Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(5)  திருத்தூதர் பணிகள்


1) திருத்தூதர் பணிகள் என்னும் நூலை எழுதியவர் ?
    லூக்கா

2) இயேசு எம்மைலையில் இருந்து விண்ணேற்றம் அடைந்தார்?
   ஓலிவமலையில் இருந்து.( 1:12)

3)
யூதாசுக்குப் பதிலாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டது யார்?
    மத்தியா. (1:26)

4) மத்தியாவைத் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை பேர் கூடியிருந்தனர்?
    120பேர். (1:15)

5) பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவி அப்போஸ்தலர்கள்மீது எவ்வடிவில் இறங்கி 
    வந்தது?

    நெருப்பு வடிவில். (2:3)

6) பெந்தக்கோஸ்து நாளன்று திருமுழுக்குப் பெற்றவர் எத்தனை பேர் ?
    ஏறக்குறைய மூவாயிரம் பேர். (2:41)

7) பெந்தக்கோஸ்து என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
     50வது நாள் என்பது பொருள். (2:1)

8) பெந்தக்கோஸ்து திருவிழா என்றால் என்ன?
     இது அறுவடைக்காக நன்றி செலுத்தும்
யூதத் திருவிழா. பாஸ்காத்  
     திருவிழாவுக்குப் பின், 50வது நாள் இது கொண்டாடப்படுகிறது. (2:1)

9) கால் ஊனமுற்ற ஒருவர், பேதுறுவால் குணமடையும் பொழுது, அவர் எங்கே 
     இருந்தார்?

    கோவிலில் "அழகுவாயில்" என்னும் இடத்தில் இருந்தார். (3:2)

10) கால் ஊனமுற்றவருக்கு அப்பொழுது வயது என்ன?
      40 வயதுக்கு மேற்பட்டவர். (4:22)

11) சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு, திருத்தூதர்கள் வழங்கிய   
       பெயர் என்ன?

       பர்ணபா (4:36)

12) பர்ணபா என்னும் பெயருக்கு பொருள் என்ன?
      ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் (4:36)

13) பேதுறுவிடம் பொய் சொல்லி மரிந்த இருவரின் பெயர் என்ன?
      அனனியாவும், சப்பிரா. (5:1)

14) திருத்தூதர்களுக்கு எதிராகப் பேசிய பரிசேயரின் பெயர் என்ன?
       சமாலியேல். (5:34)

15) திருத்தூதர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட ஏழு பேர் யாவர்.
      தேவான்
      பிலிப்பு
      பிரக்கோர்
      நிக்கானோர்
      சீமோன்
      பர்மனா
      அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா (6:5)

16) தேவான் மீது கல் எறிந்தவர்களின் மேல் உடைகள் பாதுகாப்பாக யாரிடம்
        ஒப்படைக்கப்பட்டது?

         பவுல் என்னும் இளைஞரிடம். (7:58)

17) தேவான் மீது கல் எறிந்தபோது அவர் செய்த செபம் என்ன?
      "ஆண்டவராகிய இயேசுவே! எனது ஆவியை ஏற்றுக் கொள்ளும். (7:59)
      "ஆண்டவரே!  இந்தப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும். (7:60)

18) சீமோன் என்னும் மந்திரவாதியை பேதுறு சபிக்கக் காரணம் என்ன?
      அவன் கடவுளது கொடையை பணம் கொடுத்து வாங்க எண்ணியதால்தான் 
      (8:20)

19) பிலிப்பு பாலை நிலப் பாதையில் யாருக்கு திருமுழுக்கு வழங்கினார்?
      எத்தியோப்பிய அரசியாக கந்தகியின் நிதி அமைச்சர். அவர் ஓர் அலி (8:27)

20) சவுல் தமஸ்கு நகர் அருகில் தரையில் விழும் பொழுதுஇ அவர் கேட்ட குரல்
       ஒலி என்ன?

      "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய். (9:4)

21) சவுல் மீண்டும் பார்வை பெற்றது எப்பொழுது?
      அனனியா சவுல்மீது கைகளை வைத்தபொழுது. (9:17)

22) சவுலை திருத்தூதர்களிடம் அறிமுகம் செய்தது யார்?
      பர்ணபா. (9:27)

23) லித்தாவில் பேதுறு செய்தது என்ன?
      முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயாவைக் குணப்படுத்தினார்.
      (9:34)

24) பேதுறு யோப்பா நகரில் உயிர்ப்பித்த பெண்ணின் பெயர் என்ன?
       தபித்தா (9:36)

25) தபித்தா என்னும் பெண்ணுக்கு வேறு பெயர் என்ன?
          தொர்க்கா (9:36)

26) "தொர்க்கா"என்பதன் பொருள் என்ன?
       பெண்மான் என்பது பொருள். (9:36)

27) பேதுறு போப்பாவில் பலநாள் யாருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்?
      தோல் பதனிடும் சீமோன் எனபவரது வீட்டில் தங்கியிருந்தார். (9:43)

28) செசாரியா நகரில் தங்கியிருந்த நூற்றுவர் தலைவரின் பெயர் என்ன?
      கொர்னேலியு. (10:1)

29) கொர்னேலியுவின் இல்லத்தில் நடந்தது என்ன?
        பேதுறு இயேசுவைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய   
        சொற்களைக் கேட்ட அனைவர் மீதும் தூய ஆவி இறங்கி வந்தது. (10:44)

30) இயேசுவின் சீடர்கள் கிறீஸ்தவர்கள் என்று முதல் முறையாக  எங்கு
      அறிவிக்கப்பட்டது?

       அந்தியோக்கியாவில். (11:26)

31) உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப் போகிறது என்று முன்னுரைத்தது யார்?
       அகபு (11:28)

32) யாக்கோபை வாளால் கொன்றது யார்?
       ஏரோது. (12:1)

33) பேதுறுவை கைது செய்யக் கட்டளை இட்டது யார்?
      ஏரோது (12:3)

34) ஏரோது பேதுறுவை கைது செய்யக் கட்டளை இட்டது ஏன்?
      பாஸ்காவிழாவிற்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரித்துக் 
      கொலை செய்வதற்காக. (12:4)

35) பேதுறுவை சிறையில் இருந்து விடுவித்தது யார்?
      ஆண்டவரின் தூதர். (12:7)

36) பேதுறு சிறையில் இருந்து எங்கே சென்றார்?
       மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார்.
       (12:12)

37) பேதுறுவிற்கு வாயில் கதவைத் திறந்து விட்டது யார்?
      ரோதி என்னும் பணிப்பெண். (12:13)

38) ஏரோது அரசன் இறந்தது எப்படி?
      அவர் புளுத்துச் செத்தார். (12:23)

39) சவுலும் பர்ணபாவும் எருசலேமில் இருந்து அந்தியோக்கியாவுக்கு திரும்பிச்
       செல்லும் பொழுது, அவர்கள் யாரை தங்களுடன் கூட்டிச் சென்றனர்?

       மாற்கு எனப்படும் யோவானை. (12:25)

40) சைப்பிரசுக்கு பயணம் செய்தவர் யாவர்?
      சவுல், பர்ணபா, மாற்கு (13:1)

41) சவுல், பர்ணபா, மாற்கு மூவரும் பாப்போவா என்னும் இடத்தில் யாரைக்
       கண்டனர்?

      
யூதமந்திரவாதி ஒருவனை கண்டனர். (13:6)

42) பவுல் லிஸ்திராவில் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்துவதைக் கண்டு
       மக்கள்   சொன்னது என்ன?

       "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்றார்.
         (14:11)

43) பர்ணபாவையும் பவுலையும் எவ்வாறு அழைத்தார்கள்?
      பர்ணபாவை சேயுசு என்றும், பவுலை எர்மசு என்றும் அழைத்தார்கள். (14:12)

44) பர்ணபாவும் பவுலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தது ஏன்?
     மாற்கு எனப்படும் யோவானை தங்களோடு கூட்டிச்செல்ல அனுமதிக்காததால்
    (15:37-38)

45) பவுல் தனது 2ம் தூதுரைப் பயணத்தில், தன்னோடு யாரைக் கூட்டிச் சென்றார்?
      சீலாவைக் கூட்டிச் சென்றார். (15:40)

46) பிலிப்பில் பவுல் யாருக்கு திருமுழுக்கு வழங்கினார்?
       லீதியா என்பவருக்கு (16:14)

47) வேற்றுத் தெய்வங்களுக்கு பீடம் அமைத்திருப்பதை பவுல் எங்கே கண்டார்?
      ஏதென்சில் (17:16)

48) பவுல் ஏதென்சில் இருந்து எங்கே புறப்பட்டுச் சென்றார்?
      கொரிந்து நகருக்கு. (18:1)

49) பவுல் கொரிந்து நகரில் யாரைச் சந்தித்தார்?

      அக்கிலாவையும் பிரிஸ்கில்லாவையும் (18:2)

50) பவுல் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொள்ளக் காரணம் என்ன?
          தம்முடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக. (18:18)

51) கொரிந்து நகரில் திருமுழுக்குப் பெற்ற தொழுகைக் கூடத் தலைவர் யார்?
        கிறிஸ்பு (18:8)

52) பவுல் கொரிந்து நகரில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
      பலநாட்கள் அங்கு தங்கியிருந்தார். ஏறக்குறைய ஒன்றரை வருட காலம்.(18:18)

53) எபேசில் பவுல் கிறிஸ்தவர்களுக்கு செய்தது என்ன?
     அவர் அவர்கள் மீது கைகளை வைத்து தூயஆவியை அவர்கள் மேல் இறங்கச்
       செய்தார். (19:6)

54) பவுல் எபேசில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
      2 ஆண்டுகள். (19:10)

55) பவுலுக்கு எதிராக எபேசு மக்களைத் தூண்டிவிட்ட, தட்டான் ஒருவரின் பெயர்
       என்ன?

      தெமேத்திரியு (19:24)

56) பவுல் லூக்காவை எங்கே சந்தித்தார்?

       துரோவாவில். (20:6)

57) துரோவாவாவில் பவுல் உயிர்ப்பித்த இளைஞனின் பெயர் என்ன?
       யூத்தீவு (20:9)

58)
யூத்தீவு எப்படி இறந்தார்?
       அவர் தூக்கத்தில் மூன்றாம் மாடில் இருந்து கீழே விழுந்து இறந்தார். (20:9)

59) பவுல் மிலேத்துவில் யாரைச் சந்தித்தார்?
       எபேசு நகர மூப்பர்களைச் சந்தித்தார். (20:17)

60) பவுல் எருசலேமில் கைது செய்யப்படுவாரென முன்னறிவித்தது யார்?
      அகபு (21:10)

61) பவுல் செசாரியாவில் தங்கியிருந்த இடம் எது?
       பிலிப்பின் வீட்டில். (21:8)

62) பவுல்
ஜெருசலேமில் எங்கே தங்கியிருந்தார்?
      மினாசோவின் வீட்டில். (21:16)

63) பவுல் பிறந்த இடம் எது?
      தர்சு நகரம். (22:3)

64) பவுல் திருச்சட்டங்களை யாரிடம் பயிற்சி பெற்றார்?
      கமாலியேல் என்பவரிடம். (22:3)

65) பெலிக்சு என்பவர் யார்?
       யுதர்களின் ஆளுநர் (23:24)

66) பவுலுக்கு எதிராக வழக்குரைக்க செசாரியாவிலிருந்து வந்த தலைமைக்குரு
       யார்?

       தலைமைக்குரு அனனியா. (24:1)

67) பெலிக்சின் மனைவி பெயர் என்ன?
     துருசில்லா. (24:24)

68) பேலிக்சுக்குப் பிறகு யூத ஆளுனராகப் பதவியேற்றது யார்?
       பொர்க்கியு பெஸ்து. (24:27)

69) பவுல் ரோமை நகருக்கு அனுப்பப்பட்டது ஏன்?
      தம்மை உரோமுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டதால். (24:27)

70) பவுலோடு உரோமை நகருக்குச் சென்ற நூற்றுவர் படைத்தலைவன் யார்?
      யூலியு. (27:1)

71) மால்தா தீவில் நடந்தது என்ன?
      பவுல் சென்ற கப்பல் உடைந்து நாசமானது. (28:1)

72) மால்தா தீவின் தலைவர் யார்?
      புப்பிலியு.

73) பவுல் மால்தா தீவில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?

      மூன்று மாதங்கள். (28:11)

74) பவுல் உரோமை நகரில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்?
       2 ஆண்டுகள். (28:30)
 

 உந்தன் சக்தி வாய்ந்த செபமே எந்தன் வாழ்வில் என்றும் ஜெயமே