32) ஆலயமணிகள் ஒலிக்கின்றதே |
ஆலயமணிகள் ஒலிக்கின்றதே வாருங்கள் இறைமக்களே அருள் மழை இங்கு பொழிகின்றதே வாருங்கள் இறைமக்களே இது இறைவனின் ஆலயம் இங்கு அமைதியைக் காணலாம் நம்மைக் காக்கும் இறைவன் வாழும் இறைவார்த்தை வழியாக இயேசு பேசுகிறார் இறை விருப்பம் எதுவென்று தெளிவாய் காட்டுகின்றார் உயிர்தரும் உணவின் வடிவினிலே தன்னையே தருகின்றார் பலி தரும் பொருளின் வழியினிலே வாழ்ந்திட அழைக்கின்றார் உடலும் மனமும் இறையில் கலந்திட சபை நடுவே அவர் பிரசன்னம் என்றும் நிலைத்திருக்கும் சிறுமந்தையே கலங்காதே அவர் துணை நமக்கிருக்கும் இருளும் புயலும் சூழ்ந்தாலும் கலங்கிடத் தேவையில்லை ஒளியாய் கரம் தந்து உதவிடவே அவரின்றி யாருமில்லை உறவில் மகிழ்ந்து பலியில் இணைந்திட |