Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் மகதலின் கனொஸ்ஸா ✠(St. Magdalene of Canossa)
   
நினைவுத் திருநாள் : (ஏப்ரல்/ April 10)
✠ புனிதர் மகதலின் கனொஸ்ஸா ✠(St. Magdalene of Canossa)

 *அருட்கன்னி மற்றும் சபை நிறுவனர் : (Virgin and Foundress)

 *ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

 *பிறப்பு : மார்ச் 2, 1774
வெரோனா, வெனிஸ் குடியரசு
(Verona, Republic of Venice)

 *இறப்பு : ஏப்ரல் 10, 1835
வெரோனா, லொம்பார்டி-வெனிஷியா அரசு, ஆஸ்திரிய பேரரசு
(Verona, Kingdom of LombardyVenetia, Austrian Empire)

 *முக்திபேறு பட்டம் : டிசம்பர் 7, 1941
திருத்தந்தை 12ம் பயஸ்
(Pope Pius XII)

 *புனிதர் பட்டம் : அக்டோபர் 2, 1988
திருத்தந்தை 2ம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் மகதலின் கனொஸ்ஸா ஒரு இத்தாலிய அருட்சகோதரியும், சபை நிறுவனரும் ஆவார். இவர் தமது பிராந்தியத்திலுள்ள ஏழை மக்களின் வழக்குரைஞராக பணியாற்றியவர் ஆவார்.

வெனிஸ் குடியரசிலுள்ள வெரோனா (Verona) எனும் இடத்தில் பிறந்த இவரது தந்தை பெயர் "மார்க்கிஸ் ஒக்டோவியோ டி கனோஸ்ஸா" (Marquis Ottavio di Canossa) ஆகும். இவரது தாயார் பெயர் "தெரேசா ஸ்லூஹா" (Teresa Szluha) ஆகும். இவர் பிறந்த மறுதினமே திருமுழுக்கு பெற்றார்.

மகதலின் ஐந்து வயதாக இருக்கும்போது அவரின் தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இரண்டு வருடங்களின் பிறகு, இவரது தாய் மறுமணம் செய்துகொள்வதற்காக தமது ஐந்து குழந்தைகளையும் விட்டு பிரிந்து 'மான்ட்டுவா' (Mantua) எனும் இடத்திற்கு சென்றார். இதன் காரணமாக, குழந்தைகள் அனைவரும் அவர்களது மாமனது பாதுகாப்பில் வளர்ந்தனர்.

தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய மகதலின் குழந்தையாக இருந்த போதே துறவியாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். 1791ம் ஆண்டு, மகதலின் தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு சென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். கார்மேல் மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு மகதலின் கார்மேல் மட கன்னியர்களால் வளர்க்கப்பட்டார். மகதலின் கார்மேல் துறவியர் இல்லத்தில் தமது நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவற பயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ட்ரேவிசோ (Treviso) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். பின்னர், தமது குடும்ப சொத்தான பெரும் தோட்டங்களை நிர்வகிக்க தொடங்கினார்.

வெரோனாவில் உள்ள ஏழைகள் மகதலின் கவனத்தை ஈர்த்தனர். அவர்கள் ஃபிரெஞ்ச் புரட்சி இராணுவ படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலை, மகதலினாவை அவர்களுக்காக சேவை செய்யும் மனதை தந்தது.

1808ம் ஆண்டு, கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி, உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்த ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக 1808ம் ஆண்டு, "கருணையின் மகள்கள்", "ஏழைகளின் சேவகர்கள்" (Congregation of the Daughters of Charity, Servants of the Poor) என்ற சபையை நிறுவினார்.

பிறகு 1810 மற்றும் 1812ம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருக் குழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், 1816ம் ஆண்டு மிலானிலுள்ள பெர்கமோவிலும் (Bergamo) சபைகளை நிறுவினார்.

1828ம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபை திருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு இச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என பல நாடுகளில் பரவியது.

மகதலின் 1835ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் நாள் வெரோனாவில் மரித்தார்.

1941ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் முக்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.

திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், 1988ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இரண்டாம் நாள், புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா