|
06 பெப்ரவரி 2018 |
|
ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
"மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில்
விளங்கும்."
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் (8: 22-23, 27-30)
அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி
நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு
நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே!
மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள்
யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக்
கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி
தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில்
தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க,
நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய
ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும்
கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும்
கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!
என் பெயர் இவ்விடத்தில் விளங்கும் என்று இக்கோவிலைப்பற்றி நீர்
சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக்
கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!
உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற
உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது
உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு
அருள்வீராக!''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திருப்பாடல் (84: 2-3. 4,9. 10. 11)
=================================================================================
ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில்
அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை
வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும்
கிடைத்துள்ளது.
-பல்லவி
4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள்
எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு
செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்!
-பல்லவி
10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில்
தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.
-பல்லவி
11 ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய்
இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய்
நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில்
என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
(7: 1-13)
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்
சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர்
தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக்
கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக்
கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள்
ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள்
இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை
நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால்
உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய
உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
"இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ
என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக்
கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது
வீண்" என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக்
கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம்
கூறினார். மேலும் அவர், "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை
வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். "உன் தந்தையையும்
தாயையும் மதித்து நட" என்றும் "தந்தையையோ தாயையோ சபிப்போர்
கொல்லப்பட வேண்டும்" என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!
ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, "நான் உமக்குத்
தரக் கடமைப்பட்டிருக்கிறது "கொர்பான்" ஆயிற்று; அதாவது "கடவுளுக்குக்
காணிக்கையாயிற்று" என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு
எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள்
பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி
விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்'' என்று
அவர்களிடம் கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
மூதாதையரின் மரபைவிட ஆண்டவருடைய கட்டளை
உயர்ந்தது!
முன்பொரு காலத்தில் அகிபா என்றொரு யூத ரபி இருந்தார். அவர் யூத
சட்ட திட்டங்களை மிக நுணுக்கமாகக் கடைபிடிக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர்
ஏதோ ஒரு காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சிறிதளவுக்கு ரொட்டித்
துண்டும் கொஞ்சூண்டு தண்ணீருமே கொடுக்கப்பட்டது. அது ஒரு மனிதர்
உயிர்வாழ்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், சில நாட்கள் கழித்து
சிறைக் காவலர்கள் அகிபா தங்கியிருந்த சிறைக்கூடத்தைப் போய்
பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால்,
அவர் சிறைக்கூட்டத்தில் நா வறண்டு செத்துக் கிடந்தார். ஏனென்று
பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்ணீரை
குடிக்கப் பயன்படுத்தாமல், கைகால் கழுவுவதற்கும் முகம் கழுவதற்குமே
பயன்படுத்தினார் என்று.
உயிர் போனால்கூடப் பரவாயில்லை, மூதாதையரின் மரபுகளை மீறக்கூடாது
என்று பிடிவாதமாய் இருந்த அந்த யூத ரபியை நினைத்து சிறைக் காவலர்கள்
நொந்து கொண்டார்கள்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, யூதர்கள் மூதாதையர் மரபுகளுக்கு எந்தளவுக்கு
முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்திருக்கின்றார்கள் என்பதை
மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின்
சீடருள் சிலர் கழுவாத கைகளால் உணவு உண்டதைப் பார்த்த பரிசேயரும்
எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரும் இயேசுவிடம்,
"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு
அருந்துவதேன்?" என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம்,
இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை (எசா
29: 13) எடுத்துக்கூறி, "நீங்கள் கடவுளின் கட்டளைகளைக்
கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று கடுமையாகச்
சாடுகின்றார்.
திருமறை நூல் முழுமைக்கும் அன்பும் இரக்கமும் மன்னிப்புதான்
கடவுளின் கட்டளையாக இருந்தது. யூதர்கள் அதிலும் குறிப்பாக பரிசேயர்களும்
மறைநூல் அறிஞர்களும் அதனை வசதியாக மறந்துவிட்டு, மூதாதையரின்
மரபுகளான சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவுதல், இன்னபிற
காரியங்களைச் செய்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டும்
என்று மக்களுக்குப் போதித்து வந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களை,
அவர்களுடைய வெளிவேடத்தனத்தை கடுமையாகச் சாடுகின்றார்.
