காணிக்கைப்பாடல்கள் | காணிக்கை எடுத்து |
காணிக்கை எடுத்து பாதத்தில் படைத்து ஆண்டவனைத் தொழுகின்றோம் உள்ளதைப் பகிர்ந்து இதயம் மகிழ்ந்து நன்றிப்பண் இசைத்து தருகின்றோம் தனிமை உலகில் நலிந்த மனதில் ஆறுதல் சொல்லி நின்றவா ஒளியை ஏற்றி இருளை அகற்றி வழி நடத்தி வந்தவா இயேசு ஆயனே பேசும் தெய்வமே - உன் அன்பை எங்கெங்கும் நான் சொல்லுவேன் நண்பனே தங்கிடும் நெஞ்சுக்குள்ளே - உன் பேரன்பை எண்ணி வியந்து போகிறேன் குறைகள் அகற்றி கறைகள் விலக்கி வாழ்வைத் தெரிந்து தந்தவா மனிதம் சார்ந்த உழைக்கும் மனிதன் தேவனொளியில் கலந்தவா என்னுயிர் காக்கவே இன்னுயிர் ஈந்தவா நண்பனைப் போல் என்னை காக்க வா நண்பனைப் போல் என்னை மீட்க வா - உன் பேரன்பை எண்ணி வியந்து போகிறேன். |