Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  397-சிறகை இழந்த பறவை  



சிறகை இழந்த பறவை - பாடும்
பாடல் கேட்கிறதா - உன்
உறவைத் தேடி உருகும்
விழியின் தேடல் புரிகிறதா (2)
இறைவனே என் இறைவனே - என்
இதயக் கோயில் எழுந்து வா
வாசல் திறந்தேன் வாசல் திறந்தேன்
உதய தீபம் ஏற்ற வா

உன்னைப் பிரிந்து வாடும் - நாட்கள்
யுகமாய் மாறிவிடும் - நான்
உந்தன் நினைவில் வாழும்
நிமிடம் சுகமாய் ஆகிவிடும்
கண்ணை மூடி உன்னை நினைத்தால்
கவலை மாறிவிடும் (2)
உன் கரங்கள் தழுவி நடக்கும் - போது
களைப்பு ஆறிவிடும்
கண்ணின் மணி போல் காக்கும் - தேவா
அருகில் இருந்திடுவாய் - நான்
காலந்தோறும் உனது நிழலில்
வாழும் வரமருள்வாய் - 3

கடலைத் தேடிப் பாயும் நதியாய்
உன்னைத் தேடி வந்தேன் - நீ
ஒளியைத் தேடிச் சாயும் மலராய்
என்னைத் தேடி வந்தாய்
தாயைப் பிரிந்த சேயைப் போல
தனித்து வாடி நின்றேன் (2)
நீ தாவி அணைத்து அன்பில் - நனைத்து
நண்பன் ஆகின்றாய்
சோர்ந்து வாடும் பொழுதில் - எல்லாம்
சொந்தம் தந்திடுவாய்
நான் சாய்ந்து கொள்ள ஏழை எனக்குத்
தோள்களாகிடுவாய் - 3




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்