இந்த நிகழ்வு நமக்கு இரண்டு உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஒன்று அர்த்தமற்ற, அடக்குமுறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட
யூதாதையர்களின் மரபினை ஒழித்துவிட்டு இயேசு கடவுளின் கட்டளையை
நிறுவவந்தார் என்பதாகும். கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு
திராட்சை இரசமாய் மாற்றுவதற்குப் பயன்படுத்திய ஆறு கல்தொட்டிகள்
கை கால்களைக் கழுவதற்காகவே, அதாவது மூதாதையரின் மரபினைப் பின்பற்றுவதர்காகவே
தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. இயேசுவோ அதனை மக்களின் பசியைப்
போக்குவதற்காகப் பயன்படுத்துக்கின்றார். இந்த நிகழ்வின் மூலமாகவும்
இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளின் மூலமாகவும் இயேசு மூதாதர்களின்
மரபுகளை விட ஆண்டவரின் கட்டளைதான் உயர்ந்தது என்று எடுத்துரைக்கின்றார்.
இதைப் புரிந்துகொள்ள பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்தான் இயேசு
சட்டங்களை அழிக்க வந்துவிட்டார் என்று அவருக்கு எதிராக சதித்திட்டம்
தீட்டத் தொடங்குகிறார்கள்.
இன்றைய நற்செய்தியின் மூலமாக இயேசு நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது
உண்மை, வெளிப்புறத்தூய்மை அல்ல, உட்புறத் தூய்மையே தேவை என்பதாகும்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களுடைய பார்வைக்கு மிகவும்
நேர்மையாளர்களாகவும் நீதிமான்களாகவும் காட்சியளித்தார்கள். அவர்களைப்
போன்று யாரும் கிடையாது என்பதுபோல் மக்களுக்குக் காட்சியளித்தார்கள்.
ஆனால், இதே பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்தான் கைம்பெண்களின்
வீடுகளை அபகரித்தார்கள்; இவர்கள்தான் ஏழை எளியவரை சட்டத்தின்
பேரில் ஒடுக்கிறார்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணான வாழக்கையை
வாழ்ந்ததினால் இயேசு அவர்களை
"வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள"
என கடுமையாகச் சாடுகின்றார்; இவர்கள் உதட்டினால் என்னைப் புகழ்கின்றார்,
ஆனால் இவர்களின் உள்ளமோ எங்கேயோ இருக்கின்றது என்ற இறைவாக்கினர்
எசாயாவின் இறைவார்த்தையை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு சாட்டையடி
கொடுக்கின்றார். ஆகையால், இயேசுவைப் பொறுத்தளவில் வெளிப்புறத்
தூய்மை மட்டுமல்ல, உட்புறத் தூய்மையும் தேவையான ஒன்று என்பதை
நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பல நேரங்களில் நாம் பரிசேயர், மறைநூல் அறிஞர்களைப் போன்று நம்முடைய
உடல் அழகை மெருகேற்ற சிரத்தை எடுத்துக் கொள்கின்ற அளவுக்கு உள்ள
அழகை மெருகேற்ற சிரத்தை எடுத்துக்கொள்ளாதது வேதனை அளிப்பதாக இருக்கின்றது.
