தியானப் பாடல்கள் | 398- சிறுகுழந்தை போல் நான் |
சிறுகுழந்தை போல் நான் மாறவேண்டும் என் இயேசுவே (2) சின்னக் கரம்பிடித்து நடத்தும் தாய்போல் என்னை நடத்திடுமே (2) என் சிந்தையிலும் என் உள்ளத்திலும் நீ இருக்க வேண்டுமே - உம் சித்தப்படி என் வாழ்க்கையில் எல்லாம் நடக்க வேண்டுமே கவலையின்றி தன் அன்னை மடியில் தவழும் பிள்ளை போல் - என்னை கருவில் இருந்து காத்திடும் தெய்வமே உன்னுடன் இருக்கின்றேன் (2) கடல் அலைகள் - போல் தொடர் துன்பங்கள் - வந்து மோதும் வேளையிலே - என் கரங்கள் பிடித்து கனிவாய் அணைப்பது என் அன்பு தெய்வமே கரங்கள் குவித்து கண்கள் மூடி செபிக்கும் பிள்ளைபோல் - உன் கவலை மறந்து இறைவனை நினைத்து உன்னை மறந்து விடு (2) தினம் கலங்கி தவிக்கும் மனிதனே நீ கடவுளின் பிள்ளை தான் நம்மை கண்ணின் மணிபோல் இறைவன்; காப்பது என்றும் உண்மை தான் |