Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் ஆண்டவரே! இரக்கமாயிரும்  

திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும் - ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி


ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன் என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன் உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி


கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்
உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி


உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்