16) அன்பின் விழுதுகள் |
அன்பின் விழுதுகள் படர்ந்திடவே மனித மாண்புகள் உயிர்த்திட மனச் சிறையின் கதவுகள் உடைந்திடவே இறை உணர்வுகள் வாழட்டும் - 2 (2) வழிபாட்டில் காணும் உணர்வுகள் - நம் வாழ்வினில் நதியாய் பாயட்டும் (2) வேதத்தில் வாழும் பண்புகள் - நம் மனதினில் வாழ்வாய் அமையட்டும் புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம் (2) இனிவரும் நாளில் புதுவாழ்வில் இறை இன்பம் காண்போம் வார்த்தைகள் பேசும் உண்மைகள் - நம் இதயத்தில் உயிராய் வாழட்டும் (2) உரிமையில் பூத்த உறவுகள் - புதுக் கவிதைகள் பாடி மகிழட்டும் புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம் (2) இனிவரும் நாளில் புதுவாழ்வில் இறை இன்பம் காண்போம் |