75) இறை மக்கள் யாவரும் |
இறை மக்கள் யாவரும் கூடிடுவோம் இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம் இறைபணிதனைச் செய்ய அவர் அழைத்தார் அவர் புகழ் பாடிடுவோம் - 2 அன்பாலே இறைவன் தன்னைக் கொடுத்தார் அருளாலே நம்மை அரவணைத்தார் - 2 நாமவர் மந்தையின் ஆடுகளாய் - 2 பலியாகத் தம்மை தெரிந்தெடுத்தார் அவர் அழைத்தார் அன்பில் பணித்தார் இறை அரசு பெருகிடவே குருவோடு சேர்ந்து நாம் ஆலயத்தில் குடும்பமாய் பலிதனைச் செலுத்திடுவோம் - 2 இறைமகன் உடலை நாம் உண்டிடுவோம் -2 இறைமக்கள் என நாம் வாழ்ந்திடுவோம் அவர் அன்பின் குரல் நாம் கேட்டிடுவோம் இறை அரசைப் பரப்பிடுவோம் |