| திருவிருந்துப்பாடல்கள் | வாரும் தெய்வ வள்ளலே |
|
வாரும் தெய்வ வள்ளலே வரங்கள் வழங்க வாருமே தாரும் அமைதி, நம்பிக்கையை தாரும் அன்பை, மகிழ்ச்சியை நன்றே நிகழும் என்றே நம்பி வாழும் மனம் ஒன்று தா அன்றாடம் இருள் வந்து நின்றாலுமே- அது சென்றோடும் பகலவன் வந்தால் போதும் வருவாய், ஒளியே கதிரே, சுடரே, எம் நெஞ்சில் பிறப்பாயே அமைதி தானே நியதி என்று கூறும் நிலை இங்கு தா போர் எல்லாம் தீரட்டும் பாரெங்குமே - பகைத் தீ எல்லாம் ஓயட்டும் ஊரெங்குமே இறைவா, வருவாய் இதயம் நிதமும் ஏங்கும் அமைதியைத் தா அன்பே வாழ்க்கை என்றால் இன்பம் தானே பயணத்திலே அன்பாலே அகிலத்தை நாம் ஆளுவோம் -மனம் மகிழ்ந்தாட உறவாடி நாம் வாழுவோம் அன்பே, வருவாய் அழியா, குறையாப் பேரன்பைத் தருவாயே |