842-தேவன் என்னைத் தேடி |
தேவன் என்னைத் தேடி வரும் நேரம் ஆனந்தக் கவிதை இதயத்தில் அரங்கேறும் (2) அந்த இதயம் பாடும் ஒரு கீதம் இந்த உலகம் காணும் புது உதயம் (2) வானம் பார்க்கும் பூமியைப் போல் - என் மனமும் உம் முகம் பார்க்கின்றதே (2) அருளின் முகிலே வா அன்பின் மழையே வா நினைவினில் நிதம் நான் வாழ்ந்திடவே நிறைவினில் உறவுகள் மலர்ந்திடவே (2) நீரினை நாடும் மான்களைப் போல - என் நெஞ்சம் உன்னகம் தேடுதே (2) நீதியின் கதிரே வா தீதி;ல்லா திருவே வா இழப்பதில் இன்பம் கண்டிடவே இகமெல்லாம் ஒன்றெனக் கொண்டிடவே (2) |