744-என் ஆயன் யேசு |
என் ஆயன் யேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது என் தவம் நான் செய்தேன் எந்நன்றி நான் சொல்வேன் - 2 பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன் பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும் அணைத்திடவே வந்தார் ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை மாற்றிடவே வந்தார் - 2 நண்பனுக்காய் தரும் உயிர்த்தியாகம் மிஞ்சும் நட்பெதுவும் உளதோ என்னன்பர் இயேசு சிலுவையில் மரித்து எனைக்காத்தார் எனச் சொல்லவோ 2 |