுவோம். பாவிகளுக்காக ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.







+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புனித லூர்து அன்னை திருவிழா



முன்னுர
இன்று நமது தாயாம் திருஅவை தூய லூர்து அன்னையின் திருவிழாவைக் கொண்டாட நம்மை அழைக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் மலையடிவாரத்திலுள்ள லூர்து நகர் என்ற குக்கிராமத்தின், ஆற்றருகே 14வயது சிறுமி பெர்னதெத் சூபிரூஸ் தன் தோழிகளுடன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென ஓர் ஒளி, கண்களைக் கூசச் செய்தது. சிறுமி ஒளியை நோக்கி உற்றுப்பார்க்க, அங்கே அழகிய பெண் தன் கையில் செபமாலை ஏந்தியவாறு காட்சியளித்தார். செபமாலைச் சொல்லும்படி பெர்னதெத்துக்கு அழைப்பு விடுத்தார். 18 நாட்களுக்குத் தொடர்ந்து வரும்படியும், பாவிகள் மனம் திரும்ப செபிக்கவும், அங்கிருந்த குருவிடம் சொல்லி ஒரு ஆலயம் கட்டவும் கேட்டுக் கொண்டார். 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் நாள் அன்னையின் அற்புதக் காட்சித் தொடங்கி, 1858ம் ஆண்டு ஜூலை 16ம் நாள் வரை தொடர்ந்து 17முறை காட்சியளித்தார். பெர்னதெத் அப்பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டபோது "நாமே அமலோற்பவம்" என்று பதிலுரைத்தார். இறுதித் தீர்ப்புக்குப் பிறகுதான் அன்னை ஓய்வு பெறுவார். அதுவரை அன்னை மரியா தமது பிள்ளைகளைக் காக்கும் பணியில் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்" என புனித ஜான் மரிய வியான்னி கூறுவது உண்மையிலும் உண்மை. பாவிகளுக்காகச் செபிக்கவும், மனம் வருந்தவும் அழைத்தார் லூர்து அன்னை. இம்மையில் மட்டுமன்று, மறுமையிலும் நம் அனைவரையும் மகிழ்விப்பதாக வாக்களித்தார். நாமும் தூய லூர்து அன்னையின் பரிந்துரையால் நலம் பெற பக்தியோடு இன்றைய திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்: எசாயா 66: 10-14,
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்

தியானப்பாடல்: யூதி 13: 18அஆ, 19-20அ
பல்லவி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!

நற்செய்தி வாசகம்: யோவான் 2: 1-11
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு
1. தாய் தன் பிள்ளைகளைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் எனக்கூறிய இறைவா, கடவுளை அன்பு கூர்வது என்பது முழுமனத்துடன் நம் அயலாருக்குச் சேவை செய்வதாகும் எனக்கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், அவர் வழியில் அருள்பணியாற்றும் குருக்கள், கன்னியர், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வரமருள உம்மை மன்றாடுகிறோம்.
2. நல்வாழ்வு தரும் இறைவா, ஏழ்மை இல்லா உலகம் வேண்டும், செல்வச் செருக்கு ஒழிய வேண்டும், பிறரின் துன்பம் உணர வேண்டும், நாளும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கொண்ட தலைவர்கள் உருவாக அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.
3. இதோ உமது அடிமையென்று" தன் வாழ்வையே உமக்களித்த அன்னை மரியாளைப்போன்று நாங்களும் உலக தீமைகள், சோதனைகள் வரும்பொழுது ஆண்டவரின் துணையை நாடும் தெய்வ பயத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நிகழ்வு
12.02.1999 அன்று இந்துப் பத்திரிகையில் வந்த செய்தி. எத்தனையோ மருத்துவர்களாலும், மருந்து மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாத முடக்குவாதமுற்ற ஒருவர் பிரான்சு நகரில் இருக்கும் லூர்து நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் அன்னையின் அற்புத நீரூற்றில் குளிப்பாட்டப் பட்டார். பின்னர் அவர் அங்கு நடந்த நற்கருணை ஆராதனைக்குக் கொண்டுவரப்பட்டார். குருவானவர் நற்கருணை ஆண்டவரை எல்லோரும் ஆராதிக்கும் வண்ணம் தூக்கிக்காட்டியபோது அதுவரை உயிரற்றவர் போன்று கிடந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதர் திடிரென தன்னுணர்வு பெற்றார். சிறுது நேரத்தில் அவர் எழுந்துநிற்கத் தொடங்கினார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இறைவன் லூர்தன்னை வழியாகச் செய்த இந்த அற்புதச் செயலை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்கள் லூர்து நகருக்கு நம்பிக்கையோடு செல்கிறார்கள். அதில் நிறையப் பேர் தீராத வியாதிகளிலிருந்து குணம்பெற்றுச் செல்கிறார்கள். அப்படிக் குணப்பெற்ற ஒருவர்தான் இந்த முடக்குவாதமுற்ற மனிதர்.