ஆகவே, நற்செய்தியின் இயேசு நமக்கு சொல்கின்ற, எல்லாவற்றையும்
விட உயர்ந்த ஆண்டவரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்,
உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
இன்றைய திருப்பலி மறையுரை :
''இயேசு, 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள்
உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக்
கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது
வீண்' என்று எசாயா எழுதியுள்ளார் என்றார்'' (மாற்கு 7:6-7)
எசாயா இறைவாக்கினரின் கூற்றை (காண்க: எசா 29:13) மேற்கோள்
காட்டி இயேசு ஓர் அடிப்படையான உண்மையைப் போதிக்கின்றார். நம்
வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள் நம் உள்ளத்தில் மறைந்திருக்கின்ற
எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவது சரியல்ல. அதுபோலவே, சொற்களால் கடவுளைப்
போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய
முரண்பாட்டைத்தான் காட்டுகிறது. யூத சமய வழக்கங்களை நன்கு அறிந்திருந்த
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக
நடந்துகொண்டதை இயேசு கண்டிக்கிறார். கடவுளிடமிருந்து வந்த கட்டளைகளைக்
கருத்தாகக் கடைப்பிடிப்பதற்கு மாறாக, அவர்கள் ''மனித கட்டளைகளை''
(''மூதாதையர் மரபு'') உயர்த்திப்பிடித்தனர். இத்தகைய மரபுகளின்
நோக்கம் கடவுளின் கட்டளைகளை மக்கள் கடைப்பிடிக்க உதவுவதுதான்.
ஆனால் நடைமுறையிலோ ''மூதாதையர் மரபு'' மக்கள்மேல் தாங்கவியலா
பாரத்தைச் சுமத்தியது; உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற உறுதியோடு
கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதற்கு
மாறாக, கடவுளின் சட்டத்தைப் புறக்கணிக்க வழியாக மாறிவிட்டிருந்தது
அந்த ''மரபு''.
நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இதை
இயேசு இரண்டு எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குகின்றார். கை கழுவுவதும்
கிண்ணங்களைக் கழுவுவதும் மூதாதையர் மரபு மக்கள் மேல் திணித்த
சட்டம். பெற்றோருக்கு உதவுவது பிள்ளைகளின் கடமை என்பது கடவுள்
தந்த சட்டம். ஆனால் மூதாதையர் மரபுப்படி பெற்றோருக்குச் சேரவேண்டியதைக்
கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தாயிற்று என்று கூறிவிட்டு சிலர் தங்கள்
பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இவ்வாறு கடவுளின் சட்டம் புறக்கணிக்கப்பட்டது
சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். சட்டம் நம்மை நல்வழியில் இட்டுச்
செல்கின்ற வழிகாட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய நம்மை அடிமைப்படுத்துகின்ற
சக்தியாக, வெளிவேடத்திற்குத் தூண்டுதலாக அமைந்துவிடலாகாது.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
மூதாதையரின் மரபைவிட ஆண்டவருடைய கட்டளை உயர்ந்தது!
முன்பொரு காலத்தில் அகிபா என்றொரு யூத ரபி இருந்தார். அவர் யூத
சட்ட திட்டங்களை மிக நுணுக்கமாகக் கடைபிடிக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர்
ஏதோ ஒரு காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சிறிதளவுக்கு ரொட்டித்
துண்டும் கொஞ்சூண்டு தண்ணீருமே கொடுக்கப்பட்டது. அது ஒரு மனிதர்
உயிர்வாழ்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், சில நாட்கள் கழித்து
சிறைக் காவலர்கள் அகிபா தங்கியிருந்த சிறைக்கூடத்தைப் போய்
பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால்,
அவர் சிறைக்கூட்டத்தில் நா வறண்டு செத்துக் கிடந்தார். ஏனென்று
பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்ணீரை
குடிக்கப் பயன்படுத்தாமல், கைகால் கழுவுவதற்கும் முகம் கழுவதற்குமே
பயன்படுத்தினார் என்று.
உயிர் போனால்கூடப் பரவாயில்லை, மூதாதையரின் மரபுகளை மீறக்கூடாது
என்று பிடிவாதமாய் இருந்த அந்த யூத ரபியை நினைத்து சிறைக் காவலர்கள்
நொந்து கொண்டார்கள்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, யூதர்கள் மூதாதையர் மரபுகளுக்கு எந்தளவுக்கு
முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்திருக்கின்றார்கள் என்பதை
மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின்
சீடருள் சிலர் கழுவாத கைகளால் உணவு உண்டதைப் பார்த்த பரிசேயரும்
எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரும் இயேசுவிடம்,
"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு
அருந்துவதேன்?" என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம்,
இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை (எசா
29: 13) எடுத்துக்கூறி, "நீங்கள் கடவுளின் கட்டளைகளைக்
கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று கடுமையாகச்
சாடுகின்றார்.
