Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஆரோக்கியநாதர் ✠(St. Roch)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்  / Aug- 16)
 ✠ புனிதர் ஆரோக்கியநாதர் ✠(St. Roch)
 ஒப்புரவாளர்/ யாத்திரி :
(Confesser/ Pilgrim)

பிறப்பு: கி.பி 1348
மான்ட்பெல்லியர், மஜோர்கா இராச்சியம்
(Montpellier, Kingdom of Majorca)

இறப்பு: ஆகஸ்ட் 16, 1376/1379
வோகெரா, சவோய் கவுண்டி
(Voghera, County of Savoy)

ஏற்கும் சமயம்/ சபை:
கத்தோலிக்க திருச்சபை (தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் வரிசை)
(Catholic Church (Third Order of Saint Francis))
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
அக்லிபயன் திருச்சபை
(Aglipayan Church)

புனிதர் பட்டம்:
பிரபலமான ஆர்வத்தால்; திருத்தந்தை பதினான்காம் கிரகோரி (Pope Gregory XIV) அவர்களால் "ரோமானிய தியாகவியலில்" (Roman Martyrology) சேர்க்கப்பட்டது

முக்கிய திருத்தலம்: சான் ரோகோ (San Rocco), வெனிஸ் (Venice), இத்தாலி (Italy)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 16

பாதுகாவல்:
சர்மாடோ (Sarmato), அல்தரே இ கிரிஃபல்கோ (Altare e Girifalco), இத்தாலி (Italy). காலரா (Invoked against Cholera), தொற்றுநோய் (Epidemics), முழங்கால் பிரச்சினைகள் (Knee problems), பிளேக் (Plague), தோல் நோய்கள் (Skin diseases. மணமாகாத இளைஞர்களின் பாதுகாவலர் (Patron Saint of Bachelors), நோயுற்ற கால்நடைகள் (Diseased cattle), நாய்கள் (Dogs), பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் (Falsely accused people), செல்லாதவை (Invalids), இஸ்தான்புல் (Istanbul), அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Surgeons), ஓடு தயாரிப்பாளர்கள் (Tile-makers), கல்லறைகள் (Gravediggers), பழைய பொருட்கள் விற்பனையாளர்கள் (Second-hand dealers), யாத்ரீகர்கள் (Pilgrims), வக்கீல்கள் (Apothecaries), கலூக்கன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் (Roman Catholic Diocese of Kalookan)

புனிதர் ஆரோக்கியநாதர் அல்லது புனிதர் ரோச் அல்லது புனிதர் ராக், ஒரு கிறிஸ்தவப் புனிதர் ஆவார். இவரின் விழா நாள் ஆகஸ்ட் மாதம், 16ம் நாளாகும். ஆங்கிலத்தில் இவரை ராக் என்றும் கிளாஸ்கோ என்றும்,, ஸ்காட்லாந்தில் ரோலோக்ஸ் என்றும் அழைப்பர். இவர் குறிப்பாக கறுப்புச் சாவுக்கு எதிராகப்பாதுகாவல் அளிப்பவராக நம்பப்படுகின்றார். மேலும் இவர் நாய்களுக்கும், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோருக்கும் பாதுகாவலராவார்.

வாழ்க்கைச் சுருக்கம்:
இவர் மஜோர்க்கா பேரரசின் (Kingdom of Majorca) மொன்ட் பெலியரில் (Montpellier) கி.பி. சுமார் 1295ம் ஆண்டு பிறந்திருக்கக்கூடும். இவரின் தந்தை அந்த நகரின் ஆளுனராவார். இவரின் பிறப்பின்போது இவரின் மார்பில் ஒரு சிலுவை வடிவில் சிவப்பு நிற மச்சம் இருந்ததாக நம்பப்படுகின்றது. இவரின் இருபதாம் அகவைக்குள் இவரின் பெற்றோர் இருவரும் இறந்தனர். இவரின் தந்தை, தாம் இறப்பதற்கு முன், இவரை நகரின் ஆளுனராக்கினார். ஆயினும் தந்தையின் இறப்புக்குப்பின்பு தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு அளித்தார். தனது ஆளுனர் பதவியினை தன் மாமாவுக்கு அளித்துவிட்டு இத்தாலிக்கு திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம் இத்தாலி கறுப்புச் சாவினால் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இவர் பணிபுரிந்தார். பலரை அச்சமயத்தில் சிலுவை அடையாளம் வரைந்து குணமாக்கினார் என்பர். இத்தாலியினை சுற்றியுள்ள பல ஊர்களில் இவர் சேவை செய்தார்.

பியாசென்சா (Piacenza) என்னும் ஊரில் பணியாற்றியபோது இவருக்கு அந்த நோய் பிடித்தது. இதனால் இவர் ஊருக்கு வெளியே காட்டில் வனவாசியாக வாழ்ந்தார். ஒரு புதுமையால் இவரின் வசிப்பிடத்தை அறிந்த காத்ஹார்ட் (Gothard Palastrelli) என்பவர் இவருக்கு உதவினார். நலமடைந்தப்பின்னர், தன் சொந்த ஊர் திரும்பினார். அங்கே தாம் யார் என வெளிப்படுத்தாததால் அவரை ஒற்றர் என தவறாகக் கருதிய அவரின் மாமா இவரை சிறையிலடைத்தார். அச்சிறையிலேயே ஐந்தாண்டுகளுக்குப்பின்னர் இவர் இறந்தார். இவரின் மார்பில் இருந்த மச்சமும், இவரிடம் இருந்த ஒரு ஆவணமும் இவரை நகர மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவரின் அடக்கச்சடங்கு பொதுநிகழ்வாக நடத்தப்பட்டது. இவரின் இறப்புக்குப்பின்பு பல புதுமைகள் இவரின் பெயரால் நிகழ்ந்தன என்பர்.

கி.பி. 1414ம் ஆண்டு, காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் (Council of Constance) கூடியபோது பிளேக் (Plague) நோய் அந்த நகரினை தாக்கியது. அதனால் அச்சங்கத்தினர் மக்கள் அனைவரும் இவரை நோக்கி மன்றாடப்பணித்தனர். இதனால் விரைவாக நோய் நீங்கியது என்பர். 1485ம் ஆண்டு, இவரின் மீப்பொருட்கள் வெனிஸ் (Venice ) நகருக்கு கொணரப்பட்டது. அங்கேயே அவை இன்றளவும் உள்ளது.

இவர் பொதுவாக ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் (Third Order of Saint Francis) சபையின் உறுப்பினர் எனக்கருதப்பட்டாலும், அதனை நிருவ எவ்வகைச்சான்றும் இல்லை. உரோமை புனிதர்கள் பட்டியலில் இவரின் பெயர் திருத்தந்தை பதினான்காம் கிரகோரியால் (Pope Gregory XIV) சேர்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம், 16ம் தேதிக்கான திருப்புகழ்மாலையில் இவருக்குறியப்பகுதிக்கு அனுமதியளித்தார்.

நமது நாட்டில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவரது பெயரால் தேவாலயங்கள் உள்ளன.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா