|
17
செப்டம்பர்ு 2018 |
|
பொதுக்காலம்
24ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்களிடையே பிளவுகள் இருக்கும் நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி
வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் (11: 17-26)
சகோதரர் சகோதரிகளே, இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப்
பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது நன்மையை
விடத் தீமையே மிகுதியாக விளைகிறது. முதலாவது, நீங்கள் சபையாகக்
கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
ஓரளவு அதை நம்புகிறேன். உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான்
செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும்.
இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின்
திருவிருந்து அல்ல.
ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த
உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர்
பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும்
குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின்
திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா?
என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்டமாட்டேன்.
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம்
ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட
அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்
பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச்
செய்யுங்கள்" என்றார்.
அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக்
கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை.
நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு
செய்யுங்கள்" என்றார்.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 40: 6-7. 8. 9. 16 (பல்லவி: 1 கொரி 11: 26b)
=================================================================================
பல்லவி: ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள்
திறக்கும்படி செய்தீர்.
7 எனவே இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில்
எழுதப்பட்டுள்ளது.
-பல்லவி
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி
அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது
என்றேன் நான்.
-பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே!
நீர் இதை அறிவீர்.
-பல்லவி
16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!
நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,
"ஆண்டவர் எத்துணை பெரியவர்!" என்று எப்போதும் சொல்லட்டும்!
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 3: 16)
அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும்
எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும்
அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை
நான் கண்டதில்லை.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
(7: 1-10)
அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர்
தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார்.
அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக்
கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக்
காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
அவர்கள் இயேசுவிடம் வந்து, "நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே.
அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும்
கட்டித் தந்திருக்கிறார்" என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
இயேசு அவர்களோடு சென்றார்.
வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர்
தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச்
சொன்னார்: "ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என்
வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம்
வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு
வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு
உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர்.
நான் ஒருவரிடம்
"செல்க" என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம்
`வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப்
பார்த்து "இதைச்
செய்க' என்றால் அவர் செய்கிறார்."
இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப்
பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ரயேலரிடத்திலும்
இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச்
சொல்கிறேன்" என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத்
திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
"இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை"
பெருநகர் ஒன்றில் பர்னிச்சர் கடை வைத்திருந்தார் அந்த தொழிலதிபர்.
கீழ் தளத்தில் வேறொரு கடையும் வைத்திருந்தார் அவர். ஒருநாள்
அவர் வைத்திருந்த இரண்டு கடைகளும் தீப்பிடித்து, உடமைகள் எல்லாம்
எரிந்துபோயின. எல்லாரும்,
"அவ்வளவுதான். தொழிலதிபரின் கதை
முடிந்தது" என்று பேசத் தொடங்கினார்கள்.
அன்று மாலையே கட்டிட வாசலில் ஒரு விளப்பரப் பலகை வைக்கப்பட்டது.
அதில், "கடை எரிந்தது! பொருட்களும் கருகின! வீடு கருகியது! ஆனால்
நம்பிக்கை கருகவில்லை! நாளை முதல் கடை செயல்படும்" என்று
பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்துவிட்டு, அந்தத்
தொழிலதிபரின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு, எல்லாரும்
ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
நம்பிக்கை மட்டும் நமக்கிருந்தால் போதும்!. நம்முடைய வாழ்வில்
நாம் இழந்த அத்தனையையும் திரும்பப் பெற்றுவிட முடியும். அதைதான்
இந்த நிகழ்வானது நமக்கு அழகாக எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, சாகும்தருவாயில் இருக்கும்
நூற்றுவத் தலைவருடைய பணியாளருக்கு நலமளிப்பதைக் குறித்துப் படிக்கின்றோம்.
இந்த வல்ல செயல், நூற்றுவத் தலைவர் ஆண்டவர் இயேசுவின்
மீதுகொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையினாலேயே சாத்தியப்பட்டது
என்று சொன்னால் அது மிகையாகாது. விவிலியத்தில் இயேசு கிறிஸ்து
இரண்டு முறை வியந்தார் என்று குறிப்புகள் வரும். ஒன்று, தன்
சொந்த ஊரில், மக்கள் தன்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததைக் கண்டு
வியந்தது. (மாற் 6:6) இரண்டு, இன்றைய நற்செய்தியில் (7:9) வரும்
நூற்றுவத் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியந்தது. ஆண்டவர் இயேசுவே
ஒருவருடையே நம்பிக்கைக் கண்டு வியந்தார் என்றால், அவருடைய நம்பிக்கை
எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆண்டவர் இயேசு நூற்றுவத் தலைவருடைய நம்பிக்கையைக் கண்டு வியந்தார்
என்பதற்கு நாம் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று அவர்
மெசியாவைக் குறித்து தெரிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லாத ஒரு
புறவினத்தார். மெசியாவைக் குறித்து அதிகமாகத் தெரிந்திருந்த யூதர்களே
அவர் வந்தபோது, அவரைப் புறக்கணிக்கும்போது (யோவா 1:11),
மெசியாவைக் குறித்து சிறிதுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லாத
நூற்றுவத்தலைவர் இவ்வளவு ஆழமான நம்பிக்கையைக்
கொண்டிருக்கின்றாரே என்றுதான் இயேசு அவருடைய நம்பிக்கையைக் கண்டு
வியக்கின்றார்.
இயேசு நூற்றுவத் தலைவருடைய நம்பிக்கையைக் கண்டு வியப்பதற்கு இன்னொரு
காரணம், அவர் தன்னை சாகும்தருவாயில் இருக்கும் தனது பணியாளரைப்
பார்க்க வாரும் என்றோ, அவரைத் தொட்டுக் குணப்படுத்தும் என்றோ
சொல்லவில்லை. மாறாக ஒருவார்த்தை சொல்லும் என்னுடைய பணியாளர்
நலமடைவார் என்கின்றார். அதாவது "ஒருவார்த்தை போதும்"
வேறொன்றும் வேண்டாம் என்று இருந்ததால்தான் இயேசு நூற்றுத்தலைவரின்
நம்பிக்கையைக் கண்டு வியக்கின்றார், "இஸ்ரேயலரிடத்திலும் இதுபோன்ற
நம்பிக்கையை நான் கண்டதில்லை என்றும் அவரைப் பாராட்டுகின்றார்.
விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள், நூற்றுவத் தலைவரின் நம்பிக்கை,
முடக்குவாத முற்றவரைப் படுக்கையில் கொண்டுவர நான்கு பேரின் நம்பிக்கையை
விடப் பெரியது என்று. ஏனென்றால் அவர்கள் நான்கு பேரும்
முடுக்குவாதமுற்றவரை இயேசுவிடத்தில் கொண்டு வந்து, குணம்பெறச்
செய்தார்கள். நூற்றுவத் தலைவரோ தன் பணியாளரை இயேசுவிடத்தில்
கொண்டுவராமலே, அவரை சாவிலிருந்து மீட்டெடுக்கின்றார். இதுதான்
நூற்றுவத் தலைவரின் நம்பிக்கை மற்ற எல்லாரிடம் நம்பிக்கையையும்
விட உயர்ந்திருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது.
நூற்றுவத் தலைவரிடத்தில் விளங்கிய இன்னும் ஒருசில பண்புகள் நம்மை
வியக்க வைப்பதாக இருக்கின்றது. ஒன்று, அவர் தன்னுடைய பணியாளரிடத்தில்
காட்டிய இரக்கமும் சக மனிதர்களிடத்தில் காட்டிய அன்பும் ஆகும்.
பணியாளர்கள் என்றால், கிள்ளுக்கீரையென பார்க்கப்பட்ட அந்த காலக்கட்டத்தில்,
நூற்றுவத் தலைவர் தன் பணியாளர் சாகும்தருவாயில் இருப்பதைக் கண்டு
அவருக்காக இயேசுவிடம் பரிந்துபேசுகின்றார். அது மட்டுமல்லாமல்,
தான் புறவினத்தாராக இருந்தாலும் யூதர்கள் அவரிடத்தில்
தொழுகைக்கூடம் கட்டிக்கொடுக்கச் சொன்னதும் மறுக்காமல் அவர்களுக்கு
தொழுகைக்கூடத்தைக் கட்டித் தருகின்றார். இவையெல்லாம் அவர் பணியாளர்களிடத்திலும்
சகமனிதர்களிடத்தில் கொண்டிருந்த இரக்கத்திற்கும் அன்பிற்கும்
சான்றாக அமைக்கின்றது.
