Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ செபதேயுவின் மகன் புனிதர் யாக்கோபு ✠ (St. James, Son of Zebedee)
   
நினைவுத் திருநாள் : (ஜூலை / july- 25)

✠ செபதேயுவின் மகன் புனிதர் யாக்கோபு ✠ (St. James, Son of Zebedee)

திருத்தூதர் மற்றும் மறைசாட்சி:
(Apostle and martyr)

பிறப்பு: கி. பி. 1ம் நூற்றாண்டு
பெத்சாயிதா, யூதேயா, ரோம பேரரசு
(Bethsaida, Judaea, Roman Empire)

இறப்பு: கி. பி. 44
ஜெருசலேம், யூதேயா, ரோம பேரரசு
(Bethsaida, Judaea, Roman Empire)

ஏற்கும் சமயம்:
எல்லா கிறிஸ்தவ உட்பிரிவுகளும்
(All Christianity)

முக்கிய திருத்தலங்கள்:
சந்தியாகு டி கம்போஸ்டேலா பேராலயம், கலீசியா (ஸ்பெயின்), புனித ஜேம்ஸ் பேராலயம், ஜெருசலேம், ஆர்மேனியன் குவார்ட்டர் (இஸ்ரயேல்)
(Cathedral of Santiago de Compostela, Galicia (Spain), Cathedral of St. James, Jerusalem, Armenian Quarter (Israel)

நினைவுத் திருவிழா: ஜூலை 25

பாதுகாவல்:
இடங்கள் (Places):
கலீசியா (Galicia), குவாத்தமலா (Guatemala), நிக்கரகுவா (Nicaragua), ஸ்பெய்ன் (Spain), குயாகில் (Guayaquil), பேடிஸ் ஆலயம் (Betis Church), பம்பங்கா (Pampanga), படியான் (Badian), சோகோட் (Sogod), செபு (Cebu), பிலிப்பைன்ஸ் (Philippines) மெக்சிகோ நாட்டின் சில இடங்கள் (Some places of Mexico)

தொழில்கள் (Professions):
கால்நடை மருத்துவர்கள் (Veterinarians), குதிரையேற்றம் (Equestrians), விலங்கின் மென்மயிரால் பொருட்களைச் செய்து விற்பவர்கள் (Furriers), தோல் பதப்படுத்துபவர்கள் (Tanners), மருந்தாளுநர்கள் (Pharmacists), சிப்பி மீனவர்கள் (Oyster Fishers), மரம் செதுக்குபவர்கள் (Woodcarvers)

செபதேயுவின் மகன் யாக்கோபு, (James, son of Zebedee) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர் ஆவார். முதன்முதலில் மறைசாட்சியாக மரித்த திருத்தூதர் இவரேயாவார் என்று மரபுகள் கூறுகின்றன. இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர் (Zebedee and Salome). இவர் திருத்தூதரான புனித யோவானின் (John the Apostle) சகோதரர் ஆவார். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து (James, son of Alphaeus) இவரைப் பிரித்து காட்ட, இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும், இயேசுவின் சகோதரர் யாக்கோபு (James the brother of Jesus) என்றும் அழைக்கப்படுகின்றார்.

யாக்கோபு, இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி நூல்களின்படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு பெறும்போது தங்களின் தந்தையோடு கடற்கரையில் இருந்தனர். இயேசுவின் தோற்றம் மாறியதை (Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார்.
சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபுவும் யோவானும் இயேசுவிடம், ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.

அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். திருத்தூதர் பணிகள் 12:2ன்படி ஏரோது அரசன், யாக்கோபுவை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.

இவர் ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயற்சி புனித யாக்கோபுவின் பாதை என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி முயற்சி நடுக்காலம் முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது.
இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூலை மாதம், 25ம் நாளன்று, கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் ஏப்ரல் மாதம், 30ம் நாளன்று, கொண்டாடப்படுகின்றது.

ஸ்பெயினில்:
பாரம்பரியப்படி கி.பி. 40ம் ஆண்டு, ஜனவரி மாதம், இரண்டாம் நாளன்று, இவருக்கு ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக் கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி கிடைத்ததாகவும், அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது. மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம் அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா