|
 |
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளை வணக்கம். உங்கள் அனைவருக்கும்
நரக அசுரனைக் கொன்று உலகிற்கு மீட்பை வழங்கிய நம் அருள்நாதர்
இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் என் அன்பின்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் இந்திய திருநாட்டில் திருவிழாக்களுக்கும், கேளிக்கை,
கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை . நவம்பர் மாதம் என்றாலே
இந்தியாவில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் தான் நமக்கு
நினைவுக்கு வரும். இன்று நம் இந்தியர்கள் உலகமெங்கும் சென்று
பரவி ஆளுமை செய்து வருகின்றார்கள். அங்கேயே தீபாவளித் திருநாளை
விமரிசையாகக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் அண்டைவீட்டாரோடு அந்த
நாட்டு மக்களோடு இணைத்துக் கொண்டு கொண்டாடுகின்றதால் இன்று
உலகமெங்கும் இந்த விழா மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்பட்டுக்
கொண்டிருக்கின்றது. அமெரிக்க வெள்ளை மாளிகையிலேயே தீபாவளி
கொண்டாடப்படுகின்றது என்றால் இந்திய கலாச்சாரம் எவ்வளவு உலகில்
பரவி பேரும் புகழோடும் விளங்குகின்றது என்று நாம் புரிந்து
கொள்ளவேண்டும்.
நமது முன்னோர்கள், சதா காலமும் உழைப்பு கடமை பணிச் சுமை அன்றாட
அலுவல்கள் என்று இருந்த மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டங்களும்
அதன் மூலம் அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மகிழ்ந்திருக்கவும்,
பழைய சோர்களிலிருந்து விடுபடவும் யோசித்ததன் பலன்தான் பொங்கல்
பண்டிகைகள். அதற்கு பல காரண காரியங்களை இணைத்து இதற்காகத்தான்
நாம் இந்த விழாக்களைக் கொண்டாடுகின்றோம் என்று கற்பித்த கற்பிதங்கள்
சந்ததியினருக்கு அதை ஏற்றுக் கொண்டு அதை ஏற்றுக்கொள்ள காரணமாக
அமைந்தது. முன்னோர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுகொண்ட காலம் அது.
காரணம் எதுவாக இருந்தாலும், அன்றாட அலுப்பிலுருந்தும், பணிச்சுமை,
மனப்பாரங்களிலிருந்து விடுபட்டு, புத்துணர்ச்சி பெறவும், உறவுகளைக்
கொண்டாடவும், உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், பிணக்குகளைத்
தீர்த்துக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு ஆகவே, காரணம் எதுவாக இருந்தாலும்
பரவாயில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு முன்னோர்கள் சொன்னதை , அப்படி
ஏற்றுக்கொண்ட காலம் எல்லாம் காலாவதியாகிப்போய் இந்த நவீன மக்கள்,
ஏன் இந்த விழாவைக் கொண்டாடவேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதை
மறு வாசிப்பிற்கு உட்படுத்த ஆரம்பித்து எல்லாவற்றையும் நுணுகி
ஆராய ஆரம்பித்துள்ளனர். அதனால் தீபாவளித் திருநாளுக்காக சொல்லப்பட்ட
புராணம் ஏற்று கொள்ளத்தக்கதாக இல்லையே என்று யோசிக்க ஆரம்பித்து
அதை பரப்புரையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். -விழித்துக் கொண்ட
சமூகம் இப்போது எல்லாவற்றும் நியாயங்களைத் தோட
ஆரம்பித்துள்ளது.
இதைத்தான் பெரியார் கேள்விக்குள்ளாக்கி நம்மையும் யோசிக் அழைத்தார்.
ஆனால், இந்த நவீன ஊடகக் காலத்தில்தான் அது எல்லார் மண்டையிலும்
உரைக்க ஆரம்பித்துள்ளது.
முதலில் தீபாவளிக்காக சொல்லப்பட்ட காரணத்தை முதலில்
பார்ப்போமா?
ஒரு காலத்தில் ஓர் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக்
கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம்
சென்று முறையிட்டார்கள். அதனால் மகாவிஷ்ணு பன்றியாக அவதாரம் எடுத்து
கடலுக்குள் சென்று அந்த அசுரனைக் கொன்று உலகத்தை மீட்டு
மீண்டும் உலகத்தை அதன் இடத்தில் வைத்தார். மகாவிஷ்ணு அந்த உலகத்தை
மீண்டும் விரித்து வைத்ததால் அந்த உலகபூமி மகாவிஷ்ணுவின் மீது
காதல் கொண்டு அவருடம் கலவி செய்ய ஆசைப்பட்டது. அதனின் ஆசையை ஏற்றுக்கொண்ட
மகாவிஷ்ணு பூமியுடன் கலவியில் ஈடுபட்டார். அதனால் பூமி கற்பமுற்று
ஒரு குழந்தையைப் பெற்றது. அவன்தான் நரகாசூரன். அவன் மிகவும் தீயவனாக
மாறி அனைவரையும் கொடுமைப்படுத்தினான். அதிலும் மிகவும் முக்கியமாக
முப்பத்து முக்கோடி தேவர்களை அவன் துன்புறுத்தினான்.
அனைத்து முப்பத்து முக்கோடி தேவர்களின் யாகங்கள், தவவலிமை அனைத்தையும்
விட அந்த அசுரன் வலிமை வாய்ந்தவனாக இருந்தான். அத்தனை தேவர்களும்
தங்களால் முடியாமல் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
எனவே அவர் நரகாசூரனோடு போரைத் துவக்கினர். மகாவிஷ்ணுவால் அவனை
வெல்ல முடியவில்லை. ஆகவே அவர் தன் மனைவிடம் சொல்ல அவரின் மனைவி
நரகாசூரனோடு போர் தொடுத்து அவனைக் கொன்றார்.
நரகாசூரன் கொல்லப்பட்ட செய்தியால் அனைத்து தேவர்களும் பேரானந்தம்
அடைந்தார்கள். அதைக் கொண்டாட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.
இந்த ஆரியக் கற்பிதங்களைக் கடைப்பிடித்து திராவிட மக்கள் அனைவரும்
இந்த தீபாவளித் திருநாளைக் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி
புத்தாடை அணிந்து வருடா வருடம் கொண்டாட வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதிலே மிகமுக்கியமான செய்தி ஒன்று உண்டு. அது என்னவென்றால்.....
திராவிடர்கள் அனைவரும் நரகாசூரனின் வாரிசுகள், இனத்தவர்கள் என்று
சொல்லப்பட்டதாக அறியப்படும்போதுதான், சற்று உறுத்தலாக இருக்கின்றது,
சற்று நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது காலம்.
இந்தத் திராவட மக்களுக்கு புரிய வைப்பதற்காகத்தான் ஐயா
பெரியார் அவர்கள் பல கேள்விகளை முன்வைத்து இந்தக் கதைக்கான விளக்கத்தை
பார்ப்பனர்களிடமும் நம்மிடமும் கேட்கின்றார். அதற்கு இதுவரை எந்தவித
பதிலையும் அவர்கள் கொடுக்கவில்லை ... நமக்கும் அது புரியவில்லை
......
ஐயா பெரியார் அவர்கள் கேட்ட விடை தெரியாத கேள்விகளை நாமும்
யோசித்துப்பார்ப்போம்....
1.பூமி தட்டையா உருண்டையா?
2. தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட
முடியுமா?
3.எங்கு நின்று கொண்டு பூமியைச் சுருட்டுவது.
4. சுருட்டனால் அதைத் தூக்கிக் கக்கத்திலோ, தலைமீதோ எடுத்து ஏக
முடியுமா?
5.எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது
எதன் மீது இருந்திருக்கும்?
6.விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம்
என்ன?
7.அரக்கனைக் கொன்னு பூமியை விருத்ததால் பூமிக்கு பன்றி மீது காதல்
ஏற்படுவானேன்?
8.பூமி மனித உருவா? மிருக உருவா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனித பிள்ளை
உண்டாகுமா?
10 . பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி
அடைய வேண்டும். இவைகளைக் கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள்
கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? என்று கேட்டிருக்கின்றார்.
திராவிட விடுதலை நாயகன் ஐயா பெரியார் அவர்கள்.
- பெரியார் அவர்கள் மக்களின் இந்து மத உணர்வுகளுக்கும் திராவிடர்களின்
சமயம் சார்ந்த உணர்வுகளுக்கு விரோதியல்ல. மாறா அவர்கள் கடைப்பிடிக்க
ஆரியர்கள் கொடுத்த சமயக் கோட்பாடுகளில் உள்ள முரண்பாடுகளைத்தான்
அனைவரும் கேள்விக்குள்ளாக்கி உண்மையை அறிந்து அறிவோடு இறை நம்பிக்கை
கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார். - இறுதியாக சகோதர சகோதரிகளே
நாம் நமது இறை உணர்வு உண்மையிலும், உண்மையிலும் ஊன்றியிருக்க
வேண்டும். பாவத்தையும், சாத்தானையும் அழித்த இயேசுவின் உயிர்ப்பின்
நாளே என் தீபாவளி
|
 |
|