Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(8)  கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்

1) துரோவாவில் பவுல் அமைதியின்றித் தவித்தது ஏன்?
     அவர் அங்கே தீத்துவைக் காணாததால். (2:13)

2) கடவுள் பாவம் அறியாத இயேசுவை பாவநிலை ஏற்கச் செய்தது ஏன்?
    தாம் கிறிஸ்து வழியாக தமக்கு ஏற்புடையவராக மாறுவதற்காக. (5:21)

3) மாசிடோனியாவில் பவுல் ஆறுதலடைந்தது ஏன்?
     தீத்துவின் வரவால் அவர் ஆறுதல் அடைந்தார். (7:6)

4) ஒரு மனிதன் யாரில் பெருமை கொள்ள வேண்டுமென பவுல் கூறுகிறார்?
    ஆண்டவரில்.

5) பவுல் தூதர்களிடமிருந்து  39 சாட்டையடி எத்தனை முறை வாங்கினார்?
    5முறை (11:25)

6) பவுல் எத்தனை முறை தடியால் அடிக்கப்பட்டார்?
    மூன்று முறை. (11:25)

7) பவுல் எத்தனை முறை கல்லெறியப்பட்டார்?
     ஒரு முறை. (11:25)

8) பவுல் தமஸ்கு நகரில் இருந்து எவ்வாறு தப்பித்தார்?
     நகர மதிலில் இருந்து பலகணி வழியாக கூடையில் வைத்து இறக்கப்பட்டார்.     
     (11:33)

9) பவுல் உயிரோடு இருக்கும் பொழுது மூன்றாம் வானம் வரை எடுத்துச் 
     செல்லப்பட்டாரா?

      ஆம். (12:2)

10) பவுல் இறுதியாக கொரிந்தியருக்குக் கூறிய அறிவுரை என்ன?
        மகிழ்ச்சியாய் இருங்கள்.
        உங்கள் நடத்தையை சீர்படுத்துங்கள்
        மனஒற்றுமை கொண்டிருங்கள்.
       அமைதியுடன் வாழுங்கள் (13:11)
 
 

தேவைகள் யாவையும் தருபவளே! வேண்டிய வரங்களைத் தாருமே