திருப்பாடல்கள் | ஏழைகளைத் தூக்கிவிடும் திபா 146 |
திபா 113: 1-2. 4-6. 7-8 (பல்லவி: 1,7காண்க) பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள். அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள்.
அவரது பெயரைப் போற்றுங்கள்.
2
ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும்
எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! -
பல்லவி
4
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்;
வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.
5
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல
வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?
6
அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து
பார்க்கின்றார். - பல்லவி
7
ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி
நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி
விடுகின்றார்;
8
உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி
மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். -
பல்லவி
|