|
23 டிசம்பர் 2017 |
|
திருவருகைக்காலம்
மூன்றாம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4,
4:5-6
"இதோ ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர். எனக்குமுன் வழியை
ஆயத்தம் செய்வார். அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர்.
திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்." என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஆனால், அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர். யார்? அவர்
தோன்றும் போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின்
நெருப்பைப்போலவும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும்
இருப்பார்.
அவர் புடமிடுபவர். போலும் வெள்ளியைத் தூய்மைப் படுத்துபவர்.
போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரதை் தூய்மையாக்கிப்
பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார்.
அவர்.களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள்.
அப்பொழுது பண்டையக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்ததுபோல்
யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு
உகந்தனவாய் இருக்கும்.
இதோ! பெரிதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன்
, இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின்
உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப்
பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திருப்பாடல்கள் 25: 4-5, 8-9, 10 14
=================================================================================
பல்லவி: நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள்
மீட்பு நெருங்கி வருகின்றது."
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக்
கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்.
ஏனெனில் , நீரே என் மீட்பராம் கடவுள்; பல்லவி
ஆண்டவர். நல்லவர்.; நோ்மையுள்ளவர்.; ஆகையால் அவர் பாவிகளுக்கு
நல்வழியைக் கற்பிக்கின்றர். ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்கு
முறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும்
உண்மையும் உள்ளனவாய் விளங்கும். பல்லவி
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர். எவரோ அவருக்குத் தாம்
தோ்ந்துகொள்ளும் வழியை அவர். கற்பிப்பார். ஆண்டவன் அன்புறவு
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத்
தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி
================================================================================
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! அனைத்துலகின் அரசரே! திருத்தலங்களின்
மூலைக்கல்லே வந்து நீர். மண்ணிலிருந்து உருகொடுத்த மனிதனை
காப்பாற்றும்.. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 1: 57--66
அக்காலத்தில் எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது.
அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார். என்பதைக்
கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு
சேர்ந்து மகிழ்ந்தனர்.
எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்;
செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.
ஆனால் , அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு
யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.
அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர். எவரும் இல்லையே"
என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?"
என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.
அதற்கு அவர். எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின்
பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.
அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக்
கேள்விப் பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.
கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில்
இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று
சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில், அக்குழந்தை
ஆண்டருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்ற கடவுள் நம் கடவுள்
இடைக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்து வந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்
முரேடஸ் (Muretus) என்பவர். தனது மருத்துவச் செலவுகளைக்கூட எதிர்கொள்ள
இயலாத ஏழை.
ஒருநாள் அவர் மயக்கமுற்று கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த ஒரு
மருத்துவக் குழு அவரைத் தங்களுடைய மருத்துவமனைக்குத் தூக்கிச்
சென்று, அவருடைய உடலில் மருத்துவ சோதனை முயற்சிகளை மேற்கொள்ளலாம்
என்று திட்டம் தீட்டியது அதனாலே அக்குழு அவரை மருத்துவமனைக்குத்
தூக்கிச் சென்றது.
அந்தக் குழுவினர் முரேடசை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு
போகும் வழியில், அவருக்கு ஒன்றும் புரியக்கூடாது என்பதற்காக
இலத்தின் மொழியிலே பேசிக்கொண்டு போனார்கள். "ஒன்றுக்கும் ஆகாத
இந்த மனிதனுடைய உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதைத்
தவிர, வேறு ஒரு பயனும் இல்லை" என்று சொல்லி சிரித்துக்கொண்ட
போனார்கள். இதைக் கேட்டு மயக்கமுற்ற நிலையில் இருந்த முரேட்ஸ்
எழுந்து அமர்ந்து, "எல்லாருக்குமாக இயேசு தன்னுடைய உடலைத்
தந்திருக்கும்போது யாரையும் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று
சொல்லி இழிவாகப் பேசாதீர்கள்" என்று இலத்தின் மொழியிலே
பேசிவிட்டு மீண்டுமாகப் படுத்துகொண்டார்.
இலத்தின் மொழி தெரியாது என்று எல்லாவற்றையும் இலத்தின்
மொழியிலே பேசிக்கொண்ட மருத்துவக் குருவிற்கு முரேடசின் இத்தகைய
செயல் பேரிடியாய் அமைந்தது.
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றும்
தெரியாது என்றிருந்த அந்த மருத்துவக் குழுவிற்கு முரேட்டசின்
செயல் உண்மையிலே பேரிடிதான்.
நற்செய்தி வாசகத்தில் மரியா கடவுளை நோக்கி எழுப்பிய
புகழ்ச்சிப் பாடலை, நன்றிப் பாடலைக் குறித்து வாசிக்கின்றோம்.
மரியாவின் பாடல் எந்தளவுக்கு முக்கியமானது. அதனுள்ளே
பொதிந்திருக்கும் அர்த்தங்கள் என்ன என்று இப்போது சிந்தித்துப்
பார்ப்போம்.
மரியா பாடிய புகழ்ச்சிப் பாடல் 1 சாமுவேல் புத்தகம் 1 முதல் 10
வரை வரும் வசனங்களோடு ஒத்துப் போவதை நம்மால் உணர முடிகின்றது.
இருந்தாலும் மரியாவின் பாடலில் நிறைய புரட்சிகார சிந்தனைகள்,
கருத்துகள் இருப்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.
விவிலிய அறிஞர்கள் மரியாவின் பாடல் மூன்றுவிதமான புரட்சிகரமான
சிந்தனைகள் உள்ளடக்கி இருப்பதாகச் சொல்வார்கள். அவை என்னென்ன,
அவற்றின் வழியாக நாம் அறிந்துகொள்வது என்ன என்று இப்போது
சிந்தித்துப் பார்ப்போம்.
அறப்புரட்சி (Moral Revolution). மரியாவின் பாடலில் வரும்
முதல் புரட்சிகாரமான சிந்தனை அறம் சார்ந்ததாக இருக்கின்றது.
"உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை அவர் சிதறடித்து
வருகின்றார்" என்ற மரியாவின் வார்த்தைகள் அதைத் தான் நமக்கு
எடுத்துக்கூறுகின்றன. இறைவனுக்கு உகந்த உள்ளம் தாழ்ச்சி
நிறைந்த உள்ளம். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தில் இறைவன் என்றுமே
குடிகொண்டிருப்பார். தாழ்ச்சியில்லாமல், ஆணவத்தோடு இருப்போரின்
உள்ளத்தில் இறைவன் ஒருபோதும் இருப்பதில்லை. அவர்கள் எப்போதும்
கடவுளை விட்டு வெகுதொலைவில் இருப்பார்கள். இப்படிப்பட்ட
சிந்தனைகளை உள்ளடக்கி, அறப் போராட்டத்தை, புரட்சியை
முன்னெடுப்பதாக இருக்கின்றது மரியாவின் பாடல்.
சமூகப் புரட்சி (Socila Revolution). மரியாவின் பாடலில்
வெளிப்படும் இரண்டாவது புரட்சிகரமாக சிந்தனை சமூகப் புரட்சி
தொடர்பானதாகும். வலியோரை அரியணையிலிருந்து தூக்கி
விடுகின்றார், தாழ்ந்தோரை அவர் உயர்த்துகின்றார் என்ற
வார்த்தைகள் அதனை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. இந்த
உலகம் வலியோரை அரியணையில் அமர்த்துகின்றது. ஆனால் ஆண்டவரோ
எளியோரை, தாழ்ந்தோரை அரியணையில் அமர்த்தி, அழகு
பார்க்கின்றவராக இருக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் கொண்டுவரும்
இத்தகைய மாற்றம் இன்றைக்கு நாம் வாழும் இந்த சமூகத்திற்கு
மிகவும் தேவையாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலை
உருவாகின்றபோது எல்லாரும் எல்லா நலன்களையும் பெறுவது உறுதி.
பொருளாதாரப் புரட்சி (Economical Revolution). மரியாவின்
பாடலில் வெளிப்படும் மூன்றாவது புரட்சிகர சிந்தனை பொருளாதாரம்
தொடர்பானது. பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார், செல்வந்தரை
வெறுங்கையராய் அனுப்பி விடுவார் என்ற வார்த்தைகள் ஆண்டவராகிய
கடவுள் இந்த உலகத்தில் நிலவி வருகின்ற ஏழை பணக்காரன் என்ற
நிலையை மாற்றிக் காட்டுவார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த உலகில் செல்வர் மேலும் செல்வர் ஆகின்றார்கள். ஏழைகள்
மிகவும் ஏழைகளாக மாறுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலை
இறைவனுக்கு ஒருபோதும் ஏற்றது இல்லை. எனவே அவர் இந்நிலை
மாற்றிக் காட்டுவார் என்கிறார் மரியா.
ஆகவே, உலகில் அற, சமூக மற்றும் பொருளாதாரப் புரட்சிகளைக்
கொண்டு வரும் இறைவனை நாம் மரியாவைப் போன்று போற்றிப்
புகழ்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
"வீரபத்திரன் துணை... நிகழும்
மங்களகரமான..."
என்று தொடங்கும் திருமண பத்திரிக்கை ("அழைப்பிதழ்" என்பது புது
வார்த்தை)
எல்லாம் பெரும்பாலும், "தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ
வருகைதந்து" என்று நிறைவடையும்.
ஒரு பேச்சுக்குத்தான், இல்லை ஒரு எழுத்துக்குத்தான், அப்படி எழுதுகிறார்கள்.
இதற்காக, நம் ஃபேஸ்புக் நண்பர்கள் 2000 பேரையும்
கூட்டிக்கொண்டு போனால் என்ன ஆகும்?
எலிசபெத்தின் சுற்றமும், நட்பும்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின்
மையம்.
"ஆண்டவர் எலிசபெத்துக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக்
கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு மகிழ்ந்தனர்."
இன்றைய நற்செய்தியில் வரும் எலிசபெத்தின் சுற்றத்தார்கள்
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறார்கள்.
அ. குழந்தை பிறந்தவுடன் தாயுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்
ஆ. 'என்ன பெயர் வைக்கலாம்?' என ஆர்வம் காட்டுகின்றனர்
இ. 'இந்த குழந்தை எப்படிப்பட்டதா இருக்குமோ?' என
ஆச்சர்யப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சுற்றத்தார் அமைவது மிக அபூர்வம். ஒரு
குழந்தையின் வளர்ச்சிக்கு குடும்பம் எப்படி அவசியமோ,
அதேபோலத்தான் சுற்றமும் அவசியம். தன் சுற்றத்தில், அக்கம்
பக்கத்தில் தன் குழந்தைகளுக்கு வகுப்பு தோழர்கள் அல்லது
தோழிகள் இருந்ததால், தங்களின் வெளியூர் வேலைக்கு "நோ" சொன்ன
பெற்றோர்களை அறிவேன்.
மற்றொரு எக்ஸ்ட்ரீம் என்னவென்றால், சில வீடுகளில் ஒரு
குறிப்பிட்ட ஜன்னலைத் திறக்கவே மாட்டார்கள். ஏன்? திறந்தால்
அடுத்த வீட்டுக்காரரின் முகம் தெரியும். அல்லது குரல்
கேட்கும். இப்படியாக நாம் அறவே வெறுக்கும் சுற்றத்தார்களும்
இருக்கிறார்கள்.
இது நம் மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் கூட பொருந்தும்.
நம் சுற்றத்து மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை. நம்
சுற்றத்து நாடுகள் எந்நேரம் நமக்கு அச்சுறுத்தலாகவே
இருக்கின்றன.
சுற்றமும், நட்பும் என்னைப் பொறுத்தவரையில் நாம் சாப்பாட்டில்
போடும் உப்பு மாதிரி. உப்பு போடாமலும் சாப்பிடலாம். உப்பு
சரியான அளவில் இருந்தால் தான் அது ருசி. இல்லையென்றால் அது
சாப்பாட்டையே கெடுத்துவிடும்.
"மகிழ்ச்சி," "ஆர்வம்," "ஆச்சர்யம்" - இந்த மூன்று பண்புகளை
சக்கரியா-எலிசபெத்தின் சுற்றம் நமக்குக் கற்றுத்தருகிறது.
நமக்கு அருகில் இருப்பவர் வாழ்வில் நல்லது நடக்கும்போது அது
கண்டு பொறாமைப் படாமல், அவர்களோடு ஒப்பிட்டு சோகத்தை
வருவித்துக்கொள்ளாமல், அவர்களோடு மகிழ்ந்திருப்பது.
"குழந்தைக்கு என்ன பெயரிடலாம், உம் விருப்பம் என்ன?" என்று
சக்கரியாவிடம் சைகை காட்டிக் கேட்கின்றனர். ஆக, சக்கரியாவின்
மொழியில் பேச அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். சக்கரியாவின்
நிலைக்கு இறங்கி வருகின்றனர். மேலும், குழந்தையின்
பெயர்சூட்டும் நிகழ்வில் முழுமையாகப் பங்கேற்க ஆர்வம்
காட்டுகின்றனர். இன்று என் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின்மேல்
எனக்கு எந்த அளவு ஆர்வம் இருக்கிறது? "ஓ! இது தெரியாதா?" என
நான் அவசரப்படுகிறேனா? அல்லது ஆர்வம் காட்டுகிறேனா?
ஆச்சர்யம் - "இந்தக் குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்ற
இவர்களுடைய வியப்பில் இவர்கள் கடவுளின் பிரசன்னத்தைக்
குழந்தையில் கண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.
"நல்ல வேலி நல்ல சுற்றத்தை உருவாக்கிறது" என்பதும்,
"நல்ல சுற்றத்தார் உனக்கு அமைய நீ நல்ல சுற்றத்தாராய் இரு"
என்பதும் ஆங்கில பழமொழிகள்
எலிசபெத்துக்கு அமைந்தது நல்ல சுற்றமும், நட்பும்.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பிறப்பு!
பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. ஒரு கிராமத்துப் பள்ளி
ஆசிரியை தன் மாணவர்களை எச்சரிக்கை செய்யும் பொருட்டு, நீங்கள்
பனியில் அதிக நேரம் விளையாடக் கூடாது. சளி, நிமோனியா காய்ச்சல்
போன்றவை உங்களுக்கு வரலாம். எனக்கு ஒரு தம்பி இருந்தான். ஒரு
நாள் அவன் பனிச்சறுக்கு வண்டியில் ஏறி விளையாடச் சென்றான்.
நீண்ட நேரம் பனியில் விளையாடியதால் அவனுக்கு நிமோனியாக்
காய்ச்சல் வந்து மூன்று நாட்களில் இறந்து விட்டான் என்று
சொன்னாள்.
அப்போது கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு குட்டிப் பையன்
எழுந்து கேட்டான், அவனுடைய பனிச்சறுக்கு வண்டி இப்பொழுது
எங்கே இருக்கின்றது? என்று.
அதுவரைக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்த ஆசிரியைக்கு
அதன்பிறகு பேச வார்த்தைகள் வரவில்லை.
குழந்தைகள் எப்போதும் வெகுளித்தனத்தோடும், கள்ளம்கபடற்ற
உள்ளத்தோடும் நடந்துகொள்வார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு
சான்று. இப்படி கள்ளம் கபடு இல்லாத, கடவுளின் ஆவியால்
நிரப்பப்பட்ட திருமுழுக்கு யோவானின் பிறப்பைக் குறித்துத்தான்
இன்றைய நாளின் நற்செய்தி வாசகமாக நாம் படிக்கின்றோம்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு பல முக்கியமான சிந்தனைகளை
நமக்கு எடுத்துக் கூறுகின்றது, அவை என்னென்ன என்று இப்போது
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு, கடவுளிடம் ஒரு வரத்திற்காக
நாம் இடைவிடாது, மன்றாடுகின்றபோது அந்த ஜெபம் நிச்சயமாகக்
கேட்கப்படும் என மிக முக்கியமான செய்தியை எடுத்துக்கூறுவதாக
இருக்கின்றது. திருமுழுக்கு யோவானின் பெற்றோரான செக்கரியாவும்,
எலிசபெத்தும் குழந்தை வரத்திற்காக கடவுளிடம் நீண்டநாட்களாகக்
கேட்டு வந்தார்கள். அந்த சமயத்தில்தான் வானதூதர் கபிரியேல்
செக்கரியாவிற்கு தோன்றி, செக்கரியா, அஞ்சாதீர், உமது
மன்றாட்டு கேட்கப்பட்டது. உம மனைவி எலிசபெத்து ஒரு மகனைப்
பெற்றெடுப்பார் என்கிறார். வானதூதர் கபிரியேல் சொன்னது போன்று
எலிசபெத் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றேடுக்கின்றார் ;
அவருக்கு யோவான் என்று பெயர் சூட்டுகின்றார்.
