Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  திருவருகைக் காலத்தின் உலக இரட்சகா் புகழ்மாலை

     
                                

         திருவருகைக் காலத்தின் உலக இரட்சகா் புகழ்மாலை

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும்

பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

மாம்சமான வார்த்தையே.....*

-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

எல்லாவற்றையும் உண்டுபண்ணின தேவனே....*

சர்வேசுரனுடைய குமாரரே....*

அபிஷேகம் பண்ணப்பட்ட ஆண்டவரான இரட்சகரே....*

ஆண்டவருடைய சர்வ வல்லபமுள்ள வாக்கே,...*

காணக்கூடாத கடவுளுடைய சாயலே...*

யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரமே...*

யூதா வம்சத்தின் சிங்கமே....*

பூமியில் நின்று முளைத்த உண்மையே,..*

வானம் பூமி பாதாளம் பணிந்தேற்றும் தேவனே,...*

போதகரின் தலைவரே,...*

பரிசுத்த ஆவியாலும், அவர் வல்லபத்தாலும் அபிஷேகம் பண்ணப்பட்டவரே,...*

எங்களுக்குக் கற்பனை தரும் ஆண்டவரே,..*

பூலோகத்தின் ஔியே,..*

மகா பிரகாசம் பொருந்திய விடியற்காலத்தின் நட்சத்திரமே,...*

சீவியமும் உண்மையும் வழியுமாய் இருக்கிறவரே,...*

உலகத்துக்கு உயிர் கொடுக்கும் தேவ அப்பமே,..*

பூமியின் இராசாக்களின் அதிபதியே,..*

மாசில்லாத செம்மறிப்புருவையே,...*

எங்கள் அதிபதியும் இரட்கருமாயிருப்பவரே,..*

புதிய ஏற்பாட்டின் மத்தியஸ்தரே,...*

விசுவாசத்தின் கா்த்தரும் முடிவுமானவரே,..*

ஆண்டவரும் தேவனுமாய் இருக்கிறவரே...*

தளங்களின் ஆண்டவரே,...*

மனது பொருத்தி மத்தியஸ்தரான கர்த்தரே,...*

சாவினுடையவும், நரகத்தினுடையவும் திறவுகோலை உடைத்தவரே,...*

இருக்கிறவரும் இருந்தவரும் வரப்போகிறவருமானவரே,...*

எங்களுடைய நம்பிக்கையே,...*

மகிமையின் இராசாவே,..*

சீவியத்தின் மரமே,..*

உயிருக்கு ஔியே,..*

ஆதியந்தம் இல்லாதவரே,...*

சீவியர்களுக்கும் மரித்தவா்களுக்கும் நடுவரே,..*
- எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தயாபரராயிருந்து,

- எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி

தயாபரராயிருந்து,

-எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பிதாவினிடத்தில் நீர் நித்தியமாய் உற்பவித்ததைப் பார்த்து...**

-எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி **

உமது ஆகமனத்தைப் பார்த்து...**

உமது பிறப்பைப் பார்த்து..**

உமது தாழ்மையைப் பார்த்து..**

உமது வல்லபத்தைப் பார்த்து..**

உமது திருமாதாவின் முகத்தைப் பார்த்து..**

சம்மனசுகளைப் பார்த்து..**

உமக்கு பிரியப் பட்ட சகலரையும் பார்த்து..**

மோட்ச பாக்கியத்தைத் தரவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மனதாழ்சியையும் மதுர குணத்தையும் நாங்கள் அடைய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..*

நாங்கள் எங்கள் சத்துராதிகளைச் சிநேகிக்கும் தயிரியத்தை தரவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

நாங்கள் எங்களையே அர்பணிக்க தயைபுரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

நாங்கள் பாம்பின் விமரிசையையும், புறாவின் சாது குணத்தையும் அடைய உதவிசெய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

நித்திய சீவியத்தை அடைய அநித்திய சீவியத்தைத் தடைப் பண்ணும் வரத்தை தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

சரீரத்தை வதைக்கிறவர்களுக்குப் பயப்படாமல் ஆத்துமத்தையும், சரீரத்தையும் நரகில் தள்ள வல்லமையுள்ள தேவனுக்குப் பயந்திருக்கும் வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

பூமியில் பொக்கிஷம் தேடாமல் மோட்சத்தில் நித்திய பொக்கிஷம் சேர்த்திடும் வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

எங்கள் அயலாரை தக்க வகையாய் அன்பு செய்ய வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

பிறர் எங்களுக்கு செய்ய நாங்கள் விரும்பாத காரியங்களை நாங்களும் அவர்களுக்கு செய்யாதிருக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

உலக பெரும் பாதையை விட்டு தேவரீருடைய நெருக்கமான பாதையில் நுழைய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

தேவரீர் எங்களுக்கு வைக்கும் மதுரம் பொருந்திய பாரத்தைப் பொறுமையோடு சுமக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

நாங்கள் உமது கற்பனையைப் புத்தியில் வைத்துக்கொண்டு ஞானக்கனி விளைவிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

எங்கள் மரண நேரத்தில் நாங்கள் வெகு சாக்கிரதையாயிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

முடிவு பரியந்தம் நன்மையில் நிலைக்கொண்டிருக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்..**

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே  - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே  - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

முதல் : உமது பெரும் இரக்கப்படி

துணை : எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.


செபிப்போமாக
சுவாமி! ஒன்றுமில்லாமையிலிருந்து மனிதனை உண்டாக்கி அவன் ஈடேற புத்திக்கு எட்டாத இரட்சணியத்தை உமது திருக்குமாரனைக் கொண்டு உண்டுபண்ணிணீரே, நாங்கள் உம்மை முழு புத்தியோடேயும், முழு மனதோடேயும், முழு நினைவோடேயும் சிநேகிக்கும் வரத்தை தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நாதர் மூலமாய் தந்தருள வேண்டுமென்று வேண்டக்கொள்கிறோம் - ஆமென்.
                   
                                                     

 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்