காணிக்கைப்பாடல் | 600-என்னையே முழுவதும் |
என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன் என் மனம் அறிந்தும் நீ உன் கையில் ஏற்றிடுவாய்(2) உண்மைக்காக வாழ்திடும் நெஞ்சம் என்னில் உண்டு உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று என் நெஞ்சில் வாழ்பவன் நீ தானே - இனி அச்சம் கொள்வதும் வீண் தானே எந்தன் பணியில் ஆயிரம் தடைகள் வந்திடும் ஆயினும் யேசுவே உனது வழியில் பயணம் தொடரும் - என்னையே.. எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன் சுயநலத்தின் திரைகளை களைந்து என்னைத் தந்தேன் ஒரு ஜீவன் உன்னாலே உருவாகும் அது தானே உன் முன்னால் பெரிதாகும் மகிழ்வைத் தேடும் மானிடர் மகிழ்ந்திட தந்திடும் என்னையே யேசுவே உனது கரத்தில் ஏற்க வேண்டி - என்னையே. |