881-வாழ்வது நானல்ல - எனக்குள் |
வாழ்வது நானல்ல எனக்குள் வாழ்வது கிறீஸ்துவே வேறென்ன நான் கேட்பேன் உன் பிரசன்னம் என் வாழ்வில் கால்கள் தடுமாறும் வேளையில் - உன் கரம் பிடித்து காத்து நின்றாய் சுமை சுமந்த என் வாழ்வை அரவணைத்து தேற்றினாய் உன் நாமம் பாடுவேன் - உன் அன்பை என் சொல்வேன் என்றென்றும் மகிழ்ந்திடுவேன் ஆ.ஆ. என்றென்றும் மகிழ்ந்திடுவேன் கருவறையில் என்னைக் குறித்தாய் - உன் திருக்கரத்தில் எனைப் பொறித்தாய் இருள் சூழ்ந்த எந்தன் வாழ்வை அருள் ஒளி தந்து காக்கின்றாய் உன் நாமம் பாடுவேன் - உன் அன்பை என் சொல்வேன் என்றென்றும் மகிழ்ந்திடுவேன் ஆ.ஆ. என்றென்றும் மகிழ்ந்திடுவேன் |