Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மறைக்கல்வி

விவிலிய வகுப்பு - 2             ஐம் பெரும் நூல்கள் (pente teuque)   

    
ஆசிரியர் மோயிசன்
பழைய ஏற்பாட்டில் முதலில் வரும் ஐந்து நூல்களை பழைய ஏற்பாட்டின் முதுகெலும்பு எனலாம்.
யூதமதத்தினர் இஸ்லாம் மதத்தினரால் பின்பற்றப்படும் நூல்களும் இவைகள் தான்

இந்த 5 நூல்களில் 4 பாரம்பரியங்கள் உள்ளன.
J.D.E.P
 J  - யாவே கடவுளின் இன்னொரு பெயர்
D
- இணைச்சட்டங்கள்
E - எகிலோம் கடவுளின் இன்னொரு பெயர்
P - லேவியர்

தொடக்கநூல்
கடவுள் உலகைப் படைத்தார் என்பதற்கு ஆங்காங்கு எழுதிய பல நூல்களின் கருத்துத் தொகுப்பு (1ம் அதி;1.) (2ம் அதி; 4) கடவுள் மனிதனோடு கொண்ட உறவின் வரலாறு மனிதனைப் படைத்தபோதே தொடங்குகிறது. ஆதிபெற்றோரின் வழிச் சந்ததி பாவம் செய்த காரணத்தினால் தண்டனையாக பெருவெள்ளத்தில் அழிந்தது (அதிகாரம் 4- 10 )
ஒரே இடத்தில் வாழ்ந்த மக்கள் உலகின் பல திசைகளுக்கும் பிரிந்தது அதி.11)
ஆதிமனிதர் பேயின் சோதனையால் பாவம் செய்தபோது பேயைச் சபித்து தாம் மனித சந்ததியை ஈடேற்றுவதாக வாக்களித்திருந்தபடி தேர்ந்தெடுத்த ஆபிரகாமின் வரலாறும் அவர் சந்ததி ஈசாக் யாக்கோப் அவரின் 12 மக்கள் சிறப்பாக சூசையின் வரலாறும் காணப்படுகிறது (அதி;12 -50 )

விடுதலைப்பயணம்
இறைவன் தான் தெரிந்தெடுத்த மக்கள் எகிப்தில் துன்பப்படும் போது மோயீசன் மூலம் கடவுளால் விடுதலை செய்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு யாத்திரையாகப் போனதால் யாத்திராகமம் எனப் பெயர் வந்தது.
கடவுள் மக்களுடன் செய்த உடன்படிக்கையின் சாராம்சம்:
- நான் கடவுள் - நீர் என் மக்கள்

கடவுளை வழிபடுவதன் அவசியம் பற்றி பலி, ஆராதனை, பீடம், சடங்குகள், குருக்கள் அபிசேகம் செயயும் முறைகள் பற்றி கடவுளின் அறிவுரைகள் (விடு.25அதி.)
எகிப்து கடவுளையும் மக்களையும் எதிர்க்கும் தீய சக்திகளைக் குறிப்பிடும்
பாஸ்கா கடத்தல் என்று பொருள் படும்

லேவியர்
ஆபிரகாமின் பேரன் யாக்கேபிற்கு பிறந்த 12பிள்ளைகளும் 12 குலங்களாக மாறினர் இவற்றில் ஒரு குலமான லேவியர் குலத்தில் தான் குருக்கள் திருப்பணியாளர்கள் உருவாகக் கட்டளையிட்டார். அத்தோடு அவர்கள் செலுத்த வேண்டிய பலிகள் விதிமுறைகள் கடமைகள் ஒழுங்குமுறைகள் (லேவி.19-18) என்பது பற்றி விளக்குகிறது.

எண்ணிக்கை நூல்

எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கையோடு தொடங்குவதால் இப்பகுதிக்கு எண்ணிக்கை நூல் எனப் பெயர் வந்தது. இப்பகுதியில் வரலாறும் (கடவுள் அளித்த மாபெரும் விடுதலையை நினைத்து நன்றி செலுத்தாமல் பல முறை அவரை எதிர்த்து முறுமுறுத்து கீழ்ப்படியாமல் பிடிவாதகுணத்துடன் இருந்த மக்கள் பால் தாம் திட்டமிட்டிருந்த மீட்புச் செயலின் பொருட்டு அவர்கள் மீது இரக்கம் காட்டி வந்தார்.) உண்டு. இது தொடக்கநூல் லேவியர் என்பனவற்றின் தொடர்ச்சியாகவு ம் இருக்கின்றது.

 


பாவமேதும் இல்லா சீலி! பாவிகளின் செல்வ ராணி!
பாதுகாத்து ஆளுவாயே நீ