| தியானப் பாடல்கள் | உன் மடியில் சாய்ந்திட |
|
உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன் உன் கரங்கள் என்னை என்றும் தேற்றிடுமே சுமைகளால் உள்ளம் சோர்ந்து போகையில் உன இதய நிழல் தானே ஆறுதல் என்னை புரிந்து கொண்ட கடவுள் நீரே என்னைத் தாங்குகின்ற தந்தை நீரே இயேசுவே தாயின் கருவிலே தெரிந்தவரே மகனாக மகளாக ஏற்றவரே எனக்காய் உயிரை தந்தவரே எந்நாளும் என்னோடு நடப்பவரே உலகம் என்னும் கடலிலே துனப அலைகள் வருகையில் போராடும் படகாய் மாறிப்போகிறேன் எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும் வழியறியா மான்போல அலைந்து திரிகின்றேன் என்னைக் காண்பவர் நீர் ஒருவரே என்னைக் காப்பவர் நீர் ஒருவரே இயேசுவே அமைதியை தருவேன் என்றவரே ஆறுதல் தாரும் ஆண்டவரே நிழல் போல துன்பம் சூழ்கையிலே நீங்காத நண்பனாய் இருப்பவரே இருளடரந்த பாதையில் ஒளியைத் தேடும் மலரென விழிமூடி அழுகிறேன் வழிகாட்டுமே கவலைகளும் நோய்களும் கண்ணீரும் வலிகளும் நிதம்தோறும் நிலவு போலத்தெரிகின்றதே இதை மாற்றிடும் வல்ல தகப்பனே எனைச் சுமந்திடுடும் நல்ல ஆயனே இயேசுவே |