நூற்றுவத் தலைவரிடத்தில் விளங்கிய தாழ்ச்சியையும் நாம்
சொல்லியாக வேண்டும். உரோமைப் படையில் நூறு வீரர்களுக்குத் தலைவர்
என்றால் அவ்வளவு பெரிய பதவி. அப்படிப்பதட்ட பதவியில் இருந்தபோதும்
இயேசுவிடத்தில் அவர் இறங்கி வந்து பேசுகின்றார். இவ்வாறு அவர்
நம்பிக்கைக்கும் பிறர் மீது காட்டும் அன்பிற்கும் தாழ்சிகும்
மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.
ஆகவே, நூற்றுவத்தலைவரைப் போன்று நாம் இயேசுவிடத்தில் ஆழமான நம்பிக்கை
கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
வியக்கவைக்கும் நம்பிக்கை
பிரபல எழுத்தாளரான நார்மன் வின்சென்ட் பேர்ல் (1893 1993) என்பவர்
சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி
சீனாவில் ஓர் ஆள் இருந்தான். அவன் பெரிய பணக்காரன். சொத்து சுகம்
என்று நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான். ஆனால் அவனுடைய
நிம்மதியான வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அவனுடைய
தாறுமாறான வாழ்வால் அவனுடைய மனைவி அவனை விட்டுப்
பிரிந்துபோனாள். அவனுடைய சொத்துகள் அனைத்தும் அவனை விட்டுப் போனது.
இப்போது அவன் தனி மரமாய்ப் போனான். இதனால் அவனுக்கு நரம்புத்
தளர்ச்சி ஏற்பட்டு நிர்கதியாய் நின்றான். அவனுக்கு என்று சொந்தம்
இல்லை, அவனுக்கென்று சொத்து சுகம் இல்லை. (சொத்து சுகம் இருந்தால்தான்
சொந்தங்கள் இருக்கும் போல).
இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த அவன்
ஒருநாள் சில கிறிஸ்தவர்களைக் கண்டான். அவர்கள் மற்றவர்களைப்
போல் அன்றி, மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருந்தார்கள்.
உடனே அவன் அவர்களிடம் சென்று சிறுது நேரம் பேச்சுக்
கொடுத்தான். அப்போது அவன் அவர்களிடம், "எப்படி உங்களால் இவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?" என்று கேட்டான். அதற்கு அவர்கள்,
"நாங்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்கிறோம்.
வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கும் அனைத்தையும் ஆண்டவரிடத்தில்
ஒப்படைத்துவிட்டு, நாங்கள் நிம்மதியாக இருப்போம்" என்றார்கள்.
இதைக் கேட்டு அவன் வியந்து நின்றான். தானும் அவ்வாறு இருக்கமுடியுமா?
என்று அவர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், "நீ இறைவன்மீது
முழுமையான நம்பிக்கை அவரிடம் தொடர்ந்து ஜெபி, அப்போது கடவுள்
உன்னுடைய வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்வார்" என்று
சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
நாத்திகனான அவன் இறைவனிடம் எப்படி ஜெபிப்பது என்று குழம்பிப்
போய் நின்றான். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தெளிவு பெற்றவனாய்,
இறைவனிடம் நம்பிக்கையோடு ஜெபிப்பது என்று உறுதிபூண்டான்.
தொடக்கத்தில் அவனுக்கு ஜெபிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் தன்னிடத்தில் மாற்றத்தை உணர்ந்தான்.
அவனால் நீண்ட நேரம் இறைவனிடம் நம்பிக்கையோடு ஜெபிக்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் அவன் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை
உணர்ந்தான். ஆம், தனக்கென்று யாருமே இல்லை என்று வாழ்ந்த அவன்,
தன்னோடு கடவுள் இருக்கிறார்; இந்த துன்பத்திலிருந்து தனக்கு
விடுதலையைத் தருவார் என்ற நம்பிக்கையைப் பெற்றான். அவன் நம்பியது
போலவே அவனுடைய வாழ்க்கையில் அமைதி கிடைத்தது. புது வாழ்வும்
கிடைந்தது.
இப்போது அவன் புதிய மனிதனாய் வாழ்ந்தான். அவனுடைய வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு, பிரிந்து போன அவனுடைய மனைவி அவனோடு வந்து
சேர்ந்தாள்.