வரலாற்றுப் பின்னணி
1850 ஆம் ஆண்டு வரை பிரான்சில் இருக்கும் லூர்து நகர் ஒரு சாதாரண நகர்தான். அங்கே வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்தான். லூர்தன்னை காட்சி கொடுத்த பெர்னதத் என்ற சிறுமியும்கூட ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்குத்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியிலிருந்து ஜூலை 16 ஆம் தேதி வரை பிரனீஸ் என்ற மலையில் உள்ள மசபெல் குகையில் பதினெட்டு முறை மரியன்னை காட்சி கொடுத்தார்.


முதல் மூன்று காட்களில் மரியன்னை, பெர்னதத் என்ற அந்த சிறுமியிடம் எதுவும் பேசவில்லை. வானத்திலிருந்து ஒளிமயமான பெண் ஒருத்தி வெள்ளைநிற உடையில் நீலநிற இடைக்கச்சையுடன் அந்த சிறுமிக்குக் காட்சி அளித்தார். இக்காட்சியானது பெர்னதத்தோடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்குக் கிடைக்கவில்லை, அவர்கள் ஏதோ ஓர் ஒளி தோன்றி மறைவதைத் தான் பார்த்தார்கள். பெர்னதத்தான் அந்த அற்புதக் காட்சியைக் கண்டாள்.

ஒன்பதாம் முறையாக மரியன்னை பெர்னதத்துக்கு காட்சி கொடுக்கும்போது, அவளிடம் மசபெல் குகைக்கு முன்பாக ஓரிடத்தில் கைகளை வைத்துத் தோண்டுமாறு கேட்டுக்கொண்டார். பெர்னதத்தும் அங்கே தோண்டியபோது தண்ணீர் மெதுவாக வந்தது. ஆனால் அது தெளிவில்லாமல் இருந்தது. அடுத்த இருபத்து நான்கு நேரத்திற்குள் அத்தண்ணீர் வற்றாத ஜீவ நதியாகப் பிறப்பெடுத்தது. ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஜீவ ஊற்று வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 13 ஆம் முறையாக மரியன்னை பெர்னத்துக்குத் தோன்றியபோது, அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே சிறுமி தன்னுடைய பங்குத் தந்தையாம் பெயர்மேல் (Peyermale) என்பவரைச் சந்தித்து, இச்செய்தியைச் சொன்னார். தொடக்கத்தில் சிறுமி இச்செய்தியைச் சொன்னபோது, அவர் நம்பவில்லை. பின்னர் அதனை நம்பினார்.

பதினாறாம் முறையாக அதாவது மார்ச் 25 ஆம் நாள் (கபிரியேல் அதிதூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதினம்), மரியன்னை காட்சி கொடுத்தபோது அவ்விடத்தில் ஊரே கூடியிருந்தது. அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பெர்னதத்திடம், அவருடைய பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். அச்சிறுமி அப்படியே கேட்க, "நாமே அமல உற்பவம்" என்று பதிலுரைத்தார். உடனே மக்கள் அனைவரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். ஏனென்றால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதாவது 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள்தான், திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் மரியாள் அமல உற்பவி என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்திருந்தார். இப்போது மரியாளே தன்னை நாமே அமல உற்பவம் என்று சொல்லியதால், திருச்சபையின் விசுவாச சத்தியத்தை மரியாளின் கூற்று உறுதி செய்துவிட்டது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மரியன்னை பெர்னதத் என்ற அந்த சிறுமிக்கு அதன்பிறகும் காட்சியளித்தார். அப்போதெல்லாம் மரியாள் அவளிடம், "குருக்களுக்காக ஜெபியுங்கள், பாவத்திற்கு பொருத்தனைகள் செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெர்னதத்திடம், "நான் உனக்குக் உனக்குக் காட்சி தந்ததனால், உனக்குத் துன்பங்கள் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணுலக வாழ்வில் உனக்குத் துன்பங்கள் உண்டு. ஆனால் விண்ணுலகில் உனக்கு பேரானந்தம் உண்டு" என்று சொல்வார். பெர்னதத் என்ற அந்தச் சிறுமி, அருட்சகோதரியாக மாறி, இறக்கும்வரைக்கும் அவர் துன்பங்களைச் சந்தித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் .

இன்றைக்கு லூர்து நகரில் எத்தனையோ புதுமைகள், அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. லூயிஸ் பிரிட்டோ என்பவருக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது, அதே போன்று மூன்றாம் நெப்போலியனின் மகனுக்கு நோயிலிருந்து நலம் கிடைத்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் அருளால் லூர்து நகரில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அவற்றைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
லூர்தன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த் நல்ல நாளில் அன்னை நமக்கு என்ன செய்தியைத் தருகிறார் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அன்னை பிள்ளைகளாகிய நம்மீது கொண்டிருக்கும் அன்பு
ஒவ்வொருமுறையும் அன்னையானவள் காட்சி கொடுக்கும்போது, அவளது காட்சிகள் அனைத்தும் பிள்ளைகளாகிய நம்மீதுகொண்ட பேரன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. நாம் மனம்திரும்பி நடக்கவேண்டும், இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும் என்றுதான் அன்னையானவள் ஒவ்வொரு காட்சியிலும் சொல்கிறார். இவையனைத்தும் அன்னை, பிள்ளைகளாகிய நம்மீது எத்தகைய அன்பைக் கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. உண்மையிலே நாம் அந்த அன்னையின் அன்பை, நம் அன்னையரின் அன்பினை உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் அன்னையின் அன்பை உணராத பிள்ளைகளாகவே இருக்கின்றோம். இது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. "தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் பணிந்திடுவோம்" என்கிறது ஒரு கிறிஸ்தவப் பாடல். இது எத்தனை உண்மை.

இளைஞன் ஒருவன் கொடிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டான். இச்செய்தியைக் கேட்ட அந்த இளைஞனின் தாய் அலறியடித்து சிறைசாலைக்கு ஓடிவந்தாள். அப்போது அவளைப் பார்த்த சிறைச்சாலை அதிகாரி, "அம்மா! உங்கள் மகன் இப்போது யாரையும் பார்ப்பதாய் இல்லை, அவன் எல்லாரையும் வெறுத்து ஒதுக்குகிறான். ஏன் உங்களையும்கூட அவன் வெறுத்து ஒதுக்குகிறான். அதனால் தயவுசெய்து நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்" என்றார். அதற்கு அந்த அன்னை, "என் மகன் என்னை வெறுத்து ஒதுக்கலாம், பார்க்கமாட்டேன் என்று புறக்கணிக்கலாம். ஆனால், நான் அவனை எப்போதும் அன்பு செய்கிறேன்" என்றாள். இதுதான் தாயின் அன்பு. வெறுத்து ஒதுக்குகின்ற மகனுக்கும் அன்பைப் பொழிவதுதுன் உண்மையான தாயன்பு. அத்தகைய அன்பினை அன்னை மரியாள் நம்மிடத்தில் கொண்டிருக்கிறார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அன்னை மரியின், நம் அன்னையின் அன்பை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.

2. மனமாற்றம் பெறவேண்டும்
அன்னையானவள் ஒவ்வொரு காட்சியிலும் சொல்லக்கூடிய செய்தி மனமாற வேண்டும் என்பதாகும். லூர்து நகர் காட்சியிலும்கூட அன்னை பெர்னதத்திடம் அத்தகைய செய்தியைத்தான் சொன்னார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனையைத் தொடங்குகிறபோது, "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15) என்றுதான் சொல்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்துபோது நம்முடைய வாழ்க்கையில் மனமாற்றம் எந்தளவுக்கு முக்கியத்தும் வாய்ந்தது எனப் புரிந்துகொள்ளலாம். நம்முடைய வாழ்க்கை இறைவனுக்கு உகந்த வாழ்க்கையாக இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய மனம்போன போக்கில் வாழ்ந்து, மேலும் மேலும் பாவத்தைச் செய்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மனமாறிய மக்களாக வாழவேண்டும்.

கர்நாடாக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பசவராஜ் நிங்கப்பா பெல கஜ்ஜாரி (46) என்பவர் கடந்த 30 ஆண்டுகளில் 261 வீடுகளில் பணம் மற்றும் நகைகளை திருடியவர். திருட்டு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்தவர். அப்படிப்பட்டவர் கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திருடும்போது கையும், களவுமாக சிக்கிக்கொண்டார். சிக்கிய அவரை தண்டிக்காமல் உட்கார வைத்து பேராசிரியர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பேராசிரியர் வழங்கிய அறிவுரையால் அவர் மனம் திருந்தி வாழ ஆசைப்பட்டார். அதனால் அவர் இப்போது தான் திருடிய வீடுகளுக்கு நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார். இது பலரை வியப்படைய செய்துள்ளது. (மே 11, 2016 தினகரன் பத்திரிக்கை)

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனமாறி, இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கும்போது அது எல்லாருக்கும் ஏன் இறைவனுக்கும் ஆனந்தம்தான். ஆகவே, லூர்தன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த் நல்ல நாளில் அவர் நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். பாவத்திலிருந்து மனம் மாறுவோம். பாவிகளுக்காக ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா