Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(6)  பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்

   
1) உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் மையக் கருத்து என்ன?
     இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்தி.

2) இத்திருமுகம் எப்பொழுது எழுதப்பட்டது?
    கி.பி. 57-58ம் கால கட்டத்தில் எழுதியிருக்கலாம்.

3) பவுல் உரோமையருக்கு தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்?
    இயேசுக்கிறிஸ்துவின் பணியாளன். (1:1)

4) பவுல் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
    திருத்தூதராக இருக்க. (1:1)

5) சீடத்துவத்திற்கு முக்கிய அடிப்படை என பவுல் கூறுவது என்ன?
     இயேசுக்கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிதல்.

6) பிறஇனத்தவர் செய்த பாவம் என்ன?
    படைத்தவரை மறந்து, படைக்கப்பட்டவற்றை வணங்கினார்கள்.

7) நேர்மையுடையோர் எவ்வாறு வாழ்வு அடைவர்?
     தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர். (1:17)

8) பிறர் குற்றவாளியெனத் தீர்ப்பு அளிப்போரைப் பற்றி பவுல் கூறுவது என்ன?
    பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது, அவர்கள் அவர்களுக்கே தண்டனைத்
      தீர்ப்பை  அளித்துக் கொள்கிறார்கள். (2:1)

9) பிறஇனத்தார் திருச்சட்டத்தை, எவ்வாறு அறிந்து கொள்கின்றனர்?
    திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் எழுதப்பட்டுள்ளது. (2:5)

10) நம்பிக்கை தேவையென வலியுறுத்துவதன் மூலம், திருச்சட்டத்தை 
      செல்லாததாக்குகிறோமா?

     இல்லை: இவ்வாறு செய்வதன் மூலம், திருச்சட்டத்தை நிலை நாட்டுகிறோம்.
      (3;:31)

11) கடவுள் ஆபிரகாமை நிதியாளராக கருதக் காரணம் என்ன?
      அவர் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால்தான். (4:3)

12) கிறிஸ்து நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்றியது எப்படி?
      தம் உயிரைக் கொடுத்து நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கினார். (5:8)

13) கிறிஸ்தவர்கள் தங்களைப் பொறுத்தமட்டில் எவ்வாறு எண்ண வேண்டும்?

      பாவவாழ்க்கையைப் பொறுத்த மட்டில் இறந்தவர்களாகவும், கிறீஸ்து   
      இயேசுவோடு  இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்களாகவும் எண்ணிக்
      கொள்ள வேண்டும். (6:11)

14) பாவத்திற்கு கிடைக்கும் கூலி என்ன?
      சாவு. (6:23)

15) அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! என பவுல் கூறியது ஏன்?
       ஏனெனில் அவர் தம் ஊனியல்பால் பாவத்தின் சட்டத்திற்கு கட்டுப்பட்டிருந்தார்.
       (7:24)

16) நாம் இறைவனுக்குரியோர் என்பதற்கு அடையாளம் என்ன?
      கடவுளின் ஆவி நம்முள் குடிகொண்டிருப்பது. (8:9)

17) இக்காலத்தில் நாம் படம் துன்பங்கள் பற்றி பவுல் கூறுவது என்ன?

     இக்காலத்தில் நாம் படம் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்
      போகிற  மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (8:18)

18) பெயிபா என்னும் சகோதரி யார்?
      இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத் தொண்டராக இருந்தவர்.
       (16:1)

19) நான் பிறஇனத்தாராகிய உங்களுக்கு திருத்தூதன் என்று பவுல் கூறும்     
       இவ்வார்த்தைகள் காணப்படும் அதிகாரத்தையும் வசனத்தையும் குறிப்பிடு:

       அதிகாரம் 11 வசனம் 13.

20) தீமையை வெல்வது எப்படி?
        நன்மையால் தீமையை வெல்லலாம். (12:21)

21) நம் எதிரிகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
       அவர்களுக்கு ஆசி கூறவேண்டும். (12:14)

22) ஆளும் அதிகாரம் உள்ளவர்க்கு பணிந்திருக்குமாறு பவுல் கூறுவது ஏன்?
      ஏனெனில் அதிகாரம் கடவுளிடமிருந்தே வருகின்றன. (13:1)

23) கடவுளின் கட்டளைகள் அனைத்தும், எந்தவொரு கட்டளையில் அடங்கும்?
     உன் மீது அன்பு கூருவதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு  
       கூருவாயாக.  (13:9)

 

 

 உந்தன் சக்தி வாய்ந்த செபமே எந்தன் வாழ்வில் என்றும் ஜெயமே