காணிக்கைப்பாடல் | 515-அன்பின் இறைவா |
அன்பின் இறைவா எந்தன் தலைவா என்னை அளிக்கின்றேன் - என்றும் உந்தன் அன்பில் வாழ பாதம் பணிகின்றேன் நான் பாதம் பணிகின்றேன் (2) மலரில் வண்டு மயங்கி நின்று தேனை உண்டு மகிழ்ந்ததோ (2) அந்த மலரும் மயங்கும் மன்னன் உந்தன் தியாகம் கண்டு வியந்ததோ நானும் இன்று நாளும் உந்தன் பலியாய் மாறவிழைகின்றேன் உலகம் யாவும் இறைவன் உந்தன் இல்லமாக விளங்குமோ (2) எம் உள்ளமே உம் இல்லமாயின் கள்ளம் அதிலே கலக்குமோ நாளும் இன்று நாளும் உந்தன் இல்லமாய் நீ எழுப்புவாய் |