திருமறை நூல் முழுமைக்கும் அன்பும் இரக்கமும் மன்னிப்புதான்
கடவுளின் கட்டளையாக இருந்தது. யூதர்கள் அதிலும் குறிப்பாக பரிசேயர்களும்
மறைநூல் அறிஞர்களும் அதனை வசதியாக மறந்துவிட்டு, மூதாதையரின்
மரபுகளான சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவுதல், இன்னபிற
காரியங்களைச் செய்தல் போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டும்
என்று மக்களுக்குப் போதித்து வந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களை,
அவர்களுடைய வெளிவேடத்தனத்தை கடுமையாகச் சாடுகின்றார்.
இந்த நிகழ்வு நமக்கு இரண்டு உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஒன்று அர்த்தமற்ற, அடக்குமுறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட
யூதாதையர்களின் மரபினை ஒழித்துவிட்டு இயேசு கடவுளின் கட்டளையை
நிறுவவந்தார் என்பதாகும். கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு
திராட்சை இரசமாய் மாற்றுவதற்குப் பயன்படுத்திய ஆறு கல்தொட்டிகள்
கை கால்களைக் கழுவதற்காகவே, அதாவது மூதாதையரின் மரபினைப் பின்பற்றுவதர்காகவே
தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. இயேசுவோ அதனை மக்களின் பசியைப்
போக்குவதற்காகப் பயன்படுத்துக்கின்றார். இந்த நிகழ்வின் மூலமாகவும்
இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளின் மூலமாகவும் இயேசு மூதாதர்களின்
மரபுகளை விட ஆண்டவரின் கட்டளைதான் உயர்ந்தது என்று எடுத்துரைக்கின்றார்.
இதைப் புரிந்துகொள்ள பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்தான் இயேசு
சட்டங்களை அழிக்க வந்துவிட்டார் என்று அவருக்கு எதிராக சதித்திட்டம்
தீட்டத் தொடங்குகிறார்கள்.
இன்றைய நற்செய்தியின் மூலமாக இயேசு நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது
உண்மை, வெளிப்புறத்தூய்மை அல்ல, உட்புறத் தூய்மையே தேவை என்பதாகும்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களுடைய பார்வைக்கு மிகவும்
நேர்மையாளர்களாகவும் நீதிமான்களாகவும் காட்சியளித்தார்கள். அவர்களைப்
போன்று யாரும் கிடையாது என்பதுபோல் மக்களுக்குக் காட்சியளித்தார்கள்.
ஆனால், இதே பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்தான் கைம்பெண்களின்
வீடுகளை அபகரித்தார்கள்; இவர்கள்தான் ஏழை எளியவரை சட்டத்தின்
பேரில் ஒடுக்கிறார்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணான வாழக்கையை
வாழ்ந்ததினால் இயேசு அவர்களை "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்" என
கடுமையாகச் சாடுகின்றார்; இவர்கள் உதட்டினால் என்னைப் புகழ்கின்றார்,
ஆனால் இவர்களின் உள்ளமோ எங்கேயோ இருக்கின்றது என்ற இறைவாக்கினர்
எசாயாவின் இறைவார்த்தையை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு சாட்டையடி
கொடுக்கின்றார். ஆகையால், இயேசுவைப் பொறுத்தளவில் வெளிப்புறத்
தூய்மை மட்டுமல்ல, உட்புறத் தூய்மையும் தேவையான ஒன்று என்பதை
நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பல நேரங்களில் நாம் பரிசேயர், மறைநூல் அறிஞர்களைப் போன்று நம்முடைய
உடல் அழகை மெருகேற்ற சிரத்தை எடுத்துக் கொள்கின்ற அளவுக்கு உள்ள
அழகை மெருகேற்ற சிரத்தை எடுத்துக்கொள்ளாதது வேதனை அளிப்பதாக இருக்கின்றது.
ஆகவே, நற்செய்தியின் இயேசு நமக்கு சொல்கின்ற, எல்லாவற்றையும்
விட உயர்ந்த ஆண்டவரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்,
உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- Fr. Maria Antonyraj, Palayamkottai.
|
|