பொதுவாக யூத சமூகத்தில் ஒரு ஆண் குழந்தையின் பிறப்பு வெகு
விமரிசையாகக் கொண்டாடப்படும், ஆண் குழந்தையின் பிறப்பின் போது
இசைக்கருவிகள் மீட்டப்பட்டு கொண்டாடப்படும். அதே நேரத்தில்
பெண் குழந்தையின் பிறப்போ ஒரு துக்ககரமான ஒன்றாகப்
பார்க்கப்படும். இசைக்கருவிகள் மீட்டப்படுவதில்லை; மக்களும்
மகிழ்ந்து ஆரவாரம் செய்வதுமில்லை. ஆனால் செக்கரியா மற்றும்
எலிசபெத்து தம்பதியினருககுப் பிறந்ததோ ஓர் ஆண்வாரிசு அதுவும்
அவர்களுடைய முதிர்ந்த வயதில். எனவே திருமுழுக்கு யோவானின்
பிறப்பில் அவருடைய பெற்றோர்கள் மட்டும் கிடையாது அவரது அக்கம்
பக்கத்து வீட்டாரும் மகிழ்ந்து பெறுவகை கொள்கின்றார்கள்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு நமக்கு இன்னொரு செய்தியையும்
உணர்த்துகின்றது. அது வேன்றோன்றும் இல்லை. அது அவருக்கு
சூட்டப்பட்ட பெயராகும். வழக்கமாக யூதர்கள் தங்களுடைய
பிள்ளைகளுக்கு பெற்றோர்களுடைய பெயர்களை வைப்பார்கள் ஆனால்
திருமுழுக்கு யோவானின் பிறப்பில் வேறொன்று நடந்தது. அது
என்னவென்றால் அவருக்குச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். எலிசபெத்து
முன்மொழிந்த பெயரும் செக்கரியா எழுது பலகையில் எழுதிய பெயரும்
ஒன்றாக இருக்கின்றது. இதனால் அங்கே திரண்டிருந்த மக்கள்
அனைவரும் வியந்து போய் நிற்கின்றார்கள்.
திருமுழுக்கு யோவானின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று
சிந்தித்துப் பார்ப்பதும் நம்முடைய கடமையாகும். யோவான் என்றால்
கடவுளின் கொடை என்பதாகும். திருமுழுக்கு யோவான் அவருடைய
பெற்றோருக்கு மிகப்பெரிய கொடையாகவே அமைந்தார் என்று நாம்
புரிந்துகொள்ளலாம்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு
என்ன செய்தியை கற்றுத் தருகின்றது என்று சிந்தித்துப்
பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இடைவிடாது மன்றாட
வேண்டும் என்ற மிக முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கிறது.
பல நேரங்களில் நாம் இறைவனிடத்தில் ஒன்றைக் கேட்கின்றோம்.
ஒருவேளை அது கிடைக்கவில்லை என்றால், கடவுளை வழிபடாமல்
போய்விடுகின்றோம் அல்லது கடவுளிடம் கேட்பதை
விட்டுவிடுகின்றோம். ஆனால் திருமுழுக்கு யோவானின் பெற்றோரோ
அப்படியில்லை அவர்கள் இடைவிடாது இறைவனிடம் ஜெபித்து
வந்தார்கள். அதனாலேயே இறைவனிடமிருந்து ஆசிரைப் பெற்றார்கள்.
நாமும் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடும்போது இறைவனும்
நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்த்து நம்முடைய வாழ்வினை
ஆசிர்வதிப்பார்.
அடுத்ததாக குழந்தைகளுக்கு சூட்டுப்படும் பெயர் ஏனோதானோ என்று
இல்லமால், இறைவனின் அன்பை, அவரது இரக்கத்தை எடுத்துரைப்பதாக
இருக்கவேண்டும். அப்படியிருந்தால் அதுவே மிகப்பெரிய
ஆசிர்வாதமாகும்.
எனவே நாம் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம், குழந்தைகளுக்கு
நாம் சூட்டும் பெயர் இறைவனுக்கு உகந்தாக இருக்கச் செய்வோம்.
இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம். |
|