| 
				
					
						|   |  
						| 
			
				| எத்தனையோ 
					வெள்ளிக்கிழமைகள் இருக்க, இந்நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி 
					என்று சொல்கிறோம்? 
 இந்த 
					நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடிமைத்தன நுகத்தை 
					முறித்து, மனித வாழ்வில் சாபமாக வந்த பாவத்தைக் கழுவி, 
					ஆசிர்வாதத்தை உண்டாக்கி, மனிதனை சிந்தனை செய்ய வைத்த நாள்.
 
 இது துக்கத்தின் 
					நாளும் அல்ல, சந்தோஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்பணிப்பின், 
					தீர்மானத்தின் நாள்.
 
 இயேசுவின் மரணத்தில் 
					நம்மை பங்குள்ளவர்களாக்கும் நாள்.
 
 நம்முடைய பாவ, சாப, 
					தரித்திர, மரண வல்லமையை முறியடித்த நாள்.
 
 நாம் நம் இயேசுவின் மரணத்தை ஏற்று அதில் நாம் 
					பங்குடையவர்களாகிறோம் 
					என்பதுதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்மானங்களில் மிகவும் 
					பெறுமதியான, விலைமதிக்க முடியாத தீர்மானம். நம் வாழ்வில் நாம் 
					எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் 
					பெரிய நாளாய் இருக்கும்.
 
 ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் 
					அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் 
					சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; 
					உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, 
					தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்.
 
 ஆகவே,சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! 
					ஜெயமாய் வாழ்வோம்!
 
 |  
				| இயேசுவை பற்றி |  
				| அவருடைய உயரம்:- 5அடி 1,1அங்குலம்
 அவருடைய எடை: 85 கிலோ
 ------------------------------------------
 இயேசுவின் பாடுகளை 
					பற்றி:
 "இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3 முறைத் தடுமாறி கீழே 
					விழுந்திருக்கிறார்"
 ------------------------------------------
 17மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்
 ------------------------------------------
 அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன
 ------------------------------------------
 அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன
 ------------------------------------------
 அவருடைய தலையை கிளித்து 17 முட்கள் உள்ளே சென்றன
 ------------------------------------------
 அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது
 ------------------------------------------
 இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50 
					குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்
 ------------------------------------------
 யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான்15 
					அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி
					கிபி 30 ஆம் ஆண்டு ஏப்ரல்7ஆம் தேதியிலே மரித்தார்
 ------------------------------------------
 ➕சிலுவையிலுள்ள 
					
					INRI எழுத்து லத்தீன் வார்த்தை; 
					அதின் அர்த்தம்
 
 I-IESUS
 N-NAZARINE
 R-REXO
 I-IDONEUS
 
 இவ்வார்த்தையின் பொருள்: "நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா.
 
 ்: மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் 
					வழங்கினார்
 
 |  |  |