ஒருவர் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழும்போது எத்தகைய ஆசீர்வாதங்களைப்
பெறுகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தி
வாசகத்தில் நூற்றுவத் தலைவன் தன்னுடைய பணியாளர் ஒருவரின் நோய்
நீங்கப் பெறுகிறார். இதற்கு காரணமாய் இருந்தது அவருடைய நம்பிக்கைதான்
என்று சொன்னால் அது மிகையாகாது. நூற்றுவத் தலைவர் தன்னுடைய நண்பர்கள்
சிலரை இயேசுவிடம் அனுப்பி, "ஐயா!, உமக்குத் தொந்தரவு வேண்டாம்;
நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால்
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" என்று சொல்லச்
சொல்கிறார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு இயேசு, "இஸ்ரேயலரிடம்கூட இத்தகைய நம்பிக்கையைக்
கண்டதில்லை" என்று நூற்றுவத் தலைவரை வெகுவாகப்
பாராட்டுக்கிறார். இறைவனிடம் நாம் அசைக்க முடியாத நம்பிக்கை
வைத்து வாழும்போது, இறைவன் நமக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் தந்து
காத்திடுவார் என்பதை இந்த நிகழ்வு மிக அருமையாக எடுத்துரைக்கின்றது.
திருப்பாடல் 125:1 ல் வாசிக்கின்றோம் "ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்" என்று.
எனவே நாம் இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து
வாழ்வோம்.
அடுத்ததாக இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் செய்தி, நாம் நம்மோடு
இருப்பவர்கள்மீது அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்ந்தால், இறைவனும்
நம்மீது அன்புகொள்வார் என்பதே ஆகும். நூற்றுவத் தலைவர் தன்னுடைய
பணியாளர்மீது அதிகமான அக்கறையோடு இருக்கிறார், அதேபோன்று மக்கள்மீதும்
அக்கறையோடு இருக்கிறார். அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இப்படி
எல்லார்மீதும் அக்கறையோடு இருப்பது என்பது காணக்கிடைக்காத ஒன்று.
ஆனால் இந்த நூற்றுவத் தலைவர் மற்றவரிடமிருந்து தனித்து
நிற்கிறார். அதனால்தான் இறைவனும் அவருடைய பணியாளருக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கே நம்பிக்கை என்பது செயலோடு, வாழ்வோடு பொருந்திப் போவதை நம்மால்
காண முடிகிறது.
ஆகவே, இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வோம், அந்த நம்பிக்கையின்
வெளிப்பாடாக நம்மோடு உடன் இருப்பவர்மீது அன்பு கொண்டு
வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் எல்லா ஆசிரையும் பெற்று
மகிழ்வோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
வியக்கவைக்கும் நம்பிக்கை
பிரபல எழுத்தாளரான நார்மன் வின்சென்ட் பேர்ல் (1893 1993) என்பவர்
சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி
சீனாவில் ஓர் ஆள் இருந்தான். அவன் பெரிய பணக்காரன். சொத்து சுகம்
என்று நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான். ஆனால் அவனுடைய
நிம்மதியான வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அவனுடைய
தாறுமாறான வாழ்வால் அவனுடைய மனைவி அவனை விட்டுப்
பிரிந்துபோனாள். அவனுடைய சொத்துகள் அனைத்தும் அவனை விட்டுப் போனது.
இப்போது அவன் தனி மரமாய்ப் போனான். இதனால் அவனுக்கு நரம்புத்
தளர்ச்சி ஏற்பட்டு நிர்கதியாய் நின்றான். அவனுக்கு என்று சொந்தம்
இல்லை, அவனுக்கென்று சொத்து சுகம் இல்லை. (சொத்து சுகம் இருந்தால்தான்
சொந்தங்கள் இருக்கும் போல).
இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த அவன்
ஒருநாள் சில கிறிஸ்தவர்களைக் கண்டான். அவர்கள் மற்றவர்களைப்
போல் அன்றி, மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருந்தார்கள்.
உடனே அவன் அவர்களிடம் சென்று சிறுது நேரம் பேச்சுக்
கொடுத்தான். அப்போது அவன் அவர்களிடம், "எப்படி உங்களால் இவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?" என்று கேட்டான். அதற்கு அவர்கள்,
"நாங்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்கிறோம்.
வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கும் அனைத்தையும் ஆண்டவரிடத்தில்
ஒப்படைத்துவிட்டு, நாங்கள் நிம்மதியாக இருப்போம்" என்றார்கள்.
