1. 1சாமுவேல் என்னும் நூலில் இடம் பெறுவது என்ன? இதில் இஸ்ராயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. நீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்தநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 2. எல்கானா என்பவர் யார்? எரொகாமின் மகன் (1:1). 3. எல்கானாவின் மனைவியர் யாவர்? அன்னா, பெனின்னா (1:2). 4. எல்கானா தன் மனைவியரை ஆண்டுதோறும் எங்கே கூட்டிச் செல்வார்? சிலோவில் படைகளின் ஆண்டவரை வழிபட (1:3) 5. சிலோவில் குருவாக இருந்தவர்கள் யாவர்? ஏலியின் புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் (1:3). 6. அன்னா வழிபடும்போது அழுதது ஏன்? அவள் மலடியாக இருந்ததால், பெனின்னா அவளை துன்புறுத்தி வதைத்தாள் (1:6). 7. அன்னா ஆண்டவரை நோக்கி மன்றாடியது என்ன? ஆண்டவர் அவருக்கு ஒர் ஆண் குழந்தையை தந்தால் அவனை அவன்வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதாக மன்றாடினார் (1:11). 8. குரு ஏலி, அன்னாவின் வேண்டுதலுக்கு என்ன பதிலளித்தார்? இஸ்ராயேலின் கடவுள் நீ அவாரி டம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார் (1:77). 9. அன்னாவுக்கு பிறந்த மகன் பெயர் என்ன? சாமுவேல் (1:20). 10. அன்னா, ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றினாள்? சிலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து சிறுவனை ஏலியிடம் ஒப்படைத்தாள் (1:24-25). 11. ஆண்டவர் அன்னாவுக்கு என்ன கைமாறு அளித்தார்? அன்னா, மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார் (2:21) 12. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது என்ன? ஏலி தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் அவர்களைத் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டுக்கு நீங்காத தண்டனை தீர்ப்பு வழங்குவேன் என்று சாமுவேலிடம் கூறினார் (1:13). 13. ஆண்டவரின் வார்த்தைகளை ஏலியின் மூலமாக அறிந்த சாமுவேல் என்ன கூறினார்? அவர் ஆண்டவர்தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்" என்றார் (3:18). 14. இஸ்ராயேல் பெலிஸ்தியருக்கு எதிராக போர் தொடுத்ததில் எத்தனை இஸ்ரயேல் மக்கள் இறந்தனர்? 4000 பேர் (4:2). 15. இஸ்ராயேல் மக்கள் அதன்பிறகு என்ன செய்தனர்? வீரர்களை சிலோவுக்கு அனுப்பி உடன்படிக்கைப் பேழையை எடுத்து வர செய்தனர் (4:4). 16. பேழையோடு வந்தது யார்? ஏலியின் இருபுதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் (4:4). 17. இரண்டாவது போரில் இஸ்ராயேலுக்கு நேர்ந்தது என்ன? 30,000 காலாட்படையினர் மாண்டனர் (4:10). 18. கடவுளின் பேழை என்ன ஆனது? கடவுளின் பேழை பிலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது (4:11). 19. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதை அறிந்த ஏலிக்கு ஆனது என்ன? அவர் தம் இருக்கையினின்று பின்புறம் கதவருகே விழுந்து கழுத்து முறிந்து இறந்தார் (4:18). 20. ஏலி சாகும் போது அவருக்கு வயது என்ன? 98 வயது (4:15). 21. ஏலி இஸ்ராயேலை எத்தனை ஆண்டு ஆட்சி புரிந்தார்? 40 ஆண்டுகள் (4:18). 22. பினகாசின் மனைவி இறந்தது எப்படி? தன் மகனைப் பெற்றெடுக்கும்பொழுது இறந்தார் (4:20). 23. பினகாசின் மனைவியின் கடைசி வார்த்தைகள் யாவை? ' இஸ்ராயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது" (4:22). 24. பிலிஸ்தியர் கடவுளின் பேழையை என்ன செய்தார்கள்? தாகோன் சிலை அருகில் வைத்தனர் (5:2). 25. தாகோன் சிலை என்ன ஆனது? ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் வழுந்தது (5:3). 26. கடவுளின் பேழை பிலிஸ்தியரோடு எவ்வளவு காலமாக இருந்தது? ஏழு மாதம் (6:1). 27. கடவுளின் பேழையை இஸ்ராயேலுக்கு எவ்வாறு திருப்பி அனுப்பினர்? இருகறவைப் பசுக்களைக் கொண்டு இழுத்துச் செல்லும் வண்டியில் வைத்து அனுப்பினர் (6:10). 28. இஸ்ராயேலரால் பேழை எங்கே எடுத்துச் செல்லப்பட்டது? கிரியத்து எயாரிம் (6:21). 29. இப்பேழை எங்கே வைக்கப்பட்டது? அபினதாபின் வீட்டில் (7:1). 30. பேழையைக் காக்க யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது? அபினதாபின் மகன் எல்யாசர் 7:1). 31. இஸ்ராயேலின் நீதித்தலைவராக சாமுவேல் நியமிக்கப்பட்டது எங்கே? மிஸ்பாவில் (7:6). 32. பெலிஸ்தியர்கள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? பெலிஸ்தியர்மீது போரிடி முழங்கச்செய்து அவர்களை கலங்கடிக்க அவர்கள் இஸ்ராயேலர் முன்பாகத் தோல்வியுற்றனர் (7:10). 33. நீதித் தலைவர்களாக சாமுவேல் யாரை நியமித்தார்? தம் புதல்வர்கள், யோவேல், அபியா (8:2). 34. இஸ்ராயேலின் பெரியோர், அரசரிடம் வேண்டிக் கேட்டது என்ன? சாமுவேலின் புதல்வர்கள் அவரது வழிமுறைகள்படி நடக்காததால் ஓர் அரசனை நியமிக்குமாறு கேட்டனர் (8:5). 35. அதற்கு சாமுவேல் அழித்த பதில் என்ன? உங்களுக்கு அரசர் நியமிக்கப்படும் என்றார் (8:9). 36. இஸ்ராயேலின் அரசராக நியமிக்கப்பட்டவர் யார்? சவுல் (9:26). 37. சவுலின் தந்தை பெயர் என்ன? கீசின் (10:21). 38. சவுல் அரசராக எவ்வாறு திருநிலைப்படுத்தப்பட்டார்? சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து அவர் தலைமீது வார்த்து திருநிலைப் படுத்தினார் (10:1). 39. சவுல் தன் சிற்றப்பனிடம் திருநிலைப் படுத்துவதைப் பற்றி கூறினாரா? இல்லை (10:6). 40. இஸ்ராயேலர், சவுலை தங்களுடைய அரசராக தேர்ந்தெடுத்தது எப்படி? சீட்டுப்போட்டு (10:21). 41. யாபேசு நகரை எதிர்த்தது யார்? நாகாசு (11:1). 42. நாகாசு விதித்த நிபந்தனை என்ன? இஸ்ராயேலரின் ஒவ்வொருவரின் வலக்கண்ணும் பிடுங்கப்படவேண்டும் அவர்கள் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்க வேண்டும் (11:2). 43. அவருடைய நிபந்தனைக்கு மக்களின் பதில் என்ன? ஏழுநாட்கள் தவணை தருமாறு கேட்டார்கள் (11:3). 44. மக்கள் செய்தது என்ன? சவுலிடம் செய்தியை சொன்னார்கள் (11:4). 45. நாகாசை எதிர்த்து போரிட, சவுல் எத்தனைபேரை சேர்த்தார்? இஸ்ராயேலின் மக்கள் மூன்று இலட்சம், யுதாவின் மக்கள் முப்பதாயிரம் (11:8). 46. நாகாசின் படை என்ன ஆனது? தோற்கடிக்கப்பட்டது (11:11). 47. சவுல்; அரசன் என்று எங்கே எடுத்துரைக்கப்பட்டது? கில்காலில் (11:15). 48. சவுலின் மகன் பெயர் என்ன? யோனத்தான் (13:16). 49. யோனத்தான் எதிரியை எவ்வாறு வீழ்த்தினார்? யோனத்தானும் அவருடைய வீரர்களும், பெலிஸ்தியரின் பாளையத்துக்குள் நுழையும் பொழுது எபிரேயர் யோனத்தானுடன் இணைந்து கொண்டு பெலிஸ்தியருக்கு எதிராக போரிட்டனர் (14:21). 50. சவுலின் இளைய புதல்வியின் பெயர் என்ன? மீக்கால் (14:49). 51. சவுலின் படைத்தலைவனாக இருந்தவர் யார்? ஆப்னேர் (14:50) 52. சவுலால் உயிருடன் பிடிக்கப்பட்ட அமலேக்கியரின் அரசர் யார்? ஆகாகு (15:8) 53. ஆகாகைக் கொன்றவர் யார்? சாமுவேல் (15:33) 54. கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது எனக் கூறியது யார்? சாமுவேல் (15:22) 55. ஆண்டவர் சாமுவேலை எங்கே அனுப்பினார்? பெத்லகேமைச் சேர்ந்த ஈசாயிடம் (16:1) 56. ஈசாயின் வீட்டுக்கு சாமுவேல் அனுப்பப்பட்ட காரணம் என்ன? ஈசாயின் புதல்வர்கள் ஒருவரை அசராகத் தேர்தெடுக்க (16:1) 57. சாமுவேல் அரசராக யாரை நியமித்தார் ? தாவீதை (16:13) 58. தாவீதை திருப்பொழிவு செய்துவிட்டு சாமுவேல் எங்கே சென்றார்? இராமாவுக்கு (16:13) 59. சவுலின் அரசவையில் தாவீது ஆற்றிய பணி என்ன? சவுலின் படைக்கலன் தாங்குபவராக இருந்தார் (17;20) 60. சவுல் தீய ஆவியிலிருந்து எவ்வாறு விடுதலை பெற்றார்? தீய ஆவி சவுலன் மீது இறங்கியபோதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவி அவரை விட்டு அகலும். (16:23) 61. இஸ்ராயேல் படைகளிடம் சவால் விட்ட பெலிஸ்திய வீரன் யார்? கோலியாத்து (17:10) 62. கோலியாத்தின் உயரம் என்ன? ஆறரை முழம் (17:4) 63. அவன் அணிந்திருந்த தலைக்கவசம் எப்படிப்பட்டது? வெண்கலத் தலைக்கவசம் (17:5) 64. கோலியாத்தை எதிர்த்து கொலை செய்பவருக்கு என்ன பரிசளிப்பதாக சவுல் கூறினார்? அவருக்கு மிகுந்த செல்வமும், தன் மகளையும் மணமுடித்துத் தருவதாகவும் கூறினார் (17:25) 65. கோலியாத்தை எதிர்த்துப் போரிட தாவீது எப்படிச் சென்றார்? தன் கவணைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றார் (17:40) 66. தாவீது கோலியாத்தை எவ்வாறு கொன்றான்? ஒரு கல்லை எடுத்து அதை ஒரு கவணில் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அவன் தரையில் முகங்குப்புற விழுந்தான். உடனே தாவீது அவனது வாளை உருவி அவனைக் கொன்று, அவன் தலையைக் கொய்தார்.(17:49-51) 67. தாவீதுக்கு மிக நெருக்கமான நண்பனாக மாறியவர் யார்? யோனத்தான் (18:1) 68. சவுல் தாவீதின்மேல் சினம் கொண்டது ஏன்? சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் எனப் பெண்கள் பாடியதால்.