Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனித ரேமண்ட் நொன்னட்டஸ் ✠(St. Raymond Nonnatus)
   
நினைவுத் திருநாள் : (ஆகஸ்ட்/ Aug 31)
✠ புனித ரேமண்ட் நொன்னட்டஸ் ✠(St. Raymond Nonnatus)

 மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர் :
(Religious, Priest and confessor)

பிறப்பு : கி.பி. 1204
போர்டெல், செகர்ர, பார்செலோனா, அரகன், (தற்போதைய ஸ்பெயின்)
(Portell, County of Segarra, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)

இறப்பு : ஆகஸ்ட் 31, 1240
கார்டோனா கோட்டை, பார்செலோனா, அரகன், ஸ்பெயின்
(Castle of Cardona, County of Cardona, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம் : கி.பி. 1657
திருத்தந்தை 7ம் அலெக்சாண்டர்
(Pope Alexander VII)

நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 31

பாதுகாவல் :
பைத்தோவா (Baitoa); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); குழந்தைப் பிறப்பு; கர்ப்பிணி பெண்கள்; பிறந்த குழந்தைகள்; குழந்தைகள்; மகப்பேறு மருத்துவர்கள்; தாதிகள்; காய்ச்சல்; பொய்யான குற்றச்சாட்டு; ஒப்புதல் வாக்குமூலம்

புனிதர் ரேமண்ட், ஸ்பெயின் (Spain) நாட்டின் "கட்டலோனியா" (Catalonia) நகரைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார். இவரது தாயார், இவரை பிரசவிக்கும்போதே மரித்து போனார். அதனால் அறுவை சிகிச்சை (Caesarean) செய்துதான், தாயின் வயிற்றிலிருந்து இவரை எடுத்தனர்.

நன்கு கல்வி கற்றிருந்த இவரது தந்தை, இவருக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கி தர முனைந்தார். "அரகன்" அரசின் (Kingdom of Aragon) அரசவையிலே சிறந்ததோர் உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. ஆனால், இவரது எண்ணங்களோ கிறிஸ்துவின் மீதும் அவர்தம் இரக்கத்தின் மீதுமே இருந்தது. அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். இதனால், தமது பண்ணைகளிலொன்றினை நிர்வகிக்க அறிவுறுத்தியிருந்தார். சிறு வயது பிராயத்திலிருந்தே தமது வீட்டினருகேயிருந்த "தூய நிக்கோலஸ்" (St. Nicholas) சிற்றாலயத்தில் செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

பின்னர், "பார்சிலோனா" (Barcelona) நகரிலிருந்த "மெர்சிடரியன்" (Mercedarians) துறவற மடத்தின் சீருடைகளை ஏற்க ரேமண்டை அனுமதித்தார். "மெர்சிடரியன்" (Mercedarians) சபை, வட ஆபிரிக்காவின் முகம்மதியர்களிடம் (Moors of North Africa) பிடிபட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்காக நிறுவப்பட்டதாகும். ரேமண்ட், அச்சபையின் நிறுவனரான "தூய பீட்டர் நோலாஸ்கோவிடம்" (St. Peter Nolasco) பயிற்சி பெற்றார். 1222ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், பின்னர் அச்சபையின் தலைமை (Master General) பொறுப்பேற்றார்.

பின்னர் வலென்சியா (Valencia) நாட்டிற்கு மறைப்பணியாற்ற சென்ற ரேமண்ட், மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். அந்நாட்டில் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்த சுமார் 140 கிறிஸ்தவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டார்.

அதன்பிறகு, ரேமண்ட் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்ற சென்றார். அங்கும் அடிமைகளாக இருந்த 250 கிறிஸ்தவர்களை "அல்ஜியர்ஸ்" (Algiers) எனுமிடத்திலிருந்து மீட்டார். அதன்பிறகு "டுனிஸ்" (Tunis) என்ற நகருக்கு சென்றார். அங்கே, மிகச் சிறந்த முறையில் மறை பரப்புப் பணியை ஆற்றிய இவர், அந்நாட்டு முகம்மதிய மக்களால் சிறைபிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார்.

சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே பளுத்த இரும்பினால் துளை போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அப்போது அக்கொடியவர்கள் ரேமண்ட்டை மறைபரப்பு பணியை ஆற்ற முடியாமல் செய்து வதைத்தனர். அங்கு அவர் பல துன்பங்களை அனுபவித்தார். பின்னர் அவரது சபையினரால் மீட்கப்பட்ட ரேமண்ட், கி.பி. 1239ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்.

"பார்சிலோனா" (Barcelona) நகரிலிருந்து அறுபது மைல் தூரத்திலுள்ள "கர்டோனா கோட்டையில்" (Castle of Cardona) ரேமண்ட் மரித்தார். கி.பி. 1657ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டரால் (Pope Alexander VII) புனிதர் பட்டமளிக்கப்பட்ட ரேமண்ட் அவர்களின் நினைவுத் திருவிழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா