தியானப் பாடல்கள் | 457-மனித நேயமே |
மனித நேயமே உயர் வேதம் - இதை மன்னன் இயேசு வாழ்ந்து சொன்னாரே - 2 உன்னையே நீ அன்பு செய்தல் போலவே உன் அயலானை நேசி என்றாரே இயேசு மகான் அனைவரையும் அன்பு செய்தாரே பழிக்கஞ்சா கள்வர்களால் தாக்கப்பட்டு - ஒரு வழிப்போக்கன் சாலையிலே வீழ்ந்து கிடந்தான் (2) வேதங்கள் கற்றறிந்த குருவும் கண்டார் - 2 அவன் வேதனையை போக்காமல் (தன்வழி சென்றார் - 2) துன்பத்தில் வாடும் மனிதரெல்லாம் அயலாரே நம் அயலாரே அன்புடன் அவர்க்கு உதவுதலே புண்ணியமே வாழ்வில் புண்ணியமே பரிதவித்து கிடப்பவனை கேட்பாரில்லை - கோயில் பணியாளர் பார்த்துக்கொண்டு நேரே சென்றார் (2) அவதியுறும் யாவருக்கும் உதவிடவேண்டும் - 2 இந்த எண்ணம் தானே மனிதனுக்கு (அவசியம் வேண்டும் - 2) துன்புறக் கண்டால் துடிக்கின்ற மனம் வேண்டும் நல்ல மனம் வேண்டும் சோதரராக பிறரைக் கண்டு அணைத்திட வேண்டும் என்றும் அணைத்திட வேண்டும் |