(18:7) 69. தாவீதுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவர் யார்? சவுலின் மகள் மீக்கால். (18:27) 70. சவுல் தன்மகன் யோனத்தானிடம் கூறியது என்ன? அவர் தாவீதைக் கொல்லப்போவதாகக் கூறினார். (19:1) 71. சவுல் தாவீதைக் கொல்லப்போகும் செயலை தாவீதுக்கு எச்சரித்தது யார்? யோனத்தான். (18:2) 72. மீக்கால் தாவீதை எவ்வாறு காப்பாற்றினார்? அவன் தாவீதை பல்கணி (ஐன்னல்) வழியாக இறக்கி விடவே அவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். (19:12) 73. தாவீது எங்கே தப்பி ஓடினார்? சாமுவேலைச் சந்திக்க இராமாவுக்குச் சென்றார். (19:18) 74. யோனத்தான் தாவீதை எவ்வாறு அன்பு செய்தார்? தம் உயிரென அன்பு கொண்டிருந்தார். (20:17) 75. தாவீது இராமாவிலிருந்து எங்கே சென்றார்? நாவோத்துக்கு. ( 19:23) 76. அதுலாமில் தாவீதோடு சேர்ந்தவரின் எண்ணிக்கை என்ன? சுமார் 400 பேர். (22:2) 77. சவுல் நோபுவின் குருக்களையும் மக்களையும் கொலை செய்தது ஏன்? தாவீது ஓடிப்போனதை அறிந்தும், அதை அவரிடமிருந்து மறைத்து விட்டதால். (22:17) 78. இந்தக் கொலையைப் பற்றி தாவீதுக்கு தெரிவித்தவர் யார்? அகிமெலக்கின் புதல்வி அபியத்தார். (22:20) 79. தாவீது சவுலைக் கொலை செய்யாமல் விடக் காரணம் என்ன? ஏனெனில் சவுல் ஆண்டவரால் திருப் பொழிவு செய்யப்பட்டவர். 24:10) 80. சாமுவேல் எங்கு இறந்தார்? இராமாவில். ( 25:1) 81. தாவீதும், அவருடைய மக்களும் நாபாலுக்கு எதிராகச் சென்றது ஏன்? தாவீதின் மக்களுக்கு உணவு கொடுக்க மறுத்ததால். 25:11) 82. நாபாலின் மனைவி யார்? ஆபிகாயில். (25:3) 83. ஆபிகாயில் செய்தது என்ன? உணவு தயாரித்து தாவீது மக்களுக்குக் கொடுத்தார். (25: 18-19) 84. தாவீது நாபாலை உயிரோடு விட்டாரா? ஆம், அபிகாயின் வேண்டுதலால் நாபாலைக் கொலை செய்யவில்லை. (25:35) 85. நாபால் எப்போது இறந்தார்? சுமார் 10 நாட்களுக்குப் பின். ( 25:38) 86. அதன் பிறகு தாவீது செய்தது என்ன? ஆபிகாயிடம் ஆள் அனுப்பி தாவீது அவளை மணக்க விரும்புகிறார் எனக் கூறினார். (25:40) 87. ஆபிகாயில் தாவீதை மணந்து கொள்ளச் சம்மதித்தாளா? ஆம். (25:42) 88. தாவீதின் வேறொரு மனைவியின் பெயர் என்ன? அகினோவாம். (25:43) 89. சவுல் குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடிச் சென்றது ஏன்? இறந்துபோன சாமுவேலிடம் பேசுவதற்காக. (28:11) 90. சாமுவேல் சவுலிடம் பேசினாரா? ஆம், ஆண்டவர் சவுலையும், இஸ்ராயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார் என்றார். (28:19) 91. சவுல் பெலிஸ்தியர்களுக்கு எதிராக எங்கே போரிட்டார்? கில்போவா மலையில். ( 31:1) 92. கில்போவா மலையில் ஆனது என்ன? யோனத்தானும், அவருடைய சகோதரர்களும் கொல்லப்பட்டனர்.இஸ்ராயேல் தோல்வியுற்றது. சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன் மீது விழுந்து மடிந்தார். (31:4-5) |