இதைக் கேட்டு அவன் வியந்து நின்றான். தானும் அவ்வாறு இருக்கமுடியுமா?
என்று அவர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள், "நீ இறைவன்மீது
முழுமையான நம்பிக்கை அவரிடம் தொடர்ந்து ஜெபி, அப்போது கடவுள்
உன்னுடைய வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்வார்" என்று
சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
நாத்திகனான அவன்! இறைவனிடம் எப்படி ஜெபிப்பது என்று குழம்பிப்
போய் நின்றான். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தெளிவு பெற்றவனாய்,
இறைவனிடம் நம்பிக்கையோடு ஜெபிப்பது என்று உறுதிபூண்டான்.
தொடக்கத்தில் அவனுக்கு ஜெபிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் தன்னிடத்தில் மாற்றத்தை உணர்ந்தான்.
அவனால் நீண்ட நேரம் இறைவனிடம் நம்பிக்கையோடு ஜெபிக்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் அவன் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை
உணர்ந்தான். ஆம், தனக்கென்று யாருமே இல்லை என்று வாழ்ந்த அவன்,
தன்னோடு கடவுள் இருக்கிறார்; இந்த துன்பத்திலிருந்து தனக்கு
விடுதலையைத் தருவார் என்ற நம்பிக்கையைப் பெற்றான். அவன் நம்பியது
போலவே அவனுடைய வாழ்க்கையில் அமைதி கிடைத்தது. புது வாழ்வும்
கிடைந்தது.
இப்போது அவன் புதிய மனிதனாய் வாழ்ந்தான். அவனுடைய வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு, பிரிந்து போன அவனுடைய மனைவி அவனோடு வந்து
சேர்ந்தாள்.
ஒருவர் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழும்போது எத்தகைய ஆசீர்வாதங்களைப்
பெறுகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தி
வாசகத்தில் நூற்றுவத் தலைவன் தன்னுடைய பணியாளர் ஒருவரின் நோய்
நீங்கப் பெறுகிறார். இதற்கு காரணமாய் இருந்தது அவருடைய நம்பிக்கைதான்
என்று சொன்னால் அது மிகையாகாது. நூற்றுவத் தலைவர் தன்னுடைய நண்பர்கள்
சிலரை இயேசுவிடம் அனுப்பி, "ஐயா!, உமக்குத் தொந்தரவு வேண்டாம்;
நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால்
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" என்று சொல்லச்
சொல்கிறார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு இயேசு, "இஸ்ரேயலரிடம்கூட இத்தகைய நம்பிக்கையைக்
கண்டதில்லை" என்று நூற்றுவத் தலைவரை வெகுவாகப்
பாராட்டுக்கிறார். இறைவனிடம் நாம் அசைக்க முடியாத நம்பிக்கை
வைத்து வாழும்போது, இறைவன் நமக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் தந்து
காத்திடுவார் என்பதை இந்த நிகழ்வு மிக அருமையாக எடுத்துரைக்கின்றது.
திருப்பாடல் 125:1 ல் வாசிக்கின்றோம் "ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்" என்று.
எனவே நாம் இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து
வாழ்வோம்.
அடுத்ததாக இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் செய்தி, நாம் நம்மோடு
இருப்பவர்கள்மீது அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்ந்தால், இறைவனும்
நம்மீது அன்புகொள்வார் என்பதே ஆகும். நூற்றுவத் தலைவர் தன்னுடைய
பணியாளர்மீது அதிகமான அக்கறையோடு இருக்கிறார், அதேபோன்று மக்கள்மீதும்
அக்கறையோடு இருக்கிறார். அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இப்படி
எல்லார்மீதும் அக்கறையோடு இருப்பது என்பது காணக்கிடைக்காத ஒன்று.
ஆனால் இந்த நூற்றுவத் தலைவர் மற்றவரிடமிருந்து தனித்து
நிற்கிறார். அதனால்தான் இறைவனும் அவருடைய பணியாளருக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கே நம்பிக்கை என்பது செயலோடு, வாழ்வோடு பொருந்திப் போவதை நம்மால்
காண முடிகிறது.
ஆகவே, இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வோம், அந்த நம்பிக்கையின்
வெளிப்பாடாக நம்மோடு உடன் இருப்பவர்மீது அன்பு கொண்டு
வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் எல்லா ஆசிரையும் பெற்று
மகிழ்வோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|