1. நகோமி என்பவர் யார்? எலிமலேக்கின் மனைவி (1:2) 2. அவர்கள் வாழ்ந்து இருந்த இடம் எது? பெத்லகேம் (1:1). 3. எலிமலேக்கின் மைந்தர்களின் பெயர் என்ன? மக்லோன், கிலியோன் (1:2). 4. இவர்கள் பெத்லகேம் விட்டு வெளியேற காரணம் என்ன? அங்கு கொடிய பஞ்சம் உண்டானதால் (1:1). 5. அவர்கள் அங்கிருந்து எங்கே சென்றார்கள்? மோவாபு நாட்டிற்கு (1:1). 6. மக்லோன், கிலியோன் இருவரும் யாரை மணந்தனா;? ஒர்பா, ரூத்து (1:4). 7. பத்து ஆண்டுகளுக்குப்பின் மோவாபில் நடந்தது என்ன? மக்லோனும், கிலியோனும் இறந்தனர் (1:5). 8. தன்னுடைய இருமகன்களும் இறந்த பிறகு நகோமி என்ன செய்தாள்? தன் மருமகள்கள் இருவரையும் பார்த்து 'உங்கள் தாய்வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்" என்றார் (1:8). 9. மருமகள்கள் இருவரும் தங்களது தாய்வீட்டிற்குத் திரும்பினார்களா? ஒர்பா திரும்பிச்சென்றாள். ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். (1:14-15). 10. ரூத்தை நகோமி எங்கே கூட்டிச்சென்றார்? பெத்லகேம் (1:19). 11. பெத்லகேம் ஊர் பெண்கள் 'இவள் நகோமி தானே?"என கூறியபோது நகோமி கூறியது என்ன? 'என்னை நகோமி| என அழைக்காதீர்கள்; மாரா| என அழையுங்கள்" என்றார். (1:20). 12. நகோமி ஏன் இவ்வாறு கூறினாள்? நகோமி| என்றால் இன்பம் மாரா| என்றால் கசப்பு. இவளுடைய வாழ்க்கை கசப்பாக மாறினதால், இவளை மாரா என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டாள் (1:21). 13. நகோமியின் உறவினாரின் பெயர் என்ன? யோவாசு (2:1) 14. யோவாசு ரூத்தை கண்டார்? அவருடைய வயலில் (2:8). 15. அவர், ரூத்தை மணமுடித்துக் கொண்டாரா? ஆம் (4:13). 16. யோவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகனின் பெயர் என்ன? ஒபேது (4:17). 17. ஒபேதுவின்பெயர் ரூத்து என்னும் நூலில் இடம்பெற காரணம் என்ன? ஏனெனில் ஒபேது தாவீதுக்கு தாத்தா (4:22). |