காணிக்கைப்பாடல் | 529-இதயம் பாடும் இனிய பாடல் |
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக நினைத்தேன் நினைத்தேன் நான் தர அனைத்தும் உந்தன் காணிக்கை - 2 என் இதயம் பாடும் இனிய பாடல் பூத்துக் குலுங்கும் மலர்களும் - இங்கு காய்த்துக் கனிந்த கனிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் - அதைச் சூழ்ந்து வளர்ந்த செடிகளும் இயற்கை கூறும் கவிதைகள் -யாவும் இறைவன் தந்த கொடைகளே நினைத்தேன் நினைத்தேன் நான் தர அனைத்தும் உந்தன் காணிக்கை - 2 (என் இதயம் பாடும்) பறந்து திரியும் பறவைகள் - அலை பாடும் கடல் வாழ் விலங்குகள் காற்றும் கடலும் கார்முகில் - வான் வில்லும் நிலவும் விண்மீன்களும் இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் இறைவன் தந்த கொடைகளே நினைத்தேன் நினைத்தேன் நான் தர அனைத்தும் உந்தன் காணிக்கை - 2 (என் இதயம் பாடும்) |